Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்விளான் படையினர் வசம்-பாதுகாப்பு அமைச்சகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்விளான் படையினர் வசம்-பாதுகாப்பு அமைச்சகம்

வீரகேசரி இணையம் 8/13/2008 3:17:02 PM - முல்லைத்தீவு கல்விளான் பகுதியை இராணுவத்தினர் இன்று தமது கட்டுப்பாட்டிக்குள் கொண்டுவந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

20080813_13Kalvilan.jpg

பாதுகாப்பு அமைச்சகம் சிறீலங்கா.

வெள்ளாங்குளம் - மாங்குளம் வீதியில் துணுக்காய்க்கு மேற்கே கல்விளானும்.. பூநகரி - மன்னார் வீதியில் வெள்ளாங்குளத்துக்கு வடக்கே முழங்காவிலும் படையினரும் ஆளுகைக்குள் வந்திருப்பதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சக அறிவிப்புக்கள் சொல்கின்றன.

படையினர் விடுதலைப்புலிகளின் கடும் எதிர்ப்பை சந்தித்தே இவ்விடங்களைப் பிடித்திருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது..! :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாதுகாப்பு அமைச்சகம் என்று செய்தி விடுவதைத் தவிர்க்கலாமே. இது பயங்கவாதிகள் என்ற சொல்லைப் பாவிப்பதன் மூலம் எவ்வளவு தூரம் அவர்கள் வெளிநாடுகளில் வெற்றிகண்டார்கள் என்பதும், சிங்கள மக்களை ஒரு நிலைக்கு கொண்டு சென்றிருக்கின்றார்கள் என்பதும் புரியும். பாதுகாப்பு அமைச்சகம் என்று எழுதுவது கூட எமக்கு அதில் எதிரி என்ற நிலையினை உணர்வதைத் தவிர்த்திடும்.

எனவே சிங்களப் ***, அரசபயங்கரவாதத்தின் என்ற சொற்களை இணைத்து, எழுதுவது நன்றாக இருக்கும்.

எனவே சிங்களப் ***, அரசபயங்கரவாதத்தின் என்ற சொற்களை இணைத்து, எழுதுவது நன்றாக இருக்கும்.

ஓம்.. எழுத பேச வாசிக்க நன்றாக இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப முழங்காவிலுக்கு கிட்ட போய்ட்டாங்கள்...

படைத்தரப்பு முழங்காவில் மற்றும் பல்லவராயன்கட்டுப் பகுதிகளை தனது ஆளுகைக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஆனால் கடற்புலிகளின் பெரிய தளம் அமைந்திருப்பதாகப் படைத்தரப்பினால் தெரிவிக்கப்படும் நாச்சிக்குடாப் பகுதி இன்னும் கைப்பற்றப்படதாகப் படைத்தரப்பு அறிவிக்கவில்லை. ஆனால் நாச்சிக்குடாவிற்கு வடக்கே இருக்கும் அண்ணளவாக ஐந்த கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கும் பல்லவராயன்கட்டுப் பகுதியை படையினர் எப்படிக் கைப்பற்றிக் கொண்டனர்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது பிடித்தாச்சாம், இது பிடித்தாச்சாம் என்று எழுதிக் கொண்டிருப்பது சரியாகப் படவே இல்லை. என் எண்ணம் சரியாக இருந்தால், யாழ்ப்பாண மக்களைக் கேடயமாகப் பாவிக்கின்ற நிலையை மாற்றி, கடந்த 2 வருடங்களாச் சிறைக்கைதிகள் போல வாழ்கின்ற மக்களின் துன்பங்களுக்கு சற்று விடுதலை கொடுக்க மன்னார்ப்பாதையைச் சிலவேளைகள் சிறிலங்கா அரசிடம் விட்டுக் கொடுக்கின்ற முடிவைத் தலைவர் எடுத்துவிட்டாரோ என்று தான் தோன்றுகின்றது.

கடந்த 2 வருடங்களாகப் பொருளாதாரரீதியிலும், மிரட்டல்ரீதியாகவும் கஸ்டப்பட்டு வாழ்கின்ற மக்களை எந்த உலகநாடுகளும் காப்பாற்ற முன்வரவில்லை. அவர்களின் துன்பங்களைக் குறைக்க எவ்வகையிலும் உதவவில்லை.

சிலவேளைகளில் தலைவர் இவ்வாறன முடிவை எடுக்கக்கூடும் என்பதே என் அனுமானம். என் கருத்து சிலவேளைகளில் தவறாகவும் இருக்கக்கூடும்.

