Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்நாட்டில் புலிகளுக்கு 54.25% ஆதரவு- தமிழீழமே தீர்வு- 55.44%- தடையை நீக்க வேண்டும்- 47.65% "ஆனந்த விகடன்" கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Featured Replies

தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 54.25 விழுக்காடு தமிழர்கள் தமது கருத்துக்கணிப்பில் ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாட்டின் முன்னணி ஏடான "ஆனந்த விகடன்" தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் பெரும்பாலான மக்களால் வாசிக்கப்படும் வாரப் பத்திரிகைகளில் ஆனந்தவிகடனும் ஒன்று .

அதில் வந்த கருத்துக்கணிப்பில் எமது விடுதலைப்போரட்டத்துக்கு தமிழக மக்கள் தெரிவித்த ஆதரவை பார்க்கும் போது , மிகுந்த சந்தோஷமாக உள்ளது .

ஈழத்தமிழன் தனிமையாய் இல்லை , எமக்கு குரல் கொடுக்க தமிழகம் உள்ளது என்ற தெம்பையும் தருகின்றது . :icon_mrgreen: நன்றி தமிழக உறவுகளே . :lol:

ஈழத்தமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இது.தமிழ் நாட்டு செய்தியில் கூட இன்று சொன்னார்கள் வெளிநாட்டில் இருந்து அதிகளவான ஊடகவியலாளர்கள் கொழும்பில் இருக்கின்றார்கள் இவர்கள் புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்துவார்கள் என்பதற்காக கிளிநொச்சிக்கான தொலைத்தொடர்பை இலங்கை அரசாங்கம் துண்டித்துள்ளதாக கூறினார்கள்.

Edited by THEEPAN0007

எமது போராட்டம் பற்றிய கருத்துக் கணிப்பொன்றை சமீபத்தில் ஆனந்த விகடன் பத்திரிகை நடாத்தியிருந்துது. இதுபற்றி நண்பர் ஈழவன் அவர்களும் களத்தில் ஏற்கனவே தெரிவித்தும் இருந்தார். தற்போது ஆனந்த விகடன் கருத்துக் கணிப்பின் முடிவுகளை அறியத் தந்திருக்கின்றது. அவற்றை கள உறவுகளின் பார்வைக்காக இங்கே இணைக்கின்றேன்.

ananthavikatan01ge5.png

ananthavikatan02cr9.png

ananthavikatan03kn0.png

ananthavikatan04xj6.png

ananthavikatan05xs3.png

ananthavikatan06ig1.png

நன்றி ஆனந்த விகடன்

விடுதலைப் புலிகளுக்கு 54.25 விழுக்காடு தமிழக தமிழர்கள் ஆதரவு! ஆனந்த விகடன் கருத்துக்கணிப்பு!

தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 54.25 விழுக்காடு தமிழர்கள் தமது கருத்துக்கணிப்பில் ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாட்டின் முன்னணி ஏடான "ஆனந்த விகடன்" தெரிவித்துள்ளது.

கருத்துக்கணிப்பின் முழு விபரம் இங்கு..........

http://www.tamilseythi.com/tamilnaadu/vika...2008-08-01.html

ananthavikatan07pe6.png

''இலங்கையில் இப்போதைய நிலவரம் என்ன?''

''முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இலங்கை அரசு, தனது ராணுவத்தின் உதவியுடன் தமிழ் மக்கள் மீதும் தமிழீழத் தேசத்தின் மீதும் மோசமான இனப் படுகொலையை மேற்கொண்டு வருகிறது. தமிழர்களின் வாழ்விடங்கள் மீது விமானக் குண்டுவீச்சுக்கள், பீரங்கித் தாக்குதல்கள் எனப் பல்வேறு வடிவங்களில் தாக்கி வருகிறது. தினமும் தமிழர்கள் கொல்லப் படுகின்றனர். உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்குமே இங்கே இப்போது பெரும் தட்டுப்பாடு. மக்-களைப் பட்டினி போட்டுக் கொன்றொழிப்பதன் மூலம் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என இலங்கை அரசு எண்ணு-கிறது. அண்மைக் காலத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தமது வாழ்விடங்களைவிட்டு இடம் பெயர்ந்துள்ளனர். இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்த மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காக விடுதலைப் புலிகள் வீராவேசத்துடன் போராடி வருகின்றனர்!''

''ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு புலிகளின் போராட்-டத்துக்கு இந்தியாவின் ஆதரவு இல்லாமல் போய்விட்டது. இந்தநிலையில் குறிப்பாக, தமிழக மக்களின் ஆதரவை எந்த வகையில் எதிர்பார்க்கிறீர்கள்?''

''இதைப் புலிகளின் போராட்டம் என்று குறிப்பிடுவதைவிட தமிழ் மக்களின் போராட்டம் என்று சொல்வதுதான் பொருத்த-மானதாகும். எமது விடுதலைப் போராட்டத்துக்கான தமிழக மக்களின் ஆதரவு நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வருகின்றது. இதனைப் பிழையாக மதிப்பிட வேண்டாம். வரலாற்று ரீதியாக, இன, கலாசாரரீதியாக தமிழக மக்களுக்கும் எமக்கும் தொப்புள் கொடி உறவு இருந்து வருகின்றது. அவர்களுடைய ஆதரவு எமக்கு எப்போதும் இருந்தே வரும்.''

''தனி ஈழம் மற்றும் விடுதலைப் புலிகள் போராட்டம் நியாயமென்று சர்வேயில் பங்கேற்றவர்கள் தங்கள் கருத்துக்களை எங்கள் நிருபர்களிடமும் எங்கள் இணையதளத்திலும் எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதில் எழுப்பப்பட்டிருக்கிறது. இதுபற்றி தங்கள் கருத்து என்ன?''

''உணர்வை வெளிப்படுத்திய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி. எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் இவர்கள், எமது தலைவர் தொடர்பாகத் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தவறானவையாகும். வெகு விரைவில் இவர்களது கருத்துக்களில் மாற்றம் ஏற்படும் என உறுதியாகச் சொல்கின்றேன்.''

''இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தப் போராட்டம்?''

''விடுதலைப் போராட்டங்களுக்கு கால எல்லைகள் வகுத்துப் போராடுவதில்லை. ஆனால், முழு மக்கள் பலத்தோடு எமது விடுதலையை விரைவாக வென்றெடுப்போம்!''

''சர்வதேசச் சமூகம் உங்களையும் இலங்கை அரசையும் எப்படிப் பார்க்கிறது?''

''சர்வதேசச் சமூகம் இலங்கை அரசு பற்றி நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறது. அண்மையில்கூட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் தொடர்ந்து நிகழும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன. சர்வதேசச் சமூகம் எமது போராட்டத்தைப் பற்றியும் இயக்கத்தைப் பற்றியும் நன்றாகப் புரிந்து வைத்துள்ளார்கள். எமது விடுதலைப் போராட்டம் அதர்மத்தை எதிர்த்து, தர்மத்துக்காக நடத்தும் போராட்டம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்!''

''இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறியிருக்கிறதா?''

''இலங்கை அரசின் ராஜதந்திர நகர்வுகள் எப்போதுமே இந்திய வெளியுறவுக் கொள்கைக்குப் பாதகமாகவே இருந்து வந்துள்ளன. இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடனேயே அவர்கள் வரலாற்றுரீதியான உறவுகளையும் தொடர்புகளையும் பேணி வருகின்றனர். சிங்களக் கட்சிகளின் இந்தியா தொடர்பான அரசியல் கொள்கைகள் என்பன எப்போதுமே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானவையே. தற்போதைய யுத்த சூழ்நிலையில் அது உச்சகட்டத்தை நோக்கி நகர்ந்து-கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் இலங்கை விவ-காரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படும் என்பதை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம்.''

