Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைத் தமிழர் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க நாளை அவசர கூட்டத்திற்கு தமிழக முதல்வர் அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று சென்னையில் அவசரமாகக் கூட்டப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக முதல்வர் கருணாநிதி, நாளை காலை கோட்டையில் உள்ள தமது அறையில் சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஒரு அவசர சந்திப்புக்கு அழைப்ப விடுத்தாகத் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த அழைப்பினை விடுப்பதாகவும், விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்கு முன் வந்போதும், இலங்கை அரசு அதை நிராகரித்துள்ளமையால், இது விடயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்பது பற்றிக் கலந்தாலோசிக்கவே நாளை சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான இந்தக் கூட்டத்தை கூட்டுகிறேன் எனவும், தெரிவித்தார் . குறிப்பாக இலங்கையில் தமிழர்களைப் பாதுகாக்கவும், அவர்களது துயரங்களுக்கு விடிவு காணவும், உடனே நடவடிக்கை எடு்க்குமாறு மத்திய அரசை மீண்டும் வலியுறுத்தவே இந்தக் கூட்டம் எனவும் விளக்கிக் கூறினார். இக் கூட்டத்தின் முக்கியமும் அவசியமும் கருதி, சட்டமன்ற கட்சித் தலைவர்கள் தவிர, கட்சிகளின் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்கலாம்.அந்தவகையில், ராமதாஸ், வைகோ போன்றவர்களும் கூட்டத்தில் பங்கேற்க முடியுமெனவும் முதல்வர் தெரிவித்தார்.

http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்கு முன் வந்தும் கூட போர் நிறுத்த கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்து விட்டதையடுத்து இந்த விஷயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க நாளை சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதல்வர் கருணாநிதி கூட்டியுள்ளார்.

இன்று அவசரமாகக் கூட்டப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, நாளை காலை கோட்டையில் உள்ள எனது அறையில் இந்தக் கூட்டம் நடக்கும். இதில் பங்கேற்குமாறு சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசுடன் பேசிவிட்டுத் தான் இந்தக் கூட்டத்தை கூட்டுகிறேன். இலங்கையில் தமிழர்களது பாதுகாக்கவும், அவர்களது துயரங்களுக்கு முடிவு கட்டவும் உடனே நடவடிக்கை எடு்க்குமாறு மத்திய அரசை மீண்டும் வலியுறுத்தவே இந்தக் கூட்டம் நடக்கிறது.

அங்கு தினந்தோறும் ஏராளமான தமிழர்கள் உயிர் பலி ஆவது குறித்தும், அவர்களது உடமைகள் அழிக்கப்படுவது குறித்தும் தினந்தோறும் கொடுமையான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்த விஷயம் குறித்துப் பேசி அடு்த்த கட்டமாக மத்திய அரசிடம் என்ன கோரிக்கை வைக்கலாம் என்பதை முடிவு செய்யவே கூட்டத்தை கூட்டியுள்ளோம்.

சட்டமன்ற கட்சித் தலைவர்கள் தவிர, கட்சிகளின் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்கலாம்.

இதன்மூலம் ராமதாஸ், வைகோ போன்றவர்களும் கூட்டத்தில் பங்கேற்கலாம் என்றார் கருணாநிதி.

http://thatstamil.oneindia.in/news/2008/11...fire-issue.html

நில்வூ ஒரு பகலாக இருக்க நெடுக்கும்ஸ் இளவு காத்த கிளியாக கி கி

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கமும் இப்பிடித்தான் சர்வகட்சி மகாநாடு, புத்தி ஜீவிகளுடன் கலந்தாலோசனை, சர்வ சமயத் தலைவர்கள் கூட்டம், இந்தியாவுடன் அவசர ஆலோசனை, பேச்சு வார்த்தை... என்றெல்லாம் பல ஸ்ரண்டுகளை விட்டுக்கொண்டு தமிழினப் படுகொலையை முன்னெடுத்துச் செல்லுது.

தமிழகத்தில கொந்தளிப்புகள் உருவாகாமல், இந்திய மத்திய அரசுக்குச் சங்கடங்கள் ஒண்டும் ஏற்படாமல் காலத்தை இழுத்துக் கொண்டு செல்லவேண்டிய கடமைப்பாடு கலைஞருக்கும் உண்டு.

அந்த வகையில அவருடைய செயற்பாடுகளில உலகத் தமிழருக்குச் சாதகமான பெறுபேறுகளை நாங்கள் பெரிய அளவில எதிர்பார்க்கலாமா எண்டிறது சந்தேகமாத்தான் இருக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் பங்கேற்கலாமோ :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் பங்கேற்கலாமோ :rolleyes:

தமிழர் விடிவுக்காக ஒன்று கூடினாங்களாம் அக்கா.. ஒன்று கூடி.... கலைஞர் தலைமையில் பிரதமரை சந்திக்கப்போறாங்களாம்.... சந்தி சிரிக்குது பாருங்கோ..

நானும் பங்கேற்கலாமோ :rolleyes:

பங்கெடுக்கலாம் ஆனால் அங்க வந்து பல்லைக்காட்டக்கூடாது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.