Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிவினையைத் தூண்டியதாக இயக்குநர்கள் சீமான்- அமீர் கைது

Featured Replies

சற்று நேரத்திற்கு முன்பாக தமிழகத்தில் இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கிடைக்கின்றன. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால், ஈழ ஆதரவுக் குரல்கள் இந்திய ஒருமைப்பாட்டின் பெயரால் மறுபடியும் ஒடுக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது. இந்த அடக்குமுறையை மீறி உணர்ச்சிகள் வெடிக்குமா அல்லது பயத்தில் நீர்த்துப் போகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..! :wub:

இந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால், ஈழ ஆதரவுக் குரல்கள் இந்திய ஒருமைப்பாட்டின் பெயரால் மறுபடியும் ஒடுக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது. இந்த அடக்குமுறையை மீறி உணர்ச்சிகள் வெடிக்குமா அல்லது பயத்தில் நீர்த்துப் போகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..! :wub:
  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில்.. தமிழக அரசை மத்திய அரசு கலைக்க முற்படலாம். அதுவும் திமுக கூட்டணி மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கின்.. நிச்சயம் மத்திய அரசு தமிழக அரசைக் கலைக்க முற்படும்.

அந்த வகையில்.. ஜெயலலிதா மற்றும் தமிழக காங்கிரஸ்காரர்கள்.. தமிழ் உணர்வாளர்களின் பேச்சை அடிப்படையாக வைத்து திமுக ஆட்சிக்கு நெருக்கடியைக் கொடுக்கவே தீவிரமாகச் செயற்படுபவர். அதுமட்டுமன்றி எதிர்காலக் கூட்டணி கருதியோ என்னவோ பா ம க மணி அவர்கள் தமது கட்சிக்கும் புலிகளுக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று இன்று அறிக்கை விட்டுள்ளார்.

இதற்கிடையில் இந்து முன்னணி.. மற்றும் பா ஜ க போன்றனவும்.. திமுக சார்ந்த விடயங்களில் கடுப்பாக இருப்பதால்.. அவையும் திமுகவுக்கு நெருக்கடிகளை அதிகரிக்கவே செய்யும்.

அதுமட்டுமன்றி சிறீலங்கா ஜனாதிபதி அமைச்சர்கள் கருணாநிதியை வெளிப்படையாக விமர்சித்து வரும் நிலையில்.. இந்திய அரசும்.. சிறீலங்கா அரசை சாந்தப்படுத்த அல்லது பாகிஸ்தானை நோக்கி சீனாவை நோக்கி ஓடாமல் இருக்க ( எத்தனை நாளைக்குத்தான் இப்படி கட்டி வைக்கப் போகினம் என்று பார்ப்பம் சிங்களவனை..!) திமுக அரசு மீது அழுத்தம் பிரயோகிக்கலாம். அல்லது கலைத்து தனக்கு தமிழகத்தில் இருந்து வரும் நெருக்கடியை.. ரோ போன்ற அமைப்புக்களைக் கொண்டு மட்டுப்படுத்த நினைக்கலாம்.

எனவே இவ்விடத்தில்.. வைகோவின் கைதைக் கூட.. அரசியலாக்கி விட்டு திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்துவரும் ஜெயலலிதா போன்ற **** தமிழின அவமான அரசியல் தலைவர்களிடம் இருந்து முதலில் தமிழனை.. அவனின் உணர்வுகளை பாதுகாக்கும் பொருட்டு.. இவ்வாறான கைதுகள் அவசியம் என்றே நோக்க வேண்டி இருக்கிறது.

இது இன்னும் ஈழத்தமிழருக்கு ஆதரவான உணர்வலையை அதிகரிக்குமே அன்றி குறைக்காது. :wub:

மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில்.. தமிழக அரசை மத்திய அரசு கலைக்க முற்படலாம். அதுவும் திமுக கூட்டணி மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கின்.. நிச்சயம் மத்திய அரசு தமிழக அரசைக் கலைக்க முற்படும்.

