Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளை முறியடிக்க 10 ஆயிரம் இராணுவத்தினர் அவசரமாக தேவை: கோத்தபாய

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள் வீழச்சி கண்டு வருகின்றனர். அவர்களை முறியடிப்பதற்கு மேலும் 10 ஆயிரம் இராணுவத்தினர் தேவை. எனவே இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் மீண்டும் வர வேண்டும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: அப்ப இவ்வளவு காலமும் ஒரு லட்சத்து அறுபதினாயிரம் பேரை வைச்சு என்னத்தைக் கிளுக்கின்னீங்கள்? உந்தப் பத்தாயிரத்தை வைச்சு இனி என்னத்தைப் பெரிசாப் புடுங்கப் போறியள்.

எதுக்கும் அந்த அமெரிக்காப் பாஸ்போட்டைத் தூசி தட்டி வைச்சுக் கொள்ளுங்கோ, கெதியில் அதுக்கு வேலை வர்ப்போகுது. உங்கட அண்ணாவை நாங்கள் பாத்துக் கொள்ளுவம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்பு இப்படி ஒரு நடவடிக்கை செய்தபோது கிழக்கில் இரு;நது இராணுவத்தை நகர்த்தினார்கள். ஆனால் இம்முறை அதற்hன தேவை குறைந்திருக்கின்றது என்றால் ஓரளவு ஆட்களைச் சேர்த்திருக்கின்றார்கள் என்பதை மறுக்கமுடியாது. சும்மா யாழ்களத்தில் இருந்து கோத்தபாயாவிற்குச் சவால் விட்டு ஏதாவது சாதிக்க முடியுமா??

ஒமோம் பொன்னு..... உந்த சவால் வெத்துவேட்டுக்களினதும் கவிதை திலகங்களினதும் தொல்லை தாங்கமுடியலைங்கோ! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைக்கு, நேற்று எல்லாம் யாழ்ப்பக்கம் வரவே சினமாகக் கிடக்கின்றது. மகனை ஏதாவது காரணம் சொல்லிக் 2 சாத்துச் சாத்தவா என்ற மாதிரிக் கிடக்கின்றது.

எல்லாப் பக்கத்திலும், ஒப்பாரி, சவால், ... மற்றப்பக்கம் ஏதோ தமக்கு ஆறுதல் சொல்லச் சொல்லிப் புலம்பல்கள்..

இங்கே நின்று சவால் விட்டால் என்ன கோத்தபாயா கோவணத்தை விட்டுவிட்டு அமெரிக்கா ஓடவா போகின்றான். அவன் செய்ய வேண்டியதைச் செய்யத் தான் போகின்றான்.

பங்களிப்பு, ஏதும் தொண்டுகள் செய்யுங்கள் என்றால் கொஞ்சநாள் யாழ்ப்பக்கம் காணவே கிடைக்காது இவர்களை.

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: பொன்னைய்யர்,

நீங்கள் செய்யிற உதவி நல்லாத் தெரியுது.

பாடுற கொத்தபாய புராணத்த உச்சஸ்த்தானியில் பாடுங்கோ. வேற யாரும் சல்லரிக்கு வருவினம்.

உங்களோட சேர்ந்து நாங்களும் சோகப் பாட்டுப் பாடுறம்.அப்ப எல்லாம் நல்லா நடக்கும்.

சனம் கவலையா எழுதினாலும் பிழை, கவலைய விட்டு உற்சாகமா எழுதினாலும் பிழை...என்னத்த எழுத ? ஆக சிங்களவன் சொல்லுற செய்தியை மட்டும் உண்மை எண்டு நம்பிக்கொண்டு அதையே சரியெண்டு பாடுவம். அதுக்கு எதிரா ஆரும் எழுதினால் நல்லா ஒரு வாங்கு வாங்கி விடுவம்.

இந்த லட்சணத்தில "உதவி செய்யக் கேட்டால் ஒளிக்கிறாங்கள்" எண்டு நக்கல் வேற?! நாங்கள் செய்யிற உதவி உமக்குத் தெரிய வேண்டுமென்றில்லை. அதெல்லாம் சரியாத்தான் நடக்கும். ஏதோ அதிமேதாவி எண்டு நெச்சுக்கொண்டு மற்றவனைத் திட்டுற வேலையை நிப்பாட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே சிங்களவன் எழுதுவதைக் கண்டு கண்ணீர் வடிப்பதும், அரவணைப்பம், ஒப்பாரி வைப்போம் என்று கருத்தெழுதிக் கொண்டிருப்பது யார் தானே? சும்மா யாழ்களத்தில் இருந்து கோத்தாயாவிற்குச் சவால் விட்டு ஏதாவது புடுங்க முடியுமா? அதைக் கேட்டால் ஏதோ அவன் புராணம் என்று எனக்கும் விரைவில் துரோகிப்பட்டம் வழங்கிடுவீர் போலிருக்கின்றதே.

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: உமக்குத் துரோகிப் பட்டம் வழங்க வேண்டிய தேவை எனக்கில்லை. அது உமக்குத்தான் தெரியும்.

