Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் உயர்கல்வி கற்பது ஏன்....?!

தமிழர்கள் உயர்கல்வி கற்பது ஏன்....? 22 members have voted

  1. 1.

    • அறிவைப் பெருக்கி சமூகத்துக்கு உதவ
      0
    • வளமான வாழ்வு தேட மட்டும்
      11
    • திருமணத்தின் போது சீதனம் வாங்க
      4
    • பெருமைக்கும் புகழுக்கும்
      7

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...அவுஸ்ரேலியா-----50 லச்சத்திகு மேல...

அப்படியா....!!

  • Replies 54
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முகத்தாரின் டயரியைப் பாத்தால் உங்களுக்கு வடிவா விளங்கும் எண்டு நினைக்கிறன் (இது தொழில் இரகசியம் இருந்தாலும் தாரன் பாருங்கோவன்

முதலில் வெளிநாட்டு மாப்பிளைகளின் ரேட்.................

கனடா . அமெரிக்கா ...அவுஸ்ரேலியா-----50 லச்சத்திகு மேல...

அய்ய்ய்ய்ய்...... கனடா 1 ஆவது....... :P :P :P :lol:

அவுஸ்ரேலியா . கனடா பெடியளின்ரை சிரிப்பை பாத்தியளே........

இப்பதன்னும் உங்களுக்கு விளங்களையோ உவை என்னத்துக்கு படிக்கினம் எண்டு...(படிச்சு 1ஆவதா வா எண்டால் ?????)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளை இது என்ரை ரேட்....வேறை புரோக்கர்மாரின் ரேட்டுகள் வித்தியாசப்படும் சண்டைக்கு வந்துடாதை

இதில நாங்க சண்டைக்கு வாறதுக்கு என்ன முகத்தார் இருக்கு. லண்டன் மா..ப்பிள்ளைகள் தான் சண்டைக்கு வரணும். :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டன் மாடுகள் சே மாப்பிள்ளைகள் 2 வது இடத்திலையா இருக்கினம். :wink: :lol::lol:

தமிழ் உங்களுக்கு ஆறு பாய குதிரையும்வேணும் ஆறுபணத்திற்கும் வேணுமெண்டால்.

எங்கடை திருமணத்தின் அடிப்படை கருத்து மாறவேண்டும். ஒரு பேச்சுக்கு பெண்கள் டொக்டர் எஞ்சினியர் வெளிநாட்டு மாப்பிள்ளையளைத்தான் கட்டுவம் எண்டால் அங்கை இருக்கிற மாடுகள் சீ மாப்பிள்ளையள் என்ன செய்கிறது? முதிர் மாடுகளாகத்தான் இருக்க வேண்டும் . எந்தப் பெற்றோர் தங்கள் பெண்பிள்ளைகளுக்கு வருமானம் குறைந்த மாப்பிள்ளைகளை கட்டவிரும்புவினம். எங்கடை பெரியவர்கள் திருந்த வேணும். சீதனம் என்ற பிரச்சனையால்தான் சிறிய தொழில் செய்கின்ற ஆண்களுக்கும் திருமணம் நடக்கிறது என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் உங்களுக்கு ஆறு பாய குதிரையும்வேணும் ஆறுபணத்திற்கும் வேணுமெண்டால்.

எங்கடை திருமணத்தின் அடிப்படை கருத்து மாறவேண்டும். ஒரு பேச்சுக்கு பெண்கள் டொக்டர் எஞ்சினியர் வெளிநாட்டு மாப்பிள்ளையளைத்தான் கட்டுவம் எண்டால் அங்கை இருக்கிற மாடுகள் சீ மாப்பிள்ளையள் என்ன செய்கிறது? முதிர் மாடுகளாகத்தான் இருக்க வேண்டும் . எந்தப் பெற்றோர் தங்கள் பெண்பிள்ளைகளுக்கு வருமானம் குறைந்த மாப்பிள்ளைகளை கட்டவிரும்புவினம். எங்கடை பெரியவர்கள் திருந்த வேணும். சீதனம் என்ற பிரச்சனையால்தான் சிறிய தொழில் செய்கின்ற ஆண்களுக்கும் திருமணம் நடக்கிறது என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?