அந்த வகையில்.. ஜெயலலிதா மற்றும் தமிழக காங்கிரஸ்காரர்கள்.. தமிழ் உணர்வாளர்களின் பேச்சை அடிப்படையாக வைத்து திமுக ஆட்சிக்கு நெருக்கடியைக் கொடுக்கவே தீவிரமாகச் செயற்படுபவர். அதுமட்டுமன்றி எதிர்காலக் கூட்டணி கருதியோ என்னவோ பா ம க மணி அவர்கள் தமது கட்சிக்கும் புலிகளுக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று இன்று அறிக்கை விட்டுள்ளார்.

இதற்கிடையில் இந்து முன்னணி.. மற்றும் பா ஜ க போன்றனவும்.. திமுக சார்ந்த விடயங்களில் கடுப்பாக இருப்பதால்.. அவையும் திமுகவுக்கு நெருக்கடிகளை அதிகரிக்கவே செய்யும்.

அதுமட்டுமன்றி சிறீலங்கா ஜனாதிபதி அமைச்சர்கள் கருணாநிதியை வெளிப்படையாக விமர்சித்து வரும் நிலையில்.. இந்திய அரசும்.. சிறீலங்கா அரசை சாந்தப்படுத்த அல்லது பாகிஸ்தானை நோக்கி சீனாவை நோக்கி ஓடாமல் இருக்க ( எத்தனை நாளைக்குத்தான் இப்படி கட்டி வைக்கப் போகினம் என்று பார்ப்பம் சிங்களவனை..!) திமுக அரசு மீது அழுத்தம் பிரயோகிக்கலாம். அல்லது கலைத்து தனக்கு தமிழகத்தில் இருந்து வரும் நெருக்கடியை.. ரோ போன்ற அமைப்புக்களைக் கொண்டு மட்டுப்படுத்த நினைக்கலாம்.

எனவே இவ்விடத்தில்.. வைகோவின் கைதைக் கூட.. அரசியலாக்கி விட்டு திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்துவரும் ஜெயலலிதா போன்ற **** தமிழின அவமான அரசியல் தலைவர்களிடம் இருந்து முதலில் தமிழனை.. அவனின் உணர்வுகளை பாதுகாக்கும் பொருட்டு.. இவ்வாறான கைதுகள் அவசியம் என்றே நோக்க வேண்டி இருக்கிறது.

இது இன்னும் ஈழத்தமிழருக்கு ஆதரவான உணர்வலையை அதிகரிக்குமே அன்றி குறைக்காது. :wub:

இது இன்னும் ஈழத்தமிழருக்கு ஆதரவான உணர்வலையை அதிகரிக்குமே அன்றி குறைக்காது. icon_idea.gif

  • கருத்துக்கள உறவுகள்

எர்னஸ்டி சேகுவேரா! ஆர்யெண்டீனாவில் பிறந்து தென் அமெரிக்க நாடுகளின் விடுதலைக்காகப்போராடி மடிந்த அந்த மாவீரனாகவே சீமானை உணருகின்றேன்,எம்மவர்கள் கூட விலை போகும் போதும், தென்னிந்தியாவில் பிறந்து ஈழ விடுதலைக்காக அயராது போராடும் ஒரு உண்மையான போராளியின் கைது மனதை நெருடுகிறது!

சீமான் அவர்களுக்கு நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் சீமானைக் கைது செய்து விட்டார்களா?!

'உயிர் ஊற்றி உணர்வோடு பேசும் ஒவ்வொரு தமிழனின் கதியும் இதுதானா?

பட்டும்படாமல் பேசி தம்மை தம் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் இந்திய அரசியலில்...சீமானைப்போன்றோர் போற்றத்தக்கவர்கள். உங்களை நினைத்துப் பெருமைப்படுகின்றேன் சீமான் அவர்களே.

புலிகள் தாயகத்தில தாக்குதல் நடத்தினா அதுக்கு நேர்முக வருணனை.

இப்ப தமிழ்நாட்டில நடக்கிற எழுச்சிக்கும் நேர்முக வருணனை.

இந்தியாவிலையும் புலிகள் தடை செய்யப்பட்டிருக்கிற நிலையில் தான் இவ்வளவு போராட்டங்கள் நடக்குது.

புலம்பெயர்ந்தவை ஏதாவது?

