Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை விமானப் படைக்கு இந்தியா உதவி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விமானப் படைக்கு இந்தியா உதவி?

-ராஜாதிங்கள்கிழமை, ஜனவரி 5, 2009, 12:51 [iST]

டெல்லி: இலங்கை விமானப் படைக்கு உதவி செய்வதற்காக இந்திய விமானப்படை அதிகாரிகள் இலங்கை சென்றதாகக் கூறப்படுவது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

அக் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையி்ல்,

இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவி வழங்கியதன் மூலம் அங்குள்ள தமிழர்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே துரோகம் விளைவித்தது. இந் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த அனைத்துக் கட்சி குழுவினரிடம், இலங்கை பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்திருந்தது.

அந்த உறுதிமொழியை நிறைவேற்றாததன் மூலம், இலங்கை தமிழர்களின் நலனுக்கு மீண்டும் துரோகம் செய்துவிட்டது.

இனியாவது, இலங்கை தொடர்பான தனது கொள்கையை மாற்றியமைத்து, பிரணாப் முகர்ஜியை உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை பிரச்சினையில், மத்திய அரசின் கொள்கை என்ன, போர் முடிவுக்கு வரும்வரை காத்திருக்க முடிவு செய்து இருக்கிறதா என்பதையும் விளக்க வேண்டும்.

25 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை உடனடியாக நிறுத்தி, இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படி இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.

போரை தொடர்வதுதான் தீர்வு என்று ராஜபக்சே அரசு கருதக்கூடாது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதுதான் ஒரே வழியாகும். தமிழர்கள் அங்கு அமைதியுடன் வாழ்வதற்கும், அவர்களுடைய சட்டபூர்வமான உரிமைகள் கிடைப்பதற்கும் இந்தியா உதவி செய்ய வேண்டும்.

மத்தியில் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கும், இந்த அரசின் அனைத்து நடவடிக்கைகளிலும் பொறுப்பு உண்டு. தனது பசப்பு வார்த்தைகள் மூலம் தமிழக மக்களை திமுக இனியும் ஏமாற்ற முடியாது. இந்த பிரச்சனையில், திராவிட கட்சிகள் தங்கள் பொறுப்புகளை தட்டிக்கழித்துவிட முடியாது.

மத்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவி அளிக்கக் கூடாது. இலங்கை விமானப் படைக்கு உதவி செய்வதற்காக இந்திய விமானப்படை அதிகாரிகள் இலங்கை சென்றதாக கூறப்படும் தகவல் பற்றியும் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்.

தொடர்ந்து நடைபெற்று வரும் போரினால், இலங்கையின் வடக்குப் பகுதியில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவும் மருந்து பொருட்களும் தடையின்றி கிடைக்கும்படி உலக நாடுகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார் ராஜா.

தலை குனிந்து நிற்கிறோம்-ராமதாஸ்:

இந் நிலையில் திண்டுக்கல்லில் நிருபர்களிடம் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

கிளிநொச்சியை பிடித்ததாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். ஒரு நகரை வீழ்த்தியதை வைத்து, விடுதலை போராட்ட முடிவும் நிர்ணயம் செய்யப்படுவது இல்லை.

நகரம் வீழ்ந்தாலும் தொடர்ந்து விடுதலை போராட்டம் நடக்கும் என்பதை சரித்திரம் நமக்கு சொல்லியிருக்கிறது. கிளிநொச்சியில் சிங்கள ராணுவம் நுழைந்தாலும் 5 லட்சம் தமிழர்களின் விடுதலை போராட்டம் தொடரத்தான் செய்யும்.

சிங்களர்களை போல் தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும்வரை போராட்டம் தொடரும்.

இந்த நிலையில் 7 கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழகத்தை உள்ளடக்கிய மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்பதை அறிவித்து செயல்பட போகிறது என்பதை அறிய வேண்டிய நேரம் இது.

போரை நிறுத்தும்படி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தும், முதல்வர் தலைமையிலான குழு பிரதமரை சந்தித்த பிறகும் எதுவும் நடக்கவில்லை.

பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண முடியும் என்று பிரதமரும், வெளியுறவு துறை அமைச்சர் தாக்கல் செய்த அறிக்கை தெளிவாக குறிப்பிட்டது. ஆனால், தமிழகத்தில் சட்டபேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், ஆர்ப்பாட்டங்கள், முதல்வர் தலைமையிலான குழு சந்திப்புக்கு பின்னரும், இதுவரை மத்திய அரசு போரை நிறுத்தும்படி ஒரு வார்த்தை கூட இலங்கை அரசிடம் சொல்லவில்லை.

போரை நிறுத்துங்கள் என்று இந்திய அரசு சொல்லாது என்று இந்திய மண்ணிலேயே ராஜபக்சே சொல்லிவிட்டு சென்றார். தமிழக அரசியல் தலைவர்கள் எல்லாம் அரசியல் கோமாளிகள் என்று ராணுவ தளபதி குறிப்பிட்டார். மத்திய அரசில் உள்ள குழுவினர் கூட பிரதமரிடமும், கருணையும், மனிதாபிமானமும் நிறைந்த சோனியா அம்மையாரிடமும் இந்த பிரச்சினையை சரியாக எடுத்து சொல்ல தவறி விட்டார்கள்.

இதன் பின்னர் தமிழக மக்கள், முதல்வர், அரசியல் கட்சிகள் போரை நிறுத்தும்படி கோரிக்கை வைத்தும் அது நடைபெறவில்லை. இந்த அவமானத்தால் நாங்கள் தலை குனிந்து நிற்கிறோம்.

இலங்கை எப்போதும் இந்தியாவுக்கு நட்பு நாடாக இருந்தது இல்லை. இனிமேல் இருக்க போவதும் இல்லை. இலங்கை நாடு பகை நாடுகளுக்கு தளமாக போகிறது. இந்த ஆபத்தை உணர்ந்து இந்திய அரசு அவர்களை அடக்கி வைக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.

இலங்கையை பொறுத்தவரை இந்திய அரசின் வெளியுறவு கொள்கை மாற்றப்பட வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழர்களின் விருப்பம்.

கிளிநொச்சியை அடுத்து இலங்கை படையின் மூர்க்கத்தனமான தாக்குதல் முல்லைத் தீவு மாவட்டத்திற்கு திரும்பி உள்ளது. போர் விமானம் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசி தாக்குவதாக இன்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியா எதுவரை காத்திருக்க போகிறது, எதுவரை அமைதியாக இருக்க போகிறது என்று தமிழக மக்களின் உள்ளங்களில் கேள்விகள் எழுந்து உள்ளன.

தமிழக அரசு என்ன செய்ய போகிறது, முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார். அடர்த்தியாக மக்கள் வாழும் முல்லைத் தீவு அழிந்து போகட்டும், வீடு வாசல்களை இழந்து தமிழர்கள் உணவு, மருந்து பொருட்கள் கிடைக்காமல் செத்து மடியட்டும் என்று விட்டுவிட போகிறோமா?.

தமிழர்களுக்காக என்று கூட வேண்டாம், ஒரு மனிதாபிமான அடிப்படையிலாவது மத்திய அரசு தலையிட்டு உடனடியாக போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும், முதல்வரும் இதுபற்றி உடனடியாக முடிவு எடுத்து செயல்பட வேண்டும். அவர் எடுக்கும் முடிவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்றார் ராமதாஸ்.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் அரசு மத்தியில் இருக்கும்வரை , தமிழர்களுக்கு சாதகமாக நடக்கும் என நம்பி பிரயோசனமில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விமானப் படைக்கு இந்தியா உதவி?

சிங்களர்களை போல் தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும்வரை போராட்டம் தொடரும்.

இந்த நிலையில் 7 கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழகத்தை உள்ளடக்கிய மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்பதை அறிவித்து செயல்பட போகிறது என்பதை அறிய வேண்டிய நேரம் இது.

