Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கார்த்திகை விளக்கீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கார்த்திகை விளக்கீடு என்று வீட்டில் எல்லா இடமும் விளக்கு கொளுத்தியுள்ளார்கள் .

ஆனால் இது என்ன காரணத்துக்காக செய்வது என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன் .

நான் ஈழத்தில் இருக்கும் போது எல்லா வீட்டு வாசல்களிலும் வாழைக்குத்தி அல்லது பப்பாமர குத்தியில் ,

கொப்பரா தேங்காயில் எண்ணை விட்டு எரிப்பார்கள் . அந்த தெருவை பார்க்க வடிவாக இருக்கும் .

இங்கு நத்தார் பண்டிகை நெருங்கும் நேரத்தில் , மற்ற வீடுகளைப்போல எங்கள் வீட்டிலும் விளக்கு எரிவது மகிழ்ச்சியாக உள்ளது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் கோயில்களில் இடம்பெறும் சிறப்பான தீபத் திருநாள் ஆகும்.

திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் மாவிளக்கு போட்டும் வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பானை"க்கு[1] அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர்.

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

விரத முறை

இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

[url="http://ta.wikipedia.org/wiki/கார்த்திகை_விளக்கீடு'>http://ta.wikipedia.org/wiki/கார்த்திகை_விளக்கீடு"]http://ta.wikipedia.org/wiki/கார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி குமாரசாமியண்ணை . :)

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று கார்த்திகைவிளக்கீடு எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கார்த்திகைவிளக்கீடு எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.

அறியத்தந்ததுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா! நல்லூர் கந்தனின் பழனி ஆண்டவர் சன்னதிக்கு முன்னாள் மாவிளக்கு போட்டு சாப்பிட்ட காலம் ! :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா! நல்லூர் கந்தனின் பழனி ஆண்டவர் சன்னதிக்கு முன்னாள் மாவிளக்கு போட்டு சாப்பிட்ட காலம் ! :wub:

சுவி, சொக்கப் பானை என்றும் கொழுத்துவார்களே..... :blink:

73786119_4e3538c9af.jpg?v=0Karthikai02.jpgthe_festival_of_light.jpg2063287634_698056eb66.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விளக்கீடு ஒவ்வொருமுறையும் வரேக்கை வீட்டு வாசல்லையும் பனம்பாத்தியிலையும் துரவுபுட்டியிலையும் பந்தம் கொழுத்தி குத்தின ஞாபகம் முள்ளாய் குத்துது :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வெளித் தெருப் படலையடியில் தீபம் ஏற்றும் போது வாழை குத்தியில் பெரிய பாதித் தேங்காய் வைத்து அதனுள் இலுப்பெண்ணை,காய் பொட்டலம் போட்டு ஆரம்பிப்போம் . (அந்த தேங்காய் சொட்டு குத்திச் சாப்பிட நல்ல சுவையாக இருக்கும்.) பின் பெரியவர்கள் போனதுக்கு பிறகு பேணி வைத்து பழைய ஒயில் போட்டு விடிய , விடிய எரிக்கிறது . இந்த நேரத்தில் அடுத்த ரோட்டு தெருக் கதவுகளை கழட்டி இன்னொரு வீட்டுக் கதவில் மாறி,மாறிக் கொழுவி விடுவது.... அடுத்த நாள் யாராவது போட்டுக் குடுத்து வீட்டைச் சுத்தி ஓட,ஓட உதை வாங்குவது.... :rolleyes:

பெரியவர்கள் சொன்னபடி கார்த்திகை விளக்கீட்டைச் செய்து ஆண்டவன் அருளைப் பெறப் புறப்பட்ட இறையடியார்கள் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமாகத் தாக்கியதான செய்தியொன்று படித்தேன்.

சிவனடியார்கள் அடி வாங்க சிவபெருமான் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்... ம்ம்ம்ம்ம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விளக்கீடு ஒவ்வொருமுறையும் வரேக்கை வீட்டு வாசல்லையும் பனம்பாத்தியிலையும் துரவுபுட்டியிலையும் பந்தம் கொழுத்தி குத்தின ஞாபகம் முள்ளாய் குத்துது :rolleyes:

ஓம் தாத்தா. எங்கண்டை வீட்டையும் உப்பிடி தான். எங்கண்டை வீட்டுக்கு கிட்டை 5,6கோயில் இருக்கு பிள்ளையார்,அம்மன்,வைரவர் எண்டு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பந்தம் கொழுத்தி தோட்டத்துக்கு போய் ஒவ்வொரு தறைக்கும் ஒரு பந்தம் பிறகு அதுக்கு காவலுக்கு நிக்கிற வைரவருக்கு வீட்டை வந்தால் அம்மி,குளவி என்று ஒவ்வொரு பந்தம். அம்மா மோதகம்,கொழுக்கட்டை,வடை எல்லாம் செய்வா. எங்கடை பாடு கொண்டாட்டம் தான். ரோட்டிலை வீட்டிலை என்டு ரயர் கொழுத்தி மரங்களுக்கு மேலை போட்டு,

பிறகு பொடியளோடை சேர்ந்து ஊரிலை இருக்கிற எல்லாற்றை வீட்டு வாழைக்குத்தியையும் சயிக்கிளாலை இடிச்சு விழுத்தி திட்டு வாங்கி.

நாங்க பண்ணாததா தாத்தா. இப்ப எதுவுமே இல்லை, என்ன கிழமை என்றே தெரியாமல் வாழுறம் எல்லா நாளும் ஒரே மாதிரி கிடக்குது. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் வெளித் தெருப் படலையடியில் தீபம் ஏற்றும் போது வாழை குத்தியில் பெரிய பாதித் தேங்காய் வைத்து அதனுள் இலுப்பெண்ணை,காய் பொட்டலம் போட்டு ஆரம்பிப்போம் . (அந்த தேங்காய் சொட்டு குத்திச் சாப்பிட நல்ல சுவையாக இருக்கும்.) பின் பெரியவர்கள் போனதுக்கு பிறகு பேணி வைத்து பழைய ஒயில் போட்டு விடிய , விடிய எரிக்கிறது . இந்த நேரத்தில் அடுத்த ரோட்டு தெருக் கதவுகளை கழட்டி இன்னொரு வீட்டுக் கதவில் மாறி,மாறிக் கொழுவி விடுவது.... அடுத்த நாள் யாராவது போட்டுக் குடுத்து வீட்டைச் சுத்தி ஓட,ஓட உதை வாங்குவது.... :D

வீட்டுக்குவீடு வாசற்படி :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப எதுவுமே இல்லை, என்ன கிழமை என்றே தெரியாமல் வாழுறம் எல்லா நாளும் ஒரே மாதிரி கிடக்குது. :D

உதென்ன பெரிய விசயம்........இப்பவெல்லாம் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் தெரியாமல்த்தான் சனங்களின்ரை வாழ்க்கையே போகுது :D

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணா நீண்ட நாட்களின் பின்பு கொண்டாடினேன் சந்தோசமாக யிருந்தது ஊரில் எல்லோரும் பலகாரம்,எல்லாம் செய்து சாப்பிட்டோம் இன்னும் பல இனிப்பு பண்டங்கள் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா அண்ணா நீண்ட நாட்களின் பின்பு கொண்டாடினேன் சந்தோசமாக யிருந்தது ஊரில் எல்லோரும் பலகாரம்,எல்லாம் செய்து சாப்பிட்டோம் இன்னும் பல இனிப்பு பண்டங்கள் :D

சந்தோசம் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.