2010 மட்டில வெள்ளையள் காறித்துப்பி கலைக்க தொடங்கும் போது சிலவேளை யோசிப்பினமாக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2010 மட்டில வெள்ளையள் காறித்துப்பி கலைக்க தொடங்கும் போது சிலவேளை யோசிப்பினமாக்கும்<<<

/quote]

குறுக்ஸ் அண்ணை,

ஒரு சிறுபொறி எங்கிருந்தாவது தொடங்க வேண்டும்..நீங்கள் தொடக்கி வைத்தால் நாங்கள் இணையத்தயார்.. அடுத்தவன் செய்வான் என்று பார்க்காதீங்கோ. மற்றவையைச் சொல்ல முதல் நீங்கள் செய்யுங்கோ. அந்த அடியைத் தொடங்கி வையுங்கோ..வரலாறு போற்றும்!!

சீமான் கைது செய்யப்பட்டால் தமிழ் திரையுலகம் பின்னால் அணிவகுக்கும் என்று சத்யராஜ் சொன்னாரே..அது நடக்குமா...இல்ல அவர்களூம் ஒதுங்கிடுவார்களா....?

எனக்கு ஒன்று விளங்கவில்லை....அது ஏன் ஐரோபாவில் தடை செய்தாலும் பேச்சு சுதந்திரம் கொடுக்கிறார்கள்.ஆனால்.,,ஜனநாய

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குநர்கள் சீமான், அமீர் கைதாகிறார்கள்!!

சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு எனும் பெயரில் பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து திரைப்பட கலைஞர்கள் சார்பில் கடந்த 19 -ந் தேதி ராமேஸ்வரத்தில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடைபெற்றது.

இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய இயக்குனர்கள் அமீர், சீமான், சேரன், பாரதிராஜா உள்ளிட்ட சிலர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அதன் தலைவர் பிரபாகரனைப் புகழ்ந்தும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தமிழகக் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் அறிக்கை விடுத்தனர்.

மேலும் இவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இன்று மாலைக்குள் இவர்கள் கைது செய்யப்படாவிட்டால் சென்னையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்பு 3 பேரின் உருவப் பொம்மைகளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் திரண்டு எரிக்க உள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இயக்குநர் சீமான், அமீர், சேரன் மற்றும் பாரதிராஜா ஆகியோர் மீது பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குநர் சீமான் மற்றும் அமீரை மட்டும் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப் போவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதே குற்றச்சாட்டுக்களுக்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோரை ஏற்கெனவே கைது செய்துள்ளது போலீஸ்.

இதுகுறித்து இயக்குநர் சீமான் கூறியதாவது:

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதற்காக என்னையும் தம்பி அமீரையும் கைது செய்ய வழக்குப் பதிவு செய்துள்ளார்களாம். இதுகுறித்து போலீசார் எனக்குத் தகவலும் கூறியுள்ளனர். அவர்கள் இப்போது என்னைக் கைது செய்ய வந்து கொண்டிருக்கிறார்கள்.

நான் இந்தக் கைதை மகிழ்ச்சியாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் தவறாக எதையும் பேசவில்லை. செத்து மடிந்து கொண்டிருக்கிற என் சகோதரனுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தது தவறா? அது தவறு என்றால் அதை நான் எப்போதும் செய்து கொண்டே இருப்பேன். நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. இந்தப் பேச்சுக்காக உலகத் தமிழர்கள், அறிஞர்கள், தலைவர்கள் பலரும் என்னைப் பாராட்டினார்கள். இந்தக் கைது எனக்குப் பெருமைதான்!, என்றார் சீமான்.

பாரதிராஜா கைதாவாரா?

அமீர், சீமான் இருவரும் கைது செய்யப்பட்ட பிறகு பாரதிராஜா மற்றும் சேரனையும் போலீசார் கைது செய்யக்கூடும் எனத் தெரிகிறது.

thatstamil.com

தமிழக மக்களிடையே ஜெயா மற்றும் காங்கிரஸ் மீது வெறுப்பு கூடுகிறது.........

சீமான் மீது அனுதாபமும் ஈழத்தமிழர் ஆதரவும் முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவுக்கு எதிராக பிரிவினையைத் தூண்டியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரை தமிழகக் காவல்துறை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது.

அண்மையில் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் ஈழத்தில் தமிழர்கள் மீது சிங்களப் பேரினவாதம் நடத்தி வரும் இனப்படுகொலையைக் கண்டித்து தமிழ்த் திரையுலகம் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தினர்.

