Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பஜனை ஆண்ரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறக்காமல் வெள்ளிகிழமை பின்னேரம் ஏழு மணி போல் ஒருக்கா வீட்ட வாரும் தம்பி என்று மணி அண்ரி சொன்னவுடன் சுரேஷ் ஏன் ஏதாவது விசேசமா அண்ரி என்றான்..அப்படி ஒன்றுமில்லை நீ வா,காரணத்தை சொன்னா தேவை இல்லாம அலட்டுவாய் ஆனபடியா நீ வெள்ளிகிழமை மனிசியையும் பிள்ளைகளையும் கூட்டி கொண்டு வா.

மணி அண்ரி சுரேஷின் அம்மாவின் தோழி.இப்பொழுது சிட்னியில் மகள் சும்தியுடன் வாழ்ந்து வருகிறா கணவன் மூன்று வருடங்களிற்கு முன் சிவபதம் அடைந்து விட்டார்.ஹரிதாஸ் சுவாமிகள் என்றால் மணி ஆண்ரிக்கு உயிர் ஊரிலே பஜனைகளை பூசைகளை என்று வைத்து தனது பக்தியை ஊர்மக்களுக்கு வெளிபடுத்து கொண்டிருப்பா ஊரில் சிலர் மணி ஆண்ரியை பஜனை ஆண்ரி என்று நக்கலாகவும் கூறுவதுண்டு.அதில் சுரேஷும் ஒருவன்.

ஹரிதாஸ் சுவாமிகள் பற்றி கதைக்க வெளிகிட்டால் ஆண்ரியில் கண்களிள் இருந்து ஆனந்தகண்ணீர் வடித்து தான் தனது ஹரிதாஸ் புராணத்தை முடிப்பார்.இந்தியாவிற்கு சென்று அவரை தரிசித்து விட்டு ஊரில் வந்து மணி ஆண்ரி பட்டபாடு சுரேசிற்கு இன்னும் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்து கிடக்கிறது.

சுவாமிக்கு அருகில் நின்று ஒரு படம் எடுத்து போட்டு அதை ஊரில் உள்ள சகலரிடமும் காட்டி பெருமைபட்டு கொண்டு திரிந்தவர் தான் இந்த மணி ஆண்ரி.

மணி ஆண்ரி கூப்பிட்டபடியா ஏதாவது பஜனையா தான் இருக்கு என்று மனிசையும் கூட்டி கொண்டு வெள்ளி மாலை அங்கு சென்றான்.அவன் நினைத்தது போல் அது ஒரு பஜனை ஒன்று கூடல் தான்.சுமதி தான் இவர்களை வரவேற்றாள் மணி ஆண்ரி பக்தி பரவசத்தில் இருந்தபடி அவ்வளவாக பேசவில்லை அன்று.ஆனால் மகள் சுமதி தான் வந்தவர்களுடன் உரையாடி கொண்டிருந்தா.

போன சனி கிழமை ஹரிகரன் புரோகிராம் சூப்பரப்பா.நான் நல்லா எஞ்ஜோய் பண்ணி பார்த்தனான் எண்ட மூத்தவள் சொல்லி போட்டாள் ஒவ்வொரு முறையும் கரிகரன் புரொகிரம் நடக்கும் போதும் தான் போக வேண்டும் என்று.அவளுக்கு ஹரிகரனின் பாடல்களை கேட்பது என்றால் மிகவும் விருப்பம்.

நான் இன்டவல் எப்போது வரும் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்து வந்தவுடன் நேரடியாக ஹரிகரனுடன் போய் கதைத்தனான் நல்லா கதைக்கிறார் "சோ சுவீடப்பா" நானும் என்ற மனிசரும் அவருடன் நின்று படம் எடுத்தனாங்கள் இருங்கோ கொண்டு வந்து காட்டுறன் என்று ஓடி போய் தனது பட அல்பத்தை கொண்டு வந்து இந்தியா பிரபலங்களுடன் நின்று எடுத்த படங்களை காட்டி புளுகி கொண்டிருந்தார்.

மணி ஆண்ரி பஜனை தொடங்க போது சத்தம் போட வேண்டாம் என்று சொன்னவுடன் அமைதியாக இருந்து பஜனையை கேட்டனர்.

வீடு செல்லும் போது சுரேஷின் மனைவி கீதா கரிகரனின் புரோகிராம் போவோம் என்று எத்தனை தரம் கேட்டனான் நீங்கள் தான் பிடிவாதம் பிடித்து வரமாட்டன் என்றபடியால் நானும் போகவில்லை.சுமதியை பாருங்கோ புருசனோட போய் நின்று படமும் எடுத்திருக்கா நீங்களும் இருக்கிறீங்களே புரோகிராமுக்கே போகமாட்டீங்க இந்த இலட்சனத்தில் படம் எடுக்கிறதை பத்தி உங்களுடன் கதைக்கிறன்.அது சரி என்ற தலைவிதி அப்படி என்றால் யாரை நொந்து என்ன பயன் என்று ஒரு ஒப்பாரியை வைத்து விட்டாள்.