சே நமக்கு குதிரைகள் எல்லாம் வேண்டாம். என்ன லண்டன் மாப்பிளைகள் 2வதில வந்திட்டமே என்று பாத்தம்.

அண்ணை நம்மப்பொறுத்தவரை பெண்ணாய் இருந்தாலும் சரி ஆணாய் இருந்தாலும் சரி முடிந்தளவு தங்கள் படிப்புக்கு ஏற்ற மாதிரி சோடியைத்தேடிக்கிறது தான் நல்லது என்று சொல்லவம். இப்ப பாருங்க நாங்க O/L கூடச்சரியாய் முடிக்கல இப்ப நாங்க ஒரு டொக்டர் மாப்பிளையைத்தேட முடியுமா இல்லை ஒரு என்ஜினியரைத்தான் தேட முடியுமா..?? சரி அப்படிக்கிடைத்துவிட்டாலும் பிறகு. நீ படிக்கல நான் படிச்சன் என்று குத்திக்குத்தி முடக்கிறதிலையே காலம் போய்விடும். அதெல்லாம் வேண்டாம் விரலுக்கேத்த வீக்கம். எங்களுக்கு ஏற்ற மாதிரித்தானே தேடப்பாப்பம். :P

  • தொடங்கியவர்

முந்தின காலத்தில பேருக்கும் புகழுக்கும் படித்தார்கள். இடைக்காலத்தில வளமான வாழ்வு தேடப் படித்தார்கள். தற்போதைய நிலையிலை திருமணத்தின் போது சீதனம் வாங்கப் படிக்கிறார்கள். ஆனால் எங்களது இளம் தலைமுறையின் மனப்போக்கில் பாரிய மாற்றங்கள் காணப்படுகிறது என்று நான் நினைக்கிறன். இவர்கள் அறிவைப் பெருக்கி தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு உதவ வேணும் என்று நினைக்கிறார்கள். இதனை நான் கூறுவதற்கு காரணம் - சுனாமியின் பின்னர் பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டக நிகழ்ச்சியொன்றில் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் சிறுமியொருவரிடம் உன்னால என்ன செய்ய முடியும் என்று கேட்டார்கள். அவள் சொன்னாள் - நான் நல்லாய் படிப்பன் நல்லாய் படிச்சுப்போட்டு என்ரை நாட்டுக்குப் போய் சேவை செய்வன்.

என்ன ஏற்றுக்கொள்கிறீர்களா? நான் எதுக்கு வாக்குப்போட?

கவனியுங்கள் சொன்னது சிறுமி...எங்களில எத்தினை பேர் பாலர் வகுப்பில் ரீச்சர் கேட்க டாக்குத்தர் இஞ்சினியர் ஆகி எங்க ஊருக்கு சேவை செய்வம் என்று சொல்லி இருப்பம்.....ஆனா இப்ப...என்ன கனவில இருக்கம்.....! :wink: :P :idea:

  • தொடங்கியவர்

சே நமக்கு குதிரைகள் எல்லாம் வேண்டாம். என்ன லண்டன் மாப்பிளைகள் 2வதில வந்திட்டமே என்று பாத்தம்.

அண்ணை நம்மப்பொறுத்தவரை பெண்ணாய் இருந்தாலும் சரி ஆணாய் இருந்தாலும் சரி முடிந்தளவு தங்கள் படிப்புக்கு ஏற்ற மாதிரி சோடியைத்தேடிக்கிறது தான் நல்லது என்று சொல்லவம். இப்ப பாருங்க நாங்க O/L கூடச்சரியாய் முடிக்கல இப்ப நாங்க ஒரு டொக்டர் மாப்பிளையைத்தேட முடியுமா இல்லை ஒரு என்ஜினியரைத்தான் தேட முடியுமா..?? சரி அப்படிக்கிடைத்துவிட்டாலும் பிறகு. நீ படிக்கல நான் படிச்சன் என்று குத்திக்குத்தி முடக்கிறதிலையே காலம் போய்விடும். அதெல்லாம் வேண்டாம் விரலுக்கேத்த வீக்கம். எங்களுக்கு ஏற்ற மாதிரித்தானே தேடப்பாப்பம். :P

சீ..கேவலம்..நீங்க எல்லாம் பெண்கள்.... சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று எழுதுகிறீர்களே தவிர நினைக்கிறீர்களே தவிர சாதிக்க முயலவில்லை...!

