Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடியத் தமிழர்களே சனிக்கிழமை பொங்கியெழுங்கள்.

Featured Replies

கனேடிய தமிழர்களே உங்களின் ஒன்று பட்ட எழுச்சியை கனேடிய அரசிற்கு வெளிப்படுத்த யூலை ஐந்தாம் நாள் தயாராகுங்கள்.

நீங்கள் பொங்கியெழும் இடம் மற்றும் நேரத்தை ஏற்பாட்டாளர்கள் சரியான நேரத்தில் உங்களிற்கு அறியத் தருவார்கள். தயவு செய்து சனிக்கிழமையை முழுமையான விடுமுறை நாளாக வைத்திருங்கள்.

ஒன்ராரியோ சட்டமன்று முன்பாக நடத்த பொங்கு தமிழைபோன்று இல்லை இல்லை அதைவிட எழுச்சியாக அதைவிட பெரும் எண்ணிக்கையில் நாங்கள் அணிதிரள்வோம். எமது போராட்டத்திற்கு பக்க பலமாக எமது மக்களின் தாயகம் - தேசியம் - தன்னாட்சி போன்ற இலட்சிக் கோட்பாடுகளை உரத்து ஒலிப்பதுடன் கனேடியத் தமிழர்களால் போராட்டத்திற்கு வலுவுட்டும் செயற்பாடுகளிற்கு எதிரக கனேடிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைளை கண்டிக்கவும், இனி எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காது தடுக்கவும் பேரெழுச்சியுடன் அணி திரள்வோம்.

எத்தனையோ களியாட்டங்கள், கேளிக்கை நிகழ்வுகள் என்று பொழுதைக் களிக்கும் நாம். ஒரே ஒரு நாளை தாயகத்திற்காக நாம் பிறந்த மண்ணிற்காக அங்கே மடியும் உயிர்களிற்காக அர்ப்பணிப்போம்.

சண்டிவிலே அல்லது பிறதொலைக்காட்சிகளிலோ ஒளிபரப்பாகும் தொடர் நாடகங்களை ஒரே ஒரு நாள் தாயகத்திற்காக தவறவிட்டு பொங்கு தமிழ் என்ற பேரெழுச்சியில் நாமும் ஒரு அங்கமாக இணைந்து குரலெழுப்புவோம்.

குடும்பச்சுமைகளைப் போக்க ஆண்டின் 365 நாட்களும் உழைத்துக் கொண்டிருக்கும் உறவுகளே நாம் பிறந்த மண்ணிற்காக ஒரே ஒரு நாளை உங்கள் உழைப்புக் ஓய்வு கொடுத்து செலவழியுங்கள்.

கனெடியத் தமிழர்களே ரொறன்ரோவிலிருந்து நீங்கள் ஒலிக்கும் பேரொலி ஒட்டாவா அரசின் கொள்கைகளை எமது போராட்டத்திற்கு சாதகமாக அல்லது பாதகமற்று மாற்ற வழியேற்படுத்தும்.

வன்னியிலே வீட்டுக்கொருவர் நாட்டுக்காக உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள். நாம் நாட்டுக்காக 365 நாளில் ஒரு நாளை கொடுக்க வேண்டாமா?

எனவே எழுச்சி கொள்வோம், பேரெழுச்சி கொள்வோம். சனிக்கிழமை அணி திரளுங்கள். தமிழ் ஊடகங்களுடன் இணைந்திருங்கள் விரிவான விபரங்களை அறிவுறுத்தல்களை வழங்குவார்கள்.

புலத்தில் நீங்கள் தேசியக்கொடியோடு மட்டும் நின்றுவிடாமல் அடையாள எதிர்ப்பையும் சேர்த்து காட்டுங்கள் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் பதாதைகளயும் சேர்த்துக்கொள்ளுங்கள் வெற்றிபெற ஐசூர்யாவின் வாழ்த்துக்கள் :icon_mrgreen::icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாலை 2 மணிமுதல் நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன...

p2par4.jpg

p2par4.jpg

நல்ல படம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனையோ களியாட்டங்கள், கேளிக்கை நிகழ்வுகள் என்று பொழுதைக் களிக்கும் நாம். ஒரே ஒரு நாளை தாயகத்திற்காக நாம் பிறந்த மண்ணிற்காக அங்கே மடியும் உயிர்களிற்காக அர்ப்பணிப்போம்.

உறவுகளே காலத்தோடு விதைப்பதே பயன் நல்கும். இது காலம். ஒரு நாளை நம் தாய் மண்ணுக்காக உழைப்போம்.தமிழன் உணர்வுகளை சேர்ந்தே உரைப்போம். நாளை தமிழ் ஈழத்தில் நாமும் ஓர் பங்காளியாக மார்தட்டி நிற்கலாம்.

