Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பியா எங்கும் புலிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணிகள்.

Featured Replies

புலிகள் இயக்கத்தைச் சர்வதேச பயங்கரவாத அமைப்பாகத் தீர்மானித்து ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கனடா உட்பட அனைத்துச் சாவதேச முன்னணி நாடுகளின் அரசாங்கங்களும் அதனைச் சட்டவிரோத அமைப்பாக அறிவித்து விட்ட நிலையில் தற்போது உலகமெங்கும் புலிகள் இயக்கத்தினரின் பயங்கரவாதத்துக்கு எதிராக பெரும் எதிர்ப்புக் கிளம்பி வருகிறது.

இவ்வாறு அண்மைக்காலங்களில் பிரிட்டன் உற்பட ஐரோபிய நாடுகளில் புலிகள் இயக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் லண்டன் டவுனிஸ் வீதி 10ம் இலக்கத்தில் அமைந்துள்ள பிரிட்டிஷ் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன் புலிகள் இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்துவதற்கு பிரிட்டனில் வாழும் ஸ்ரீலங்காவைச் சோந்த சிங்கள இனத்தவர்கள் மற்றும் தமிழ் இனத்தவர்களை?? உறுப்பினர்களாகக் கொண்ட ஸ்ரீலங்கா அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியின் முடிவில் புலிகளின் படுகொலைகள் உட்பட பயங்கரவாதச் செயற்பாடுகள் சம்பந்தப்பட்ட விபரங்கள் அடங்கியதும் பிரிட்டனில் புலிகளின் செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதும் அவ்வாறே புலிகளுக்கு ஆதரவான அரச தரப்புச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதுமான விசேட அறிக்கைக் கடிதத்தை ஸ்ரீலங்கா அமைபின் உயர் பீடம் பிரிடிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனிடம் கையளிக்கும்.

இவ்வாறே புலிகள் இயக்கத்துக்கு எதிரான பெரிய அளவிலனா ஆர்ப்பாட்டப் பேரணிகளை புலிகள் இயக்கத்தினர் பெருமளவில் செயற்பட்டுவரும் பிரான்ஸ், ஜேர்மனி, ஒஸ்திரியா, பின்னலாந்து, கிறிஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் பிரதான நகரங்களான பாரிஸ், பெர்லின், வியன்னா, ஹெல்சிங், எதென்ஸ் ஆகிய நகரங்களில் நடத்துவதற்கும் லண்டன் ஸ்ரீலங்கா அமைப்பு உட்பட ஏனைய நாடுகளிலுள்ள புலிகள் இயக்கத்திற்கு எதிரான அமைப்புகளும் ஒன்றிணைந்து ஏற்பாடுகளைச் செய்துள்ளன. இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளின் முடிவில் அந்த நாடுகளின் அரச தரப்புகளுக்கு இவ்வாறு ஒன்றிணைந்த பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகள் எதிர்ப்பு அறிக்கைகளாகக் கையளிக்கவுள்ளன. இவ்வாறு ஐரோப்பிய நாடுகளில் புலிகள் இயக்கத்திற்கு எதிரான அமைப்புகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டப் பேரணிகள் உட்பட எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பது இதுவே முதற் தடவை

(லங்காதீப - 27.07.08)

நன்றி தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு புலிகளை அளித்து விட்டார்களாம்

வடக்கு புலிகளை அளித்து கொண்டு இருக்கிறார்களாம்

சர்வதேச புலிகளை அளிக்க போயினமாம்

அடுத்த ஆண்டு இனப்பிரச்சனை தீர்ந்துவிடுமாம்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

இதை நகைச்சுவை பகுதியில் சேர்த்திருக்கலாம்

இன்னமும் தூங்கி கொண்டிருக்கும் பல்லாயிரகணக்கான புலம்பெயர் தமிழர்களை தேசியத்திற்கு ஆதராவாக தட்டியெழுப்பட்டும் சிங்களத்தின் இது போன்ற நகர்வுகள்!!!

இதற்கு மேலும் தமிழர்கள் தூங்கி கொண்டிருப்பார்களானால் தமிழா உன் வருங்கால சந்ததி இலங்கைத்தீவில் அம்மா அப்பா என்று கூப்பிடாது, அம்மே தாத்தே என்று தான் கூப்பிடும்

  • கருத்துக்கள உறவுகள்

இது நகைச்சுவையான செய்திகள் அல்ல. அல்லைப்பிட்டியில் நடைபெற்ற படுகொலைக்கு அவுச்திரெலியா கன்பராவில் 2000க்கு மேல் கூடி நின்று ஆர்ப்பாட்டத்தினைத் தமிழர்கள் செய்தார்கள். ஒரு மாதத்துக்குள் சிங்களவர்களும் அதே இடத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்தார்கள். தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்யும் போது சிங்களவர்கள் அந்நாட்டு அரசுக்கு ஆர்ப்பாட்டத்தினை நடாத்த அனுமதித்ததற்கு கண்டனங்களை அதிகளவில் அனுப்புகிறார்கள்.வெளினாட்டு ஊடகங்களில் தமிழர்கள் சார்பான செய்திகள் வரும் போதும் கண்டனங்களை அனுப்புகிறார்கள். ஆனால் அவ்வூடகங்களுக்கு தமிழர்கள், தமிழர்கள் சார்பான செய்திகள் வெளியிட்டமைக்கு நன்றிகள் தெரிவிப்பது மிகவும் குறைவாக இருக்கிறது.

இன்னமும் தூங்கி கொண்டிருக்கும் பல்லாயிரகணக்கான புலம்பெயர் தமிழர்களை தேசியத்திற்கு ஆதராவாக தட்டியெழுப்பட்டும் சிங்களத்தின் இது போன்ற நகர்வுகள்!!!

இதற்கு மேலும் தமிழர்கள் தூங்கி கொண்டிருப்பார்களானால் தமிழா உன் வருங்கால சந்ததி இலங்கைத்தீவில் அம்மா அப்பா என்று கூப்பிடாது, அம்மே தாத்தே என்று தான் கூப்பிடும்

எங்கட ஆட்களில இப்பவும் அவன் அரசாங்கம் நாங்கள் அப்பிடியில்லை என்ற கதைக்கிறவையள் இருக்கினம் பாருங்கோ ! தயவு செய்து நாங்களும் இப்ப ஓரு அரை - நிர்வாக அரசாங்கத்தை நடத்திற இனம் என்றதை மனதில கொண்டு புலிகள் பாhத்துக் கொள்வார்கள் என்றில்லாமல் நாங்களாக செய்படுவது தான் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஆட்களில இப்பவும் அவன் அரசாங்கம் நாங்கள் அப்பிடியில்லை என்ற கதைக்கிறவையள் இருக்கினம் பாருங்கோ ! தயவு செய்து நாங்களும் இப்ப ஓரு அரை - நிர்வாக அரசாங்கத்தை நடத்திற இனம் என்றதை மனதில கொண்டு புலிகள் பாhத்துக் கொள்வார்கள் என்றில்லாமல் நாங்களாக செய்படுவது தான் நல்லது.

ஓம் நானும் இதேயே சொல்ல விரும்புகிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.