அக்கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை சீமான் மற்றும் அமீர் புலிகளை ஆதரித்துப் பேசியதாகவும் பிரிவினையைத் தூண்டியதாகவும் ஜெயலலிதா உள்ளிட்ட சிலர் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து சீமான் மற்றும் அமீர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுக்கு முன்னதாக தமிழக காட்சி ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த இயக்குநர் சீமான்,

இராமேஸ்வரம் கூட்டத்தில் தமிழ் உறவுகளின் அவலங்களை விவரித்துப் பேசினேன். அது சட்டவிரோதமா இல்லையா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். இதற்காக கைது செய்யப்பட்டால் மகிழ்ச்சியோடு சிறைக்குச் செல்லக் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

2010 மட்டில வெள்ளையள் காறித்துப்பி கலைக்க தொடங்கும் போது சிலவேளை யோசிப்பினமாக்கும்

உண்மை தான், இப்ப தேர் இழுக்கிறத வேடிக்கை பார்க்கிற வெள்ளைக்காரன் எப்ப கல் எறிய தொடங்கிறானோ???

மலேசியா ஒரு ஆரம்பம்.

இந்தியாவுக்கு எதிராக பிரிவினையைத் தூண்டியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரை தமிழகக் காவல்துறை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

தமிழக மக்களிடையே ஜெயா மற்றும் காங்கிரஸ் மீது வெறுப்பு கூடுகிறது.........

சீமான் மீது அனுதாபமும் ஈழத்தமிழர் ஆதரவும் முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது

தமிழக மக்களிடையே ஜெயா மற்றும் காங்கிரஸ் மீது வெறுப்பு கூடுகிறது.........

சீமான் மீது அனுதாபமும் ஈழத்தமிழர் ஆதரவும் முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது

ஈழத்தமிழருக்கு ஆதரவான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் ஜெயலலிதா மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றின் மீதான தமிழக மக்களின் வெறுப்பினை மேலும் அதிகரிக்கும்படியாக கலைஞர் நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கிரஸ் எதிர்க்கிறது என்பதற்காக போராட்டங்களை கலைஞர் கைவிடாது தனது நிலையில் உறுதியாக இருந்து தமிழக மக்களிற்கு எழுச்சியை ஊட்டவேண்டும்.

குறுக்ஸ் அண்ணை,

ஒரு சிறுபொறி எங்கிருந்தாவது தொடங்க வேண்டும்..நீங்கள் தொடக்கி வைத்தால் நாங்கள் இணையத்தயார்.. அடுத்தவன் செய்வான் என்று பார்க்காதீங்கோ. மற்றவையைச் சொல்ல முதல் நீங்கள் செய்யுங்கோ. அந்த அடியைத் தொடங்கி வையுங்கோ..வரலாறு போற்றும்!!

வெள்ளையள் காறித்துப்பி அடிச்சுக் கலைப்பதற்கான திரி ஏற்கனவே எரியத் தொடங்கிவிட்டது. நான் தொடக்கி வைக்கத் தேவையில்லை. உதுக்கு நீங்கள் போற்ற வேண்டியது வேறை யாரையோ சத்தியமா என்ன இல்லை. :)

உண்மை தான், இப்ப தேர் இழுக்கிறத வேடிக்கை பார்க்கிற வெள்ளைக்காரன் எப்ப கல் எறிய தொடங்கிறானோ???

மலேசியா ஒரு ஆரம்பம்.

எப்படி புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழந்திருக்கக் கூடாது என்பதற்கு மலேசியாவும் மொறிசியசும் நல்ல உதாரணம். அவர்கள் சென்ற வழியில் தான் ஐரோப்பா வடஅமெரிக்கா என்று காவடி ஆடி தேர் இழுத்து இராச கோபுரங்கள் கட்டும் ஈழத்து புலம்பெயர்ந்தவர்கள் செல்கிறார்கள்.

இன்சா அல்லா கல் எறி மிக விரைவில் :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிந்திக்கிடைத்த தகவல்:

சீமான் மற்றும் அமீர் ஆகியோர் இராமேஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருக்கி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் தாயகத்தில தாக்குதல் நடத்தினா அதுக்கு நேர்முக வருணனை.