போரை நிறுத்தும்படி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தும், முதல்வர் தலைமையிலான குழு பிரதமரை சந்தித்த பிறகும் எதுவும் நடக்கவில்லை.

பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண முடியும் என்று பிரதமரும், வெளியுறவு துறை அமைச்சர் தாக்கல் செய்த அறிக்கை தெளிவாக குறிப்பிட்டது. ஆனால், தமிழகத்தில் சட்டபேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், ஆர்ப்பாட்டங்கள், முதல்வர் தலைமையிலான குழு சந்திப்புக்கு பின்னரும், இதுவரை மத்திய அரசு போரை நிறுத்தும்படி ஒரு வார்த்தை கூட இலங்கை அரசிடம் சொல்லவில்லை.

போரை நிறுத்துங்கள் என்று இந்திய அரசு சொல்லாது என்று இந்திய மண்ணிலேயே ராஜபக்சே சொல்லிவிட்டு சென்றார். தமிழக அரசியல் தலைவர்கள் எல்லாம் அரசியல் கோமாளிகள் என்று ராணுவ தளபதி குறிப்பிட்டார். மத்திய அரசில் உள்ள குழுவினர் கூட பிரதமரிடமும், கருணையும், மனிதாபிமானமும் நிறைந்த சோனியா அம்மையாரிடமும் இந்த பிரச்சினையை சரியாக எடுத்து சொல்ல தவறி விட்டார்கள்.

இதன் பின்னர் தமிழக மக்கள், முதல்வர், அரசியல் கட்சிகள் போரை நிறுத்தும்படி கோரிக்கை வைத்தும் அது நடைபெறவில்லை. இந்த அவமானத்தால் நாங்கள் தலை குனிந்து நிற்கிறோம்.

இலங்கை எப்போதும் இந்தியாவுக்கு நட்பு நாடாக இருந்தது இல்லை. இனிமேல் இருக்க போவதும் இல்லை. இலங்கை நாடு பகை நாடுகளுக்கு தளமாக போகிறது. இந்த ஆபத்தை உணர்ந்து இந்திய அரசு அவர்களை அடக்கி வைக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.

இலங்கையை பொறுத்தவரை இந்திய அரசின் வெளியுறவு கொள்கை மாற்றப்பட வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழர்களின் விருப்பம்.

கிளிநொச்சியை அடுத்து இலங்கை படையின் மூர்க்கத்தனமான தாக்குதல் முல்லைத் தீவு மாவட்டத்திற்கு திரும்பி உள்ளது. போர் விமானம் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசி தாக்குவதாக இன்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியா எதுவரை காத்திருக்க போகிறது, எதுவரை அமைதியாக இருக்க போகிறது என்று தமிழக மக்களின் உள்ளங்களில் கேள்விகள் எழுந்து உள்ளன.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழக உறவுகள் கடலில் தாக்கப்பட்டபோது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசா, எமக்காக ஏதாவது செய்யுமென்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. அதைவிட இன்றைய யுத்தத்தை முன்னின்று நடத்துவதே இந்திய அரசுதானே. நீங்கள் பதவி பற்றிய சிந்தனையில் இருந்து விடுபடாத வரை அனைத்தும் வீண் ஒப்பாரிகளே! உங்கள் பதவி ஆசை மீதான நம்பிக்கையே பொன்சேகா கூடக் கோமாளிகள் என்றார். ஆனால் மத்திய அரசோ பொன்சேகாவையும் கடந்து 7 கோடித் தமிழர்களையுமே கோமாளிகளாக்கிப் பார்க்கிறது என்பதே உண்மையாகும். இதனை இனியாவது தமிழக உறவுகள் புரிந்து கொண்டு கட்சி அரசியலுக்கப்பால் தமிழ்த் தேசியம் பற்றி சிந்திப்பதே அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் , ஏன் தன்னையே தீயிலே உருக்கினானே அப்துல் ரகூப் போன்றவர்களுக்குச் செய்யும் கௌரவமாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.