இவை எல்லாவற்றையும் விடப் புலம்பெயர் தமிழ்மக்களுக்கு எனப் பணிகள் இருக்கின்றன. அவற்றுக்கு எல்லோரும் கைகோருங்கள். ஏனென்றால் அந்த விடயத்திலும் உலகநாடுகள் கண்டு கொள்ளப் போவதில்லை. நமே எமக்குத் துணை

அது பிடித்தாச்சாம், இது பிடித்தாச்சாம் என்று எழுதிக் கொண்டிருப்பது சரியாகப் படவே இல்லை. என் எண்ணம் சரியாக இருந்தால், யாழ்ப்பாண மக்களைக் கேடயமாகப் பாவிக்கின்ற நிலையை மாற்றி, கடந்த 2 வருடங்களாச் சிறைக்கைதிகள் போல வாழ்கின்ற மக்களின் துன்பங்களுக்கு சற்று விடுதலை கொடுக்க மன்னார்ப்பாதையைச் சிலவேளைகள் சிறிலங்கா அரசிடம் விட்டுக் கொடுக்கின்ற முடிவைத் தலைவர் எடுத்துவிட்டாரோ என்று தான் தோன்றுகின்றது.

அதை ஏன் சண்டை பிடிச்சு விட்டு கொடுக்கனும்? பேசமால் எதிர்ப்பு இல்லாம கொடுகலாமே போராளிகளின் இழப்பு இல்லாம.........

தற்போது இராணுவத்துக்கு ஆட்கள் சேர்ப்பது ஏன் என்று சிந்திப்பீர்களே ஆனால் நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை கிடைக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை ஏன் சண்டை பிடிச்சு விட்டு கொடுக்கனும்? பேசமால் எதிர்ப்பு இல்லாம கொடுகலாமே போராளிகளின் இழப்பு இல்லாம.........

இது என்னுடைய ஊகம் மட்டுமே. அது உண்மையாக இருக்கும் என்று உறுதிப்பட்ட வேண்டுமன்றில்லை. சில விடயங்கள் உண்மைத்தன்மையாகவே நடக்க வேண்டும், அல்லது அவ்வாறு அமைக்க வேண்டும். மேலதிகமாகச் சொல்வதற்கில்லை

இது என்னுடைய ஊகம் மட்டுமே. அது உண்மையாக இருக்கும் என்று உறுதிப்பட்ட வேண்டுமன்றில்லை. சில விடயங்கள் உண்மைத்தன்மையாகவே நடக்க வேண்டும், அல்லது அவ்வாறு அமைக்க வேண்டும். மேலதிகமாகச் சொல்வதற்கில்லை

பொன்னையா அண்ணை என்ன வர வர அரசியல்வாதிகள் மாதிரி பதில் சொல்ல பழகிடீர்கள் :)

ரொம்ப்ப தான் நொந்து போனிர்களோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நொந்து ஒன்றும் போகவில்லை. உங்களுக்கு விளங்கப்படுத்தி ஒன்று;ம புடுங்கப் போவதில்லை. அது தான் தவிர்த்து விட்டேன். பார்ப்போம். காலம் சில தேவைகளை வலியுறுத்தும்.

ம்...ம் 7 வருசமா பேசி பேசி உள்ளதுகளையும் பறி குடுத்தது தான் மிச்சம்.

வாவ்வ்வ்... இதுக்கு மேல வேண்டாம் பிறகு மனவலிமை குன்றி போராட்டத்துக் மேல புல்லு முளைச்சிடும். வேண்டாம் இத்தோடை நிப்பாட்டிறன்.

நன்றிகள் தொடரட்டும் மகிந்தவின் வெற்றிகள்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்...ம் 7 வருசமா பேசி பேசி உள்ளதுகளையும் பறி குடுத்தது தான் மிச்சம்.

வாவ்வ்வ்... இதுக்கு மேல வேண்டாம் பிறகு மனவலிமை குன்றி போராட்டத்துக் மேல புல்லு முளைச்சிடும். வேண்டாம் இத்தோடை நிப்பாட்டிறன்.

நன்றிகள் தொடரட்டும் மகிந்தவின் வெற்றிகள்!!!

நக்கல் நளினம் இடம் பார்த்து விடவேண்டும் குறுக்ஸ்!

ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய வழிதோன்றினால் அதை செய்வதை விட்டு, இந்த வழியை பயன்படுத்துவது நன்றாக இல்லை!

நக்கல் நளினம் இடம் பார்த்து விடவேண்டும் குறுக்ஸ்!

ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய வழிதோன்றினால் அதை செய்வதை விட்டு, இந்த வழியை பயன்படுத்துவது நன்றாக இல்லை!

