Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய அரசை கண்டித்து கோவையில் தீக்குளிக்க முயன்ற பெரியார் திராவிடர் கழக தோழர்கள்!

Featured Replies

இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று தீக்குளிக்க முயன்ற பெரியார் தி.க.வை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பரபரப்புக்கு பெயர்போன கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று காலை தீக்குளிப்போம் என்று பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சிலர் அறிவித்து இருந்தனர்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமிஷனர் கே.சி.மஹாலி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர்கள், சுந்தரவடிவேல், பழனிசாமி, ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சவுந்தர் ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், உள்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

அதோடு தீயை அணைக்கும் கருவிகளையும் கொண்டு வந்து தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

இன்று விடுமுறை நாள் என்பதால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. திடீரென மதியம் 12.40 மணியளவில் 3 திசைகளில் இருந்து 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வந்து கையில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதை பார்த்த காவலர்கள் ஓடிச்சென்று அவர்கள் 3 பேரையும் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் இலங்கையில் ஈழத்தமிழர்கள் தாக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று ஆவேசமாக முழக்கமிட்டனர்.

இதையடுத்து தீக்குளிக்க முயன்ற 3 பேரையும் காவலர்கள் கைது செய்தனர்.

அவர்களது விபரம் :-

1. தோழர் பெரியார் ஜெகன் (30),ஈரோடு மாவட்ட பெரியார் திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளர்,

2. தோழர் சம்பூகன் என்ற சண்முகம் ,.பெரியார் தி.க. திருப்பூர் நகர செயலாளர்.

3. தோழர் கோபிநாத் (26), திருப்பூர் பெரியார் திராவிடர்கழகம்..

கைதான 3 பேரும் பந்தயச்சாலை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினர் தோழர் வெ.ஆறுச்சாமி நிருபர் களிடம் கூறியதாவது:-

இலங்கையில் சிங்கள ராணுவம் விமானத்தில் குண்டு களை வீசி கொடூர மான முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது.

5 லட்சம் தமிழர்கள் சாவின் விழும்பில் உள்ளனர். அவர்கள் முல்லைத் தீவில் பதுங்கி உள்ளனர். தமிழக அரசியல் தலைவர்கள் மத்திய அரசை வற்புறுத்தியும் இதுவரை இந்திய அரசு போர் நிறுத்தம் செய்ய சொல்ல வில்லை.

மவுனமாக இருந்து வரும் மத்திய அரசை தமிழக அரசில் கட்சி தலைவர்கள் கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும்.

மத்திய அரசு போர் நிறுத்தம் செய்ய சொல்லும் வரை நாங்கள் எந்த பண்டிகையும் கொண்டாட மாட்டோம். மேலும் பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்கும் போராட்டம் நடத்துவார்கள். என்று கூறினார்.

இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர்ந்து காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

http://www.tamilseythi.com/tamilnaadu/koovai-2009-01-15.html

-தமிழ்செய்தி நிருபர் அசுரன்

Edited by tamilarasu

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி கோவை பெரியார் தி.க.வினர் தீக்குளிக்க முயற்சி [ வியாழக்கிழமை, 15 சனவரி 2009, 06:19.51 AM GMT +05:30 ]

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னை மறைமலை நகரில் விடுதலைச் சிறுத்தைகள் உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் கோவையில் பெரியார் தி.க. வினர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆட்டோவில் வந்து இறங்கிய பெரியார் தி.க. கோவை மாவட்ட இளைஞரணி தலைவர் பெரியார் ஜெகன், கோபிநாத் உள்ளிட்ட 3 பேர் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.

தற்கொலை முயற்சியை தடுத்த கோவை போலீசார் , 3 பெரியார் தி.க.வினரையும் கைது செய்தனர்.

thakns

tamilwin

ஈழத்தமிழரின் விடிவு, அழிவில் இருந்து மீட்ச்சி முக்கியம்தான்... அதைவிட தமிழக உறவுகளின் குடும்பங்களும் முக்கியம் என்பதை உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்....

Edited by தயா

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி கோவை பெரியார் திராவிடர் கழகத்தினர் தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை ஆட்சியாளர் அலுவலகம் எதிரில் முச்சக்கர வண்டியில் சென்று இறங்கிய பெரியார் தி.க. கோவை மாவட்ட இளைஞரணி தலைவர் பெரியார் ஜெகன், கோபிநாத் உள்ளிட்ட 3 பேர் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். தற்கொலை முயற்சியை தடுத்த கோவை காவற்துறையினர் 3 பெரியார் தி.க.வினரையும் கைது செய்துள்ளனர்.

