Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உறவும் வரும் பகையும் வரும் ( தொடர்ச்சி ) .......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உறவும் வரும் பகையும் வரும் ( தொடர்ச்சி ) .......

நித்திலா என்ன செய்வாள் . ?.....அவள் இபோதெலாம் வகுப்புக்கு போவதில்லை ..பெற்றோர் தடுத்து விட்டனர்

கார்த்திகையும் வந்தது .மாமன் மகன் இடையில் வீட்டுக்கு வந்த போனான் .தலைநகரம் சென்று கடவு சீட்டு

பெறுவதற்கான ஆயதங்களுடன் ,நிதிலாவை மாமன் மகனுடன் அனுப்பி . இது அவளுக்கு மனம் விட்டு

கதைக்கும் ஓர் உறவாக இருந்தது .அவள் மனதை தொடக்கம் முதல் அழுகையுடன் சொல்லி முடித்தாள்

சில நாட்களாக ஆதவனும் கடையில் தென் படுவதில்லை . அவனது தம்பி வியாபாரத்தை கவனித்தான்

.ஒரு வாரம் கழித்து நித்திலா கடவு சீட்டுடன் ஊர்வந்து சேர்ந்தாள் .வந்ததும் மாமன் மகன் தனக்கு

கலியாண" பலன் "பார்த்ததாகவும் ...அடுத்த வருடம் தான் சரிவரும் என்றும் தெரிவித்து

,மீண்டும் அவன் வெளிநாடு புறப்படான்.

ஒரு சில வாரங்களில் ஆதவனும் வெளிநாடு சென்று விட்டதாக கதை வந்தது .நித்திலாவின் பெற்றோர்

நிம்மதியாக இருந்தனர். ஒரு நாள் வாயிலில் கடித்க்காரனின் மணிஒலி கேட்க சின்னையர் போய் வெளிநாட்டு

கடிதம் மகள் பெயருக்கு வந்திருக்க இதை படித்து சொல் மகளே என் மருமகன் என்னவாம் என்றார்.

நித்திலா அழுகைகிடையில் ..விக்கி விக்கி அது ஆதவனுடையது என்றும் ,,தாங்கள் கொழும்பில்

பதிவு திருமணம் செய்ததென்றும் .மாமன் மகனே சாட்சி என்றும் வீட்டில் பிரச்சனை வந்தால் தன்

பெற்றோருடன் போய் வசிக்கும் படியும் எழுதியிருந்தார் . சின்னையரும் மனைவியும் ..குய்யோ....

முறையோ ,வெளிகிடு வீடை விட்டு என்று ....ஏசினர் ...விடயம் ஊரில் பரவ ...ஆதவனின் சித்தி தன்

வீட்டில் கூட்டிச்சென்று ..வைத்திருந்தார் . வருடங்கள் இரண்டு உருண்டு ஓடின . ஆதவன் வந்து

ஊரறிய ..அவ்வூர் கோவிலில் தாலி காட்டி , அழைத்து வந்தான் தன் வீட்டுக்கு . நித்திலாவின் பெற்றவர்கள்

வரவே இல்லை. ...காலம் உருன்ன்டு ஓட அவள் ஒரு ஆண் மகவை பெற்று , தந்தைக்கு தெரியாமல்

தாயை சென்று பார்த்து வருவாள் . காலப்போக்கில் ஊரில் படையினரின் ஆக்கிரமிப்பால் அவளும்

பிள்ளையுடன் புலம் பெயர்ந்து விட்டால் . கொழும்பில் உள்ள தாய் தந்தையர் அவளுக்கு கடிதம் மேல் கடிதம் .

..ஏழு வயது பெயரனை பார்க்கவேண்டும் என்று .... நித்திலாவின் மனம் என்றும் ஒருவன் வாழும் ஆலயமாக

,மனதாலும் துரோகம் செய்யாத ,புனிதவதியாக வாழ்ந்தாள் . ( கதை எப்படி உண்மை கலந்த கற்பனை .)

வாசகர் பின்வரும் கேள்விக்கு விடை சிந்தியுங்கள் .....

(1)மாமன் மகன் செய்தது சரியா? நித்திலா செய்தது சரியா ? ஆதவன் செய்தது சரியா ?

நித்திலாவின் தாய் தந்தை செய்தது சரியா ,கலியாணத்தின் போது ?

