Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலை பூ என்று நினைத்தேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதலை பூ என்று நினைத்தேன்

பெண்ணே

நீ

தொட்டவுடன்

வெடித்துவிட

மிதிவெடியா

அல்லது

சீறிவந்து

உயிர் குடிக்கும்

ஆட்லறியா

கண்ணிமைக்கும்

நொடிப்பொழுதில்

கதையை

முடித்துவிடும்

கண்ணி வெடியா

சன்னமாய்

போகின்றாய்

மின்னலாய்

ஒளி வீசுகின்றாய்

பல்குழல்

பீரங்கி போல

படபடென்று

பேசுகின்றாய்

உன்னைப்

பக்கத்தில்

வந்து பார்க்க

மனம் ஏவுதடி

கால்கள்தான்

ஏனோ

தடை சொல்லுதடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா காதலைப் பூ என்று நினைத்தேன் என்று சொல்லிவிட்டு எல்லாம்

படு பயங்கரவாதச் சொற்களாக இருக்கின்றனவே தியா??

அருமையான கற்பனை எல்லாம் பட பட என்று வெடிச்சத்தம் கேட்ட

மாதிரிக்கிடக்கு. அருமை அருமை உங்கள் கவிதை. தொடரட்டும் உங்கள்

கவிப்பயணம். வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தியா காதற்பயங்கரவாதியாய் மாறீட்டீங்கள். என்ன நடந்தது ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[code]ஆகா காதலைப் பூ என்று நினைத்தேன் என்று சொல்லிவிட்டு எல்லாம் 

படு பயங்கரவாதச் சொற்களாக இருக்கின்றனவே தியா??

அருமையான கற்பனை எல்லாம் பட பட என்று வெடிச்சத்தம் கேட்ட

மாதிரிக்கிடக்கு. அருமை அருமை உங்கள் கவிதை. தொடரட்டும் உங்கள்

கவிப்பயணம். வாழ்த்துக்கள்

என்னசெய்வது வன்முறைதானே ஜெயிக்குது

Edited by theeya

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா காதலைப் பூ என்று நினைத்தேன் என்று சொல்லிவிட்டு எல்லாம்

படு பயங்கரவாதச் சொற்களாக இருக்கின்றனவே தியா??

தியா காதற்பயங்கரவாதியாய் மாறீட்டீங்கள். என்ன நடந்தது ?

தீயாவுக்கு

மிக அருமையாக இக்கவிதையை எழுதியிருக்கிறீர்கள். தமிழர் போராட்டத்துடன் மிகவும் பின்னிப் பிணைந்து இருக்கும் சொற்களை உவமானமாகப் பயன்படுத்தி கவிதை எழுதியிருக்கிறீர்கள். மிக நன்று.... ஆனால் ஒருவிடயத்தில் எனக்கு உடன் பாடு இல்லை... உங்கள் கவிதையில் அல்ல அதற்கு கருத்துச் சொன்னவர்களின் கருத்தில்....

அதாவது பயங்கரவாதச் சொற்கள் என்று.. உங்கள் கவிதையில் குறிப்பிட்ட ஆயுதங்களை எங்கள் போராளிகளும் பாவிக்கிறார்கள் தானே...! பயங்கரவாத ஆயுதங்கள் என்றால் அதைப் பாவிக்கும் எங்கள் போராளிகளையும் நாங்களே பயங்கரவாதிகள் என்று கூறுவதாக அர்த்தப் படாதா...? உலகம் எங்களை எப்படி வேண்டுமென்றாலும் அழைக்கட்டும் அந்த நிலை விரைவில் மாறும் ஆனால் நாங்கள் மனதளவிலேனும் எங்கள் போராளிகலையோ போராட்டத்தையோ பயங்க்கரவாதத்துடன் சம்மந்தப் படுத்தக் கூடாது. இது தாழ்மையான என் கருத்து....

இளங்கவி

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

தியா காதற்பயங்கரவாதியாய் மாறீட்டீங்கள். என்ன நடந்தது ?

