Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Featured Replies

இலங்கை துப்பாக்கிச் சூடு-பாம்பன் மீனவர் படுகாயம்

ராமேஸ்வரம்: பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர், இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். இதனால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது.

மீண்டும் தனது அட்டூழியத்தைத் தொடங்கியுள்ளது இலங்கை கடற்படை. ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் இருந்த படகுகளை சுற்றி வளைத்த கடற்படையினர் வெறித்தனமாக தாக்கியுள்ளனர்.

துப்பாக்கிகளின் பின்பகுதியால் தாக்கியதால் மீனவர்கள் சிலர் காயமடைந்தனர். பின்னர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பாம்பனைச் சேர்ந்த ஒரு மீனவர் காயமடைந்தார்.

இதைத் தொடர்ந்து இனிமேல் இந்தப் பக்கம் வரக் கூடாது என எச்சரித்து விட்டு கடற்படையினர் சென்றனர்.

இதையடுத்து தமிழக மீனவர்கள் காயமடைந்த மீனவர்களுடன் கரைக்கு விரைந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் காரணமாக மீனவர்களிடையே பதட்டம் நிலவுகிறது.

நடந்தது தமிழனுக்கு தானே....??? கவலையை விடுங்கள்... அவந்தான் உலகம் எல்லாம் மலிவாய் கிடைக்கிறானே....

இந்தியன் இல்லைதானே? அப்போ பரவாயில்லை.

மன்னிக்கவும்

அடிவாங்கியவன் தமிழன்தானே? அவங்களுக்கு சூடு சொரணை இருக்காது.

தமிழ்நாட்டுத் தமிழர்களை, இந்தியர்களாக எவரும் கருதுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் எப்படித்தான் அடித்தாலும் தமிழ் நாட்டு மீனவர்கள் ரொம்ப நல்லவர்கள் .............. :D

இதனை விட தமிழகத்தை ஆள்பவர்களும் தமிழ்மக்களை ஆளும் ஆனால் தமிழ்மக்களில் அக்கரையில்லாத ஆட்சிகதிரையில் அக்கரையான தெலுங்கர்களும்,கன்னடக்காரர்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சங்கே ஊதிவிட்டயல் போல :rolleyes:

இந்தயாவில் தமிழர்கள் இருக்கின்றார்களா ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தயாவில் தமிழர்கள் இருக்கின்றார்களா ?

தமிழகத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவரகள் தமிழர்களாகச் சிந்திக்காதிருக்கிறார்கள். அதனால் இன்றைய எழுச்சியைக் கூட மிக தந்திரமாக, ஆட்சிக் கதிரையில் இருப்பவர்களால் நீர்த்துப் போக்ச் செய்ய முடிகிறது. அது இருக்கட்டும் எம்மில் எத்தனை பேருக்கு இந்தத் தமிழ் உணர்வு இருக்கிறது? அப்படி இருந்திருந்தால் தமிழனின் நிலை எங்கோ போயிருக்கும். இன்று கூடக் குதர்க்கம் செய்வதிலேயே தனது காலத்தை வீணடிப்பதையும், எந்த சினிமாவில் எந்த நடிகை என்பதையும், இவருக்கு ஏன் நல்ல படங்கள் கொடுக்கவில்லை என்ற ஆராட்சியிலும், கழிக்கும் பொன்னான பொழுதுகளை தேசியத்துக்காக ஏதாவது செய்ய நினைப்பார்களாயின், நாம் தமிழகத்தைப் பார்த்துக் கேட்பதில் ஒரு நியாயம் இருக்குமல்லவா?........ . !

இந்தியாவில் தமிழர்கள் இருக்கின்றார்களா ? என்ற கேள்வியை கேட்கும்வகையில் பதவியில் இருக்கும் பச்சோந்திகள் நடாத்திக்கொள்கின்றார்கள். மும்பையில் வெடித்தபோது முழு உலகமே அழுதது. ஆனால் தமிழக கடறக்கரையில் எத்தனை மீனவர்கள் உறவுகளை இழந்திருப்பார்கள் அதைப்பற்றி யாராவது அக்கறை கொண்டார்களா ?

நான் கேட்ட கேள்வியில் தவறு இல்லைத்தானே . . ஏன் இந்தியாவில் மட்டுமில்லை உலகிலேயே தமிழினம் இல்லை என்ற நிலைதான் இருந்தது ஆனால் அதை மாற்றியவர்கள் விடுதலைப்புலிகள் தமிழனிற்கு சர்வதேசரீதியான அங்கீகாரத்தையும் உலகமே தமிழன் என்றால் புலி என்ற பெருமையையும் பெற்றுத்தந்தவர்கள் அந்த உயரிய மனிதர்கள்தான்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்கியது. இதில் ஒரு மீனவர் படுகாயமடைந்தார்.ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து ஆல்பர்ட் என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் ராஜு (35), ஜான்மோசஸ் (30), டேவிட் (30), டென்சிங் (28) ஆகிய 4 மீனவர்கள் நேற்றுமுன்தினம் கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது 5 பிளாஸ்டிக் ரோந்து படகுகளில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். ராமேஸ்வரம் மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். மீனவர்களை சரமாரியாக தாக்கி ஜிபிஆர்எஸ், செல்போன்களை கேட்டனர். அதெல்லாம் தங்களிடம் இல்லை என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது டீசலை ஊற்றி தீயை பற்ற வைக்க முயன்றனர். அப்போது மீனவர்கள் கெஞ்சி கூத்தாடினர். ராஜு என்ற மீனவரை சரமாரியாக தாக்கியதால் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார்.

அதன்பிறகு இலங்கை கடற்படை அங்கிருந்து சென்றுவிட்டது. காயமடைந்த மீனவருடன் மற்றவர்கள் இன்று காலை ராமேஸ்வரம் வந்தனர். உடனடியாக காயமடைந்த மீனவர் ராஜு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்கிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://www.tamilseythi.com/tamilnaadu/rame...2009-01-09.html

இதில் பதற்றபட ஒன்றுமேயில்லை காரணம் அவனும்(பாதிக்கபட்டவனும்) தமிழன் தானே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.