Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரன் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டால் அவருடன் பேச்சுக்கு தயார் - பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு விடுவாராயின் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராகவுள்ளதாக பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

நிவித்திகலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது…

விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகள் என பல தடவைகள் அரசாங்கத்துடன் வந்தபோதிலும், விடுதலைப்புலிகளின் தலைவரின் நோக்கம் தமிழீழம் என்ற ஒன்றிலேயே அமைந்திருந்தது. இதனாலேயே பல தடவைகள் பேச்சுக்கள் வெற்றியளிக்கும் வாய்ப்புக்கள் இருந்தாலும் கூட விடுதலைப்புலிகள் அவற்றைக்குழப்பி வந்துள்ளனர்.

எனினும் இனிவரும் காலங்களில் விடுதலைப் புலிகளுடன் நிபந்தனை அற்ற பேச்சக்கள் என்பவற்துக்கு இடமில்லை. அது வெறும் காலத்தை வீணடிக்கும் செலாகவே அமையும். இந்த நிலைமைகளில் பிரபாகரன் தமது தமிழீழக் கோரிக்கையினை விட்டுவிட்டு வருவாரே ஆனால் அவருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாகவும் பிரதமர் அங்கு தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் பட்டினியாகக் கிடக்கின்றனர். விலைவாசி உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு என்று கண்ணீர் வடிக்கும் ரணில் விக்கிரமசிங்க, அவரின் ஐக்கிய தேசிய ஆட்சிக் காலத்தில் எந்தவிதமான தொழில் வாய்ப்பும் வழங்கப்படவில்லை. விடுதலைப்புலிகளிடம் பல்வேறு ஒப்பந்தங்களை செய்து நாட்டைக்காட்டிக் கொடுக்க முயற்சித்தார்கள்.

தற்போது எமது ஆட்சியில் நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்தம் நடைபெற்று வருகின்ற போதிலும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பாதைகள் அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி, அரச வேலை வாய்ப்புகள் போன்ற பல்வேறு வேலைத் திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றோம். நாடு அபிவிருத்தியடைய வேண்டுமாயின் நாட்டில் உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

நம் நாட்டுக்குத் தேவையான உணவுகளை நமது நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ள முடியும். மக்கள் அக்கறையுடன் செயற்பட்டால் அனைத்து விடயங்களையும் மேற்கொள்ள முடியும்.

நுரைச்சோலை அனல்மின் நிலையம், மேல் கொத்மலைத் திட்டம், கொழும்பு, காலி துறைமுகங்களின் அபிவிருத்திகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார். இக்கூட்டத்தில் நிவித்திகலைத் தேர்தல் தொகுதியின் அமைப்பாளரும் கிராமியக் கைத்தொழில் அமைச்சருமான பிரேமலால் ஜயசேகர உட்பட அரசியல் தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

www.pathivu.com

உவரை, உவருடைய மனிசி கைவிட்டு போனால் வேற கல்யாணம் செய்வாராம்.... அது போலதானாக்கும் இதுவும்...!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவங்கள் அடிவாங்கியே சாகப்போறாங்கள்

நிபந்தனையேதும் வேண்டாம் பேசுவோம் வாருங்கள் என்று அவரே கூப்பாடு போடுவார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிர் இல்லாமல் உடல் வாழமுடியாது இது இந்த மரமண்டைக்கு தெரியாதா :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ரட்ண சிறிக்கு இருக்கிற இந்த ஜென்மத்திலை பேச்சு வார்த்தை கிடையாது .

இதையே எத்தனை நாளைக்குதான் சொல்லுவாங்க,,,,,,,,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.