நன்றி ஆனந்த விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏங்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையாக- ஓயாத அலைகளாக- இன்றும் உறுமுகிற ஒரே அமைப்பு "விடுதலைப் புலிகளே": "ஆனந்த விகடன்" புகழாரம்

[வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 10:28 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]

ஈழ விடுதலைக்காக சிறிலங்கா அரசுக்கு எதிராக எத்தனையோ இயக்கங்கள் எழுந்து விழுந்துவிட்டன. ஓயாத அலைகளாக இன்றுவரை உலக அரங்கத்தில் உறுமிக்கொண்டு இருக்கிற ஒரே அமைப்பு- "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்றும் ஏங்கிக் கிடக்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையும் புலிகள்தான் என்றும் தமிழ்நாட்டின் முன்னணி வார ஏடான "ஆனந்த விகடன்" புகழாரம் சூட்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக ஆனந்த விகடன் இதழானது (06.08.08 பதிப்பு) "கருத்துக்கணிப்பு" ஒன்றை வெளியிட்டு பிரசுரித்துள்ள கட்டுரை:

ஜூலை 25, 1983..! இலங்கையில் இனவெறிக்கான வெறுப்பு விதை அழுத்தமாக விழுந்த நாள். சிங்கள இராணுவம் முதல்முறையாக ஈழத் தமிழ்ப் பகுதிகளில் வெறிபிடித்து வேட்டையாடி, அப்பாவித் தமிழர் பிணங்களை அடுக்கிய நாள். தனித் தமிழீழப் போராட்டத்துக்கு உணர்ச்சி நெருப்பேற்றிய அந்தக் கறுப்பு ஜூலை முடிந்து 25 வருடங்களாகின்றன!

அரை நூற்றாண்டு காலமாக போரின் இரத்தத்தில் நனைகிறது ஈழ மண். நிலம், குடும்பம், உயிர், உடைமை என எல்லாவற்றையும் இழந்து துயரத்தின் பிள்ளைகளாக வாழ்கிறார்கள் ஈழத் தமிழர்கள். ஈழ விடுதலைக்காக, சிறிலங்கா அரசுக்கு எதிராக எத்தனையோ இயக்கங்கள் எழுந்து விழுந்துவிட்டன. ஓயாத அலைகளாக இன்று வரை உலக அரங்கத்தில் உறுமிக்கொண்டு இருக்கிற ஒரே அமைப்பு, 'தமிழீழ விடுதலைப் புலிகள்'!

அனைத்துலக தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் ஒன்றாக இருந்தாலும், உலகில் வேறு எந்த இயக்கத்துக்கும் இல்லாத கண்ணிய மரியாதை விடுதலைப் புலிகளுக்கு உண்டு. உலக நாடுகளின் துணையோடு எதிர்க்கிற சிறிலங்கா இராணுவத்துக்கு, புலிகள் ஒவ்வொரு கணமும் சிம்ம சொப்பனம்தான்!

"இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்களை மீளச்செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம். புலிகளை வீழ்த்த இன்னும் 10 ஆயிரம் வீரர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்!" என்று அறிவிக்கிறது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பாரக் ஒபாமா உலகின் மற்ற தீவிரவாத அமைப்புகளைக் கண்டிக்கிறார். ஆனால், புலிகள் பற்றிய கேள்விகளுக்கு அவரது பதில் மௌனம்தான். "செல்லடிக்கிற இரவுகளும் எங்கட பெண்டு பிள்ளைகளைக் கைபிடிச்சு இழுக்கிற ஆமிக்காரர்களும் இல்லாத எங்கட மண் வேண்டும்" என ஏங்கிக்கிடக்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையும் புலிகள்தான்!

