Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துணுக்காயில் வல்வளைப்பு முயற்சி முறியடிப்பு: 25 படையினர் பலி- 40 பேர் படுகாயம்

Featured Replies

துணுக்காயில் வல்வளைப்பு முயற்சி முறியடிப்பு: 25 படையினர் பலி- 40 பேர் படுகாயம்

[ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2008, 08:30 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் கல்விளான் நகரை வல்வளைப்புச்செய்யும் நோக்கிலான சிறிலங்காப் படையினரின் படை நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 25 படையினர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். படைப் பொருட்கள் உட்பட படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

துணுக்காயில் உள்ள கல்விளான் நகரை நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை காலை 6:30 மணிக்கு வல்வளைப்புச் செய்யும் நோக்கில் செறிவான ஆட்டிலெறி, மோட்டார் எறிகணைகள் மற்றும் பல்குழல் வெடிகணைகளின் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய முன்நகர்வு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வினை சிறிலங்கா தரைப்படையின் 57 ஆவது டிவிசன் படையினர் மற்றும் கொமாண்டோக்கள் மேற்கொண்டனர்.

இதற்கு எதிரான முன்நகர்வு நடவடிக்கை முறியடிப்புத்தாக்குதல் விடுதலைப் புலிகளால் குட்டிமூலையில் மேற்கொள்ளப்பட்டது.

படையினரின் தாக்குதலுக்கு ஒத்துழைப்பாக சிறிலங்கா வான்படையின் வானூர்திகளும் தாக்குதலை நடத்தின.

படையினரின் இப்பாரிய தாக்குதல் நடவடிக்கை நேற்று முன்நாள் மாலை 6:30 மணியளவில் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

இதில், படையினர் பாரிய இழப்புக்களுடன் தமது பழைய நிலைகளுக்கு பின்வாங்கி ஓடினர்.

விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலில் 25 படையினர் கொல்லப்பட்டனர். 40 படையினர் படுகாயமடைந்தனர்.

படைப் பொருட்கள் உட்பட படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ன.

இம்முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் நான்கு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட படைப்பொருட்கள் விவரம்:

ஆர்.பி.ஜி செலுத்தி - 01

பி.கே.எல்எம்ஜி துப்பாக்கி - 01

ரி-56-02 ரக துப்பாக்கிகள் - 03 மற்றும்

பெருமளவான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

புதினம்

தொடர்ந்தும் ஒரே தந்திரங்கள் பலிக்காது என்பதற்கு எடுத்துக்காட்டு.

தயவு செய்து நம்பிக்கைகளை குறைக்கவோ அல்லது கவலைகளின் வெளிப்பாடக உணாச்சி வசப்பட்டு பயந்தோ கருத்துக்களை எழுதாதீர்கள் தயவு செய்து நம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில் எழுதுங்கள்.

உண்மையிலே எம்மில் பலபேருக்கு நம்பிக்கை குறைந்து செல்வது யாவரும் அறிந்ததே ! அது சில சந்தர்ப்ப வசத்தாலும் கிடைக்கபெறுகின்ற தகவல்களின் ஆதிக்கம் எமது மனதில் இருந்த நம்பிக்கைகளை தகர்த்து விட்டது தான் ! ஏன் எனில் சமாதான காலத்தில் எமது தேசியத்திற்காக குரல் கொடுக்கின்ற புலம்பெயர் ஊடகங்கள் வெளியிட்ட கட்டுரைகள் தந்த அறிவு

1.போர்நிறுத்தம் சிங்கள அரசினால் முடிவுக்கு கொண்டு வரப்படுமானால் சர்வ தேசம் எங்களை உடனடியாகவே அங்கீகரித்துவிடும்

2.நாலாம் கட்ட ஈழப்போர் தொடங்குமாக இருந்தால் புலிகளால் வாரக்கணக்கிலேயே தமிழீழ மண் முற்று முழுதாக விடுவிக்கப்பட்டு விடும்

3. புலிகள் அதீத பலத்துடன் இருக்கிறார்கள் ஆகவே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு பகுதிகளை கைப்பற்ற முடியாது .

இது போன்ற பல நம்பிக்கை ஊட்டல்களிற்கு பதிலாக அதீத கருத்துக்கள் விதைக்கபட்டுள்ளன என்பது தான் மறுத்திட முடியாத மிக வேதனையான விடயம்.

ஏன் எனில் 2006 இல் முகமாலையில் தொடங்கிய போரிற்கு பின்பு சம்புர் வாகரை மட்டக்களப்பு என்று எம்மை விட்டு போய்க் கொண்டிருந்த பொழுது வன்னியில் உள்ளே நுழைய முடியாது என்று எழுதி தீர்த்த பத்திரிகைகள் ஏற்றிய அறிவு ஊட்டத்தில் அப்படியே ஏற்றுக் கொண்ட மக்களிற்கு மன்னாரிலும் மணலாறிலும் பின்பு மடு தேவாலயம் பின்பு விடத்தல் தீவு இப்பொழுது துணுக்காய் எனும் பொழுது நெஞ்சு வெடிக்கிறது தான்.

