Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருந்த வேண்டும் இல்லாவிட்டால் மக்களால் திருத்தப்படுவார்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் நடக்கிறது.

ஊடகம்?

பல இடங்களில் கவனயீர்ப்பு நடைபெறுகிறது. ஊடகங்களில் அறிவித்தல்கள் வருகின்றன. எல்லா இடங்களையும் உடனடியாக புரிந்து கொள்ளமுடியவில்லை. வானொலியுடன் குந்திக்கொண்டு இருப்பதற்கு நேரமில்லை. சரி இணையத்திற்குள் இணைக்கலாம் எங்கெங்கு நடக்கிறது என்று விபரங்களை எடுக்கலாம் என்று ஒரு வானொலி நிலையத்திற்கு அழைத்தேன். கதைத்தவரிடம் இன்று கவன ஈர்ப்பு நடைபெறும் இடங்களைத் தாருங்கள் என்று கேட்டேன் நீங்கள் எந்த இடம் என்று கேட்டார். நான் கூறினேன் நான் இருக்கும் இடத்தில் எங்கு நடைபெற உள்ளது என்று எனக்குத் தெரியும். மற்றைய இடங்களைத்தாருங்கள் என்றேன் எதற்கு என்றார். நான் இணையத்தில் போட உள்ளேன் சரியான முகவரியைக் கொடுத்தால்த்தான் வானொலி கேட்காத காரியாலத்தில் வேலைபார்ப்பவர்கள் கணனி வாயிலாக அறிந்து கவனயீர்ப்புகளில் கலந்து கொள்வார்கள் என்றேன். எந்த இணையத்தில் என்றார். ஏன் எந்த இணையத்தில் போட்டால் இந்த வானொலி நிலையத்தார் விபரங்களை வழங்குவார்கள்? வந்த பின் பாருங்கள் என்றேன் நீங்கள் எந்த இணையத்தில் போட உள்ளீர்கள் என்று சொல்லுங்கள் என்று விடாப்பிடியாக அந்த வானொலி ஊடகத்தைச் சார்ந்தவர் பிடிவாதமாக நின்றார்.......!!!!!! மக்களுக்கான கவனயீர்ப்பு அறிவிப்பு நடைபெறும் இடங்களைக் கேட்டு எடுத்த எனக்கு நாற்காலியில் காலாட்டிக் கொண்டு இருந்த இந்த நபரோடு எல்லாவற்றையும் விளக்கமாக சொல்லித்தான் விபரம் எடுக்கவேண்டிய நிலை வேதனையைத் தந்தது. ஊசிபோல் குத்தும் குளிரில் நடுநடுங்கி நின்று கொண்டு கவனயீர்ப்புகளில் ஈடுபட்டிருந்தால் இந்த மரமண்டைக்கு எங்களின் வலிகள் புரியும். வெறுத்துவிட்டது நன்றி சொல்லிவிட்டு எனது தொலைபேசி இணைப்பைத் துண்டித்துக் கொண்டேன். பல பாகங்களிலும் மக்கள் தாங்களாகவே கவனயீர்ப்புகளில் ஈடுபடும் போது அதை வானொலியில் அறிவிக்கிறார்கள், ஆகையால் வானொலியில் வரும் விபரத்தை எடுத்து இங்கு இணைத்தால் பலருக்கு உபயோகமாக இருக்குமே என்று நினைத்தால் பொறுப்புள்ள இடங்களில் இருக்கும் மரமண்டைகள் எப்போது புரிந்து கொள்வார்கள்?

திருந்த வேண்டும் இல்லாவிட்டால் மக்களால் திருத்தப்படுவார்கள்.

இங்கு எந்த வானொலி என்று நான் குறிப்பிடவில்லை இனி வரும் காலம் தவறுகள் எங்கு நடந்தாலும் அடையாளங்காட்டப்படும். இந்தப்பதிவு ஒரு சின்ன உதாரணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரிகிறது எனக்கு அதுதான் உதவிசெய்பவர்களையும் விடமாட்டார்கள் அதைவிட ஆயிரத்தெட்டுக்கேள்விகள் வேற இவர்கள் எல்லாம் வானொலி நிலையம் வைத்திருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சாகரா,

நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி?

அவரின் நிலையிலிருந்து சிந்தித்துப் பாருங்கள். யாரோ ஒராள் தொலைபேசியில் அழைத்து இன்று கவனயீர்ப்பு நடைபெறும் இடங்கள் எல்லாவற்றையும் தாருங்கள் என்றால் யோசிப்பீர்களா இல்லையா?

அவர் நீங்கள் யார்? எந்த இணையத்தில் போடப் போகிறீர்கள் என்று மேலதிக தகவல்கள் அறிய விரும்புவதில் என்ன பிழை?

எதிலும் உசாராக இருப்பது நல்லதுதானே!!

நமது மக்களிடம் எழுச்சி இருக்கிறது.நமது இளையோரிடம் துடிப்பும் ஆற்றலும செயற் திறனும் ;இருக்கிறது.ஆனால் தமிழ் தேசியத்துக்கு ஆதரவு என்று செல்லிக் கொள்ளும் பெரிய ஊடகங்களில் அவற்றை மழுங்கடிக்கும் விதத்தில் பாசாங்கும் பிழைப்புவாதமும் தான் நிறைந்திருக்கிறது.