கொத்தபாயவுக்கு சவால் விட எழுதுகிறேன் எண்டு நக்கல் தொடங்கியது நீர்தான்.

புலிகள் அடுத்த மாவீரர் தினத்தைக் கொண்டாட எதுவுமிருக்காது, கிளிநொச்சியும் முல்லைத்தீவும் நாளைக்கே விடுவிக்கப்படும் எண்டு அவன் சவால் விடேக்க" நடந்தாலும் நடக்கும்" எண்டு அழச் சொல்லிறீரோ ?

நாங்கள் உதவி செய்யவில்லை எண்டு உமக்கு வந்து நான் சொன்னனானோ? பிறகு எதுக்கு உந்த நக்கலும் நைய்யாண்டியும்?

உம்மால முடிந்ததை நீர் செய்யும். என்னால முடிந்தத நான் செய்யிறன். இங்க ஆரும் ஆருக்கும் சொல்லித்தான் தாயகத்துக்கு உதவி செய்ய வேண்டிய நிலை இல்லை எண்டதைப் புரிஞ்சு கொள்ளும்.

இங்க கனபேருக்கு புலம் பெயர்ந்த ஆக்கள் மேல எரிச்சல் கண்டியளோ. எப்படியாவது ஒருக்கா அவையைக் கொண்டு வந்து ஒரு வாங்கு வாங்கிப்போட வேணும் எண்டு ஆசை. இப்படிக் கனபேர் முந்தித் திரிஞ்சவை. பிறகு காணாமல்ப் போட்டினம். இப்ப இன்னொருத்தர்...ஏதோ நடத்துங்கோ....அது திருப்தியளிக்கிறதெண்டால் நல்லதுதானே ?!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரஜ சொல்லுங்கள். முன்பு கிழக்கில்இருந்து வடக்கில் தாக்குதல் நடத்த, வாபஸ் வாங்கினான். ஆனால் ஏன் இந்தமுறை அப்படிச் செய்யவில்லை? சும்மா 4 சுவரினுள் இருந்து எதிரியைப் பற்றிக் கனவு காணக்கூடாது. அவன் முட்டாள் அல்ல.

அவனுடைய பலத்திற்கு ஈடாக நாமும் வளரவேண்டிய தேவை உண்டு. அதையே நான் வலியுறுத்துகின்றேன்.

80களில் எதிரியைச் சும்மா ஊதி விட்டால் பறந்துவிடுவார்கள் என்று நினைத்துப் போராட வெளிக்கிட்டவர்கள் தான் இன்று அடையாளம் தெரியாமல் அழிந்து போனவர்கள்.

நாளைக்கு பிரிதொரு தாக்குதல் திட்டத்திற்காக முல்லை, கிளிநொச்சியைத் தலைவர் கைவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள். அவன் சொன்னதற்காக இங்கே சவால் விடுகின்றீர்கள்? அப்படித் தானே?

அப்படிச் சவால் விட்டால் கோத்தபாயா பயந்துவிடுவானல்லவா??

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நீர் ஒண்டை விளங்கிக் கொள்ளும். நான் எழுதினது கொத்தபாய படிக்க வேணும் எண்டதுக்காக இல்லை எண்டதை.

அவரின்ர அறிக்கையைப் பார்த்து நகைச்சுவைக்காக எழுதியதுதான் அது. அதை நீர் தூக்கிப்பிடிச்சுக்கொண்டு" சவாலா விடுகிறாய்"? எண்டால் நான் என்ன செய்ய?

இதுக்க வந்து எதுவும் எழுதாதே எண்டால் என்ன செய்யச் சொல்லுறீர்? பேசாமல் ஊருக்குப் போய் புலிகளோட ஆயுதம் தூக்கி சண்டை பிடிக்கச் சொல்லுறீரோ? அது ஏலாதெண்டபடியால தானே இதுக்க வந்து உம்மோட அலம்பிக் கொண்டிருக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிங்களவன் எழுதுவதைக் கண்டு கண்ணீர் வடிப்பதும், அரவணைப்பம், ஒப்பாரி வைப்போம் என்று கருத்தெழுதிக் கொண்டிருப்பது யார் தானே? சும்மா யாழ்களத்தில் இருந்து கோத்தாயாவிற்குச் சவால் விட்டு ஏதாவது புடுங்க முடியுமா? அதைக் கேட்டால் ஏதோ அவன் புராணம் என்று எனக்கும் விரைவில் துரோகிப்பட்டம் வழங்கிடுவீர் போலிருக்கின்றதே.

?தால்விகளைக்கண்டு துவளாமல் இருக்க நான் தெய்வமோ.........அல்லது நல்லபெரும் தலைவனோ அல்ல

சாதாரண மனிதன்...............

நீங்கள் சும்மா இங்கே வந்து இரண்டும் கெட்டு எழுதிக்கொண்டிருக்கின்றீர்க

உயிருக்கு விலை பேசுபவர்கள் இன்னும் இங்கு சிலர் இருக்கின்றார்கள்.

Edited by THEEPAN0007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.