Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். சுண்டிக்குளம் படையினர் வசம் - ஊடக மத்திய நிலையம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். சுண்டிக்குளம் படையினர் வசம் - ஊடக மத்திய நிலையம்

வீரகேசரி நாளேடு 1/14/2009 11:14:52 PM - படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற கடும் மோதலையடுத்து, யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் பகுதியை படையினர் இன்று மாலை கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இம்மோதலின் போது கடற்புலிகளின் சிரேஷ்ட தளபதிகளின் ஒருவரான திரு என்பவரும் கொல்லப்பட்டதுடன், படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. இது குறித்து ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

யாழ்ப்பாணத்தின் சுண்டிக்குளம் பிரதேசமே யாழ். மாவட்டத்தில் புலிகளிடம் எஞ்சியிருந்த பகுதியான பிரதேசமாகும். இந்தப் பகுதியின் மீது படை நடவடிக்கையை மேற்கொண்ட இராணுவத்தினர், புலிகளுடனான கடும் மோதலின் பின்னர் அப்பகுதியை முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர்.

சுண்டிக்குளம் படையினரிடம் வீழ்ந்ததால் படையினரை எதிர்கொள்ள முடியாத புலிகள், முல்லைத்தீவு பகுதிக்குப் பின்வாங்கிச் சென்றுள்ளனர். இதேவேளை, கடற்புலிகளின் சிரேஷ்ட தளபதிகளில் ஒருவரான திரு என்பவரும் மோதலின்போது கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஓம் உங்களுக்கு நல்ல வாழ்க்கை. படுத்தால் நல்ல நித்திரை வரும். பிறிச்சை திறந்தால் சமைத்த சாப்பாடுகள் இருக்கும். வங்கியில் மட்டையை விட்டால் குறந்தது அகதிப்பணமாவது வரும் நன்றாய் வாழ்ந்துகொண்டு நன்றாகவே கதை விடுவீர்கள் அங்கு வாழும் சாதரண ஏழை மக்களின் நிலையினை நினைத்து பாருங்கள். எமது மக்களின் இந்த அழிவு நிலைக்கு வெளிநாடுகளில் வாழும் தமிழரே முழு காரணம்.

இந்த கதைய தூங்கிட்டு இருக்கிற முட்டால்லிட்டை சொல்லுங்கோ அவன் நம்புவான்' ^_^

நீங்கள் முதல் எழுதின கருத்துக்கும் இப்ப எழுதின கருத்தையும் வாசிக்க சிரிப்பு தான் வருது.. :wub:

தம்பி குட்டி பையா யார் குத்தியாவது அரிசி வந்தால் சரி என்ற நிலையில் தான் வன்னி மக்கள் இன்று இருக்கின்றனர். ஏன் வெளிநாடுகளில் கூட அப்படி தான். நீர் ஏதோ நாட்டு நடப்பு தெரியாமல் அழுகின்றீர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் கறுப்பியால வாறது இப்ப இந்தக்கறுப்பியையே நம்பேலாமல் கிடக்கு ^_^

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனோட சேர்ந்து வாழவிரும்பும் என் சனமே

இனித்தான் உண்மையில் உன்னை நீதேடப்போகின்றாய்

இனித்தான் கூனக்குறுகி என்தலைவனை

எம் இயக்கத்தை நினைத்து அழப்போகின்றாய்

உப்பில்லாவிட்டால்தான்.................

.???

தம்பி குட்டி பையா யார் குத்தியாவது அரிசி வந்தால் சரி என்ற நிலையில் தான் வன்னி மக்கள் இன்று இருக்கின்றனர். ஏன் வெளிநாடுகளில் கூட அப்படி தான். நீர் ஏதோ நாட்டு நடப்பு தெரியாமல் அழுகின்றீர்.

அப்படியென்றால் அதை நாம் எப்படித்தடுப்பது.........

ஆனால் இன்றே ஊர்ப்பெயர்கள் மாற்றப்படுகின்றன

அடுத்தது என்ன?????

இப்போ புலி குத்தாது என்று முடிவு பண்ணியாச்சாக்கும்................????

நீங்கள்ல் சொல்வது சரிதான் விசுகு. ஆனையிவை அலிமங்கட என்று சொல்கிறார்கள், மாங்குளத்தை மான் குளம் என்கின்றனர். ஓமந்தையை ஓ மாந்தை என எழுதுகின்றனர். என்ன செய்வது..............பார்க்கவே ஒரு மாதிரி தான் இருக்கின்றது. அதற்ர்கிடையில் வன்னியில் மக்கள் நாளாந்தம் குவியல் குவியல்களாக காயப்படுகின்றனர், செத்து மடிகின்றனர். அவர்களின் நிலைய ஒரு பொருட்டாகவே வெளிநாடுகளில் வாழும் இலங்கை வாழ் தமிழர்களில் சிலர் நினைப்பதில்லை. வீரமிகு பேச்சுக்கள் வாய்சவடாலுகளுக்கு குறைச்சல் இல்லை. தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தானே தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனோட சேர்ந்து வாழவிரும்பும் என் சனமே

இனித்தான் உண்மையில் உன்னை நீதேடப்போகின்றாய்

இனித்தான் கூனக்குறுகி என்தலைவனை

எம் இயக்கத்தை நினைத்து அழப்போகின்றாய்

உப்பில்லாவிட்டால்தான்.................