அதற்கிடையில் வான்வழித் தாக்குதலில் இழந்த அருமைச் சொத்து தமிழ்ச்செல்வன் அண்ணன் பின்பு அதனை தொடாந்து வந்த சிங்கள அரசின் கொட்டம் பின்பு அதன் இயற்கையாக இழந்த களநாயகன் பால்ராஐ; அண்ணன் ஆகியோரது இழப்புகள் ஏற்படுத்திய தாக்கம் விரைவில் மாறிடமுடியாத விடயம் நாம் நினத்தவற்றிற்கு எதிர் மாறக நடக்கிறதே!என்ற பெரும் வலி.

இதன் விளைவு தான் எமது மக்கள் மனரீதியாக இன்றுபடுகின்ற இனம் புரியாத வலி ! ஏன் எனில் மனித மனம் எப்பொழுதுமே தான் நினைப்பதை மட்டுமே நடக்க வேண்டும் அல்லது வெற்றி மட்டுமே பெறவேண்டும் என்ற அவாவக் கொண்டது இது எங்களிற்கும் பொருந்தும்.

எம்மில் எத்தனை பேருக்கு நமது சொந்த வாழ்வில் நினத்ததெல்லாம் நடந்திருக்கின்றது அல்லது வெற்றி பெருக்கின்றோம் அனைத்து விடயத்தலும் ! எம்மில் தனிப்பட்ட வாழ்கையிலும் எத்தனை சறுக்கல்கள் இழப்புக்கள் நம்பிக்கை துரோகங்கள் படு தோல்விகள் அனதை;தையும் தாண்டி நாம் சில இடங்களில் வென்றிடவில்லையா ? அல்லது

நாம் நினத்த காரியங்கள் ஈடேற எத்தனை காலங்கள் காத்து கிடந்திருக்கின்றோம் ! நினை;த சில விடயங்களை பெற்றிட முடியவலி;ல்லையா ?

நமது தனிப்பட்ட வாழ்விலே இந்த சோதனைகள்! தோல்விகள்! துரோகங்கள்! பின்பு வெற்றிகள் ! என்று மாறும் பொழுது நாம் ஓரு உலகில் ஓரு சிறந்த இனமாக வாழ்ந்து வருகின்ற ! இது வரை விடிவு கிட்டாமல் போராடுகின்ற இனத்திற்கு எவ்வளவு சோதனைகள் ! துரோகங்கள் ! தோல்விகள் அல்லது பின்னடைவுகள் ! பின்பு வெற்றிகள் ! என்பது நான் சொல்லித் தான் புரியவேண்டு;ம் என்றில்லை.

அதாவது தயவு செய்து நம்பிக்கை இழந்து மற்றவர்களையும் நம்பிக்கை இழக்க வைத்து அதனால் ஓரு பாரிய அழிவை ஏற்படுத்துவதைவி;ட நாமும் நம்பிக்கை கொண்டு மற்றவர்களையும் நம்பிக்கை கொள்ள வைப்போமாக !

தனிப்பட்ட ரீதியில் ஓவ்வொரும் நம்பிக்கை கொள்ளுங்கள் இப்பபொழுது கொட்மடித்து உள்ளே நூழையும் சிங்கள வெறிக் கூட்டங்கள் எம்மவர்களை கொன்று வெளியிடும் நிழல்படங்களை தருகின்ற தாக்கம் ! சொல்லிமுடிந்திடவில்லை என்றாலும் ! என்றோ ஓரு நாள் அது மிக அண்மையில் வரக்கூடிய நாட்களாக இருக்கலாம் அல்லது சிறிது நாள் சென்று நடக்க போகின்றதாக கூட இருக்கலாம்

உள்ளே நுளையும் சிங்கள வெறியர்கள் எம்மவர்களால் எங்கள் சகோதரங்களால் உங்கள் பிள்ளைகளால் சின்னாபின்ப்பட்ட உடலங்கள் ஆயரக்கணக்கில் இருக்க அதனை ஏற்க சிங்கள அரசு மறுத்து வன்னி மண்ணில் தகனம் செய்யப்படப் போகும் நாள் வன்னி மண் விடுவிக்கப்பட்டு கைப்பற்றிய வாகனங்களி; எம் சகோதரர்கள் வெற்றி உலா வர நேர்வே திரும் சமாதானம் பேச வர புலிக் கொடி வெற்றி மிதப்பில் காற்றில் பட்டொளி வீசி;ட நாம்மெல்லாம் தகர்ந்த நம்பிக்கைகள் தகர்ந்திட புது வேகத்துடன் நெஞ்சை நிமிhத்த போகும் நாளை மனக் கண்ணில் நிலை நிறுத்துங்கள் எவ்பொழுதோ நடந்தே தான் ஆகும் .

