Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளம் யுவதிமீது பாலியல் வல்லுறவு - ஐந்து தமிழ் இளைஞர்கள் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிற்சர்லாந்தின் பீல் என்னுமிடத்தில் தனியே சென்றுகொண்டிருந்த 21 வயது இளம் யுவதிமீது பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் ஐந்து தமிழ் இளைஞர்கள் பேர்ன் காவற்துறையினரால் கைது செய்யபட்டுள்ளனர். இளைஞர்கள் ஐவரும் சுவிற்சர்லாந்தில் வசிக்கும் 15 வயதிற்கும் 22 வயதிற்கும் உட்பட்டவர்களாவார்.

கடந்த 05.10.2008 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணியளவில் தனிமையில் சென்று கொண்டிருந்த மேற்படி 21 வயதான இளம் யுவதியை மிரட்டி தமது வாகனத்தில் கடத்திசென்ற இளைஞர்கள் Brügg காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று ஐவரும் மிகவம் மோசமான முறையில் பாலியல் வல்லுறவு கொண்டதாக காவற்துறைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சூரிச் பதிவு இலக்கதுடனான BMW வாகனத்தில் வந்த இளைஞர்களே மேற்படி குற்றச்செயலை புரிந்தவர்களாவார். அயலவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே மேற்படி தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யபட்டுள்ள இளைஞர்கள் சுவிற்சர்லாந்தில் எந்த மாநிலத்தில் வசிப்பவர்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

பாதிக்கப்பட்ட இளம் யுவதி தற்போது வைத்திய பரிசோதனையில் உள்ளார்.

http://swissmurasam.info/content/view/9128/27/

-----------------

15 - 22 வயதிற்குட்பட்டவர்கள் எனில் சிறு வயதுகளில் இங்கு வந்திருக்க வேண்டும். அவர்களிடத்தில் பாலியில் வன்புணர்வு சிந்தனைகள் இருக்காது என நினைத்தேன். (பாலியல் சிந்தனைகள் இருக்கலாம். ஆனால் அதனை வேறு வழிகளில் தீர்த்துகொள்ளும் ஆற்றல் இருக்கும் என நம்பினேன்.)

ஆனால் கல்விக்கும் அப்பால் இந்த வல்லுறவுச் சிந்தனை மரபணு மூலம் கடத்தப்படுகிறதோ எனத் தோன்றுகிறது.

தமிழன் தன் பெயரை உலக வரலாறுகளிலும் பொறித்து செல்கின்றான்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் இந்த செய்கைக்கு இவர்களின் பெற்றோர்களும் குற்றவாளிகளே .

புகலிடம் தந்து பாதுகாக்கின்ற ஒரு நாட்டில் இப்படியானவற்றை செய்வதற்கு வெட்கி தலை குனிய வேண்டாமா ?

இதனால் வரும் பின் விளைவுகளை யோசிக்கவில்லையா ?

பத்திரிகைகள் எல்லாம் இனி பக்கம் பக்கமாக எழுதி தமிழனை நாறடிக்க போகின்றார்களே .

அப்படியான ஆசை வந்தால் , அதற்குரிய இடங்களுக்கு போகலாமே .

இப்போ தங்களது வாழ்க்கையை வீணாக்கி , சந்தி சிரிக்க நிற்கிறார்கள் . :lol:

எல்லாம் வளர்த்த வளர்ப்பு, கஷ்டமாயிருந்தால் காச கீச குடுத்து, செய்யவேண்டிய இடத்தில செய்யவேண்டியதுதானே

தயவுசெய்து யாராவது இதுகளின்ர பெயர் விபரங்களை பகிரங்கப்படுத்துங்கோ

Edited by பல்லவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

த்திரிகைகள் எல்லாம் இனி பக்கம் பக்கமாக எழுதி தமிழனை நாறடிக்க போகின்றார்களே .

ஆம்.. ஜெர்மன் பத்திரிகைகளில் இது குறித்த செய்திகள் வெளியாகிவிட்டன. ஏற்கனவே வெளிநாட்டினர் மீது அதிருப்தியடைந்திருக்கும் சுவிஸ் பிரசைகளிடம் மேலும் நல்ல பெயர் எடுக்கலாம். குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினர் மீது நாடுகடத்தல் வரையான நடவடிக்கைகளில் பொலிசார் இறங்கியிருப்பதாக சொல்கிறார்கள்.

இங்கிருக்கும் தமிழர் அமைப்புகள் இப்படியான குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்குமாறு காவல் துறையிடம் முறையிடுவதனால் கண்டனம் செய்வதால் கொஞ்ச நஞ்ச மரியாதையாவது கிடைக்கும்.

ஆனால் நம்ம பெடியங்கள் தானே என அம்சடக்கிகளாக இருந்து விட்டுத்தானே போகப் போகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுவிற்சலாந்து நாட்டுக்கு விஸா அடிப்படையில் இலங்கையிலிருந்து ஆட்களை அனுமதிக்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெம்பிப்பழுத்த பன்னாடைகள் அதுவும் ஐந்து பேருக்கு ஒரு பெண் கேட்குது. இதுகளுக்கு எல்லாம் வெட்டி ஒட்டினால்தான் சரிவரும். இதுவே எங்கட ஈழமாக இருந்திருந்தால் கோது இருந்திருக்கும் ஆனால் உள்ளுக்கு சக்கை இருந்திருக்காது :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு சமூகத்திலும் இப்படியானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், அதற்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் யாரும் ஒதுக்கி வைப்பது இல்லை, இது ஒரு தனிமனித தவறாகவே பர்ர்க்கப்படும், தண்டனைக்கு பின்னர் அவர்கள் சாதாரன பிரசைகளாக வாழ அனுமதிக்கடுவார்கள். இவ்வளவு சுதந்திரமான நாட்டில் அவர்கள் இந்த வழிமுறையை தேர்வு செய்தமை ஆச்சரியத்தை கொடுக்ககூடியது, இது அந்த இளைஞர்களின் வளர்ப்புமுறையிலேயே தவரு இருக்கிறது, அவர்களுக்கு சரியான அறிவூட்டல் அவர்களது பெற்றோர்களால் வழங்கப்டமையே இதற்க்கான காரணமாக இருக்கும். தவறுக்கு தண்டனை உண்டு.