.???

அப்படியென்றால் அதை நாம் எப்படித்தடுப்பது.........

ஆனால் இன்றே ஊர்ப்பெயர்கள் மாற்றப்படுகின்றன

அடுத்தது என்ன?????

இப்போ புலி குத்தாது என்று முடிவு பண்ணியாச்சாக்கும்................????

அதை விடுங்க அண்ணை நாளைக்கு முல்லைதீவு ஆமின்ட கைக்கு போன கூட இங்க வந்து எங்கட உறவுகள் எழுதுங்கள் மிக்க நல்லம் என்று..

முல்லைதீவு என்ன‌ த‌மிழ் ஈழ‌ வ‌ரை ப‌ட‌த்தில‌ மிஞ்சி இருக்கிற‌ இட‌ம் இவ‌ள‌வும் தான்

..இந்த‌ இட‌ங்க‌ள் கூட‌ போன‌ சொல்லுங்க‌ள் மிக்க‌ ந‌ல்ல‌ம் என்று.. அப்ப‌ மாவீர‌ர் க‌ண்ட‌ க‌ன‌வு..

mithuuu.jpg

Edited by kuddipaiyan26

வெளி நாடுகளில் வாழும் எமக்கு அரச கட்டுப் பாட்டுப் பகுதி நோக்கிச் செல்லும் மக்களை விமர்சிக்கும் யோக்கியதை இல்லாமல் இருக்கலாம். அரசு முழு அளவிலான வெற்றியை ஈட்டிய பின்பே தனது உண்மை முகத்தை காட்டத் தொடங்கும். அப்போது அவர்கள் நினைத்தாலும் இப்போது அடைந்திருக்கும் நிலைக்கு திரும்ப செல்ல முடியாது.

இந்த நிலைக்கு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தான் முழுக்காரணம் எண்ட மதுகா கொஞ்சம் விளக்கம் தரலாமே ஏனெண்டு..

தம்பி குட்டிபையா இன்னொருவரின் பிணத்தின் மீது, இரத்த கறையின் மீது நின்று தான் நாம் நன்றாக வாழவேண்டும் என்றால் அப்படியான பாழ்பட்டு போன சுதந்திரமான வாழ்வு எமக்கு தேவை தானா?

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி குட்டிபையா இன்னொருவரின் பிணத்தின் மீது, இரத்த கறையின் மீது நின்று தான் நாம் நன்றாக வாழவேண்டும் என்றால் அப்படியான பாழ்பட்டு போன சுதந்திரமான வாழ்வு எமக்கு தேவை தானா?

தங்களுக்கு

யார் பிணம்

யார் வாழ்க்கை

யாருக்கு சுதந்திரம் என்பதிலேயே குழப்பம் போல் உள்ளது

ஓம் ஓம் உங்களுக்கு நல்ல வாழ்க்கை. படுத்தால் நல்ல நித்திரை வரும். பிறிச்சை திறந்தால் சமைத்த சாப்பாடுகள் இருக்கும். வங்கியில் மட்டையை விட்டால் குறந்தது அகதிப்பணமாவது வரும் நன்றாய் வாழ்ந்துகொண்டு நன்றாகவே கதை விடுவீர்கள் அங்கு வாழும் சாதரண ஏழை மக்களின் நிலையினை நினைத்து பாருங்கள். எமது மக்களின் இந்த அழிவு நிலைக்கு வெளிநாடுகளில் வாழும் தமிழரே முழு காரணம்.

இது நீங்கள எழுதியதுதானே

உங்களிடம் ஒரு கேள்வி

இதெல்லாம் இருக்கும் எமக்கு

இதில் ஒரு பகுதியை பிரித்துக்கொடுக்வேண்டும் என்று என்ன வில்லங்கம்

துப்பாக்கி முனையில் மிரட்டமுடியாதே எம்மை...........

உங்களிடம் ஒரு கேள்வி

இதெல்லாம் இருக்கும் எமக்கு

இதில் ஒரு பகுதியை பிரித்துக்கொடுக்வேண்டும் என்று என்ன வில்லங்கம்

துப்பாக்கி முனையில் மிரட்டமுடியாதே எம்மை...........

புரியவில்லை ??

சுண்டைக்குளம் வீழ்ந்தது - யாழ்ப்பாணம் முழுவதும் இலங்கை வசம் வந்தது

வியாழக்கிழமை, ஜனவரி 15, 2009, 12:01 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற கொழும்பு: யாழ்ப்பாணம் தீபகற்பம் முழுவதும் இலங்கை ராணுவத்தின் வசம் வந்துள்ளது. அங்குள்ள கடைசிப் பகுதியையும் விடுதலைப் புலிகள் இழந்துள்ளனர்.