ஆனால், புலிகள் அமைப்பு பலவீனமடைந்துவிட்டது, அமைப்புக்குள்ளேயும் உலக நாடுகளின் பார்வையிலும் அது பின்னடைவில் இருக்கிறது என்பது மாதிரியான தோற்றம் இப்போது ஏற்பட்டிருப்பது உண்மையா..? அன்டன் பாலசிங்கம், சுப.தமிழ்ச்செல்வன் போன்ற முக்கிய தளகர்த்தர்களின் மறைவு அவர்களுக்கு மறுக்க முடியாத இழப்புதான். ஆனால், "விடுதலைப் புலிகளுக்கு இழப்புகள் புதிதல்ல. திலீபன் தொடங்கி தமிழ்ச்செல்வன் வரை அவர்கள் இழப்புக்களில்தான் எழுந்து முளைத்திருக்கிறார்கள். 25 வருட போராட்டக்களத்தில் புலிகள் கண்ட இழப்புக்கள் நிகழ்காலச் சரித்திரத்தில் எந்த போராளிக்குழுக்களும் காணாதது. அவர்களை எதுவும் தடுக்க முடியாது" என்கிறார்கள் அனைத்துலக பார்வையாளர்கள். புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பகுதிகளில் சிங்கள இராணுவம் முன்னேறி வருகிறது என சிறிலங்கா அமைச்சகம் வெளியிடும் செய்திகளில் எத்தனை உண்மை என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்தச் சூழலில் இலங்கையில் நடக்கும் சார்க் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வதை அடுத்து தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவித்திருக்கிறார்கள் புலிகள். இந்த நேரத்தில் எல்லோருக்குள்ளும் எழுகிற கேள்விகள்... இலங்கை தமிழர் பிரச்னையில் இந்திய அரசின் நிலைப்பாடு சரிதானா? புலிகளின் போராட்டத்துக்குத் தமிழர்களிடையே ஆதரவு இருக்கிறதா..? தமிழீழம் அவசியமா? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமா?

"ஒற்றைத் துப்பாக்கி, ஐந்து வீரர்களோடு பிரபாகரன் தொடக்கிய அமைப்பு, இன்று 25 ஆயிரம் வீரர்கள் கொண்ட மாபெரும் இயக்கம்! தரைப் புலிகள், கடற்புலிகள், வான் புலிகள் என சகல திசைகளிலும் கிளை பரப்பும் புலிகளின் இராணுவக் கட்டமைப்பு அசாத்தியக் கச்சிதமானது. இதுவரை புலிகள் தற்காப்பு நிலையில்தான் போரிட்டார்கள். அவர்கள் தாக்குதல் நிலையை எடுக்கும்போது சிங்கள இராணுவம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். அந்தத் தருணத்துக்காகத்தான் புலிகள் காத்திருக்கிறார்கள்!" என்கிறார் ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் நம்பிக்கையாக!

புலிகளின் நிரந்தர ஆதரவாளரான தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், "போர் தந்திரங்களின்படி சில இடங்களில் முன்னேறி, சில இடங்களில் பின்வாங்கினாலும் புலிகள் தங்கள் இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். உலக நாடுகளிடமிருந்து ஆயுத உதவி பெறும் சிங்கள இராணுவத்திடம் பறித்தெடுத்த ஆயுதங்களைக்கொண்டே இத்தனை காலமும் வளமான போராட்டம் நடத்தி வருகிறார்கள் புலிகள்!" என்கிறார்.

"தமிழீழப் போராளிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம் அறிவியல்பூர்வமாகவும் இராணுவ ரீதியாகவும் பெரும் வெற்றியைச் சந்தித்திருக்கிறது. அனைத்துலக அளவில் தமிழீழம் அங்கீகரிக்கப்படவில்லையே தவிர, இலங்கையில் தமிழீழத்தை மனதளவில் ஏற்றுக்கொண்டார்கள் என்பதே உண்மை. தமிழீழத்துக்கான அரசாங்கம் அமைக்கப்பட்டு, நீதி, காவல், கல்வி, மருத்துவம், நிதி என அனைத்துத்துறைகளும் சிறப்பாக இயங்கி வருகின்றன. சிறிலங்கா சார்க் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வதை ஒட்டி, புலிகள் அறிவித்திருக்கும் போர் நிறுத்தம் புலிகளின் நேர்மையை உலகுக்குக் காட்டுவதாக இருக்கிறது!" என்று பெருமிதப்படுகிறார் தொல்.திருமாவளவன்.

"ஏழு, எட்டு வயசுப் பசங்களை எல்லாம் தீவிரவாதிகளாக மாத்துறதுதான் ஒரு இயக்கத்தின் கொள்கையா இருந்தா, அப்படி ஒரு இயக்கம் எதுக்கு? தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இங்கே இருந்துதான் தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கடத்துறாங்க புலிகள். இதனால் தமிழகத்துக்கு எப்பவும் பாதிப்புதான். இப்போ இலங்கைப் பிரச்சினையில் இந்தியா எடுத்திருக்கும் நிலைப்பாடுதான் சரி. தனி ஈழம் சரியான தீர்வு இல்லை" என்று காரசாரமான விமர்சனத்தைப் புலிகள் மீது வைக்கிறார் சோ.

பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரனோ "ஒவ்வொரு முறை சமரச உடன்படிக்கை ஏற்படும்போதும், சிறிலங்கா அரசுதான் அதை மீறிச் செயற்பட்டு இருக்கிறது. தமிழ் மக்களுக்குச் சம உரிமை வழங்குகிறோம் என்று அறிவித்துவிட்டு, ஒரே வாரத்தில் கொடுத்த வாக்குறுதியைக் குப்பையில்தான் சிறிலங்கா அரசு போடும். இதற்கு தனி ஈழம் அமைவது ஒன்றுதான் இறுதித் தீர்வாக அமையும்" என்கிறார் ஆவேசமாக.

"இதுவரை பாகிஸ்தான் உட்பட அசாதாரணச் சூழ்நிலை நிலவும் பல அண்டை நாடுகளில் எல்லாம் சார்க் மாநாடுகள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் மூன்று கப்பல்களில் ஆயுதங்களும் 3 ஆயிரம் போர் வீரர்களும் பிரதமரின் பாதுகாப்புக்கு என்று போனதில்லை. இப்போதுதான் இந்த வேடிக்கை நடக்கிறது.

சிறிலங்காவைத் திருப்திப்படுத்தும் வேலையை மட்டுமே செய்து வருகிறது இந்திய அரசு. சிறிலங்காவின் தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்த்த பல லட்சம் இந்தியத் தமிழர்களை ஒன்றுமில்லாத பிச்சைக்காரர்களாகத் திரும்பப் பெற்றது, கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது, அதன் பலனாக இன்றும் தமிழக மீனவர்களைப் பலி கொடுப்பது வரை இது தொடர்கிறது.

இந்தியாவின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும் நாடுகளுடன் சிறிலங்கா உறவு வைத்துக்கொள்ளாது என்று நினைக்கிறது இந்திய அரசு. ஆனால், பாகிஸ்தானிய வானோடிகள்தான் சிங்களப் போர் வானூர்திகளை இயக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவும் தன் இராணுவ தளத்தை இலங்கையில் அமைப்பதற்கு நேரம் பார்த்துவிட்டது. இதெல்லாம் தெரிந்தும் நம் டெல்லி அறிவுஜீவிகள் இப்படி இருக்கிறார்கள்!" என்று காட்டமாகிறார் பழ.நெடுமாறன்.

இந்தச் சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் இயக்கத்தைக் கட்டுக்கோப்போடு முன்னெடுத்துச் செல்வதில் தீவிரமாக இருக்கிறார் பிரபாகரன் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்து. "பிரபாகரனின் சிந்தனைதான் விடுதலைப் புலிகளின் சிந்தனை. கட்டுக்கோப்புடனும் தலைமைக்கு விசுவாசமாகவும் இருக்கும் விடுதலை இயக்கத்துக்குச் சிறந்த உதாரணமாக இருக்கிறது புலிகள் அமைப்பு. பிரபாகரன், திறமையான இராணுவத் திட்ட வகுப்பாளர் மட்டுமல்ல அரசியல் நுணுக்கமும் அறிந்தவர். மாறுகின்ற உலக நடப்புகள் எப்படியெல்லாம் தமிழர்களின் போராட்டத்தைப் பாதிக்கும் என்பதில் தீர்க்கமான ஞானம் உள்ளவர். ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ள அமெரிக்கா, இந்திய நிலைமைகள் தெரிந்த பின்பு, அடுத்த நகர்வை நோக்கிய முக்கியமான முடிவை பிரபாகரன் எடுப்பார்" - சமீபத்தில் இலங்கை இணையத்தளப் பேட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார் இந்தியப் பத்திரிகையாளர் அனிதா பிரதாப்.

சரி... தமிழக மக்கள் என்ன சொல்கிறார்கள்..? தனி ஈழம், விடுதலைப் புலிகள் விடயத்தில் அவர்கள் மனநிலை என்ன என அறிந்துகொள்ள தமிழகம் முழுவதும் கணித்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது விகடன்.