டாக்குத்தர் ஆனால் என்ன இஞ்சினியர் ஆனால் என்ன அவரவருக்கு அந்தந்த துறையில் ஏதோ ஓரளவு தெரியும் என்பதுதான் அர்த்தமே ஒழிய அவர்கள் அனைத்தும் அறிந்த ஞானிகள் அல்ல...!

இபப்டித்தான் பெண்கள் ஒன்றில் தங்களைத் தாங்களே தாழ்த்தி வாழ்ந்து ஆண்கள் அவர்கள் முதுகில் ஏறிச் சவாரி செய்ய அனுமதிக்கிறார்கள்..! அன்றில் உயர்த்தோ உயர்த்தென்று உயர்த்தி தாங்கள் ஆண்கள் முதுகில் சவாரி செய்கின்றனர்...!

உன் படிப்பு உன்னோடு...என் படிப்பு என்னோடு...அன்புக்குப் படிப்பும் பட்டமும் தேவையில்லை....அது தானாக வருவது...அதுதான் இதயங்களை இனைத்து வைத்து நிம்மதியான வாழ்வை அளிப்பது....! :wink: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா குருவிகள் இது கேவலம் என்றில்லை உண்மையைச்சொன்னம். இப்ப வாழ்க்கையில சாதாரனமாய் நடக்கிறதை சொல்லுறம். ஆண் ஒரு A/L பாஸ் பண்ணியிருப்பார் பெண் 9 ம் வகுப்பு முடிச்சிருக்க மாட்டா அந்த குடும்பத்தில பாவம் பெண்ணைப்படுத்துவினம். படிப்பறிவில்லாதவள் அது இது என்று.

இப்ப டொக்கடரோ இன்சினியரோ அந்த துறையில அவைக்கு கொஞ்சம் ஏனும் தெரியும் இல்லையா..?? ஒன்றும் தெரியாது என்பது கொஞ்சம் கஸ்டமான விடயம் தானே.

எங்களை விட றொம்ப படிச்சவர்களுடன் படிப்பறிவில்லாமல் நமக்கு ஒன்றும் தெரியாதே என்று கவலைப்படுவதை விட. எங்கள் தகமைக்கு ஏற்ற மாப்பிளையைப்பாத்துவிட்டால் அந்த ஏற்றத்தாழ்வு என்று விடயத்திற்கு இடமே இல்லை இல்லையா..?? அங்கும் சமநிலை பேனப்படுது. நான் உனக்கு எந்தவிதத்திலும் குறைந்தவள் இல்லை என்று வாழலாம். அன்புதான் முக்கியம் என்று சொல்லுவினம் பிறகு. சம்பளத்தில் இருந்து ஓய்வெடுப்பது வரை இதைத்தான் சொல்லுவினம். பெரிய கவுன்டக்கிளாக் உத்தியோம் என்று நமக்கு தெரியாதா இந்த ஆணாதிக்க சமூகம் பற்றி. அதுவும் அரைவாசிக்கு மேலானவர்களிற்கு பெண்களை மதிக்கவே தெரியிறதில்லை. பிறகு மிதிக்க இலகுவாக இருக்கும். இப்படி குட்டுப்பட்டு வாழ்வதை பெண் தவிர்க்கலாம் தானே. எல்லாருக்கும் டாக்டரும் என்ஜினியரும் தானே வேணும் என்றால் மாடு மேய்ப்பவர்கள் விவசாய் செய்பவர்கள் கதி என்ன ஆகிறது. அவர்களும் வாழத்தானே வேணும் அங்கு தான் நீ படிச்சவன் நான் படிக்காதவன் என்கிற வேற்றுமையிருக்காது. :wink:

எல்லாருக்கும் டாக்டரும் என்ஜினியரும் தானே வேணும் என்றால் மாடு மேய்ப்பவர்கள் விவசாய் செய்பவர்கள் கதி என்ன ஆகிறது. அவர்களும் வாழத்தானே வேணும் அங்கு தான் நீ படிச்சவன் நான் படிக்காதவன் என்கிற வேற்றுமையிருக்காது.

