Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலம் புலிகளை பலவீனமடையச் செய்யலாம்-ரொபேர்ட்.ஓ.பிளேக்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலம் விடுதலைப் புலிகளை மேலும் பலவீனமடையச் செய்யலாம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் தெரிவித்தார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தேர்தல் கொள்கையான " எம்மால் முடியும்" எனும் வாசகத்தை இலங்கையிலும் முயற்சித்து, பயங்கரவாதத்தால் ஏற்படும் சவால்களை தோற்கடிக்க முடியும் என கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கொன்றில் அவர் கூறினார்.

இலங்கையின் இனப்பிரச்சினையை அரசியல் தீPர்வின் மூலமே முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும், இதன் மூலம் வன்னியில் அடைபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சுதந்திரமாக தென்பகுதிக்கு வந்துசெல்லக்கூடிய வழி தோன்றும் எனவும் பிளேக் தெரிவித்தார்.

“வன்னியில் அடைபட்டிருக்கும் 230,000 மக்கள் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலேயே சுதந்திரமாக தென்பகுதிக்கு வந்துசெல்வதற்கு அரசியல் தீர்வு உதவியாகவிருக்கும். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தேவையற்றது என சிலர் வாதாடுகின்றனர். விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை அடக்கமுடியாவிட்டாலும், அனைத்து சமூகமும் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்" என ரொபெட் ஒபிளேக் தெரிவித்தார்.

உடனடியாக அரசியல் தீர்வொன்றுக்குச் சென்றால் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் எனக் கூறும் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு நிராகரிக்கப்பட்டுவிடும் எனவும், அவர்களுக்கான ஆதரவு நீக்கப்பட்டுவிடும் எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.

“இலங்கை மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். கடத்தல்கள், படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் பாரியளவில் நடக்கின்றன. இதில் குறிப்பாகத் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலைமையிலிருந்து வெளியே வருவதற்கு அமெரிக்கா தன்னாலானதைச் செய்யும்" என அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டார்.

மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கென அமெரிக்க கடந்த காலங்களில் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=9364

அதிகமான நாட்களாக பிளேக்கையா இலங்கையிலே இருத்துட்டார்..... அதனால தானும் ஒரு அரசியல் வாதிமாதிரி அதுவும் இலங்கை அரசியல்வாதிமாதிரி எண்டு நினைச்சுட்டார் போல கிடக்கு. எது எப்பிடி போனாலும் இலங்கை எனும் விபச்சாரி சீனாவுக்குத்தான்...

  • கருத்துக்கள உறவுகள்
:D அரசியல் தீர்வை முன்வையுங்கோ எண்டால், பின்கதவால இன்னும் ஆயுதங்கள் கொடுக்கப்போறதாக அர்த்தம். உப்பிடி சொல்லிய ஒவ்வொரு காலத்திலும் இந்த பிளக் என்பவர் தன்ர கைய்யால போர்ப்படகுகளும், கண்காணிப்புப் படகுகளும் குடுத்தவர்.

இவர் ஏன் அவசர படுகிறார்? ஓபாமா வந்து ஏதும் புரட்சி செய்து போடுவார் என்றா?

இப்படி தான் பொந்து ராமும் இந்திய அரசை விட புலிஎதிர்ப்பு செய்வார்...

ஒபாமா வரமுன்னம் முடிக்கக்கூடியதை முடிக்கலாமெண்டு பாக்கிறாராக்கும்..... அல்லது ஒபாம வந்தபிறகு இவருக்கு பிரமோசனோவுந்தெரியா!

அரசியல் தீர்வை முன்வைத்தால் சிங்கள அரசாங்கம் பலவீனமடைந்து விடுமே.

மிக்க சந்தோசம்...தீர்வை வையுங்கோ, திருப்பி எடுங்கோ, முட்டுக்குடுங்கோ,அப்படியே ஆயுதமுகொடுங்கோ,முடியாவிட்டா

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை பலவீனப்படுத்துவதில் எந்த நாடென்ன , எந்த நிலையில் உள்ளவர்களில் இருந்து தொடங்குகிறது என்பது பிளேக்கின் கருத்தில் இருந்து தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளை பலவீனப்படுத்துவதில் எந்த நாடென்ன , எந்த நிலையில் உள்ளவர்களில் இருந்து தொடங்குகிறது என்பது பிளேக்கின் கருத்தில் இருந்து தெரிகிறது.

மிகச்சரியாகச்சொன்னீர்கள் நுணா அண்ணா, இதிலிருந்து ஒன்று மட்டும் தெள்ளத்தெளிவாகப் புரிகின்றது "...புலிகளின் வீரத்தை தியாகத்தை போர் தந்திரத்தை, தலைவனின் வழிநடத்தலை எவராலும் கணித்துவிட முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் இனப்பிரச்சினையை அரசியல் தீPர்வின் மூலமே முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும், இதன் மூலம் வன்னியில் அடைபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சுதந்திரமாக தென்பகுதிக்கு வந்துசெல்லக்கூடிய வழி தோன்றும் எனவும் பிளேக் தெரிவித்தார்.

“வன்னியில் அடைபட்டிருக்கும் 230,000 மக்கள் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலேயே சுதந்திரமாக தென்பகுதிக்கு வந்துசெல்வதற்கு அரசியல் தீர்வு உதவியாகவிருக்கும்.

****** வன்னி சனம் என்ன கோதாரிக்கு தென்பகுதி வரவேண்டும்?

வன்னி என்ன மனிதன் வாழக்கூடாத இடமா?

அல்லது தென்பகுதி வரும் மக்களுக்கு வெள்ளை வானிலிருந்து நீயா பாதுகாப்பு தருவாய்?

அவர்கள் தஙகள் சொந்த மண்ணில் நிம்மதியாக வாழ இடமளிக்கவேணும் எண்டு குரல் குடுத்தால் குறைஞ்சா போயிருவாய்?

Edited by yarlpriya
நீக்கப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில ஷெல் வந்து விளேக்க நீங்களே பக்கத்தில நின்டனிங்கள்?

அந்தாளாள அத இன்னும் மறக்கேலாமல் இருக்கு

சாகும் வரைக்கு மறக்காது மனுஷன்...

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை பலவீனப்படுத்தினால் தமிழினம் பலவீனமாகிவிடும் என்ற உண்மையை புரிந்ததினால் தான் அவர் அப்படியான ஒரு ஆலோசனையை கூறியுள்ளார்.

அதாவது அவரின் அடிப்படைக்கருத்தும், கனவும் என்னவென்றால் உலகத்திலை அமெரிக்காவைத்தவிர வேறு எவரும் பலமடையக்கூடாது.

இந்தக்கருத்தும், கொள்கையும் இவர்களிடம் பிச்சை எடுப்பவர்களுக்கு பொருந்துமே தவிர புலிகளுக்கல்ல.

Edited by Valvai Mainthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.