:rolleyes:

Edited by பரதேசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீயாவுக்குமிக அருமையாக இக்கவிதையை எழுதியிருக்கிறீர்கள். தமிழர் போராட்டத்துடன் மிகவும் பின்னிப் பிணைந்து இருக்கும் சொற்களை உவமானமாகப் பயன்படுத்தி கவிதை எழுதியிருக்கிறீர்கள். மிக நன்று.... ஆனால் ஒருவிடயத்தில் எனக்கு உடன் பாடு இல்லை... உங்கள் கவிதையில் அல்ல அதற்கு கருத்துச் சொன்னவர்களின் கருத்தில்....அதாவது பயங்கரவாதச் சொற்கள் என்று.. உங்கள் கவிதையில் குறிப்பிட்ட ஆயுதங்களை எங்கள் போராளிகளும் பாவிக்கிறார்கள் தானே...! பயங்கரவாத ஆயுதங்கள் என்றால் அதைப் பாவிக்கும் எங்கள் போராளிகளையும் நாங்களே பயங்கரவாதிகள் என்று கூறுவதாக அர்த்தப் படாதா...? உலகம் எங்களை எப்படி வேண்டுமென்றாலும் அழைக்கட்டும் அந்த நிலை விரைவில் மாறும் ஆனால் நாங்கள் மனதளவிலேனும் எங்கள் போராளிகலையோ போராட்டத்தையோ பயங்க்கரவாதத்துடன் சம்மந்தப் படுத்தக் கூடாது. இது தாழ்மையான என் கருத்து....

:rolleyes: ஐயோ இது என்ன வம்பாப் போச்சு, எனக்கு இந்தக் கவிதையை வாசிக்க நாம்

அனுபவிச்ச கொடுமையான வாழ்க்கை கன்னிவெடி, ஆட்லறி செல், விமானக்குண்டு வீச்சு

என்று அந்த பயங்கரமான நாம் அனுபவிச்ச சூழல்தான் ஞாபகத்திற்கு வந்திச்சு

அதனால்த்தான் அப்படி எழுதினேன் மற்றபடி நமது அண்ணாமார், அக்காமாரை

நான் எப்படி பயங்கரவாதிகள் என்று சொல்லுவேன். ? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:o ஐயோ இது என்ன வம்பாப் போச்சு, எனக்கு இந்தக் கவிதையை வாசிக்க நாம்

அனுபவிச்ச கொடுமையான வாழ்க்கை கன்னிவெடி, ஆட்லறி செல், விமானக்குண்டு வீச்சு

என்று அந்த பயங்கரமான நாம் அனுபவிச்ச சூழல்தான் ஞாபகத்திற்கு வந்திச்சு

அதனால்த்தான் அப்படி எழுதினேன் மற்றபடி நமது அண்ணாமார், அக்காமாரை

நான் எப்படி பயங்கரவாதிகள் என்று சொல்லுவேன். ? :o

இனியவளுக்கு

உங்கள் மனம் நோகக் கூடியதாக நான் ஏதாலும் சொல்லியிருந்தால் என்னை மன்னிக்கவும். உங்கள் கருத்தில் பயங்கரவாத ஆயுதங்கள் என்ற பதம் பாவிக்கப் பட்டதால் நான் அவசரப்பட்டு கருத்துக் கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன். பின்னர் உங்கள் அவசரமான பதிலிலிருந்து அது எதேச்சையாக வந்த வார்த்தைகள் என புரிந்து கொண்டேன். என்னை மின்னிக்கவும்

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரதேசி, இனியவள்,இளங்கவி உங்கள் கருத்துக்கள்

வாதப்பிரதி வாதங்களுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை தியா. கற்பனை அருமை.

எனக்கு கவிதை எழுதின ஆளுக்கு பொறி வெடி வைக்க வேணும் போல இருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கவிதை எழுதின ஆளுக்கு பொறி வெடி வைக்க வேணும் போல இருக்கு..

என்ன தலை ஏன் பொறிவெடி வைக்கப்போறியள் ?

பொறுமை பொறுமை :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கவிதை எழுதின ஆளுக்கு பொறி வெடி வைக்க வேணும் போல இருக்கு..

அமைதி தயா அண்ணா. சுமுகமாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கவிதை எழுதின ஆளுக்கு பொறி வெடி வைக்க வேணும் போல இருக்கு..

தயா பொறுமையாக பேசித் தீர்க்கலாமே ரொம்ப பயமாயிருக்கு

அழுதுடுவன்...

சாந்தி, நுணாவிலான் இருவரும் எனக்கும் தயாவுக்கும் இடையில் மத்தியஸ்தத்துக்கு வருவீர்களா?

Edited by theeya

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.