9 ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் முழுவதையும் இலங்கைப் படைகள் தங்களது வசம் கொண்டு வந்துள்ளன. வடக்கில் மிக மிக முக்கியமான பகுதியான யாழ்ப்பாணம் தீபகற்பம், தமிழர்கள் நிறைந்த, வளமான பகுதியாகும். மேலும் ஈழப் போரில் முக்கியமான பகுதியும் கூட. இதை முழுவதுமாக புலிகள் இழந்துள்ளது பெருத்த பின்னடைவாக கருதப்படுகிரது.

யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் விடுதலைப் புலிகள் வசம் கடைசியாக இருந்த சுண்டைக்குளம் கிராமத்தை தற்போது இலங்கை படைகள் மீட்டுள்ளன.

இங்கு நடந்த கடும் சண்டையில், புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்களி்ல் ஒருவரான திரு என்பவர் கொல்லப்பட்டார். அவர் கடற் புலிகள் பிரிவின் முக்கியத் தலைவர் ஆவார்.

இங்கு நடந்த சண்டைக்குப் பின்னர் 100 கடற்புலிகளின் படகுகள், 400 கண்ணிவெடிகள், 40 டாங்குகளை தகர்க்கும் கடற் கண்ணிவெடிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஆனையிரவை இலங்கை ராணுவம் மீட்டது. தற்போது முல்லைத்தீவைப் பிடிக்கும் நோக்கில் தீவிரமாக முன்னேறி வருகிறது.

தொடர்ந்து முல்லைத்தீவு நோக்கி ராணுவம் வேகமாக முன்னேறி வருகிறது. அங்கு விமானங்கள் குண்டுகளை வீசி சரமாரியாக தாக்கி வருகின்றன.

புலிகளின் பயிற்சி முகாம் பிடிபட்டது:

இதற்கிடையே, விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமையும், மருத்துவமனையையும் ராணுவம் பிடித்துள்ளது.

யாழ்ப்பாணம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் இலங்கைப் படைகள் கொண்டு வந்துள்ள நிலையில் முல்லைத்தீவில் ராணுவம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கு தெற்கில் உள்ள வனப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் ரகசிய மறைவிடங்கள் மீது விமானப்படை வி்மானங்கள் குண்டு வீசித் தாக்கியுள்ளன. இந்த பகுதியில்தான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மறைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விமானப்படை செய்தித்தொடர்பாளர் ஜனக நாணயக்காரா கூறுகையில், பிரபாகரன் பதுங்கியிருப்பதாக கருதப்படும் இடங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தினோம்.

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவை ராணுவம் வேகமாக முற்றுகையிட்டு வருகிறது. அவருக்கு பாதுகாப்பான இடம் என்று இப்போது எதுவும் இல்லை. அவரது பாதுகாப்பு குறைந்து கொண்டு வருகிறது. தப்பி ஓடுவதற்கான வழிகளும் அவருக்கு குறைந்து கொண்டு வருகிறது.

தற்போது 59வது படைப் பிரிவு, வெளி ஓயாவிலிருந்து முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வருகிறது. முல்லைவளை -தன்னியூத்து மாவட்ட அரசு மருத்துவமனை தற்போது ராணுவத்தின் கைவசம் வந்துள்ளது. இது விடுதலைப் புலிகள் வசம் இருந்து வந்தது.

இதை தங்களது காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக புலிகள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

மேலும், கிளிநொச்சி அருகே உள்ள கேரிடமடு என்ற இடத்தில் உள்ள புலிகளின் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி முகாமையும் ராணுவம் பிடித்துள்ளது என்றார் அவர்.

காடுகளுக்குள் புலிகள் ..

இதற்கிடையே தேவையில்லாத உயிரிழப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு வனங்களுக்குள் ஊடுறுவிப் போய் விட்டனர் என்று கூறப்படுகிறது. இதனால் ராணுவத்தால் பிரபாகரனையோ அல்லது விடுதலைப் புலிகள் அனைவரையுமோ பிடிப்பது என்பது எளிதான காரியம் இல்லை என்கிறார்கள்.

http://thatstamil.oneindia.in/news/2009/01...-peninsula.html

மிக அருமையான செய்தி. களத்திலிருந்து நேரடியாக தொகுத்து அனுப்பியிருக்கிறார்கள்

இவர்களிற்கு முதலில் புலிகள் யார் என்று தெரியுமோ தெரியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டைக்குளம் வீழ்ந்தது - யாழ்ப்பாணம் முழுவதும் இலங்கை வசம் வந்தது

சுண்டிக்குளம் சுண்டைக்குளமாக மாறியது எப்போது? : /

சுண்டிக்குளம் சுண்டைக்குளமாக மாறியது எப்போது?

ஓடத்தொடங்கியபோது

ஓடத்தொடங்கியபோது

நீங்கள் ஓட தொடங்கியதுக்கும் ஒரு இந்தியனின் இனையத்தில் இடத்தின் பெயர் மாறிவருவதுக்கும் என்ன தொடர்பு?

இடமே இப்பொழுது எம்பிடியில் இல்லையாம் இனி பெயர் யாருக்கு வேண்டும். விரும்பியவன் விரும்பியபடி பெயரை வைக்கட்டுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.