நன்றி : www.globaltamilnews.ne

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக உறவுகளே உங்களுக்கு ஈழத்தமிழர் மீதிருக்கும் ஆண்டாண்டு கால பாசமும்.. பந்தமும்.. உறவும்.. உணர்வும் எல்லோரும் அறிந்ததே. அவற்றை காத்திரமான வழியில்.. இந்திய அரசுக்கும்.. உலகுக்கும் காட்டுங்கள். தமிழர்கள் தம்மை அழித்துக் கொள்ளும் செயல்கள் வேண்டாம். பகுத்தறிவுப் பாசறையில் இருந்து வரும் நீங்கள்.. இவ்வாறு உங்களுக்குள் பொங்கும் ஈழத் தமிழர் இன உணர்வை.. உங்களை அழிக்கப்பயன்படுத்தக் கூடாது. மாறாக நீங்கள் நேசிக்கும் இனத்தைக் காக்க உங்கள் சக்தியை.. மனித வலுவை.. பல திட்டங்களுக்குள் செலுத்தி பயன்படுத்தி வெற்றி காணுங்கள்.

தோல்வி என்ற ஒன்றில்லை. எமது முயற்சிகளின் போதாமையே.. தோல்வி என்று இனங்காட்டப்படுகிறது. முயல்வோம்.. வெல்வோம்..! ஒற்றுமையால் உயர்வோம்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று தீக்குளிக்க முயன்ற பெரியார் தி.க.வை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பரபரப்புக்கு பெயர்போன கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று காலை தீக்குளிப்போம் என்று பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சிலர் அறிவித்து இருந்தனர்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமிஷனர் கே.சி.மஹாலி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர்கள், சுந்தரவடிவேல், பழனிசாமி, ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சவுந்தர் ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், உள்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

அதோடு தீயை அணைக்கும் கருவிகளையும் கொண்டு வந்து தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

இன்று விடுமுறை நாள் என்பதால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. திடீரென மதியம் 12.40 மணியளவில் 3 திசைகளில் இருந்து 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வந்து கையில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதை பார்த்த காவலர்கள் ஓடிச்சென்று அவர்கள் 3 பேரையும் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் இலங்கையில் ஈழத்தமிழர்கள் தாக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று ஆவேசமாக முழக்கமிட்டனர்.

இதையடுத்து தீக்குளிக்க முயன்ற 3 பேரையும் காவலர்கள் கைது செய்தனர்.

அவர்களது விபரம் :-

1. பெரியார் ஜெகன் (30),ஈரோடு மாவட்ட பெரியார் திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளர்,

2. சம்பூகன் என்ற சண்முகம் ,.பெரியார் தி.க. திருப்பூர் நகர செயலாளர்.

3. கோபிநாத் (26), திருப்பூர் பெரியார் திராவிடர்கழகம்..

கைதான 3 பேரும் பந்தயச்சாலை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினர் வெ.ஆறுச்சாமி நிருபர் களிடம் கூறியதாவது:-

இலங்கையில் சிங்கள ராணுவம் விமானத்தில் குண்டு களை வீசி கொடூர மான முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது.

5 லட்சம் தமிழர்கள் சாவின் விழும்பில் உள்ளனர். அவர்கள் முல்லைத் தீவில் பதுங்கி உள்ளனர். தமிழக அரசியல் தலைவர்கள் மத்திய அரசை வற்புறுத்தியும் இதுவரை இந்திய அரசு போர் நிறுத்தம் செய்ய சொல்ல வில்லை.

மவுனமாக இருந்து வரும் மத்திய அரசை தமிழக அரசில் கட்சி தலைவர்கள் கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும்.

மத்திய அரசு போர் நிறுத்தம் செய்ய சொல்லும் வரை நாங்கள் எந்த பண்டிகையும் கொண்டாட மாட்டோம். மேலும் பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்கும் போராட்டம் நடத்துவார்கள். என்று கூறினார்.

இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர்ந்து காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

perijar_15108_3.jpg

perijar_15108_2.jpg

perijar_15108_1.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக உறவுகளே,

எங்கள் தாயக உறவுகளின் உயிர்களைக்காக்க வேண்டித்தான் நிற்கின்றோம். நீங்களே இப்படிச்செய்தால் எப்படி?!! எங்களுக்காக குரல் கொடுக்கின்ற உயிர்களை இழக்க எப்படி நாம் சம்மதிப்போம் என்று நினைத்தீர்கள்?!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.