Edited by nillamathy

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் நிலையில் அவரவர் செய்தது சரி போல் தான் தோன்றும். உ+ம்: பெற்றோரின் நிலையில் மகள் ஒரு நாள் வரத்தான் போகின்றார். அப்போ ஒரு வேளை பெற்றோரின் நிலையை உணரக்கூடும்.

நல்ல உண்மை கதை.

உங்கள் உண்மை கலந்த கற்பனைக் கதை அருமை.

உங்களுக்கு கதை எழுத நன்றாக வருகிறது. எழுத்துப்பிழைகளை

கவனத்தில் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக

இருக்கும்.

ஏன் இதை புதிய பகுதியில் போட்டுள்ளீர்கள். பகுதி ஒன்றிலேயே

தொடர்ச்சியாக போட்டால் வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருந்திருக்குமே??

  • கருத்துக்கள உறவுகள்

காலப்போக்கில் ஊரில் படையினரின் ஆக்கிரமிப்பால் அவளும் பிள்ளையுடன் புலம் பெயர்ந்து விட்டாள் . கொழும்பில் உள்ள தாய் தந்தையர் அவளுக்கு கடிதம் மேல் கடிதம் எழுதினர். ..ஏழு வயது பேரனைப் பார்க்கவேண்டும் என்று.... நித்திலாவின் மனம் என்றும் ஒருவன் வாழும் ஆலயமாக, மனதாலும் துரோகம் செய்யாத ,புனிதவதியாக வாழ்ந்தாள்.

( கதை எப்படி உண்மை கலந்த கற்பனை .)

வாசகர்கள் பின்வரும் கேள்விகளுக்கு விடையை சிந்தியுங்கள் .....

(1)மாமன் மகன் செய்தது சரியா? நித்திலா செய்தது சரியா ? ஆதவன் செய்தது சரியா? நித்திலாவின் தாய் தந்தை செய்தது சரியா ,கலியாணத்தின் போது?

எனக்கு விளங்கவில்லை. குழப்பமான, தெளிவில்லாத முடிவாகவுள்ளது.

கதையின் கடைசிப் பகுதியையும் மூன்றாவது கேள்வியையும் பார்க்கும் போது ஆதவன் மனைவியை கைவிட்டது போலுள்ளது. அப்படியாயின் எப்படி அது சரியாகும்???

எல்லாம் சரி நிலாமதி நீங்க இப்ப முடிவா என்ன சொல்ல வாறீங்க எண்டதை மட்டும் சொல்லுங்க.....! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பிரபா ............

கருத்து பகிர்வுக்கு நன்றி . ஊரில் பிரச்சினையால் நித்திலா பிள்ளையுடன் புலம் பெயர்ந்தாள்

புலம் என்பது நம் தாய் நாட்டுக்கு அயல் நாடு . வட அமரிக்க நாடில் இருந்த ராகவன்

மனைவி பிள்ளையை குடிவரவு முறைப்படி சேர்த்து கொண்டான்

.பதிவு திருமணத்தின் பின் அவள் சித்தி வீடு அது பிரிவு தானே ,பின் முறைபடி தாலி கட்டு அது இணைவு குடும்ப நல்வாழ்வுக்காக ஆதவன் வெளி நாடு இப்ப புரிஞ்சுதா ? .தங்களுக்கும் ,மேலும் விளக்கம் தேவையானவர்களுக்கும் இது பொருந்தும்

கள உறவுடன் நிலாமதி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இதய நிலா ......

எல்லாம் சரி முடிவாக நீங்க என்ன சொல்ல வாறீங்க >>>>>>>>>

இது கதை ...முடிவை உங்களிடமே விட்டு விட்டேன் .யார் முடிவு சரி என்று .பகுத்து அறிய தெரிந்த

உங்களுக்கு புரியவில்லயா ? அவரவர் நிலையில் அவர்கள் செய்தது சரி என்று .

நிதிலாவுக்கு என்றும் மனதில் ஒருவன் என்ற அமைதி . பெற்றாருக்கு தன் மகள்

, குடும்ப உறவு ,பாசம் .......மாமன் மகனுக்கு மச்சாள் நல்வாழ்வு .... ராகவனுக்கு கடைசி வரை

காப்பாற்றும் துணிவு ,அவன் கொண்ட ஆழமான அன்பு

கள உறவுடன் நிலாமதி .

வணக்கம் இதய நிலா ......