சரியாச் சொன்னாய் பிள்ளை..உங்கை யாரவது மாடு மேக்கிறவனை கட்ட ரெடி எண்டால் சொல்லு.என்னட்டை 3 அப்பிடி வேலை செய்யிற பெடியங்களின்ரை சாதகம் கிடக்கு..சட்டு புட்டு எண்டு விசயத்தை முடிப்பம்........கிடைக்கிற கொமிசனிலை உனக்கும் ஒரு பங்குதாறன் பயப்படாதை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் எங்களுக்கு அதுக்கு அவசியம் இல்லை எங்களை மாதிரி O/L முடிக்காத ஒரு ஆளை ஏற்கனவே பாத்திட்டம். பாவம் ஏன் வீணாய் தரகருக்கு காசு கொடுக்கவேணும் என்று தான். :P :wink:

எங்களை மாதிரி O/L முடிக்காத ஒரு ஆளை ஏற்கனவே பாத்திட்டம்.

எங்கடை பிழைப்பிலை மண்ணை போட எண்டே ஒரு கூட்டம் காத்திருக்கிது என்ன செய்வம்............பிள்ளை உந்தக் கதையை கேட்டா கனசனத்துக்கு நாடி விழுந்திருக்கும் :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் உங்கள் பிழைப்பில மண்ணைப்போடுவது எங்கள் நோக்கம் அல்ல ஒரு முன்றாவது நபர் அறிமுகம் செய்து நமது பந்தம் உருவாக வேண்டாமே என்ற எண்ணம் தான். இங்க யாருக்கும் நாடிவிழாது ஏன் என்றால் இந்தக்கதை எல்லாருக்கும் எப்பவோ தெரியும். இது புதிய விடயம் இல்லை நீங்கள் புதிசா அது தான் சொன்னம். :wink: :P

  • தொடங்கியவர்

ஆகா குருவிகள் இது கேவலம் என்றில்லை உண்மையைச்சொன்னம். இப்ப வாழ்க்கையில சாதாரனமாய் நடக்கிறதை சொல்லுறம். ஆண் ஒரு A/L பாஸ் பண்ணியிருப்பார் பெண் 9 ம் வகுப்பு முடிச்சிருக்க மாட்டா அந்த குடும்பத்தில பாவம் பெண்ணைப்படுத்துவினம். படிப்பறிவில்லாதவள் அது இது என்று.

இப்ப டொக்கடரோ இன்சினியரோ அந்த துறையில அவைக்கு கொஞ்சம் ஏனும் தெரியும் இல்லையா..?? ஒன்றும் தெரியாது என்பது கொஞ்சம் கஸ்டமான விடயம் தானே.

எங்களை விட றொம்ப படிச்சவர்களுடன் படிப்பறிவில்லாமல் நமக்கு ஒன்றும் தெரியாதே என்று கவலைப்படுவதை விட. எங்கள் தகமைக்கு ஏற்ற மாப்பிளையைப்பாத்துவிட்டால் அந்த ஏற்றத்தாழ்வு என்று விடயத்திற்கு இடமே இல்லை இல்லையா..?? அங்கும் சமநிலை பேனப்படுது. நான் உனக்கு எந்தவிதத்திலும் குறைந்தவள் இல்லை என்று வாழலாம். அன்புதான் முக்கியம் என்று சொல்லுவினம் பிறகு. சம்பளத்தில் இருந்து ஓய்வெடுப்பது வரை இதைத்தான் சொல்லுவினம். பெரிய கவுன்டக்கிளாக் உத்தியோம் என்று நமக்கு தெரியாதா இந்த ஆணாதிக்க சமூகம் பற்றி. அதுவும் அரைவாசிக்கு மேலானவர்களிற்கு பெண்களை மதிக்கவே தெரியிறதில்லை. பிறகு மிதிக்க இலகுவாக இருக்கும். இப்படி குட்டுப்பட்டு வாழ்வதை பெண் தவிர்க்கலாம் தானே. எல்லாருக்கும் டாக்டரும் என்ஜினியரும் தானே வேணும் என்றால் மாடு மேய்ப்பவர்கள் விவசாய் செய்பவர்கள் கதி என்ன ஆகிறது. அவர்களும் வாழத்தானே வேணும் அங்கு தான் நீ படிச்சவன் நான் படிக்காதவன் என்கிற வேற்றுமையிருக்காது. :wink:

