Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூன்று நாள் மோதல்களில் 200 படையினர் பலி-கொழும்பு ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று நாள் மோதல்களில் 200 படையினர் பலி-கொழும்பு ஊடகம்

மூன்று நாள் மோதல்களில் 200 படையினர் பலி; 300-க்கும் அதிகமானோர் படுகாயம்: கொழும்பு ஊடகம்

[புதன்கிழமை, 19 நவம்பர் 2008, 02:47 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]

வன்னி மற்றும் முகமாலை களமுனைகளில் கடந்த மூன்று நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முகமாலை, மாங்குளம் மற்றும் கிளிநொச்சிக்கு தென்புறம் உள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

முன்நகரும் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

படைத்தரப்பில் பல நூறு பேர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். இதில் முகமாலை மற்றும் மாங்குளம் களமுனைகளில் படைத்தரப்பு நேற்று கடும் இழப்புக்களை சந்தித்துள்ளது.

அரச தரப்பு தகவல்களை வெளியிடுவதற்கு மறுத்து வருகின்றது.

எனினும், அதிகளவான படையினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று தெரிவித்திருந்தன.

வழமைக்கு மாறாக நேற்று அதிகளவான படையினர் அனுமதிக்கப்பட்டிப்பதாக சிறீ ஜெயவர்த்தனபுர மருத்துவமனை வட்டாரங்களும் தெரிவித்திருந்தன.

இதனிடையே, பாதுகாப்பு கண்காணிப்பகம் வெளியிட்ட தகவல்களில், கடந்த மூன்ற நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் 200 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நூற்றுக்கணக்கான படையினர் கொழும்புக்கு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு கண்காணிப்பகம் வெளியிட்ட தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாங்குளம் பகுதியை 63 ஆவது படையணியினர் கைப்பற்றியுள்ளதாக கடந்த திங்கட்கிழமை தகவல் வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சகம், நேற்று அங்கு இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை என்று அந்த கொழும்பு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி புதினம்

தோத்துக் கொண்டிருக்கிறோம் என்று சோர்ந்திருந்த படி மனிதர்களாக தமிழர்களா ஆளை ஆள் தேற்றிய படி "தோல்வி நிலையென நினைத்தால்..." என்று படித்து கொண்டிருந்தவர்களிற்கு இனிப்பான செய்தி கொண்டு வந்த ரகுநாதனின் வாயில சக்கரை போட வேணும்.

விடிவு வெகு தூரத்தில் இல்லை

வன்னி மற்றும் முகமாலை களமுனைகளில் கடந்த மூன்று நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:unsure: என்ர வாயில என்னத்தையாவது போடுறதெண்டுதான் இருக்கிறியள் போல ?!

புதினத்தில கிடந்து சுட்டது ! சொந்தமா யோசிக்க ஏலாட்டி இப்படி வெட்டியாவது ஒட்டுவமெண்டு வெளிக்கிட்டன் .

எப்படியும் விட்டால் நியூஸ்பொட் கொண்டுவந்து இங்க இணைக்கப்போறார், அவருக்கு முதல் செய்வமெண்டு வந்தால், மனுசன் பின்னாலேயே துக்கிக்கொண்டி ஓடி வருகுது ?! அது ஏற்கனவே இணைத்த செய்தியா இல்லையா எண்டெல்லாம் அந்தாள் பார்க்கிறதில்ல...?

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால்

இதன் பின்னால் இருக்கும் தியாகங்கள் பற்றி......................?????????????

எப்படியும் விட்டால் நியூஸ்பொட் கொண்டுவந்து இங்க இணைக்கப்போறார், அவருக்கு முதல் செய்வமெண்டு வந்தால், மனுசன் பின்னாலேயே துக்கிக்கொண்டி ஓடி வருகுது ?! அது ஏற்கனவே இணைத்த செய்தியா இல்லையா எண்டெல்லாம் அந்தாள் பார்க்கிறதில்ல...?

:unsure::o

இப்படியா எம்மவர்களின் தியாகங்களை பற்றி பேசுவதை விட.....இராணுவத்தின் தற்காலிக வெற்றிகளை நினைத்து எங்கட ஆட்கள் பேசுவது வருந்த தக்க விடயம்.

200 பேர் பலி எனில் அங்கு எத்தனை போராளிகள் எப்படியெல்லாம் போராடியிருப்பார்கள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீர வேங்கைகளின் போர்க்குணம் மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த செய்திகளை அரசு வெளியிடாமல் வைத்து கடைசியாக தனது மக்களிடமே வாங்கிகட்டிகொள்ளப்போகிறது எனது மகன் எனது சகோதரன் எங்கே என்று அவர்களின் மக்கள் கேட்கும் போதுதான் தெரியும் .

வீர வேங்கைகளின் போர்க்குணம் மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த செய்திகளை அரசு வெளியிடாமல் வைத்து கடைசியாக தனது மக்களிடமே வாங்கிகட்டிகொள்ளப்போகிறது எனது மகன் எனது சகோதரன் எங்கே என்று அவர்களின் மக்கள் கேட்கும் போதுதான் தெரியும் .

பூநகரி மோதலில் காயமடைந்த படைவீரர்களுக்கு ஹெல உறுமய நிவாரணங்களை திரட்டத் திட்டம்

பூநகரி மோதல்களின் போது காயமடைந்த படைவீரர்களுக்கு உதவியளிக்கும் முகமாக ஜாதிக ஹெல உறுமய கட்சி நிவாரணப் பொருட்களை திரட்டத் தீர்மானித்துள்ளது.

பூநகரி மோதல்களின் போது காயமடைந்து கொழும்பு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவோருக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

இந்த மோதல்களின் போது படுகாயமடைந்த 70க்கும் மேற்பட்ட படைவீரர்கள் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

படையினருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் பொருட்டு ஜாதிக ஹெல உறுமய விசேட பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளது.

காயமடைந்த படைவீரர்களுக்கான நிவாரணப் பொருட்களை ஜாதிக ஹெல உறுமய கட்சியின் கிருலப்பனை கிளையில் ஒப்படைக்குமாறு பொதுமக்களிடம் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

www.tamilwin.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான் ஒவ்வொரு நாளும் அங்க நடக்குது ? உள்ளுக்க கூப்பிட்டு வைச்சு ஆப்பு வை படுது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.