அமைதியாக கேட்ட சுரேஷ்.இங்க பாரும் உந்த கதாநாயகனுடன் படம் எடுக்கிறது பிறகு அதை மற்ற ஆட்களுக்கு காட்டி புளுகிறது இது எல்லாம் ஒரு சாதி வியாதியப்பா,சுமதியின் அம்மா ஹரிதாஸ் நாயகன் என்று திரிந்தா இப்ப சுமதி ஹரிகரன் தான் நாயகன் என்று திரிகிறா போதாகுறைக்கு தண்ட மகளையும் ஹரிகரன் விசிறி என்று புலம்புது என்று சொன்னது தான் தாமதம்,

எனக்கு உங்களுடைய உந்த விளக்கங்களும்,வியாக்கியானங்

மாமா மீண்டும் குட்டிக்கதையோடை வந்திருக்கிறியள் :lol:

அச்சோ மாமா இப்படி இன்னும் எத்தனை குடும்பத்தை சீரழிக்கினமோ பஜனை ஆன்ரி சுமதி ஆட்கள் போல சிலர். :)

இனி நாட்டிலை ஹரிகரனின் புரோகிராம் நடந்தால் சுரேஷ் வீட்டில் ரகளை தான் :)

என்னதான் இஉந்தாலும் கீதா புருஷன் சொல்லுறதை கேட்பாவோ மாட்டாவோ இல்லை தான் நினைச்ச போல ஹரிகரனின் புரோகிராமுக்கு போய் படம் எல்லாம் எடுப்பாவோ என்பது தான் என் சிந்தனை. :)

ஆமா இனி எப்ப ஹரிகரனின் புரோகிராம் உங்க நாட்டிலை :):wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாமா மீண்டும் குட்டிக்கதையோடை வந்திருக்கிறியள் :)

அச்சோ மாமா இப்படி இன்னும் எத்தனை குடும்பத்தை சீரழிக்கினமோ பஜனை ஆன்ரி சுமதி ஆட்கள் போல சிலர். :)

இனி நாட்டிலை ஹரிகரனின் புரோகிராம் நடந்தால் சுரேஷ் வீட்டில் ரகளை தான் :(

என்னதான் இஉந்தாலும் கீதா புருஷன் சொல்லுறதை கேட்பாவோ மாட்டாவோ இல்லை தான் நினைச்ச போல ஹரிகரனின் புரோகிராமுக்கு போய் படம் எல்லாம் எடுப்பாவோ என்பது தான் என் சிந்தனை. :)

ஆமா இனி எப்ப ஹரிகரனின் புரோகிராம் உங்க நாட்டிலை :):wub:

:lol: எல்லாம் அந்த சுரேஸ்க்கு தான் வெளிச்சம் :)

பஜனைக்கு நீங்கள் போறலையோ....... "பரவசமாக" இருக்குமே.... :)

  • கருத்துக்கள உறவுகள்

பஜனைக்கு நீங்கள் போறலையோ....... "பரவசமாக" இருக்குமே.... :)

அதை கேட்காதிங்கோ புத்தனிடம் என்ன புத்தன்

நாங்கள் பார்ட்டிக்குதான் போவோம் இல்லையா புத்தன் :):wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

கரிகரன் போல தென்னிந்தியப் பிரபலங்கள் சிலர் புலம் பெயர்ந்த நாடுகளில் கலைநிகழ்ச்சிக்கு வரும் போது, அவரைப் பார்க்கச் செல்லும் அல்லது உதவி செய்யும் எம்மவர்களின் தலைகளில் மிளகாய் அரைத்த சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. கலைஞர்களுடன் வரும் உறவினர்கள் கடைகளுக்கு சென்று வாங்கும் விலை உயர்ந்த பொருட்களுக்கு பணம் செலுத்துவது எல்லாம் நடந்திருக்கிறது.

தலைப்பைப்பார்த்து என்னவோ ஏதோன்னு நினைச்சுட்டன். ( அதான் யாழ் களத்தில் இந்தமாதிரி கதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார்களா என்று! )

புத்தனின் கதை சூடான ஒரு தகவலை சொல்லி நிற்கிறது அதற்கு முதலில் பாராட்டுக்கள்.பஜனைக்கு சென்று வீண் கதை பேசுவதை விட,மன தெளிவோடு சினிமாவிற்கு போய் வருவது புண்ணியம்.கரிகரனையும்,கரிதாஸ

் சுவாமிகளையும் புத்தன் ஒப்பிடலாமோ?

ஜயா,சொல்ல வரும் செய்தியை சொல்லாமல் விட்டு விடுவது சிலரின் எழுத்து நடை.உங்கள் கதையில் இரண்டு,மூன்று விடயங்களை சொல்ல எத்தனிப்பதாக தெரிகிறது.குட்டி கதையில் முட்டு முட்டான செய்தியோடு "பஜனை ஆண்ரி" நிறைவாக இருக்கிறாள். :D

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில நடக்கிறதை சொல்ல வாறியள்!!! நன்றி புத்தன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.