சிங்களவர் டக்கிளஸ் ஆனந்தசங்கரி கருணா மகிந்த கோத்தபய பொன்சேக்க ரம்புக்வெல ரட்ணசிறி பற்றி விடும் நக்கல் நளினங்களுக்கும் உதுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. அதாலும் ஆக்கபூர்வமாக எதையும் செய்ய முடியாது. வெறும் பொழுது போக்கு சிற்றின்பம் தான். அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் ரசனை இருக்கிறது. அது தான் வித்தியாசம்.

வட இலங்கையில் இடம்பெயரும் மக்கள் மனிதாபிமானப் பேரவலத்தை சந்திக்க நேரலாம்: ஐ.நா.மன்றம் எச்சரிக்கை

கடந்த இரண்டரை மாத காலகட்டத்தில் வட இலங்கையில் சுமார் 75,000 பேர் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேற நேர்ந்துள்ளதென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள மக்களின் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கை இது.

விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் அரசாங்கத் துருப்பினர் தொடர்ந்து முன்னேறிவருகின்றனர். புலிகளை முழுமையாக வீழ்த்தி அப்பிரதேசங்களை முற்றிலுமாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடவேண்டும் என்று அவர்கள் எண்ணம் கொண்டுள்ளனர்.

மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களை தொண்டு நிறுவனங்கள் சென்றடைய தொடர்ந்து இடம்தர வேண்டும் என்றும், அப்போதுதான் ஒரு மனிதாபிமானப் பேரவலம் தவிர்க்கப்படலாம் என்றும் ஐ.நா.மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

மக்களெல்லாம், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் தலைநகராக இயங்கிக்கொண்டிருக்கும் கிளிநொச்சியை நோக்கியே நகர்ந்து அங்கு கூடிக்கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை அரசாங்கப் படைகள் இந்தப் போரில் வெற்றிபெற்றாக வேண்டுமானால், இந்த கிளிநொச்சிதான் முக்கிய மோதல் களமாக மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2008...ntaffairs.shtml

--------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவர் டக்கிளஸ் ஆனந்தசங்கரி கருணா மகிந்த கோத்தபய பொன்சேக்க ரம்புக்வெல ரட்ணசிறி பற்றி விடும் நக்கல் நளினங்களுக்கும் உதுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. அதாலும் ஆக்கபூர்வமாக எதையும் செய்ய முடியாது. வெறும் பொழுது போக்கு சிற்றின்பம் தான். அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் ரசனை இருக்கிறது. அது தான் வித்தியாசம்.

ஏதோ ஒரு நம்பிக்கையில் அனைவரும் இருந்தாலும் நடைமுறையில் உள்ள களநிலவரங்களால் வருத்ததோடுதான் அனைவருமே இருக்கின்றோம் எனவே நகைச்சுவைக்கு இது பொருத்தமான இடம் இல்லை.

கருத்து வேற்றுமைய வளர்க்கவே அடிகோலும்!

காயப்பட்ட இடத்தில் எதிரி அடித்தால் என்ன நண்பன் அடித்தால் என்ன வலி ஒன்றுதான்.

நக்கல் தவிர்ந்த கருத்துக்கள் எழுதும் போது உங்கள் நிதானமும், பரந்துபட்ட பார்வையும் பாராட்டும் படியாக உள்ளது.

நகைச்சுவைக்கு இது பொருத்தமான இடம் இல்லை.

இது தான் எனது நிலைப்பாடும். அது பிள்ளையானை வைத்துச் செய்தால் என்ன எம்மை வைத்துச் செய்தால் என்ன. மிகுதியாக இனி என்ன செய்ய வேண்டும் எண்டு விளங்கியிருக்கும் எண்டு நம்பிறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நக்கல் நளினம் இடம் பார்த்து விடவேண்டும் குறுக்ஸ்!

ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய வழிதோன்றினால் அதை செய்வதை விட்டு, இந்த வழியை பயன்படுத்துவது நன்றாக இல்லை!

ம்...ம் 7 வருசமா பேசி பேசி உள்ளதுகளையும் பறி குடுத்தது தான் மிச்சம்.

வாவ்வ்வ்... இதுக்கு மேல வேண்டாம் பிறகு மனவலிமை குன்றி போராட்டத்துக் மேல புல்லு முளைச்சிடும். வேண்டாம் இத்தோடை நிப்பாட்டிறன்.

நன்றிகள் தொடரட்டும் மகிந்தவின் வெற்றிகள்!!!

அடடே இதுக்குள்ள இந்த விளையாட்டுகள் வேற ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.