Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பில் துணை இராணுவக்குழுவின் முன்னாள் ஊடக இணைப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு

Featured Replies

மட்டக்களப்பில் துணை இராணுவக்குழுவின் முன்னாள் ஊடக இணைப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு

[திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2008, 08:50 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் பிள்ளையான் துணை இராணுவக்குழுவின் முன்னாள் ஊடக இணைப்பாளர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை இரவு 7:45 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ராதிகா தேவகுமார் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகளே துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாக மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

:D இந்தக் கொலைக்குழு இணைப்பாளர் பற்றித் தமிழ்நெட் மேலதிக விபரம் வெளியிட்டிருக்கு.

இவர் ஒரு ஆசிரியர் என்றும், சிங்களப் பேரினவாத அரசின் ஊதுகுழலான தினகரன் எனும் தமிழ் மொழிப் பத்திரிகையின் மட்டக்களப்புச் செய்தியாளர் என்றும் கூறியிருக்கிறது. பிள்ளையானினால் சிறந்த இணைப்பாளர் என்று விருது வழங்கப்பட்டவர் என்றும் மேலும் கூறப்பட்டிருக்கு.

35 வயதுடைய இவர், சில காலமாக தனது பாடசாலை வேலைகளை விட்டுவிட்டு முழு அளவில் பிள்ளையானுடன் வேலை பார்த்ததாகவும், அண்மைக்காலமாக ஏதோ ஒரு தகராறு ஒன்றில் பிள்ளையானிடமிருந்து சற்று விலகி இருந்தவர் என்றும் சொல்லப்பட்டிருக்கு.

ஆகத் தேசியத்தை தமது சுய இச்சைகளுக்காக, பிரதேசவாதப் போர்வையில் காட்டிக்கொடுத்த எல்லோருக்கும் இருப்பது ஒரே வழிதான். துரோகியாகச் சாவது . இதில் வேடிக்கை என்னவென்றால் தான் ஆதரித்த துரோகக் கும்பலாலேயே சுட்டுக் கொல்லப்படுவது. மகேஷ்வரி வேலாயுதம் இவருக்கு முன்மாதிரி !

முன்னால் கள்ளக்காதலிக்கு வேட்டு வைத்தார் 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பிள்ளையான்

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பிள்ளையானின் கள்ளக்காதலியாக கடந்த சில காலங்களாக நடித்த வந்த மட்டு கல்லடியைச் சேர்ந்த ராதிகா தேவகுமார், தற்போது வசூல்ராஜாவினால் கழற்றி விடப்பட்ட நிலையில் இன்று கல்லடியில் வைத்து வசூல்ராஜா எம்பிபிஎஸ்ஸின் அடியாட்களினால் சுடப்பட்ட நிலையில் மட்டு வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் XXXXக்குத் தெரிவித்தன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

சிங்கள அரச ஊடக நிறுவனமான லேக்கவுஸின் ஊழியர் எனும் பெயரில் கடந்த சில காலங்களாக சிங்கள புலனாய்வுத்துறையில் பணியாற்றிய மட்டு கல்லடியைச் சேர்ந்த ராதிகா தேவகுமார், சிங்கள புலனாய்வுத்துறையின் பணிப்புக்கமைய, வசூல்ராஜா எம்பிபிஎஸ்ஸின் கள்ளக்காதலியாக மாறி, வசூல்ராஜாவின் ஊடக தொடர்பாளர் எனும் பெயரில் வசூல்ராஜா எம்பிபிஎஸ்ஸின் நடவடிக்கைகள் அனைத்தையும் சிங்கள புலனாய்வுத்துறைக்கு ஒப்புவித்து வந்ததாகவும், கடந்த சில காலங்களாக வசூல்ராஜா எம்பிபிஎஸ்ஸின் நடவடிக்கைகளை 'ஒட்டம்மான்' கருணாவிற்கு தெரிவித்தும் வந்தாராம்.

