Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாடகைக் காரில் ஹோட்டலுக்கு சென்ற இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி நாளேடு - இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனுக்கு கடந்த சனிக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வாயிலில் பெரும் அதிர்ச்சி காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு ஏற்பாடுகளில் நிலவிய த வறே இதற்குக் காரணமாகும்.

சார்க் மா நாடு முடிவடைந்த கையோடு, தெற்காசிய தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தாங்கள் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர விடுதிகளைச் சென்றடைந்து விட்டனர்.

இருந்தபோதிலும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் மாத்திரம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்ட வாசலில் காத்து நின்றுள்ளார்.

தனது காருக்கும் அதற்குப் பாதுகாப்பாக வரும் வாகன தொடரணிக்குமாகவே அவர் அங்கு காத்து நின்றுள்ளார். எனினும் எதுவுமே வந்து சேரவில்லை.

இந்நிலையில் "தாஜ்சமுத்திரா' என்ற இலட்சினையுடன்கூடிய வாடகைக் கார் ஒன்று அங்கு ஓடித்திரிவதைக் கண்டு அந்த சாரதியை அணுகி தன்னை ஹோட்டல் விடுதியில் கொண்டு சென்று சேர்க்குமாறு கேட்டுள்ளார்.

இதேவேளை, வீதிகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்த போதிலும் குறித்த காரில் "தாஜ்சமுத்திரா' இலட்சினை பதித்திருந்ததன் காரணமாக ஒருவாறு அது ஹோட்டலை சென்றடையக்கூடியதாக இருந்தது.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இறுதியில் எந்தவிதப் பாதுகாப்புமின்றி வாடகைக் காரில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட தவறு இந்திய அதிகாரிகளை மிகவும் அதிருப்தி அடையச் செய்திருக்கும் என்பதை கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட இந்த தவறு தொடர்பில் எம்.கே.நாராயணனிடம் குறித்த பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரி நேரில் சென்று மன்னிப்பு கோரியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோன்றதோர் நிலை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தும் பொருட்டு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்திருந்தார்.

பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததும் தனது விடுதிக்குத் திரும்ப ஆயத்தமானார். இந்நிலையில் அவருக்கு நியமிக்கப்பட்டிருந்த மெய்பாதுகாவலரை காணவில்லை.

உடனே இந்திய பிரதமரின் விஷேட பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் பாய்ந்து பிரதமரின் வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

இதை அடுத்து இந்திய பிரதமரின் வாகனம் விடுதியை சென்றடைந்தது.

இந்திய பிரதமர் சென்ற பின்னரே பிரதமருக்கு பாதுகாப்பாக நியமிக்கப்பட்ட குறித்த மெய்பாதுகாவலர் அவ்விடத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது குறித்து பூரண விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது தற்செயலாக நடந்தது அல்ல நாரயணன் மேல் கடுப்பாக இருக்கும் சிறிலங்கா அதிகாரிகளின் விசமத்தனமான திட்டமிட்ட நடவடிக்கை. நாராயணன் இதில் இருந்தாவது சிந்திக்கட்டும் ,இந்தியாவின் நீண்ட கால நலங்களை எப்படி சிறிலங்கா தக்க தருணத்தில் தூக்கி எறியும் என்பதை.

இது தற்செயலாக நடந்தது அல்ல நாரயணன் மேல் கடுப்பாக இருக்கும் சிறிலங்கா அதிகாரிகளின் விசமத்தனமான திட்டமிட்ட நடவடிக்கை. நாராயணன் இதில் இருந்தாவது சிந்திக்கட்டும் ,இந்தியாவின் நீண்ட கால நலங்களை எப்படி சிறிலங்கா தக்க தருணத்தில் தூக்கி எறியும் என்பதை.

இவர்களா சிந்திப்பார்கள்?????????????

:lol:

ராஜீவ் காந்திக்கே... பிடரியிலே போட்ட காட்டுகூட்டம்...

நாராயணன் எம்மாத்திரம்?....

நிறை பேரு கல்யாணத்துக்கெல்லாம் நிமிடவாரியா அட்டவணை தயாரிச்சு பயணங்கரமா திட்டமிட்டு ஆளாளுக்கு பொறுப்பு கொடுத்து செய்வாங்க...ஆனால் அங்கதான்..எல்லாம் சொதப்பலா முடியும்...எங்காயவது 5நிமிடம் பிழைச்சா எல்லாம் தலைகீழ்...

நேரம் நேர்த்தி..திட்டமிடல்..ஒழுக்கம

  • கருத்துக்கள உறவுகள்

இது தற்செயலாக நடந்தது அல்ல நாரயணன் மேல் கடுப்பாக இருக்கும் சிறிலங்கா அதிகாரிகளின் விசமத்தனமான திட்டமிட்ட நடவடிக்கை. நாராயணன் இதில் இருந்தாவது சிந்திக்கட்டும் ,இந்தியாவின் நீண்ட கால நலங்களை எப்படி சிறிலங்கா தக்க தருணத்தில் தூக்கி எறியும் என்பதை.

உந்த விசயம் இது வரைக்கும் இந்தியாவுக்கு தெரியாதா.அவர்களின் செயற்பாடுகள் எல்லாம் உண்மையான நண்பனை விட்டுவிட்டு எதிரியை பயமுறுத்தி நண்பணாக்குவதிலையே குறியாக இருக்கு.

எங்கட யாழ்கள அறிவாளர்கள் யாரையாவது விட்டு கட்டுரை ஒண்டை ... அதுதானாப்பா ஆய்வு ஒண்டை அவருக்கு அனுப்பி வையுங்கோ... உடனடியா மனசு மாறி கொள்கையை மாத்துவார்...

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இறுதியில் எந்தவிதப் பாதுகாப்புமின்றி வாடகைக் காரில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதுவே ஒரு பாதுகாப்பு ஏற்பாடுதானுங்கோ... தவறுதாலாக வீரகேசரி செய்தியாளர் கண்டுட்டார் போல!

உந்த விரகேசரிக்காறன் நாராயணனுக்கு சேவிடப் பொத்தி 2 குடுத்து உலகத்தில அரிசி மலிவான இடம் இப்ப வன்னி தான் எண்டு சொல்லியிருந்தா நாராயணன் தாஜ்சமுத்திரா வாடகைக் கார் என்ன ஓட்டோவிலேயே ஓமந்தைக்கு ஓடியிருப்பார் சமாதானம் பேச.

அட எங்கடை சோத்து இராசதந்திரம் என்னம வேலை செய்திருக்கும்.

வீரகேசரி எப்பிடி செய்யும்...?? கருணாவையை கணிக்க முடியாதவை வன்னீக்கை இருக்கும் அரிசியின் அளவை கணிக்க ஏலுமோ என்ன...

கெதியிலை வன்னீக்கை இராணுவம் வருகுதுதானே வந்து கணிக்கட்டுக்கும்... !! கணித்து நாராயணனுக்கு செப்பட்டும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.