Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஜெயலலிதா ஆதரவு

Featured Replies

தமிழக அரசின் ஊடாக ஏதாவது செய்யலாம் என்றாலும் முயற்சித்துப் பார்க்கலாம். நேரடியாக இறங்கும்போது தான் சிலவேளை சிக்கல்கள் எழக்கூடும்

உள்ளை தூக்கி போட்டு முதுகெலும்பை தமிழன் எண்டு பாக்காமல் எண்ணி போடுங்வாங்கள் எண்டுதானே நினைக்கிறீங்கள்....???

சந்தேகமே வேண்டாம் அது கட்டாயம் நடக்கும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளை தூக்கி போட்டு முதுகெலும்பை தமிழன் எண்டு பாக்காமல் எண்ணி போடுங்வாங்கள் எண்டுதானே நினைக்கிறீங்கள்....???

சந்தேகமே வேண்டாம் அது கட்டாயம் நடக்கும்....

:lol::lol::lol: அனுபவம் போல் ஒரு ஆசான் உலகில் எங்கும் இல்லை :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கம்னியூஸ்ட் கட்சி விஜயகாந்த் கட்சியுடன் சேர்ந்து 3வது அணியாக வரும் தேர்தலில் நிற்கப்போவதாக தமிழக ஊடகங்களில் செய்திகள் வந்தன. இச்செய்தியைப் பார்த்தால் கம்னியுஸ்ட் கட்சி அதிமுகவுடன் சேர்ந்து தேர்தலில் நிற்கப் போகிறது எனத் தெரிகிறது. எது எப்படியோ ஈழத்தமிழர்களுக்காக அதிமுக ஆதரவு கொடுப்பது வரவேற்கத்தக்க விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

கம்னியூஸ்ட் கட்சி விஜயகாந்த் கட்சியுடன் சேர்ந்து 3வது அணியாக வரும் தேர்தலில் நிற்கப்போவதாக தமிழக ஊடகங்களில் செய்திகள் வந்தன. இச்செய்தியைப் பார்த்தால் கம்னியுஸ்ட் கட்சி அதிமுகவுடன் சேர்ந்து தேர்தலில் நிற்கப் போகிறது எனத் தெரிகிறது. எது எப்படியோ ஈழத்தமிழர்களுக்காக அதிமுக ஆதரவு கொடுப்பது வரவேற்கத்தக்க விடயம்.

தேர்த்தலில் வெல்லும் வரை ஈழதமிழர்களுக்கான ஆதரவு அம்மாவால் வழங்குவார். பிறகு வேதாளம் முருக்கை மரத்தில் ஏறிவிடும்.

கருணா(நிதி) யும் திட்டம் தீட்டுவார்.

:lol::lol::lol: அனுபவம் போல் ஒரு ஆசான் உலகில் எங்கும் இல்லை :icon_idea:

நீதிபதி, வக்கீல், ரோ காறன் , ENDLF காறன் எண்டு எல்லாமாய் ஆறு லட்ச்சம் ரூபாய் லஞ்சமாய் அழுது வெளீயாலை வந்தனான் ஐயா... ஆளை விடுங்கோ சாமியோவ்...!!

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்தும் தனது கட்சியைச் சேர்ந்த பண்டிருட்டி இராமச்சந்திரன் அவர்களையும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க அனுப்பவுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்துக்கு விஜயகாந்தும் ஆதரவு தெரிவிப்பதாக கடிதம்

இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக தமிழ்நாட்டில் எதிர்வரும் வியாழக்கிழமை (02.10.08) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் சார்பில் நடத்தப்பட உள்ள உண்ணாநிலைப் போராட்டத்துக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்துக்கு அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் விஜயகாந்த்தும் தனது ஆதரவை அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் செயலாளர் தா.பாண்டியனுக்கு நேற்று திங்கட்கிழமை விஜயகாந்த் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் தாங்கள் அனுப்பிய இலங்கைத் தமிழர் இனப்பிரச்சினை சம்பந்தமாக 26.09.2008 திகதியிட்ட கடிதம் கிடைக்கப்பெற்றேன்.

இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒக்ரோபர் 2 ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதை தெரிந்துகொண்டேன்.

இலங்கைத் தமிழர்கள் சிங்கள அரசின் அடக்குமுறையால் படும் துயரம் சொல்லமுடியாத ஒன்றாகும். நான் சார்ந்திருக்கின்ற தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் அவைத் தலைவர் திரு.பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்கள் சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குவார்.

இதர மாவட்டத் தலைநகரங்களைப் பொறுத்தவரை எங்களது இயக்கத் தோழர்கள் இளைஞர் அணி மாநாட்டின் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் கலந்துகொள்ள இயலவில்லை என்பதையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

தங்களது போராட்டம் வெற்றிபெற எங்களது உளமார்ந்த வாழ்த்துக்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழ்வின்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லா கட்சியினரும் இணைந்து குரல் கொடுக்தால் சந்தோசமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:) கருணாநிதியின் மவுனத்தை விடவும் இது எவ்வளவோ மேல்.

