Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பழைய நினைவொன்று

Featured Replies

இந்திய இராணுவம் யாழ்நகரில் அராஜகம் புரியத் தொடங்கியிருந்த ஆரம்ப நாட்களில் ஒரு நாள். எனது கிராமம் சுற்றி வளைக்கப்பட்டு ஆண்கள் அனைவரும் ஒரு வெட்டைக் காணிக்குக் கொண்டுசெல்லப்பட்டோம். அன்று அங்கு அவ்வாறு அகப்பட்டிருந்தோரின் வயது வீச்சு பத்து முதல் எழுபதுகள் வரையானதாக நீண்டிருந்தது. கொதிக்கின்ற வெயிலில் வெட்டைவெளியில் ஊரார் அந்நியத் தளபதியின் வரவிற்காய்க் காத்திருந்தோம். கல்வி,செல்வம், குலம் கோத்திரம் என்ற அனைத்துச் செயற்கைகளும் களைந்து இயற்கை உடலுடனும் அதன் உபாதைகளுடனும் கிராமத்தார் காத்திருந்தோம்.

இந்திய இராணுவச் சிப்பாய்கள் சிலரும் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் சிலரும் எம்மைச் சிறைவைத்துத் தமது தளபதிக்காய்க் காத்திருந்தனர். எமக்கும் எம்மைச் சிறைவைத்த கடைநிலைச் சிப்பாய்களிற்கும் காத்திருப்புக் கசந்தது. சிப்பாய் ஒருவனிற்கு விளையாடத் தோன்றியிருக்கவேண்டும், ஆயுதம் அளித்த அதிகாரத்தில் அவன் தனது ஆசையைத் தீர்க்க விழைந்தான். குந்தியிருந்த கிழவர்களில் ஒருவரைக் கக்கத்தில் பிடித்து எழுப்பி நிறுத்தினான். மேலாடையின்றி வீட்டில் நின்றபடி வேட்டியோடு வந்திருந்த முதியவர் வெயிலில் வியர்த்த வியர்வைக்கு மேலால் இன்னும் கொஞ்சம் வியர்த்து நடுங்கினார். சிப்பாய், கடைவாயில் இளக்காரச்சிரிப்போடு அம்முதியவரிற்குக் கல்லெறி துராரத்தில் இருந்த இரு பனைமரங்களைக் காட்டி, ஒரு மரத்தடியில் இருந்து மற்றையதற்கு முயல் போலப் பாயச் சொன்னான். மொழிப்பிரச்சினை காரணமாகச் சைகையிலே பேசிய சிப்பாய் எவ்வாறு பாய்வதெனச் செய்முறை விளக்கம் கொடுத்தான். வியர்த்த கிழவர் மூன்று தரம் பாய்ந்தார். சிப்பாய்கள் வேறு சிலரும் சிரித்தனர். ஊரார், எதற்காகத் தமிழர் ஆயுதப் போராட்டம் தொடங்கினோம் என மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்தோம். நாலாவது பாய்ச்சலிற்குக் கிழவர் முஸ்தீபு செய்தபோது அது நடந்தது.

எம்மைச் சிறைவைத்துக் காத்திருந்த கடைநிலைச்சிப்பாய்களுள் அடங்கியிருந்த இரு ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களில் ஒருவன் தனது இயந்திரத்துப்பாக்கியை இயங்கு நிலைக்கு மாற்றி, கிழவரைப் பாயச்சொன்ன சிப்பாய்க்குக் கடுகதியாய்க் குறிவைத்தான். தன் விரலை விசையில் வைத்து எந்நேரமும் அமுக்கிடும் தோரணையில் நின்றான். அவனது நெற்றியில் வியர்வை, இது சூரியன் தந்ததல்ல என்பது வெளிப்படையாய்க் தெரிந்தது. அவனது உதடுகள் நடுங்கியமையும் இதர உடல் மொழிகளும் ஏதிலிகளாய்க் காத்திருந்த ஊராரைக் குழப்பியது. எனினும் வெயிலின் வெக்கை தணிந்து மந்தமாருதம் வீசியதாயும், இளநீர்கள் வெட்டப்பட்டு எமக்குக் குடிப்பதற்காய்க் கொடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாயும், மாமர நிழலில் நாம் படுத்திருந்து மாங்கிளியின் சங்கீதம் இரசிப்பதாயும் அங்கிருந்த அனைவரிற்கும் அந்தச் சில கணங்கள் தோன்றின. அவன் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினன் என்பது எம் அனைவரிற்கும் சொற்பநேரம் மறந்து போனது.