தமிழர் கலாச்சரம், பண்பாட்டுக்கும் நடைமுறை வாழ்வுக்கும் இடையில் எமது இளையோர் தடுமாறுகிறார்கள் அவர்களுக்கு சரியான பாதையை புலம்பெயர்பெற்றோர்தான் காட்டவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற கிழமை நடந்தது பற்றி அறிந்தேன். கவலைதான்.

சுவிற்சலாந்து நாட்டுக்கு விஸா அடிப்படையில் இலங்கையிலிருந்து ஆட்களை அனுமதிக்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றத

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

சரி அந்த யுவதி எப்படிப்பட்ட ஆள்..???! அதையும் விசாரிச்சுப் போட்டுத்தான் குற்றம் குறை காண வேணும்..! :icon_mrgreen::icon_mrgreen:

அவளவையும் காசுக்கு.. சுகத்துக்கு.. இன்னும் பொழுதுபோக்கிற்கு.. கூடிப் போவாளவை.. ஏதேனும்.. பிரச்சனையள் என்ற உடன.. முரண்பட்டிருப்பாளவ.. அது வன்முறையில போய் முடிஞ்சிருக்கும்..! பிறகு பிளேட்ட மாத்திப் போடுறதுதானே. உப்படி கனக்க உங்க தெரு வழிய நடக்குதானே.

எத்தனை தமிழ் குமரிகள்.. எத்தனையோ ஆண்களோட வெளியில சுத்திட்டு.. சுத்தாதமாதிரி வீட்டில.. நடிக்கினம்.. அதுகளையும்.. பார்த்து திருத்துங்கோ..! அவையள் தான் இப்படியான தூண்டல்களுக்கு வழிவகுக்கிறதே..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு சொன்னதுபோல பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். கனடாவில் ஒரு மருத்துவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். காரணம், அவர் வழங்கிய தவறான சான்றிதழ்களால் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக, குழந்தை இறப்புகளில் அவர் பல சமயங்களில் இறப்புக்கு பெற்றோரே காரணம் என தவறாக அறிக்கைகள் கொடுத்து வந்திருக்கிறார். இதனால் பெற்றோரில் பலர் சிறைக்குப் போனதும் அல்லாமல், தங்களது மற்றைய குழந்தைகளை குழந்தை நலன் அமைப்பிடம் தாரைவார்க்கப் பணிக்கப்பட்டதோடு சமூகத்தில் கொலைகாரப் பட்டத்துடன் வாழத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு இந்தியரின் பேட்டியை சமீபத்தில் கேட்டேன். இவருடைய குழந்தை இறந்ததற்கு இவர் குழந்தையைத் தூக்கிப் பிடித்து விளையாடியதே காரணம் என அந்த மருத்துவர் அறிக்கை கொடுத்து விட்டாராம். அந்த அறிக்கை இப்போது தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இந்தியர் மூன்று மாதங்கள் சிறைவாசத்துடன் பற்பல ஆண்டுகள் தன் மற்றைய குழந்தைகளையும் பிரிந்திருக்கிறார்.

நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளே இப்படி இருக்கின்றன. சுவிசில் நடந்த அந்தக்குற்றச்செயலுக்கு இந்த இளைஞர்களே காரணமாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் பொறுத்திருப்பதே நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி அந்த யுவதி எப்படிப்பட்ட ஆள்..???! அதையும் விசாரிச்சுப் போட்டுத்தான் குற்றம் குறை காண வேணும்..! :icon_mrgreen::icon_mrgreen:

அவளவையும் காசுக்கு.. சுகத்துக்கு.. இன்னும் பொழுதுபோக்கிற்கு.. கூடிப் போவாளவை.. ஏதேனும்.. பிரச்சனையள் என்ற உடன.. முரண்பட்டிருப்பாளவ.. அது வன்முறையில போய் முடிஞ்சிருக்கும்..! பிறகு பிளேட்ட மாத்திப் போடுறதுதானே. உப்படி கனக்க உங்க தெரு வழிய நடக்குதானே.

எத்தனை தமிழ் குமரிகள்.. எத்தனையோ ஆண்களோட வெளியில சுத்திட்டு.. சுத்தாதமாதிரி வீட்டில.. நடிக்கினம்.. அதுகளையும்.. பார்த்து திருத்துங்கோ..! அவையள் தான் இப்படியான தூண்டல்களுக்கு வழிவகுக்கிறதே..! :icon_mrgreen:

மனுசன் கொஞ்சமாவது பொதுப்படையாய் கதைப்பமெண்டில்லை எதுக்கெடுத்தாலும் பொண்டுகளின்ரை சீலையை தூக்கிப்புடிச்சு குற்றம் காணுறதிலேயே இருங்கோ :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.