Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடலில் மூழ்கும் அபாயம் - இந்தியாவுக்கு இடம் பெயருமா மாலதீவு ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாலே: மாலத்தீவு கடற்பகுதியில் கடல் நீரின் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால்,அருகாமை நாடு ஒன்றில் நிலம் வாங்கி அங்கு மக்களை இடம் பெயரச் செய்ய மாலத்தீவு அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் நிலம் வாங்கும் திட்டம் அந்த நாட்டு அரசிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வெப்பமயாக்கலின் விளைவாக உலகம் முழுவதும் கடல் நீரின் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பனி மலைகள் உருகுவதால் கடல் நீரின் மட்டம் உயர்ந்து வருகிறது.

இதனால்,மாலத்தீவு உள்ளிட்ட பல தீவுப் பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக மாலத்தீவு இன்னும் 50 ஆண்டுகளில் மூழ்கி விடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதனால் இந்தியாவில் நிலத்தை குத்தகை அடிப்படையில் வாங்கி அங்கு மாலத்தீவு மக்களை குடியமர்த்தும் திட்டம் அந்த நாட்டு அரசிடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இருப்பினும் இப்போதைக்கு அந்தத் திட்டம் எதுவும் இல்லை என்று மாலத்தீவுகளின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள முகம்மது நஷீத் தெரிவித்துள்ளதாக மாலத்தீவுக்கான இந்திய தூதர் அரவிந்த் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இப்போதுதான் முகம்மது நஷீத் அதிபராகியுள்ளார். மாலத்தீவுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு நாட்டில் நிலத்தை வாங்கி அங்கு மாலத்தீவு மக்களை குடியமர்த்த அவர் தீர்மானித்துள்ளார். இருப்பினும் அவர்களது பட்டியலில் இந்தியா இல்லை என்றார்.

சமீபத்தில் நஷீத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராகிம் ஹூசேன் ஜகி அளித்த ஒரு பேட்டியில், அருகில் உள்ள ஏதாவது நாட்டில் நிலத்தை வாங்கி அங்கு மாலத்தீவு மக்களை குடியமர்த்தும் திட்டம் உள்ளதாக தெரிவித்திருந்தார். இது மிகவும் அவசரமான, அவசியமான ஒரு நடவடிக்கை என்றும் அவர் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

உலகிலேயே மிகவும் குட்டி நாடு மாலத்தீவுதான். இந்தத் தீவின் உயரமான பகுதியே, கடல் மட்டத்திலிருந்து 2 மீட்டர் உயரத்தில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியக் கடல் பகுதியில் ஆண்டுக்கு 60 சென்டிமீட்டர் அளவுக்கு கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.

நன்றி தற்ஸ் தமிழ்

நானும் இந்தச்செய்தியை பார்த்து இருந்தன் ரெண்டு நாளைக்கு முன்னம். கொஞ்சம் சுவாரசியமான விசயம்தான். ஏன் எண்டால் இதே நிலமை சிறீ லங்காவுக்கும் வரக்கூடும். உலகம் வெப்பம் அடையுறது காரணமாக கடல்மட்டம் உயர்ந்துகொண்டு போகிது. இதால நிலப்பகுதி கடலுக்க போகிது. ஒரு நாடே முழுதுமாக அகதியாக இடம்பெயருரது எண்டால் வித்தியாசமான அனுபவமாத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாலைதீவின் மிக உயரமான பகுதி இரண்டு மீற்றருக்கும் குறைவு. சுனாமியின்மீது தப்பியதற்கு இலங்கைத்தீவு தடுப்பு அரணாக இருந்ததே காரணம்.

அலை மட்டம் உயரும்போது யாழ்ப்பாணமும் அமிழ்ந்து போகலாம்..

கிருபன் அண்ணா அப்ப யாழ்ப்பாணத்தில காணி வாங்க வேண்டாம் என்று சொல்லுறீங்களா? :wub:

மாலை தீவுக்கு அப்படியொரு நிலை வந்தால், ஒஸ்ற்றேலியா அந்நாட்டு மக்களுக்கு உதவும் என்று சொன்னதாக பல வருடங்களுக்கு முன்னர் எங்கேயோ படித்த ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா அப்ப யாழ்ப்பாணத்தில காணி வாங்க வேண்டாம் என்று சொல்லுறீங்களா? :wub:

ஓசிப் பேப்பரில் வந்தது படிக்கவில்லையா?

http://orupaper.com/files//issues/99/K_london_pages__5.pdf

சில பகுதிகள் தப்பலாம். அப்படியான இடத்தில் நீங்கள் காணி வாங்கினால் விலை இன்னமும் அதிகரிக்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.