எல்லாம் சரி முடிவாக நீங்க என்ன சொல்ல வாறீங்க >>>>>>>>>

இது கதை ...முடிவை உங்களிடமே விட்டு விட்டேன் .யார் முடிவு சரி என்று .பகுத்து அறிய தெரிந்த

உங்களுக்கு புரியவில்லயா ? அவரவர் நிலையில் அவர்கள் செய்தது சரி என்று .

நிதிலாவுக்கு என்றும் மனதில் ஒருவன் என்ற அமைதி . பெற்றாருக்கு தன் மகள்

, குடும்ப உறவு ,பாசம் .......மாமன் மகனுக்கு மச்சாள் நல்வாழ்வு .... ராகவனுக்கு கடைசி வரை

காப்பாற்றும் துணிவு ,அவன் கொண்ட ஆழமான அன்பு

கள உறவுடன் நிலாமதி .

ஆயிரம் தான் இருந்தாலும் நித்திலா செய்தது பிழைதானே நிலாமதி. நீங்கள் கதாபாத்திரங்களை அனுபவிக்கின்றீர்கள் நாங்கள் பாகுபாடு செய்கின்றோம். இதுதான் உலகம் பாருங்கோ....!

வணக்கம் இதய நிலா ......

எல்லாம் சரி முடிவாக நீங்க என்ன சொல்ல வாறீங்க >>>>>>>>>

இது கதை ...முடிவை உங்களிடமே விட்டு விட்டேன் .யார் முடிவு சரி என்று .பகுத்து அறிய தெரிந்த

உங்களுக்கு புரியவில்லயா ? அவரவர் நிலையில் அவர்கள் செய்தது சரி என்று .

நிதிலாவுக்கு என்றும் மனதில் ஒருவன் என்ற அமைதி . பெற்றாருக்கு தன் மகள்

, குடும்ப உறவு ,பாசம் .......மாமன் மகனுக்கு மச்சாள் நல்வாழ்வு .... ராகவனுக்கு கடைசி வரை

காப்பாற்றும் துணிவு ,அவன் கொண்ட ஆழமான அன்பு

கள உறவுடன் நிலாமதி .

கதை நன்று. அவரவர் செய்வது அவங்க பார்வையில் சரியாக இருக்கலாம். ஆனால் அதுவே மற்றவர்க்கு பிழையாக தோணலாம். இதயநிலா சொன்னது போல். மனசாட்சிப்படி செய்தால் தான் செய்தது தப்பில்லை என்பதே நிம்மதியான வாழ்க்கையை தரும். ஆமா யாரு அது ராகவன்? :icon_mrgreen:

கதை நன்று. அவரவர் செய்வது அவங்க பார்வையில் சரியாக இருக்கலாம். ஆனால் அதுவே மற்றவர்க்கு பிழையாக தோணலாம். இதயநிலா சொன்னது போல். மனசாட்சிப்படி செய்தால் தான் செய்தது தப்பில்லை என்பதே நிம்மதியான வாழ்க்கையை தரும். ஆமா யாரு அது ராகவன்? <_<

கதையில் வாற பெடியனையும் விடுறது இல்லையா? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் ...கதையில் வரும் ஆதவனை ...ஒரு தடவை ராகவன் என்று பதிந்து வீட்டேன்

மன்னிக்கவும் ...கதையில் வரும் ஆதவனை ...ஒரு தடவை ராகவன் என்று பதிந்து வீட்டேன்

இதிலென்ன..நானும் அப்படிதான் எண்ணினேன் ஆனாலும் கேட்டென்.

அதுக்குள்ள இந்த ஒட்டு மீசை வீரபாண்டிகட்டபொம்மன் வந்துட்டார் கேள்வி கேட்க :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிய சகி அக்கா ....

கதை விளங்கியது எல்லோ , ,பிறகு ஏன் .........இப்ப எல்லாம் சரி தானே

இதிலென்ன..நானும் அப்படிதான் எண்ணினேன் ஆனாலும் கேட்டென்.

அதுக்குள்ள இந்த ஒட்டு மீசை வீரபாண்டிகட்டபொம்மன் வந்துட்டார் கேள்வி கேட்க :lol:

ஏன் ஏன் மீசையை பாங்கிறிங்கா அதை விட கூர்மையாக இருக்கு 11 அறிவை பாருங்களேன்...

சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.