Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக உதவிப் பொருட்கள் சிறீலங்கா அரசு மூலமே விநியோகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக உதவிப் பொருட்கள் சிறீலங்கா அரசு மூலமே விநியோகம்

திகதி: 14.11.2008 // தமிழீழம் // [சோழன்]

தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து பெறப்பட்ட உணவுப் பொருட்கள் தங்களின் ஊடாகவே வழங்கப்பட வேண்டும் என இந்தியாவில் வைத்து சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியத் தூதரகத்தின் ஊடாக செஞ்சிலுவைச் சங்கத்திடம் வழங்கப்பட்டு, செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாகவே மக்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்தியாவில் நின்றுகொண்டு மகிந்த ராஜபக்ச தங்களின் ஊடாகவே வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அனுப்பும் நிவாரணப் பொருட்களை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், அந்தப் பொருட்கள் சர்வதேச அமைப்புக்கள் மூலம் அனுப்பப்படும் என்றும், இறுதி முனையில் சிறீலங்கா அரசு அவற்றைப் பெற்று மக்களுக்கு விநியோகிக்கும் என்றும் கூறியுள்ளார். சிறீலங்கா ஜனாதிபதியின் கருத்தை கேள்விப்பட்டு, இலங்கைத் தமிழ் மக்களுக்கு என வழங்கப்பட்ட தமது உதவிகள் சிங்கள மக்களையும் இராணுவத்தினரையும், சென்றடையப் போகின்றது என்ற அச்சம் தமிழக மத்தியில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

sankathi

இறுதியில் முடிவெடுப்பத்து என்னமோ சிங்களம் தான்...

இந்த பணத்தை வைத்து கலைஞர் தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது தொழில்துறை ஆரம்பித்து வேலைகொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இப்படி சிங்களவனுக்கு கொடுப்பதை விட

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியில் முடிவெடுப்பத்து என்னமோ சிங்களம் தான்...

:) உதவி பொருட்களுக்கே இவ்வளவு தடங்கள் என்றால் தமிழரின் அரசியல் அபிலாசைகலுக்கு எவ்வளவு தடங்கள் இருக்கும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதற்க்கு கலைஞரின் பதில் என்னவோ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் தமிழர்களால் இலங்கைச் சிங்களவருக்கு வழங்கிய உதவி என்றும் இதைச் சொல்லலாம்.

எந்த உருவத்தில் இருந்தாலும் எப்போதும் தமிழன் தமிழனாய் தான் இருப்பான் அவனை மாற்றவே முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மோகன் அண்ணா கவிதை கூட பாடக்கூடாதா?????????

வரிகளில் எந்தவித தப்பும் கிடையாதே.........

சரி

தமிழனுக்கு நன்மையென்றால்....சரி

இலங்கையரசு அமைதியாக இருந்து விட்டு கடைசி நேரத்தில் கணக்காய் சுருட்டல் அறிக்கை விட்டுவிட்டது..

இன்னும் நாங்கள் நம்பி ஏமாறுவது எவ்வளவோ இருக்கு...

இலங்கை, இந்தியா அரசுக்களின் கூட்டுசதிகள் இன்னும் பல இருக்கு..

ஒவ்வொருதரும் அனுபபட்டுமுடிவதற்கிடையில் இலங்கையில் தமிழ் இனத்திற்கு முற்றாக சங்கு ஊதிவிடும் சிங்கள இனவெறியின் பின்பலத்துடன் செயல்படும் இலங்கை இனவெறியரசு..

ஈழத்தமிழனத்தில் வற்றாத அன்பு வைத்திருக்கும் தமிழக மக்களை நினைக்கும் போதுதான் கவலையாக இருக்கிறது...தமிழக மீனவர்களின் பிரச்சனைகளையே தீர்க்க முடியாதுள்ளது..

தண்ணீர் பிரச்சனை இப்படி எத்தனை... இதில் ஈழத்தமிழர்களின் பிரச்ச்னையா மத்தியரசு தீர்க்கப்போகிறது? இலங்கை என்னும் மகுடிக்கு மயங்கி ஆடுகிறது மத்திய அரசு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.