தயவு செய்து கடவுள் இருக்றாரா ? இல்லையா ? என்ற கேள்வியை விடுத்து ஆலயங்களில் கிடைக்கப் போகும் வெற்றிக்காக பிரார்த்தனைகள் செய்யுங்கள் !

நான் கனவு சம்பந்தமாக அல்லது போராளிகள் களத்தில் சாகும் பொழுது நம்பிக்கை பற்றி எழுதுவதாக சில பேர் பேசலாம் ! பரவாயில்லை ! ஏன் எனில் எம் கண் முன்னே நம் னண்ணால் தற்பொழுது காண்கின்ற " மன நிலைப் " படங்கள் நாம் நினைக்கின்ற வெற்றி பட நிலைப்பட நிலைகளின் கொடுக்கின்ற வெற்றிகளின் பொழுதும் இவர்களும் பங்கெடுக்கப் போகிறார்கள்.

ஏன் எனில் மனதிற்கு இவ்வளவு சக்தி !

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: மெத்தச்சரி புதியவன். இந்த மனநிலைதான் எல்லாருக்கும் தேவையானது. ராணுவம் கொடுக்கும் தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கு நாங்கள் புலிகள் வெளியிடும் தகவல்களுக்கு அதேயளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமா? இல்லையே?!

உதாரணத்துக்கு, இங்கு கருத்து எழுதப்படும் தலைப்புக்களைப் பார்த்தால், அதிகமானவை ராணுவம் தாங்கள் கொன்றதாகக் கூறும் புலிகளின் அளவைப் பற்றியோ அல்லது அவனது இணையத் தளங்களில் வந்த படங்கள் பற்றியோதான் அதிகமாக இருக்கும். சில நேளைகளில் 60, 70 என்று கருத்துக்களின் எண்ணிக்கை நீளும். ஆனால், புதினத்திலோ அல்லது வேறு எந்த தமிழ் ஊடகத்திலோ வரும் "ராணுவ நகர்வு புலிகளால் முறியடிப்பு,25 படையினர் பலி, 60 பேர் காயம், ஆயுதங்கள் மீட்பு" என்று வரும்போது எவரும் கருத்து எழுதுவதில்லை. ஏன் வாசித்துக்கூடப் பார்ப்பதில்லை. ஏன் இந்தத் தலைப்பில் கூட எத்தனை பேர் கருத்து எழுதியிருக்கிறார்கள் என்று பாருங்கள். ஒன்று அல்லது ரெண்டு பேர் மட்டுமே. ஆனால் சிங்களவனின் செய்தியான வவுனிக்குளத்தில் 33 போராளிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன என்ற தலைப்பில் இதுவரை 39, 40 பேர் கருத்து எழுதியிருக்கிறோம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், எமது ஊடகங்களுக்கும் அதில் வரும் செய்திகளுக்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவம். எம்மவர்களால் எதிரி அழிக்கப்படும்போது அதை நம்பாமல் எதிரியின் பிரச்சாரத்தில் அடிபட்டுப் போய் அதை உண்மை என்று நம்புவதுதான்.

இது மாற வேண்டும்.புலிகளின் தாக்குதல்களை நாமே மூடி மறைக்கும் நிலை மாற வேண்டும். சிங்களவனின் பிரச்சாரத்தையே நாம் முன்னெடுக்கும் இந்த இழிநிலை மாற வேண்டும் அல்லது அதற்கு எதிரான கருத்துக்கள் எழுதப்பட வேண்டும்.அப்பிரச்சாரங்கள் பொய் என்று நிரூபிக்கப்பட வேண்டும்.

இதை விரைவில் நாம் ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் எமது மனங்களில் இருக்கும் பீதியும், நம்பிக்கையற்ற தனமையும் நீங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: பிந்திய செய்திகளின் படி இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே விசேட பயிற்சி பெற்ற கொமாண்டோப் படையினர். துரித முன்னகர்வுத் தாக்குதல் ஒன்றிற்காகச் செல்லும் போது புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கொல்லப்பட்டவர்கள் 26, படுகாயமடைந்தோர் 45, ஒரு சிப்பாயின் சடலம் கைப்பற்றப்பட்டிருக்கு. அதைவிட ஆயுதங்களும் கிடைத்திருக்கின்றன.

நன்றி தமிழ்நெட்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒம் ரகுனாதன் அண்ணா

எங்கட புலி அண்ணா அக்கா மார் சிங்கள கூலி படைகளை நல்லா புரட்டி எடுத்திறுக்கினம் போல :icon_idea:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகளுக்கு வீர வணக்கங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.