Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குவான்டனாமோ முகாம் சிறையை மூட ஒபாமா உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாஷிங்டன்: பெரும் சர்ச்சைக்குள்ளான குவான்டனாமோ தீவு முகாமை மூட அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஒரு ஆண்டில் இந்த தீவு முகாமின் செயல்பாடுகள் முழுமையாக முடிவுக்கு வரும்.

கியூப கடல் பகுதியில் உள்ள குவான்டனாமோ தீவில் அமெரிக்க கடற்படையின் சிறை முகாம் உள்ளது. இங்கு பல்வேறு கைதிகள் உள்ளனர். நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம் தொடர்பான கைதிகளும், ஈராக் கைதிகளும் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை அமெரிக்க அதிகாரிகள் கொடூரமாக சித்திரவதை செய்வதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தன. இந்த சிறை முகாமை மூட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.

ஆனால் இந்தக் கோரிக்கைகளை முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் நிராகரித்து வந்தார். ஆனால் அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, குவான்டனாமோ சிறை முகாம் மூடப்படும் என ஒபாமா அறிவித்திருந்தார்.

அதன்படி, அதிபரான உடனேயே 120 நாட்களுக்கு கைதிகளை விசாரிப்பதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார் ஒபாமா. இந்த நிலையில் இந்த தீவு முகாமை மூடி விட உத்தரவிட்டுள்ளார். இன்னும் ஒரு ஆண்டில் இந்த தீவு முகாமை முழுமையாக மூடி விட நடவடிக்கை எடுக்கவும் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உலகம் முழுவதும் உள்ள அமெரிக்காவின் சிஐஏ ரகசிய சிறை மையங்களையும் மூட ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

குவான்டனாமோ முகாமை கடந்த 2002ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்தான் அமைத்தார். இங்கு தீவிரவாத புகார்களுக்குள்ளா கைதிகளை அடைத்து சித்திரவதை செய்து வந்தனர். இதை சித்திரவைத்க கூடம் என்று மனித உரிமை அமைப்புகள் வர்ணித்தன. மொத்தம் 245 கைதிகள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த முகாமை மூடும் உத்தரவில் நேற்று ஒபாமா கையெழுத்திட்டார். இங்குள்ள கைதிகளை அமெரிக்கா தவிர்த்து வேறு நாடுகளுக்கு மாற்றுவது குறித்து ஆராய கமிட்டி ஒன்று அமைக்கப்படவுள்ளது.

ஒரு வேளை கைதிகளை வேறு நாட்டுக்கு மாற்றுவது சாத்தியமில்லை என்று தெரிய வந்தால், இவர்களை எப்படி வைத்து விசாரிப்பது என்பது குறித்து மறு ஆய்வு செய்யப்படும்.

நன்றி தற்ஸ் தமிழ்

உண்மையில் ஒபாமாவின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நம்பிக்கை ஊட்டக் கூடியனவாகவே இருக்கின்றது. இவரது செயற்பாடுகள் முன்னைய அமெரிக்க அதிபர்கள் போலல்லாது குறிப்பாக இரண்டு புஷ்ஷின் செயற்பாடுகளளிலிருந்து மாறுபட்டு நேர்மையானதாக இருக்கும் பட்சத்தில் உலக அரங்கில் அமெரிக்கா ஒரு புததிய வரலாறு படைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கும் மூடுவிழா..!

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28123

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஒபாமாவின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நம்பிக்கை ஊட்டக் கூடியனவாகவே இருக்கின்றது. இவரது செயற்பாடுகள் முன்னைய அமெரிக்க அதிபர்கள் போலல்லாது குறிப்பாக இரண்டு புஷ்ஷின் செயற்பாடுகளளிலிருந்து மாறுபட்டு நேர்மையானதாக இருக்கும் பட்சத்தில் உலக அரங்கில் அமெரிக்கா ஒரு புததிய வரலாறு படைக்கும்.

உண்மைதான் வசம்பண்ணே..... ஆனாலும் பலரும் எதிர்பார்ப்பதுபோல் இவர் இருந்துவிடபோவதில்லை தற்போதைய பொருளாதர வீழ்சியும் அதை தூக்கிநிறுத்தும் வேலைத்திட்த்திற்குள்தான் இது வருகின்றதே தவிர எந்த மனிதஉரிமையோ மண்ணாங்கட்டியோ அங்கில்லை. உடைந்துபோயிருக்கும் அமெரிக்க உறவை முஸ்லிம் நாடுகளுடன் புதிப்பித்து தமது பொருளாதாரத்தை மீண்டும் மலையேற்ற பணமுதலைகள் போடும் திட்டங்கள்தான் இவைகள். சில முஸ்லிம் கைதிகளை விடுவித்து அதன்மூலம் முஸ்லிம்மக்களின் மனதை மாற்றலாம் என்று நினைக்கின்றார்கள். மற்றையது அந்த சிறையில் இருப்பவர்கள் பொது இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யபட்டு பல சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டவர்கள் பாலியல் பலத்தகாரம் உட்பட மிக கொடிய மனிதவதைகளை சந்தித்தவர்கள். அவர்களில் அனேகர் கொலை செய்யபடுவது உறுதி காரணம் அவர்களை விடுவித்து. அவர்களுக்கு நடந்தவை வெளியில் தெரியவருவதை விரும்பமாட்டார்கள். தமது பொருளாதாரத்தை தூக்கிநிறுத்த இந்த ஓபாமாவை பணமுதலைகள் பயன்படுத்த போகிறார்கள் அதை ஒபாமாவும் செய்தே ஆகவேண்டும் காரணம் அவர்களின் பல மில்லியன் டாலர்களின் தயவால்தான் அண்ணாச்சி இந்த பதவியை எட்ட முடிந்தது தவிர நான்கு ஆண்டுகள் கழித்து நடக்கவிருக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கும் இவர்களின் உதவியும் பணமும் அண்ணாச்சிக்கு நிறையவே தேவை. பயங்கரவாதத்திற்கான போர் என்று நின்றவர் கண்டவர்களையெல்லாம் அங்காங்;கே பிடித்துவைத்திருக்கிறார்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனித்தான் அமெரிக்கா தைரியமாக அமைதியாக இன்னும் பல விடயங்களை சாதிக்கப்போகின்றது.

பாவம் ஒரு சில கத்தரிவெருளிகள்.

இப்போதைய உலகம் பிரச்சார உலகம். செயல்பாட்டு உலகமல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைய உலகம் பிரச்சார உலகம். செயல்பாட்டு உலகமல்ல.

நறுக்கு தெறித்தாப்போல .....

நாலு சொல்லிலை .....

விசயத்தை சொல்லும் .....

உங்கள் அழகே .....

தனி அழகு குமாரசாமியண்ணை . :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.