Edited by sangiliyan

பொங்கி எழுவோம் முன்னெப்போதும் இல்லாதவாறு

தடை எமக்கு ஒரு தடை அல்ல என்று காட்டுவோம்

அதிகளவு தமிழர்களை கொண்ட புலம் பெயர் நாடு கனடா அதை இப்போது காட்டுவோம்

வீறு கொண்டு எழுவோம்

கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரில் நாளை சனிக்கிழமை (05.07.08) பிற்பகல் 2:00 மணிக்கு பொங்கு தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

தயவுசெய்து எந்த இடத்தில் நடைபெறப்போகிறது என்பதை தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள நண்பர்கள்

கனடாவில் உள்ள தங்கள் தங்கள் உறவுகள்.....நண்பர்களுக்கு அறியத்தரலாமே....

  • தொடங்கியவர்

ஹீல் அண்ட செப்பேட் சந்திப்பில் அமைந்துள்ள

டவுண்ஸ் வியூ திறந்த வெளியரங்கில்

பொங்கு தமிழ் பேரெழுச்சியுடன் நடைபெறவுள்ளது. மிக மிகப் பிரமாண்டமான இடத்தில் கனேடியத் தமிழர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தத் தயாராகிவிட்டனர்.

Edited by மின்னல்

  • தொடங்கியவர்

இதோ டவுண்ஸ்வியூ பிரமாண்ட பூங்காவின் அமைவிடப்படம்

downsviewparkjr1.gif

ஐந்து இலட்சம் மக்கள் கலந்து கொள்ளக்கூடிய மிக மிகப் பிரமாண்டத் திடலில் பொங்குதமிழ் நிகழ்வு நடைபெறவுள்ளது.

ஊர்திகளை நிறுத்துவதற்கான தரிப்படங்கள் அங்கே தாரளமாக உள்ளன. எனவே உங்கள் ஊர்திகளிலேயே நீங்கள் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வரமுடியும். (401 எண் நெடுஞ்சாலையைப் பயன்படுத்துபவர்கள் கீல் அல்லது அலன் சாலைகளில் வந்து செப்பேட்டு சாலையை அடையமுடியும்.)

அதேபோல ரொறன்ரோவின் போக்குவரத்துச் சபையின்(ரி.ரி.சி) பேரூந்துகள் மற்றும் தொடரூந்துகளிலிலும் குறித்த இடத்தை வந்தடைய முடியும். (பச்சைநிறச் சேவையான)கெனடி - கிப்பிளிங் தொடரூந்தில் பயணத்தைத் தொடங்குபவர்கள் சென்.ஜோர்ஜ் தொடரூந்து நிலையத்தில் இறங்கி (மஞ்சள்நிற சேவையான) யங்-யுனிவேர்சிற்றி-ஸ்பெடேனா தொடரூந்தில் டவுண்ஸ் வியு நோக்கிச் செல்லும் தொடரூந்தில் ஏறி இறுதித் தொடரூந்து நிலையமான டவுண்ஸ் வியூவில் இறங்கி சில நிமிடங்களிலிலேயே பொங்குத் தமிழ் நிகழ்வு நடைபெறும் இடத்தை அடைய முடியும்.

பேரூந்து மற்றும் தொடரூந்து போன்ற பொதுப்போக்குவரத்தையே பயன்படுத்துமாறு ஏற்பாட்டாளர்களால் கேட்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தை பயன்படுத்துவர்கள் தமிழ்த் தேசியத்தின் நிறங்களான சிவப்பு மஞ்சள் நிறத்தில் உடைகளையணிந்து பிறகு சமூகத்தினரின் கவனத்தை ஈர்க்குமாறு வேண்டப்படுகின்றனர்.

இதேவேளை வணிகர்கள் மற்றும் அமைப்புக்களினால் பல்வேறு பகுதிகளிலிருந்து பேரூந்து மற்றும் இதர ஊர்திகளில் போக்கு வரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலதிக விபரங்களைப் பெற சிரிஆர் வானொலியில் பெறலாம்.

http:///www.ctr24.com

வணக்கம் உறவுகளே!

நாளை சனிக்கிழமை (05-07-2008) கனடா ரொறன்டோ நகரில்டவுன்விய+ பார்க்கில் (downsview Park) பின்நேரம் இரண்டு (2.00) மணியளவில் இடம்பெறவுள்ள பொங்குதமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு, இவ்வுலகிற்கு தமிழரின் வாழ்வுச் சுதந்திரத்தைச் சொல்லவும், இவ்வுலகில் தமிழரின் இருப்பை நிலைப்படுத்தவும் திரண்டு வாரீர் நிகழ்வு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.