ஏங்க ஒரு விவசாயம் பண்ணுற பையன ஒரு டாக்குத்தர் பொண்ணு கட்டிக்கிட்டா என்ன நடந்திடும்...அப்படிச் செய்வதுதான் அவர்களின் குழந்தைகள் சமூகத்தில் தகுந்த கல்வி அறிவு பெற வழிவகுக்கும்...உங்களப் போல் ஓல் ஓல் ஓட நின்றால் வரும் வாரிசுகள் 8 ஓட நிக்குங்கள்...ஆக தராதரம் என்பது குடும்பத்துக்கல்ல...தேவைக்கு எங்க அவசியமோ அங்க பாவிக்கிறத்திற்கே அன்றி...வேறிற்கில்லை...! :wink: :idea:

கல்வி அறிவில் பிந்தங்கிய நிலை என்பது களையப்பட வேண்டின் கல்வி அறிவு பெற்றவர்கள்...அதற்கான சந்தர்ப்பத்தை இழந்தவர்களைத் திருமணம் செய்வதே மேல்....! அதற்கேற்ற மனமாற்றங்கள் சமூகத்தில் அவசியம்...! ஆண்கள் அதைப் பலகாலமாகச் செய்கிறார்கள்...பெண்கள் தான் இப்படியான நிலைகளுக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ள முனைய வேண்டும்..! :wink: :idea:

சந்தோசம் பிள்ளை எப்ப சாப்பாடு போடப் போறாய்......நான் உன்னைக் கேக்கேலை உன்ரை சினேகிதப் பெட்டைகள் யாராச்சும் இருந்தாலும் சொல்லன் ஆனாலும் நல்ல காரியகாரிதான் போ.............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் இப்ப பாக்கிறது எங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாய் வைத்திருக்கிறதற்கு வழி. ஒரு டாக்டர் பெண் ஒரு விவசாயியை மணம் முடிக்கலாம் தப்பில்லை. ஆனால் பின்பு அந்த டாக்டர் பெண் செய்வது கதைப்பது எல்லாம் அந்த விவசாயியை பல பல இடங்களில் பாதிக்கலாம் அதனால் அவள் உயர்ந்தவள் நான் படிக்காதவன் என்கிற எண்ணம் தோன்றலாம் இதால பல பின்விளைவுகளை ஏற்படலாம்.

இப்ப நாங்கள் ஓல் படிச்சம் என்றால் ஒரு டாக்கடர் மாப்பிளை வந்தால் தான் எங்கள் சந்ததி முன்னேறும் என்கிறது தப்பு. அப்படிப்பாத்தா நாங்கள் ஓல் மட்டும் எனினும் படிச்சிருக்க முடியாது. ஒராள் பெரிய பட்டதாரியாய் இருந்து மற்றவர் குறைவாய் இருந்து குடும்பத்தில் ஏற்படுகின்ற பல விடயங்கள் வருகிற சந்ததியையும் பாதிக்கலாம்.

ஊரில் விவசாயம் செய்தவர்கள் இங்க வந்து கொஞ்சம் ஆங்கிலத்தைப்படிச்சிட்டு பின்னர் வந்த மனைவியவையை படுத்திற பாடு அதிகம். இப்ப பாருங்கள் ஆண்கள் கூடுதலாய் தங்களை விட அதிகம் படிச்ச பெண்களை மணம் முடிக்க முன்வரமாட்டார்கள் அப்படிச்செய்வது குறைவு. அப்படித்தான் பெண்கள் ஏன் நினைக்கக்கூடாது. பூந்தோட்டமாய் அமைய வேண்டிய வாழ்வில் ஏன் இந்தப்பிரச்சனையில் முட்கள் முளைக்க வேண்டும்.