அண்ணன் வைக்கோ தொடர்ந்தும் ஜெயலலிதாவுடன் இருப்பதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது !

அனைவருக்கும் நன்றிகள்.

வைகோவிற்கு "உதயன்" எத்தனை தொகுதிகள் ஒதுக்கும்? [14. Nov. 2007 - 07:11]

வைகோவிற்கு "உதயன்" எத்தனை தொகுதிகள் ஒதுக்கும்? மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறித்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளிதழான "உதயன்" 06.11.07 அன்று வெளியிடப்பட்ட இதழில் ஒரு ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது. ஈழத் தமிழர் விரோதப் போக்குக் கொண்ட ஜெயலலிதாவிற்கு வால் பிடிப்பதற்கு, உலகத் தமிழர்களுக்கு வைகோ பதில் சொல்ல வேண்டும் என்று உதயன் எழுதியிருக்கிறது.

உதயன் வைகோவிடம் இருந்து என்ன பதிலை எதிர்பார்க்கிறது? அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதா? அப்படி விலகினால் விரைவில் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் வைகோவின் கட்சிக்கு உதயன் எத்தனை தொகுதிகளை ஒதுக்கிக் கொடுக்கும்? மதிமுக சார்பில் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்யும்? இவைகளை உதயன் உலகத் தமிழர்களுக்கு விளக்குமா?

ஜெயலலிதா கலைஞரின் ஆட்சியைக் கலைப்பதற்கு ஏதாவது வழி கிடைக்குமா என்று தூங்கும் போதும் சிந்திக்கின்ற ஒருவர். அவர் கலைஞரின் இரங்கல் கவிதையை வைத்து ஒரு சட்டப் பிரச்சனையை கிளப்ப முனைகிறார். இதை கலைஞர் சரியான முறையில் எதிர்கொள்வார். இதற்குள் வைகோவை இழுக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஜெயலலிதாவாவது சட்டப் பிரச்சனையைத்தான் கிளப்பினார். ஆனால் கலைஞரோடு கூட்டணி அமைத்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியனர் என்ன செய்தனர்?

கலைஞர் இரங்கல் தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் விட்டார்களா? மனித குலமே வெட்கப்படக்கூடிய ஒரு ஈனச் செயலைப் புரிந்தனர். தமிழ்நாட்டில் சில இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் தமிழ்செல்வனின் வீரச்சாவை இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

இவ்வாறான காட்டுமிராண்டிகளோடு கூட்டணி வைத்திருப்பதற்கு கலைஞர் உலகத் தமிழர்களுக்கு பதில் சொல்வாரா?

வேண்டாம். எந்த தமிழ்நாட்டு அரசியல் தலைவரும் தமிழ்நாட்டு அரசியலின் அடிப்படையில் அமைக்கின்ற கூட்டணிகளுக்கு யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம்.

தமிழ்நாட்டில் இரண்டாவது பலம் வாய்ந்த கூட்டணியில் தமிழீழத்திற்கு ஆதரவான ஒரு கட்சி இருப்பது ஈழத் தமிழர்களுக்கு நன்மையே தவிர, தீமை அல்ல. வைகோ தன்னுடைய தமிழீழ ஆதரவுக் குரலை சற்றும் தொய்வின்றி எழுப்புகின்றார். அவருக்கு ஈழத் தமிழர்கள் நன்றிக் கடன்பட்டுள்ளார்கள்.

கலைஞரை மகிழ்ச்சிப்படுத்தம் நோக்கில் ஈழத் தமிழ் ஊடகங்கள் வைகோவை புண்படுத்த வேண்டாம்.

Thanks: sabeshan

ஜெயலலிதாவும் விஜயகாந்தும், இடதுசாரிகளின் போராட்டத்தில் நேரடியாகக் கலந்துகொள்வதில் ஏதோ சிக்கல் இருப்பதுபோலத் தெரிகிறது. இரண்டுபேருமே பிரதிநிதிகளைத்தான் அனுப்புகிறார்கள். விரைவில் அவர்களே நேரடியாகவும் கலந்துகொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயலலிதாவும் விஜயகாந்தும், இடதுசாரிகளின் போராட்டத்தில் நேரடியாகக் கலந்துகொள்வதில் ஏதோ சிக்கல் இருப்பதுபோலத் தெரிகிறது. இரண்டுபேருமே பிரதிநிதிகளைத்தான் அனுப்புகிறார்கள். விரைவில் அவர்களே நேரடியாகவும் கலந்துகொள்ளவேண்டும்.

கூட்டணி அமைந்த பிற்பாடு சிக்கல்கள் தீரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.