இதேவேளை லண்டனிலிருந்து கம்பி எண்ணி களைத்து, கொழும்பு திரும்பிய 'ஒட்டம்மான்' கருணாவுடன் தொடர்புகளையும் ராதிகா தேவகுமார் ஏற்படுத்தி இருந்தாராம். இதன் பின் வசூல்ராஜா எம்பிபிஎஸ்ஸின் நடவடிக்கைகளை 'ஒட்டம்மான்' கருணாவிற்கு தெரியப்படுத்தி வந்ததை அடுத்து, இத்தகவல்களை கேள்வியுற்ற வசூல்ராஜா எம்பிபிஎஸ், தனது கள்ளக்காதலியாக நடித்து வந்த மட்டு கல்லடியைச் சேர்ந்த ராதிகா தேவகுமாரை கழட்டி விட்டதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை அடுத்து இன்று மாலை நேரம் அதியுயர் பாதுகாப்பு நிறைந்த பிரதேசத்தில், மோட்டர் சைக்கிள்களில் வந்த வசூல்ராஜா எம்பிபிஎஸ்ஸின் ஆயுததாரிகள் ராதிகா தேவகுமாரின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவை படுகாப்யப்படுத்தி உள்ளார்கள்.

அண்மைக் காலங்களாக மட்டக்களப்பில் 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பிள்ளையானின் ஆயுததாரிகள், 'ஒட்டம்மான்' கருணாவின் ஆயுததாரிகள், 'அத்தியடிக்குத்தி' டக்கிலஸின் ஆயுததாரிகளுக்கிடையில் மோதல்கள் வலுவடைந்து வரும் நிலையில் இன்றைய துப்பாக்கிப் பிரயோகமும் நிகழ்ந்திருக்கிறது. வரும் நாட்களில் ஒட்டுக்கும்பல்களின் இடையேயான மோதல்கள் வலுவடையக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக மட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி ஓர் இணையத்தளத்தில் செய்தி வந்திருக்கிறது. :D

Edited by Bond007

  • கருத்துக்கள உறவுகள்

எதோ குத்து வெட்டு நடப்பதாக தான் தெரிகிறது. மகிந்தவுக்கும் இது தானே வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகத் தேசியத்தை தமது சுய இச்சைகளுக்காக, பிரதேசவாதப் போர்வையில் காட்டிக்கொடுத்த எல்லோருக்கும் இருப்பது ஒரே வழிதான். துரோகியாகச் சாவது . இதில் வேடிக்கை என்னவென்றால் தான் ஆதரித்த துரோகக் கும்பலாலேயே சுட்டுக் கொல்லப்படுவது. மகேஷ்வரி வேலாயுதம் இவருக்கு முன்மாதிரி !

ஆக ............ இதுகளை பார்த்தும் , புத்தி வரவில்லையே ............

  • கருத்துக்கள உறவுகள்

ஆக ............ இதுகளை பார்த்தும் , புத்தி வரவில்லையே ............

வரவே வராது பட்டுத்தான் திருந்தவேண்டும் நல்ல காலம் அவக்கு பாரம் ஏறவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

வரவே வராது பட்டுத்தான் திருந்தவேண்டும் நல்ல காலம் அவக்கு பாரம் ஏறவில்லை

முனிவர் , பாரம் ஏறீச்சுதோ ......... ஏற இல்லையோ ............ அல்லது ஏறின குறையோ ............உதெல்லாம் ஆருக்கு தெரியும் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் , பாரம் ஏறீச்சுதோ ......... ஏற இல்லையோ ............ அல்லது ஏறின குறையோ ............உதெல்லாம் ஆருக்கு தெரியும் . :icon_mrgreen:

அப்போ உங்களூக்கு விளங்கிட்டுது போல நான் தான் கேடி என நினைத்திருந்தேன் ஆனால் நீங்கள் என்னை விட கேடியாய் இருப்பயல் போல :unsure::lol::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.