பெண்கள் படித்து பட்டதாரிகளாய் இருக்கலாம் தங்களுக்கு எற்ற பட்டதாரிகளைத்தெரிவு செய்யலாம். ஆனால் தேவையில்லாமல் டாக்டர் என்சினியர் தான் வேணும் என்று ஒற்றைக்காலில நிண்டுவிட்டு பிறகு. கண்ணீர் வடிச்சு பிரியோசனம் இல்லை. :wink: ஆரம்பத்திலையே சரியாய் முடிவெடுத்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் பிற்காலத்தில் தட்டுத்தடுமாறிக்கூட வார்த்தைகள் விளையாட வாய்ப்பில்லை அல்லபா :wink: :mrgreen:

  • தொடங்கியவர்

புரிந்துணர்வும் அன்பும் பாசமும் இருந்தால் யாரும் யாரோடும் சேர்ந்து வாழலாம்...பிறக்கும் போதே மனிதனை யாரும் தரப்படுத்தி உலகத்துக்கு அனுப்பி வைப்பதில்லை..உங்க கருத்து மனிதனை மனிதன் தரப்படுத்தித் தாழ்த்துவது உயர்த்துவதும்...அதன் மூலம் சமூகத்துள் மனிதப் பிரிவினையைத் தூண்டி சமூக ஒற்றுமையை குடும்ப ஒற்றுமையைக் குலைப்பதையுமே சொல்கிறது...! தமிழர்கள் மற்றும் தெற்காசிய ஆண்கள் தான் தங்களிலும் படிப்பில் குறைந்த பெண்ணைத் தேடுவது...காரணம்..அவர்களுக்குள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் வாழ்கின்ற இந்த சமுதாயம் இப்பொழுதும் ஆணாதிக்க வெறிபிடித்ததாய் தான் இருக்கு முழுதாய் மாறிவிடவில்லை. எங்களது கருத்து பெண்கள் தன்னைவிட படித்த ஒரு ஆடவனை மணம்முடித்த பின்னர் எல்லாத்திற்கும் அவனில தான் சார்ந்திருக்க வேண்டிய நிலை வரலாம். ஒரு டாக்கடர் கண்டிப்பா தன் மனைவி சாதாரன தொழில் செய்ய விடமாட்டார் காரணம். கெளரவம் அது இது என்று. அந்தப்பெண்ணின் வாழ்வு அங்கு சார்ந்து வாழ வேண்டிய நிலையில போய் முடிகிறது. எங்களது படிப்பு தகுதிக்கு ஏற்ற வாறு ஒருவனை மணம் முடித்தால் அவனிற்கு நிகராய் பெண் வேலைக்கு போகலாம் சம்பாதிக்கலாம் அவனில சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதைவிட படித்த ஒருவர் என்றால் பிழைகள் செய்யும் போது சமநிலையில் இல்லாத ஒரு பெண் அதைத்தட்டிக்கேட்கிற வேளை கூட பிரச்சனைகள் உருவாகிறது. நீ என்ன என்னைக்கேக்கிறது நான் என்ன உனக்கு சொல்கிறது என்று. இப்படிப்பல. வருகிற சந்ததிகள் துறைசார் முறையில் இருவரது அறிவையும் பெறுவதற்காய் வாழ்கிற சந்ததி இன்னல்களை அனுபவிக்க முடியாது.

பெண்கள் படித்து தமக்கு சரிசமமாய் மாப்பிள்ளையைத்தேடலாம் அது வேறு. இன்றைய சூழ்நிலையில் ஆண் எப்படி தன்னைவிடப்படித்த ஒரு பெண்ணை மணம் முடிக்க தயங்குகிறானோ அப்படி பெண்ணும் யோசிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு.

புரிந்துணர்வு இருந்தால் போதும் என்று. சொல்லில மட்டும் சொல்லலாம். இப்படிப்பட்ட பிரச்சனைகளை தாங்கியவாறு நிறையப்பெண்கள் வாழ்கிறார்கள். இவை களையப்படவேணும் என்றால். பெண்கள் இவைகளை சிந்திக்கவேணும். டாக்டர் மாப்பிளை நல்ல காசுவரும். நல்லாய் வழலாம் என்று எண்ணுறவை கடைசியில நின்மதி சந்தோசம் தொலைத்துவிட்டு நிண்டு பிரியோசனம் இல்லை. :wink: :mrgreen: :P