பாயச் சென்ற கிழவர் வாயைப் பிளந்து பார்த்தார். அவரது கண்களில் “இந்தப் பாய்ச்சல் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?” என்ற ஏளனம் கலந்த ஏக்கம் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினனின் செயல் தந்த தைரியத்தில் ஏற்பட்டிருந்தது. பாயச் சொன்ன சிப்பாய் பதறிக் கூப்பிட்டான் கிழவரை. அங்கு மொழிக்கும் அதனது வரைவிலக்கணங்களிற்கும் அவசியம் இருக்கவில்லை. இப்போது இளக்கார இளநகை சிப்பாயின் கடைவாயில் இருந்து கிழவரின் கடைவாய்க்குக் கூடுபாய்ந்திருந்தது. குரல்களில் ஒன்று ஊராரிற்குள் இருந்து கிசுகிசுத்தது “துவக்கை நீட்டினவர் ஏனாம் சுடேல்ல…

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர் உயிருடன் வீடு செல்லகூடியதாக இருந்ததா?இந்திய இரானுவம் அவரை உயிருடன் விட்டுவைத்ததா?

நான் நேற்று இதை வாசிச்சு இருந்தன். உடனடியாக பதில எழுத வசதி கிடைக்க இல்லை. அருமையான ஒரு கதை இன்னுமொருவன். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் எண்டு சொல்லிறது இதைத்தானோ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவம் ஆக்கிரமித்த காலத்தினை மீண்டும் நினைவூட்டியமைக்கு நன்றிகள். சுற்றி வளைப்புக்களில் அழைத்துச் செல்லப்படும் அளவிற்கு சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை; எனினும் பாடசாலையால் வரும்போது சில தடவைகள் மணித்தியாலக் கணக்கில் வெயிலில் முட்டுக்காலில் நின்ற அனுபவங்கள் உள்ளன. ஆனால் உங்களது மாதிரி சுவாரசியாமாக எழுதமுடியாது..

  • தொடங்கியவர்

புத்தன், முரளி, கிருபன் வாசித்துக் கருத்துக் கூறியமைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள். புத்தன், அந்த ஈபிஆர்எல்எப் உறுப்பினரிற்கு இச்செயலால் நிகழ்ந்த பின்விளைவுகள் பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை. அந்த மைதானத்தில் நான் அறிந்தவரை அன்று துப்பாக்கி வேட்டொலி எதுவும் கேட்கவில்லை...

சில சமயங்களில் பழைய நினைவுளை நாம் எதிர்பாரா விதத்தில் நம் மனம் இரைமீட்டு விடுகின்றது. கடந்த வெள்ளிக் கிழமை வேலைக்குப் பயணித்துக்கொண்டிருக்கையில் எப்படியோ இப்பழைய நினைவு ஞாபகத்திற்கு வந்தது. வெள்ளிக்கிழமை இப்பதிவை இடலாமா வேண்டாமா என்று தெளிவின்றி இருந்தது. சனிக்கிழமை இப்பதிவு எந்தெந்த விதத்தில் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் என்று மனம் பட்டியல் இட்டது. ஞாயிற்றுக் கிழமை இல்லை பதிவிடலாம் என்று சில காரணங்கள் தோன்றியபோதும், path of least resistance எனது தேர்வானது. திங்கட்கிழமை பதிவு பதிவிடப்பட்டது :unsure:

சிறு பாலனாக அனுபவித்த இந்த அனுபவம், வாழ்வில் சற்று அனுபவங்கள் பெற்றபின் இப்போது இரைமீட்கப்பட்டபோது, புதிய சில செய்திகளையும் கூறுவதாக எனக்குப்படுகின்றது. எனவே பதிவிடத் தோன்றியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.