Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைவருக்கும் துரோகம் செய்தவர் கருணாநிதி தான் என்கிறார் நெடுமாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி நாளேடு 8/31/2008 7:29:38 PM - சென்னை, காமராஜருக்கும், எம்.ஜி.ஆருக்கும், மூப்பனாருக்கும், நெடுஞ்செழியனுக்கும் துரோகம் இழைத்தவர் முதல்வர் கருணாநிதி தான் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதியை விமர்சித்து நெடுமாறன் கட்டுரை எழுதியிருந்தார். இதற்குப் பதிலாக கவிதை மூலம் நெடுமாறனை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் கருணாநிதி. அதற்கு விளக்கம் அளிப்பதாக குறிப்பிட்டு நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, முத ல்வர் கருணாநிதி அடுத்தமுறை, தான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை என கூறியதை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையில் எழுப்பப்பட்ட வாதங்களுக்கு எவ்வித பதிலும் கூற திராணியின்றி தனிப்பட்ட முறையில் மிகக் கீழ்த்தரமாக வசை புராணம் பாடியிருக்கிறார்.

அவர் தரத்திற்கு நானும் இறங்கி பதிலடி கொடுக்க விரும்பவில்லை. எனினும் அவர் கூறியுள்ள அப்பட்டமான பொய்களுக்குப் பதில் கூற வேண்டியது அவசியம் ஆகும்.

பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பிறகு இன்று வரையிலும் அவரது நினைவை நன்றியறிதலுடன் போற்றி வருபவன் நான் என்பதைத் தமிழகம் அறியும். ஆனால் காமராசருக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக புனைந்து கூறியிருக்கிறார் கருணாநிதி.

1969ஆம் ஆண்டில் நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டபோது அவரைத் தோற்கடிக்க வரிந்து கட்டிக் கொண்டு பொய்யான பழிகளை சுமத்தியும், இது பாராளுமன்றத் தொகுதியல்ல, இது நாடார் மன்றத் தொகுதி என்று சாதி வெறியைக் கிளப்பியும் துரோகம் செய்தவர் கருணாநிதி.

அறிஞர் அண்ணாவால் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்குத் துரோகம் செய்து பதவி நாற்காலியைக் குறுக்கு வழியில் கைப்பற்றி அண்ணாவுக்கு துரோகம் செய்தவரும், அரியணை ஏற ஏணியாகப் பயன்பட்ட எம்.ஜி.ஆரை எட்டி உதைத்து கட்சியிலிருந்து நீக்கித் துரோகம் புரிந்தவரும் கருணாநிதியே.

1996ஆம் ஆண்டு பிரதமராகும் வாய்ப்பு காவிரி மைந்தனான மூப்பனாருக்குக் கிடைத்தபோது அவருக்

குத் துரோகம் செய்து காவிரிப் பகைவனான தேவ கவுடா பிரதமராகத் துணை நின்றவர் கருணாநிதி. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்குப் பெருந்துரோகம் செய்தவர் இவரே.

மேலும் 1983ஆம் ஆண்டு நான் தியாகப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்குப் படகில் சென்ற போது கடைசி வேளையில் கலந்து கொண்டவர் குமரி ஆனந்தன். நடுக்கடலில் எங்கள் படகைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் என்னோடு அவரையும் கைது செய்து கரைக்கு கொண்டு வந்தனர். இந்த உண்மையைத் திரித்து ஏதேதோ கூறுகிறார் கருணாநிதி.

பொய்யும் புரட்டும் அவருக்கே ஆகி வந்த கலை. வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச அவர் முன்வர வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதியின் கள்ளத்தனமும் நரித்தனமும் எழுபதுகளிலிருந்தே ( சிறுவயதிலிருந்தே) எனக்குத்தெரியும்

Edited by குமாரசாமி

கருணாநிதியின் கள்ளத்தனமும் நரித்தனமும் எழுபதுகளிலிருந்தே ( சிறுவயதிலிருந்தே) எனக்குத்தெரியும்

கு.சா,

உங்களுக்கும் அவ்வளவு வயதோ? பாத்த அப்பிடித்தெரியெல்ல! :lol::D

Edited by Sooravali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா,

உங்களுக்கும் அவ்வளவு வயதோ? பாத்த அப்பிடித்தெரியெல்ல! :lol::D

இதுதான் சொல்லுறது ஒரு மனுசன்ரை கருத்தை வைச்சு அவனை எடை போடாதேங்கோ எண்டு :unsure:

எல்லாம் சரி என்ரை வயதை ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த பனம்பழத்துக்கு கறுப்பு கண்ணாடி போட்டவரிண்ட வேலை எல்லாம் உலகமே அறியும் அதுக்குள்ளே தமிழினத்தின் வாலாக்கொடி என்ற பட்டம் வேற :D:(:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்தான் உலகத் தமிழர்களின் தலைவராம்? முத்தமிழை வித்தவர் இவர் குடும்பத்தை அரசியலுக்குள் கொண்டுவந்து தமிழ் நாட்டையே நாசமளிப்பவர் இவர். இவரை தமிழனுக்கு உதவி செய்வான் என யாராவது எண்ணியிருந்தால் அது மடத்தனம். ஸ்டாலினை அல்லது கனிமொழியை தமிழீழத்தின் ஜனாதிபதி ஆக்குகின்றோம் என்றால் சிலவேளைகளில் ஈழத்துக்கு ஆதரவாக அறிக்கை விடுவார். மனிசனுக்கு அறளை பெயர்ந்துவிட்டது இனி ஒன்றும் செய்யமுடியாது. இவரது காலத்தின் பின்னர் திமுக உடைந்துபோய்விடும். ஸ்டாலின் திமுக, கனிமொழிதிமுக, அழகிரிதிமுக, தயானிதிதிமுக எனப் பல துண்டுகளாக உடையும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை இபோதுதான் தெரிந்து கொண்டாரோ நெடுமாறன் ஜயா

ஜயா சொல்லுறவன் எல்லாம் செய்யமாடான் அதே போல செய்யுறவன் எல்லாம் சொல்லமாட்டான்

எங்களுக்கே தெரியும் கருணாநிதி ஒரு ஆலம்பழம் உள்ளே இருப்பது அரசியல் ஆசை மட்டுமே

இதுதான் சொல்லுறது ஒரு மனுசன்ரை கருத்தை வைச்சு அவனை எடை போடாதேங்கோ எண்டு :)

எல்லாம் சரி என்ரை வயதை ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம் :lol:

நான் நினைச்சன் ஒரு 50 அல்லது 55 எண்டு ஆனா நீங்கள் சொல்லறமாதிரி பாத்தா 75, 80 தாண்டும் போலகிடக்கு!!!!!!!! :):(:D

:):):o

Edited by Sooravali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைச்சன் ஒரு 50 அல்லது 55 எண்டு ஆனா நீங்கள் சொல்லறமாதிரி பாத்தா 75, 80 தாண்டும் போலகிடக்கு!!!!!!!! :):(:D

:lol::):)

mad02171.gifmad02171.gifmad02171.gif

சரி.... சரி

கோவப்படாதெங்கோ கு.சா

நான் ஒரு முசுப்பாத்திக்குத்தான் இப்பிடி சொன்னனான்... சரி ஏன் பிரச்சனை நீங்களே சொல்லுங்கோ உங்களுக்கு எத்தினை வயசெண்டு?...

ஆனா அதுக்குகாக 16, 20 எண்டு எங்களுக்கு மாரடைப்பைதரவேண்டாம். :):(:D

  • கருத்துக்கள உறவுகள்

:) தமிழ்நாட்டில் சினிமாவுக்குச் சினிமா இளைஞர்களை முதல்வராக்குவோம், மந்திரியாக்குவோம் என்று முழங்குகிறார்கள். ஆனால் தவறாமல் இந்த ஆளை மட்டும்ம் திருப்பித் திருப்பி முதல்வராக்குகிறார்கள். கேட்டால் அவர் கலைஞராம், இலக்கியவாதியாம், தமிழரின் தலைவராம்...இப்படி ஏகப்பட்ட மகுடங்கள் அவருக்கு.

இந்த வயதில மூளை வேலை செய்வது( அதுதான் அறளை) கூட குறைந்துவிடுமே?! இவர் எப்படி 6 கோடித் தமிழரை ஆட்சி செய்கிறாரோ தெரியவில்லை.

கொடுத்துவைச்ச தமிழ்நாட்டுக்காரன் !!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான் சொல்லுறது ஒரு மனுசன்ரை கருத்தை வைச்சு அவனை எடை போடாதேங்கோ எண்டு :)

எல்லாம் சரி என்ரை வயதை ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம் :lol:

என்ன ஒரு ஏழெட்டு கழுதை வயசிருக்கும்... :lol:

என்ன ஒரு ஏழெட்டு கழுதை வயசிருக்கும்... :lol:

7 * 8*(1+3/4) = 98?? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

7 * 8*(1+3/4) = 98?? :huh:

நீங்கள் கணக்கில புலி போல கிடக்கு... இப்ப 'சாமி' கவலைப்படப்போறார்... :mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.