முந்தின காலத்தில பேருக்கும் புகழுக்கும் படித்தார்கள். இடைக்காலத்தில வளமான வாழ்வு தேடப் படித்தார்கள். தற்போதைய நிலையிலை திருமணத்தின் போது சீதனம் வாங்கப் படிக்கிறார்கள். ஆனால் எங்களது இளம் தலைமுறையின் மனப்போக்கில் பாரிய மாற்றங்கள் காணப்படுகிறது என்று நான் நினைக்கிறன். இவர்கள் அறிவைப் பெருக்கி தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு உதவ வேணும் என்று நினைக்கிறார்கள். இதனை நான் கூறுவதற்கு காரணம் - சுனாமியின் பின்னர் பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டக நிகழ்ச்சியொன்றில் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் சிறுமியொருவரிடம் உன்னால என்ன செய்ய முடியும் என்று கேட்டார்கள். அவள் சொன்னாள் - நான் நல்லாய் படிப்பன் நல்லாய் படிச்சுப்போட்டு என்ரை நாட்டுக்குப் போய் சேவை செய்வன்.

என்ன ஏற்றுக்கொள்கிறீர்களா? நான் எதுக்கு வாக்குப்போட?

ஆமாம் புலம் பெயர்ந்து வாழும் இளம் சமுகத்தினரிடையே ஒரு பரந்த அறிவு வளர்ந்து வருவது தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் உயர்கல்வி கற்பது ஏன்....?

* அறிவைப் பெருக்கி சமூகத்துக்கு உதவ

* வளமான வாழ்வு தேட மட்டும்

* திருமணத்தின் போது சீதனம் வாங்க

* பெருமைக்கும் புகழுக்கும்

கேள்வியை தமிழ் ஆண்கள் உயர்கல்வி கற்பது ஏன்....? என்று மாற்றினால் கொடுத்த விடைகள் பொருத்தமாக இருக்கும். திருமணத்தின் போது தமிழ் சமூகத்தில் பெண் சீதனம் வாங்கியதாகக் கேள்விப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் உயர்கல்வி கற்பது ஏன்....?

* அறிவைப் பெருக்கி சமூகத்துக்கு உதவ

* வளமான வாழ்வு தேட மட்டும்

* திருமணத்தின் போது சீதனம் வாங்க

* பெருமைக்கும் புகழுக்கும்

கேள்வியை தமிழ் ஆண்கள் உயர்கல்வி கற்பது ஏன்....?

கொழுந்து... அறிவுக்....

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் மாடுகள் சே மாப்பிள்ளைகள் 2 வது இடத்திலையா இருக்கினம். :wink: :lol::lol:

இப்ப இங்க மட்டை போடுவதில் பிரச்சனை அதனால் கொஞ்சம் குறைச்சிருக்கினம் போல....?

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் என்ற ரீதியில் எனது அபிப்பிராயங்கள்

* அறிவைப் பெருக்கி சமூகத்துக்கு உதவ

அறிவை வளர்க்கலாம்தான். என்றாலும் உயர் கல்வி கற்றுத்தான் அறிவு வரும் என்று நான் நம்பவில்லை. தமிழர்கள் மத்தியில் பட்டம் பெற்றவர்கள் எல்லோரும் அறிவாளிகள், அவர்கள் சொல்லுவது எல்லாம் சரி என்ற பிழையான கருத்துருவாக்கம் உள்ளது.

சமூகத்திற்கு உதவ வேண்டும் என்று உயர் கல்வி கற்போர் மிக அரிது. தாயகத்தில் சமூகம் என்பது ஓரளவேனும் தற்போதும் உள்ளது. புலத்தில் சமூகம் என்று பொதுவான ஒரு கட்டமைப்பை நான் காணவில்லை. ஒன்றில் தனது ஊராருடன் தங்களை அடையாளப் படுத்துவார்கள், அல்லது தமது வேலைத்தள, கல்வியிட, விளையாட்டு நண்பர்களுடன் தங்களை அடையாளப்படுத்துவார்கள்.

இருக்கும் சமூகத்திற்கு ஏதாவது சேவை செய்ய யாராவது முயல்கிறார்களா? பணத்தைச் சுருட்டவே பலர் சமூக சேவை செய்கிறார்கள். இதில் உயர்கல்வி கற்றவர்கள், கல்லாதோர் என்ற பேதமில்லை.

