Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விருந்துபசாரத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பினரின் கூத்து

Featured Replies

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் கேளிக்கை நிகழ்வுகளில் பங்கேற்று வருவதாகத் தவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் ஒரு கட்டமாக, உலக சுகாதார நிறுவனத் தலைவராகத் தாம் தெரிவானமையைக் கொண்டாடும் முகமாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நடத்திய விருந்துபசாரம் அமைந்திருந்தது. இதில் இரண்டு தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கை சேர்ந்த ஒருவரும் பங்கேற்றதுடன் களியாட்டங்களிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், குடிபோதையில் “என்னடி ராக்கம்மா” என்ற பாடலை பாடி விருந்துக்கு வந்தோரை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். இதனைப்பார்த்த சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தமிழ்மக்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கும் போது தமிழ்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு நடந்துக்கொள்வது கவலையை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழ்வின் இணையம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலவசமா கிடைச்சா எதிரி குடுக்கிற பினாயில கூட குடிப்பாங்க போல கிடக்குது....

இவங்களெல்லாம் ஒரு தமிழ் பா.உ.?????

நடக்கட்டும்....நடக்கட்டும்.

இது ராஜ தந்திரமாக கூட இருக்காலாம். எதிரியின் கூட்டில் நுளைந்து விசங்களை அறிந்து கொள்ள அவர் எடுத்துக் கொண்ட முயற்சியோ? பாவம் மனிசன் தன்ர ஈரலை கொடுத்து நமக்கு சேவை செய்கிறார், நீங்கள் அதில நோட்டை பிடித்துக்கொண்டு....

  • கருத்துக்கள உறவுகள்

“என்னடி ராக்கம்மா” என்று சந்திரிக்காவை நினைத்து பாடியிருப்பாரோ..............

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தியின் உண்மைத்தன்மை பற்றி சிந்திக்கத் தோன்றுகிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கு அவப் பெயர் ஏற்பட செய்யப்பட்ட புரளியா?

அதுசரி தமிழ்வின் இணையத்தளத்துக்கு இச்செய்தி எப்படிக் கிடைத்தது?. அவர்களின் முகவரும் இக்களியாட்டத்தில் கலந்து கொண்டரா?.

"இதனைப்பார்த்த சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தமிழ்மக்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கும் போது தமிழ்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு நடந்துக்கொள்வது கவலையை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்." என்று செய்தியினைத் தமிழ் வின் இணையத்தளம் வெளியிட்டு இருக்கிறது. அது சரி சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களுக்காக எப்ப கவலைப்பட்டு இருக்கினம்?.

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்

இலவசமா கிடைச்சா எதிரி குடுக்கிற பினாயில கூட குடிப்பாங்க போல கிடக்குது....

இவங்களெல்லாம் ஒரு தமிழ் பா.உ.?????

நடக்கட்டும்....நடக்கட்டும்.

அன்பான யாழ் கள நண்பர்கள் கீழ் வரும் இணைப்பை பார்க்கவும்.

யாழில் கடந்த திங்கட்கிழமை பிரசுரமாகிய செய்தி

இது நல்ல கதையா கிடக்கு... மனிசற்றை தனிப்பட்ட வாழ்கையில தலையிடுகிறதுதான் ஊடக சுதந்திரமோ? இனி அவையள் மனிசிமாரோட சந்தோசமா இருக்கிறதுக்கும் கேட்டே செய்யோனும்?

கொழும்பில வாழுற சாமானியன் முதல் பெரிய முதலாளி வரை பெரும்பான்மையை அரவணைச்சுதான் போகவேணும் பாருங்கோ! பாராளுமன்றத்தில அடிபடுறத்திற்காக வெளியிடத்திலையும் முறைச்சுக் கொண்டு நின்றா, அவன் முழியை பெயயர்த்துப் போட்டுதான் விடுவான்.

இங்க எழுத்தில காட்டுற வீரத்தை இஞ்சை வந்து காட்டுங்கோ! முந்தி வீராப்பு காட்டின ஆக்கள் எல்லாறின்ரை பேச்சுகளுக்கும் அவன் ஒவ்வொன்றா கணக்கு தீர்கிறான். இப்ப இருக்கிற ஆக்களுக்கு ஏதும் என்றா யாரிட்டை போய் முறையிடுறது? இந்தியாவா? நோர்வேயா? அமெரிக்காவா? ஏதோ மகிந்த காட்டுற இரக்கத்தில வாழுகினம் விடுங்கோவன்! ஏற்கனவே 5 பேர் போயிட்டினம்.

வன்னியிலையும் களியாட்டங்கள் நடக்குதுதானே! வயித்துக்கு எப்படி சாப்பாடு தேவையோ அதைப் போல மனத்திற்கும், உடலுக்கும் சாப்பாடு தேவையுங்கோ! ***

ஆரியக்கூத்து ஆடினாலும், என்னடி ராக்கம்மா ஆடினாலும் காரித்தில கண்ணாயிருந்தா சரிதானே!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் அவர்களை கைகாட்டிக்கதைப்பதற்கு எமக்கு எவருக்கும் அருகதை கிடையாது

ஏனெனில் அவர்கள் அனைவரும் போராளிகளாக இருந்தவர்கள் ஒருசிலரைத்தவிர.......

அதைவிட எமக்காக தம்வாழ்வின் இளமைக்கால இன்பங்கள் யாவற்றையும் துலைத்தவர்கள்

மேலும் ...............எழுதிக்கொண்டே போகலாம்..............

இப்போது அனைவரும் ஒரு தலைமையின் கீழ் உழைக்கின்றனர்

அவரவர்க்கு இட்டகட்டளைகளை நாமறியோம்

அதைவிட நான் உத்தமன்

நீ.........???

என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை..............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விருந்துபசாரத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பினரின் கூத்து

அவர்கள் செய்தது பிழை என வாதாடுவதற்கு புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் அருகதையற்றவர்கள்.

யோவ் ! இப்ப இதை மற்றாக்கள் செய்திருந்தா எப்பிடி எல்லாரும் புலம்பியிருப்பம் !

1.தமிழினத்தை ஈவு இரக்கம் இன்றி கொலை செய்யும் சிங்கள இனவெறி ஆட்சியின் இரத்த வெறி பிடித்த களிப்பாட்டத்தில் பங்கு பற்றியவருக்கு தமிழினம் தக்க பாடம் படிப்பிக்கும்

2. தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

3.வன்னியில் மக்கள் பட்டினிச்சாவில் கிடக்க கொழும்பில் கூத்தடித்த இனத்துரோகி

எண்டெல்லாம் புலம்பிருப்பமோ இல்லையோ ???

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்னுமாம் என்பார்கள் சரி போல தான் கிடக்குது.

எழுதிய கருத்துகள் இல்லாமல் மமறைந்து விட்டதே மோகன் அண்ணா. உணமைகளை எழுதமுடியாதோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.