பிரபா அண்ணா ஓரு ஊடகத்தில் இருப்பவர் தங்களுடன் தொடர்பு கொள்பவர் பற்றிய விபரங்களை கேட்டறிவதில் தவறில்லை.ஆனால் அதை கேட்கிற விதத்தில் அல்லவா கேட்டக வேண்டும்.தாங்கள் பொட்டம்மானை விட பெரியவாகள் என்ற நினைப்பில் அல்லவா இவர்கள் நடந்துகொண்டு மக்களுக்கு வெறுப்பேற்றுகிறார்கள்

Edited by athiyan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாகரா,

நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி?

அவரின் நிலையிலிருந்து சிந்தித்துப் பாருங்கள். யாரோ ஒராள் தொலைபேசியில் அழைத்து இன்று கவனயீர்ப்பு நடைபெறும் இடங்கள் எல்லாவற்றையும் தாருங்கள் என்றால் யோசிப்பீர்களா இல்லையா?

அவர் நீங்கள் யார்? எந்த இணையத்தில் போடப் போகிறீர்கள் என்று மேலதிக தகவல்கள் அறிய விரும்புவதில் என்ன பிழை?

எதிலும் உசாராக இருப்பது நல்லதுதானே!!

பிரபா, யாருக்குமே தெரியாத விடயத்தையா கேட்டோம்? ஏற்கனவே வானொலியில் அறிவித்துக் கொண்டிருக்கும் இடங்களைத் தெளிவாக எழுதுவதற்கு வசதியாக இருப்பதற்காக கேட்டோம். ஏதோ கவனயீர்ப்பு நடைபெறும் இடங்களை வானொலியில் அறிவிக்கிறபோது, அதைப் பற்றிய விடயங்களைக் கேட்டால் அவர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதற்கு என்ன இருக்கிறது?

அப்படி சந்தேகக்கண்கொண்டு பார்ப்பவர்களாக இருந்தால் எப்படி அறிவித்தல்களை வானலையில் தவழவிடுகிறார்கள். யோசித்துப் பாருங்கள். அப்படியானால் இவர்கள் மதில்மேல் பூனையா?

Edited by valvaizagara

நமது மக்களிடம் எழுச்சி இருக்கிறது.நமது இளையோரிடம் துடிப்பும் ஆற்றலும செயற் திறனும் ;இருக்கிறது.ஆனால் தமிழ் தேசியத்துக்கு ஆதரவு என்று செல்லிக் கொள்ளும் பெரிய ஊடகங்களில் அவற்றை மழுங்கடிக்கும் விதத்தில் பாசாங்கும் பிழைப்புவாதமும் தான் நிறைந்திருக்கிறது.

பிரபா அண்ணா ஓரு ஊடகத்தில் இருப்பவர் தங்களுடன் தொடர்பு கொள்பவர் பற்றிய விபரங்களை கேட்டறிவதில் தவறில்லை.ஆனால் அதை கேட்கிற விதத்தில் அல்லவா கேட்டக வேண்டும்.தாங்கள் பொட்டம்மானை விட பெரியவாகள் என்ற நினைப்பில் அல்லவா இவர்கள் நடந்துகொண்டு மக்களுக்கு வெறுப்பேற்றுகிறார்கள்

அதுமட்டுமல்ல. இந்தப் போராட்டங்களில் அவர்களை மட்டுமே முன்னிலைப்படுத்தவேண்டுமென நினைக்கிறார்கள். இங்கு நடக்கும் போராட்டங்களில் ஒருசில ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே மேடைகளில் பேசுகிறார்கள். அதுமட்டுமின்றி, அப்போராட்டங்களை முன்னெடுப்பவர்களும் அந்த ஒருசில ஊடகங்களைச் சேர்ந்தவர்களாக மட்டுமே உள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கனும், எல்லாருக்கும் யார் எதை செய்கின்றார்கள் என்பது பற்றிய விவாதமோ! ஆலசலோ இன்றைய காலத்தில் தேவையற்றது. யார் எதை செய்தாலும் அதற்கான பதில காலம் அவர்களுக்கு உணர்த்தும். வல்வை சகாறாவின் முயற்ச்சி வரவேற்க்கத்தக்கது. ஆனால் துரதிஸ்ட வசமாக அவரது வேண்டுதல் வானொலியால் மறுதலிக்கப்பட்டது. வருந்தத்தக்கது.

முடிந்தளவு கவனயீர்ப்பு நிகழ்வுகள் பற்றிய விபரங்களை யாழில் இணைக்க முயறச்சிக்கிறேன்.

அது மட்டுமன்றி கனடாவைத் தளமாக கொண்டியங்கும் அனைத்து இலத்திரனியல், அச்சு ஊடகங்களினூடாகவும் இத்தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

ஏன் நீங்கள் எந்த இணையத்தில் இணைக்க போகின்றீர்கள் என்ற விபரத்தை ஊடகத்தாருக்கு தெரியபடுத்தி இருக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

சஹாரா!

சந்தர்ப்பம் வரும்போது இவர்களை அடையாளம் காட்டலாம், இப்போது எங்களது தேவை வேறு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.