Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதிமுகவின் தலைவர் வைகோ தமிழக காவற்துறையினரால் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை. அன்று தொடக்கம் இன்று வரை ஈழதமிழர்களுக்காக குரல் கொடுக்கும் உன்னதமான தலைவர்.

உண்மையை உள்ளபடியே உரக்கப்பேசுபவர்களுக்குத்தா

இதெல்லாம் நடக்கும் என்று தெரிந்து கொண்டுதான் அவர்கள் பேசினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கைதின் பின் வைகோ... கூறியவை...

எனது நிலையில் மாற்றம் இல்லை - உறுதியாக இருக்கிறேன்: வைகோ

சென்னை: இலங்கைத் தமிழர்களைக் காக்க ஆயுதம் ஏந்திப் போராடுவேன் என்று நான் கூறியதில் எந்த மாற்றமும் இல்லை. எனது நிலையில் உறுதியாக இருக்கிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

பிரிவினைவாதத்ைத தூண்டும் வகையில் பேசியதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை கைது செய்யப்பட்டார்.

அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று வைகோவை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் அவர் போலீஸ் வேனில் பலத்த பாதுகாப்புடன் ஏற்றப்பட்டார். அப்போது திரண்டிருந்த செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், இலங்கை இனப் பிரச்சினையிலிருந்து தமிழர்களைக் காக்க ஆயுதம் ஏந்திப் போராடுவேன் என்று நான் கூறியதில் எந்த மாற்றமும் இல்லை. எனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

இலங்கை ராணுவத்திற்கு ரேடார்கள், ஆயுதங்களை வழங்கி, இலங்கைத் தமிழர்களைக் கொல்லும் போக்குக்கு பிரதமர் மன்மோகன் சிங் துணை போகிறார் என்று நான் கூறியதையும் இப்போது மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன்.

இலங்கை படைகளுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்து, உளவுத் தகவல்களைக் கொடுத்து இலங்கைத் தமிழர்களுக்கு பெரும் துரோகம் இழைத்து வருகிறது மன்மோகன் சிங் அரசு என்றார் வைகோ.

தட்ஸ்தமிழ்.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

வை.கோ மட்டுமல்ல தி.மு.க கூட்டணியில் உள்ள திருமாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.அனைவரும் வெகுவிரைவில் விடுதலை ஆவார்கள் என்று எண்ணுகிறேன்.வைகோ இப்பொழுது ஜெயலலிதாவுக்கு வேண்டாத விருந்தாளி.அவர் வெளியே! காங்கிரஸ் உள்ளே! காங்கிரசின் வாயை அடைக்கவே கலைஞர் காயை நகர்த்தியிருக்கிறார்.இது ஒரு மென்மையான கைது என்றே எண்ணத் தோன்றுகிறது.இருந்தாலும் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.அ.தி.மு.க கூட்டணியில் கைகள் கட்டப்பட்ட நிலைமையில் இருந்த வைகோவக்கு வெளியேற நல்ல சந்தர்ப்பம்.ஆனால் எங்கே போவார் 3வது அணி

எதிர்ப்பற்ற போராட்டங்கள் நீர்த்து போய்விடும். அதிகார பலம் கொண்டு எதிர்க்கும் போதுதான் எந்த போராட்டமும் வீறு கொள்ளும். வை.கோ கைது ஈழ ஆதரவை இன்னும் அதிகரிக்குமே அல்லாமல் குறைக்க மாட்டாது

  • கருத்துக்கள உறவுகள்

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும். பெரும் மாற்றம் ஒன்று வந்தாலும் வியப்பில்லை.கருத்துக்கணிப்ப

ஒண்றை மட்டும் எப்போதும் மறந்து விடாதீர்கள்... இண்றைய கட்டத்தில் ஈழத்தமிழனின் தலைவிதி கலைஞர் கைகளுக்கு மாறி இருக்கிறது...!!! அதை சரியான பாதையில் இட்டு செல்வது கலைஞரினால்தான் முடியும் எனும் நிலைதான் இண்று உள்ளது...!!

1986 ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் ஒரு முறை இலங்கை இந்தியாவின் காலடியில் மண்டி இட்டு இறைஞ்சும் நிலை ஏற்பட்டு வருகிறது. அதுக்கு மத்திய அரசு எடுக்கும் முடிவானது ஈழத்தவரின் 30 ஆண்டு துன்பத்தை போக்குமா இல்லை நீட்டிக்குமா என்பது கலைஞரின் சாணக்கியத்தால் தெரிய வரும்...

அதனால் சீமான் , அமீர் போண்ற சாதாரமானவர்களை விட்டு வைகோவை கைது செய்தது கலைஞர் செய்த தவறு கிடையாது... அமீர் , சீமான் போண்ற தமிழின ஆதரவாளர்களை கைது செய்தால் அப்படியான குரல்கள் அடங்கி விடும்... ஆனால் அரசியலில் பழம் திண்ற வைகோ அதையும் அரசியலாக்கி பலம் சேர்ப்பார்...

பிரிவினையை தூண்டியதாக வைகோ கைது

சென்னை

பிரிவினையை தூண்டும் விதமாக பேசியதாக எழுந்த குற்றச்சாற்றின் பேரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சியின் பொருளாளர் கண்ணப்பனும் இன்று கைது செய்யப்பட்டனர்.

இலங்கைப் பிரச்சனை தொடர்பாக மதிமுக சார்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய வைகோ, ஈழத்தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்தவும் தயார் என தெரிவித்திருந்தார்.