இப்ப தமிழ்நாட்டில நடக்கிற எழுச்சிக்கும் நேர்முக வருணனை.

இந்தியாவிலையும் புலிகள் தடை செய்யப்பட்டிருக்கிற நிலையில் தான் இவ்வளவு போராட்டங்கள் நடக்குது.

புலம்பெயர்ந்தவை ஏதாவது?

2010 மட்டில வெள்ளையள் காறித்துப்பி கலைக்க தொடங்கும் போது சிலவேளை யோசிப்பினமாக்கும்

அய்யா.

ஒண்டில் தெரிஞ்சுகொண்டு கதைக்க வேணும். தெரிஞ்சு கொள்றதுக்காக கதைக்கிறதெண்டால் பணிவு வேண்டும்.

இத்தாலியில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடந்திருக்கு. சுவிசில உறங்காநிலைப் போராட்டம் நடக்குது. பேரணி நடக்குது. இலண்டனில ஒருபக்கமாக வெடிக்கப் போகுது. பிரான்சுல காவல்துறை அனுமதி மறுத்தும் ஒன்று கூடிய உணர்வாளர்களைக் கண்டு காவல்துறை பாதுகாப்பு வழங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்பிடி எல்லா இடத்திலயும் நடந்துகொண்டுதான் இருக்கு.புதினங்கள் இணையத்தளங்கள் தந்தபடி இருக்கு.

அய்யா.

ஒண்டில் தெரிஞ்சுகொண்டு கதைக்க வேணும். தெரிஞ்சு கொள்றதுக்காக கதைக்கிறதெண்டால் பணிவு வேண்டும்.

இத்தாலியில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடந்திருக்கு. சுவிசில உறங்காநிலைப் போராட்டம் நடக்குது. பேரணி நடக்குது. இலண்டனில ஒருபக்கமாக வெடிக்கப் போகுது. பிரான்சுல காவல்துறை அனுமதி மறுத்தும் ஒன்று கூடிய உணர்வாளர்களைக் கண்டு காவல்துறை பாதுகாப்பு வழங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்பிடி எல்லா இடத்திலயும் நடந்துகொண்டுதான் இருக்கு.புதினங்கள் இணையத்தளங்கள் தந்தபடி இருக்கு.

அப்புறம் ஏன் கனடாவை விட்டுட்டியள்? அங்கை தானே 4 லட்சம் இருக்கு?

நிஜமாவா சொல்றீங்க 4 லட்சம் தமிழர்கள் கனடாவில் உள்ளனரா??? :wub:

அய்யா.

ஒண்டில் தெரிஞ்சுகொண்டு கதைக்க வேணும். தெரிஞ்சு கொள்றதுக்காக கதைக்கிறதெண்டால் பணிவு வேண்டும்.

இத்தாலியில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடந்திருக்கு. சுவிசில உறங்காநிலைப் போராட்டம் நடக்குது. பேரணி நடக்குது. இலண்டனில ஒருபக்கமாக வெடிக்கப் போகுது. பிரான்சுல காவல்துறை அனுமதி மறுத்தும் ஒன்று கூடிய உணர்வாளர்களைக் கண்டு காவல்துறை பாதுகாப்பு வழங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்பிடி எல்லா இடத்திலயும் நடந்துகொண்டுதான் இருக்கு.புதினங்கள் இணையத்தளங்கள் தந்தபடி இருக்கு.

அப்ப கனடாவில??? ஏன் கேக்கிறனெண்டால்... புலம்பெயர் ஈழத்தமிழரில அரைவாசிப்பேருக்கு மேல கனடாவிலதான் இருக்கிறதாச் சொல்லுறாங்கள். நானறிஞ்சவரை ஒருத்தருக்குப் போட்டியாய் இன்னொருத்தர் 24 மணிநேர தொடர் நிகழ்ச்சியள, அதுவும் ஒரே நேரத்தில போட்டிபோட்டுக்கொண்டு நடத்துறதுதான் இப்ப நடக்குது. +

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2010 மட்டில வெள்ளையள் காறித்துப்பி கலைக்க தொடங்கும் போது சிலவேளை யோசிப்பினமாக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.