முடிவுகள், தமிழக மக்களின் மனசாட்சியை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. ஈழ மண்ணில் அமைதி மலர வேண்டும், விடுதலை வெளிச்சம் பரவவேண்டும் என்பதே அது! என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

puthinam.com

நடேசன் சொன்னதால சத்தம் இல்லை. வேற யாராவது சொல்லி இருந்தா ஒரு சிலர் வரிஞ்சு கட்டிக் கொண்டு வந்திருப்பினம். இதைப் பார்த்தாவது கொஞ்சம் :rolleyes: அடக்கிக் கொண்டால் நல்லது. ஒரு சிலருக்கு :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடேசன் சொன்னதால சத்தம் இல்லை. வேற யாராவது சொல்லி இருந்தா ஒரு சிலர் வரிஞ்சு கட்டிக் கொண்டு வந்திருப்பினம். இதைப் பார்த்தாவது கொஞ்சம் :rolleyes: அடக்கிக் கொண்டால் நல்லது. ஒரு சிலருக்கு :icon_mrgreen:

என்னத்தை நடேசன் அண்ணா சொல்லிச் சத்தம் இல்லை என்கின்றீர்கள்?

ஏங்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையாக- ஓயாத அலைகளாக- இன்றும் உறுமுகிற ஒரே அமைப்பு "விடுதலைப் புலிகளே":

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி நாளேடு 8/1/2008 11:32:47 PM - தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் 54.25 வீதமான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு என 55.44 வீதமானோரும் புலிகள் மீதான தடையினை இந்தியா நீக்கவேண்டும் என்று 47.65 வீதத்தினரும் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் தமிழகத்திலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் தெரிவித்துள்ளது.

ஆனந்த விகடன் இதழ் நடத்திய கருத்துக்கணிப்பிலேயே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகளை எப்போதும் ஆதரிக்கின்றோம் என்று 54.25 வீதத்தினரும் , இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழமே சிறந்த தீர்வு என 55.44 வீதத்தினரும், விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படவேண்டும் என்று 47.65 வீதத்தினரும் விடுதலைப்புலிகளை வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் ஆகியோர் ஆதரிப்பது சரியானது என்று 49.36 வீதமானோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராஜீவ் படுகொலையில் குற்றவாளியான பிரபாகரனை கைது செய்யவேண்டுமென 43.02 வீதத்தினரும் குற்றமற்றவர் என 16.90 வீதத்தினரும், குற்றத்தை மன்னித்து விட்டுவிடலாம் என 40.07 வீதத்தினரும், இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று 62.59 வீதத்தினரும் கருத்து கணிப்பில் வலியுறுத்தியுள்ளனர்.

இதனைவிட கொள்கை மாறுபட்ட இலங்கை தமிழ் பிரமுகர்களை கொலை செய்வதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று 43.14 வீதத்தினரும் தவிர்க்க முடியாத அணுகு முறை என்று 25.95 வீதத்தினரும், அங்குள்ள சூழ்நிலை புரியவில்லை என்று 30.89 வீதத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர். தரைப்படை, கடற்படை, வான்படை என்று விடுதலைப் புலிகள் வளர்ச்சி அடைவது பெருமைக்குரிய விடயம் என்று 46.24 வீதத்தினரும் இந்தியாவுக்கு ஆபத்து என்று 18.59 வீதத்தினரும் விடுதலைப்புலிகளை தி.மு.க ஆட்சியைப்பற்றிக் கவலைப்படாமல் ஆதரிக்க வேண்டும் என்று 47.48 வீதத்தினரும் தெரிவித்துள்ளனர்.

தண்டனைக் காலத்துக்கு பின்னரும் சிறையிலிருக்கும் நளினியை விடுவிக்க வேண்டும் என்று 41.64 வீதத்தினரும் கச்சைதீவை மீளப்பெறவேண்டும் என்று 65.76 வீதத்தினரும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்படும் பிரச்சினைக்கு ஆயுத ரீதியில் பதில் கொடுக்கலாம் என 29.65 வீதத்தினரும் பேச்சு மூலம் தீர்க்கலாம் என 34.89 வீதத்தினரும் சர்வதேச அரங்கில் இலங்கையை கடுமையாக கண்டிக்கலாம் என 35.44 வீதத்தினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.