* வளமான வாழ்வு தேட மட்டும்

படிக்கும்போது ஏன் படிக்கிறோம், அல்லது பெற்றோர் பிள்ளைகளை படி என்று சொல்லும்போது ஏன் சொல்லுகிறார்கள் என்று சிந்தியுங்கள். படிக்காவிட்டால் பிற்கால வாழ்வு சிறப்பாக இராது, கஸ்டப்படுவாய், பிறர் உன்னை ஏமாற்றிவிடுவார்கள், பெற்றோரை வயதான காலத்தில் நன்றாகப் பார்க்க வேண்டும் என்று சொல்லத்தான் கேட்கிறோம்.

எனவே வளமான வாழ்வுக்குக் கல்வி அவசியம். உயர்கல்வி என்றால் மேலும் வளமாக்கலாம்.

* திருமணத்தின் போது சீதனம் வாங்க

பரீட்சை வரும்போது யாராவது பரீட்சையில் நன்றாகச் செய்து சித்தி எய்தினால் 50 லட்சம் வாங்கலாம் என்று எண்ணிப் படிக்கிறார்களா?

சீதனம் வாங்க வேண்டும் எவ்வளவு வாங்க வேண்டும் என்பதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டு யாரும் கல்வி கற்பதில்லை (அப்படி இருக்கிறார்கள் என்றால் அவர்கள் கடைசி மட்டும் சித்தியடைய மாட்டார்கள்). படித்து முடித்தபின்னரே பலர் திருமணத்தை பற்றி ,கூடவே சீதனத்தைப் பற்றியும், சிந்திக்கிறார்கள்.

எனவே சீதனத்தை வாங்கவேண்டும் என்பது முதற்காரணியாக இருக்காது.

சீதனம் வாங்குவதைவிட தன்னளவு படித்த, தன்னளவு சம்பாதிக்கக் கூடிய பெண்ணை ஆண் தெரிவு செய்தால், நீண்டகால நோக்கில் நன்மை பயக்கும். என்றாலும் நம்வர்கள் அதைச் செய்ய முன்வரமாட்டர்கள். காரணம் பலவாக இருக்கும். சிலவேளை, சீதனம் வாங்கா விட்டால், தன்னை வியாதிக்காறன் என்று எண்ணிவிடுவார்களோ என்ற பயம், சிலவேளை படித்த பெண் என்றால் சொல்வழி கேட்கமாட்டாள் என்ற பயம் (படித்த பெண் என்றால் கொஞ்ச விஷயங்கள் தெரியத்தானே செய்யும்), சிலவேளை பெண்களை அடக்கி ஆள வேண்டும் என்ற நோய், சிலவேளை அவசரம் பெருந்தொகை தேவைப்படலாம் (கல்யாண வயதி ஒரு தங்கை, படித்ததால் வந்த கடன் சுமை) இப்படிப் பல காரணங்கள்.

* பெருமைக்கும் புகழுக்கும்

பெருமையும் புகழும் யாருக்குத்தான் கசக்காது. இவை உயர்கல்வி கற்றால் மட்டும் கிடைக்காது. மனித நேயமும், சமூகத்திற்கு உதவும் குணமும், அல்லது மனித குலத்திற்கே நீண்டகாலத்திற்கு உதவக்கூடிய எதையாவது கண்டுபிடிக்கக் கூடிய திறமையும் இருக்க வேண்டும். அல்லாவிடில் திருமண அழைப்பிதழில் மட்டும்தான் தான் படித்ததை பறைசாற்ற முடியும். இது குறுகியகால சந்தோஷத்தை மாத்திரம்தான் தரும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னைப் புரிந்துகொள்ளுமளவிற்கு அறிவு உள்ளது. சிலருக்கு நீ இப்படி என்று மற்றவர்கள் சொல்ல வேண்டியுள்ளது. :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப இங்க மட்டை போடுவதில் பிரச்சனை அதனால் கொஞ்சம் குறைச்சிருக்கினம் போல....?

அப்ப மட்டை தான் தரத்தை தீர்மானிக்குதோ.. சரி சரி :|

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.