அக்கட்சியின் பொருளாளர் கண்ணப்பன் பேசுகையில், " இந்தியப் பிரதமரும், தமிழக முதல்வரும் நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்ற மாட்டார்கள்.விரைவில் தனி ஈழம் மலரும்.அது மட்டுமல்ல தனித் தமிழ்நாடும் உருவாகும்.தமிழ்நாடு தனி நாடு என்று சொல்லும் நாள் வரும் " என்று கூறியிருந்தார்.

வைகோ மற்றும் கண்ணப்பன் ஆகியோரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு, பிரிவினையை தூண்டும் விதமாக பேசியதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தன.

இந்நிலையில் பிரிவினையை தூண்டும் விதமாக பேசிய குற்றச்சாற்றின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், வைகோவை அண்ணா நகரிலுள்ள அவரது வீட்டிற்கு சென்று இன்று கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வருகிற நவம்பர் மாதம் 6 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து வைகோ சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

இதனிடையே பொள்ளாச்சியிலுள்ள தனது பண்ணை வீட்டிலிருந்த மதிமுக பொருளாளர் கண்ணப்பனையும் இதே குற்றச்சாற்றுக்காக போலீசார் இன்று மாலை கைது செய்தனர்.

முன்னதாக வைகோவை கைது செய்யப்பட்டு சென்னை கடற்கரை சாலை காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து மதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக வைகோ கைது செய்யப்படுவது இது இரண்டாவது தடவையாகும்.கடந்த ஜெயலலிதா ஆட்சியில், புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக வைகோ உள்ளிட்ட அக்கட்சியினர் பலர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டது குறிபிடத்தக்கது.

அப்போது வைகோ கைதுக்கு இப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருந்தார்.ஆனால் இன்று அதே குற்றச்சாற்றுக்காக அவரது ஆட்சியிலேயே வைகோ கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாளை நடைபெற உள்ள மனிதச் சங்கிலி போராட்டம், வைகோவின் கைதால் திசை திரும்பி, இந்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதில் தவறிவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தற்பொழுதான் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டிருப்பது போன்ற ஒரு எண்ணம் அண்மையில் ஏற்பட்டிருந்தது.'

ஆனால் காங்கிரஸ் கட்சியினர், ஜெயலலிதா, ராமகோபாலன் மற்றும் பா.ஜனதா தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட சிலர் வைகோவை கண்டித்து விடுத்த அறிக்கையினால் எழுந்த நிர்ப்பந்தம் மற்றும் மத்திய ஆட்சித் தலைமையிலுள்ள காங்கிரஸின் அதிருப்திக்குள்ளாகிவிடக்கூ

இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரிந்து தனிநாடாக அமையும் என்கிற பிரிவினைவாதத்தை தூண்டியதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ, அவைத் தலைவர் மு.கண்ணப்பன் ஆகியோரை தமிழ்நாடு அரசு கைது செய்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

வைகோ உணர்ச்சிவசப்பட்டு பேசியதால் சில குள்ளனரிகள் பிர்ச்சனையை திசை திருப்பப்பார்த்தன ...

எனவே கைது அந்த குள்ள நரிகளின் வாயை அடைக்க உதவும்...

தலைவன் என்பவன் தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மூளையை உபயோகித்து காரியம் சாதிப்பவனாக இருக்க வேண்டும்.

வை.கோ அண்ணன் விரும்பிய படியே அவரை கைது செய்த கலைஞர் இதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்திருக்கிறார்

1) சேரக் கூடாத இடத்தில் சேர்ந்து, சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்து நின்ற வை.கோவிற்கும் இப்ப ஆறுதல்.

2) தமிழக அரசின் ஈழத்தமிழர் ஆதரவை பிரிவினைவாதமாக சித்தரிக்கத்த பார்பணர்களுக்கு ஒரு வாய்பூட்டு!

தன்னை கைது செய்து சிறையிலடைப்பவர்களுடன் கூட்டுச் சேரும் வை.கோ. இனி கலைஞருடன் இணைந்து ஈழத்தமிழரின் வாழ்விற்கு விரைந்து வழிசமைத்திட வேண்டும்.

Edited by சாணக்கியன்

கைகோ கைது காலத்தின் தேவை. . . . . அவர் வெளியில் வரும்போது பல வெற்றிச்செய்திகளும் செவிவழி புகும் .

இப்படியே கூட்டனியை கொண்டு போய் தேர்தல் நேரத்தில் காங்கிரஸை கழட்டி விட்டு விட்டு அ.தி.மு.க - காங்கிரஸ்- தே. மு. தி. க போன்ற கட்சிகள் அணி சேராமல் செய்து ஈழ தமிழர் பிரச்சனையை மட்டும் முன்னிருத்தி கலைஞர் தேர்தலை எதிர் கொண்டால் காங்கிரஸ் தமிழ் நாட்டில் கானாமல் போய்விடும் செய்வாரா கலைஞர்?........... அதற்க்கு வைகோவை கடைசிவரை அந்த கூட்டனியில் விட்டு வைத்திருக்க வேண்டும். வைகோ அங்கு இருந்தால் காங்கிரஸ் அதில் சேர முடியாது. கடைசியில் சீட்டை காங்கிரசுக்கு குறைத்து கொடுத்து அவர்களாகவே கூட்டனியில் இருந்து விலக வைத்துவிட வேண்டும். மொத்தத்தில் செயலலிதா, காங்கிரஸ் மற்றும் விஜயகாந்த் போன்றோரை தமிழக அரசியல் களத்தில் இருந்து அப்புற படுத்தினால் மட்டுமே தமிழகம் உறுப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.