Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்! - முத்துகுமார் வீடியோ மற்றும் படங்களுடன்!!

Featured Replies

ஈழத்ற்காகத் தீக்குளித்து தியாகியானான் ஒரு தமிழன் !

ஈழத்திற்காக தமிழக ஓட்டுக்கட்சிகள் குறிப்பாக தி.மு.கவின் நாடக உணர்ச்சியைத் திருப்தி படுத்துவதற்காக பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று ஈழத்தமிழர்களைக் கொல்லும் ராஜபக்க்ஷேவுக்கு ஆதரவை அளித்து விட்டு உடன் திரும்பி விட்டார். காங்கிரசுக் கூட்டணி அரசின் தமிழகப் பங்காளிகள் ஏதோ பெரிய கோரிக்கையைச் சாதித்து விட்டதாக பீற்றி வருகின்றனர். இந்த பசப்பலுக்கு மத்தியில்தான் முல்லைத் தீவில் நூற்றுக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

தமிழக ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளின் இந்த வேடதாரி அரசியலுக்கு மத்தியில் தமிழக மக்களின் தன்னெழுச்சியான

போராட்டங்கள் தமிழகமெங்கும் காட்டுத்தீயைப் போல பரவி வருகின்றன. மக்களின் இந்தப் போராட்டம் உணர்ச்சிப்பூர்வமானது. கொல்லப்படும் ஈழத்தமிழனைக் காப்பாற்றுவதற்காக எதாவது செய்யவேண்டும் என்ற ஆதங்கத்திலிருந்து இது கம்பீரமாக எழுந்து வந்திருக்கிறது. முக்கியமாக எல்லாப் போராட்டங்களும் தற்போது இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்து முதுகில் குத்தும் இந்திய அரசின் துரோகத்தை தோலுரிக்கும் வண்ணம் நடந்து வருகிறது. இதற்கு முன் நடந்த போராட்டங்கள் வெறும் மனிதாபிமான கோரிக்கைக்காக நடந்திருக்கும் வேளையில் தற்போது இந்திய அரசின் துரோகத்தனத்தை எதிர்த்து முறியடிப்போம் என்று ஒரு சரியான அரசியல் முழக்கத்துடன் நடந்து வருவது முக்கியமானது.

இன்று காலை அகில இந்திய பெண்கள் முன்னணி எனும் பெண்கள் அமைப்பு இந்தியாவின் துரோகத்தை எதிர்த்து சென்னையில் இருக்கும் தலைமைச் செயலகத்தை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர்.பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றதற்காக கையொலி எழுப்பிய தமிழக சட்டசபை வீடணர்களில் காதுகளுக்கு கேட்குமாறு இந்தப் போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான

பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் துவங்கியிருக்கின்றனர்.

செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களின் சாகும் வரை உண்ணாவிரதம் ஏழு நாட்களுக்குப் பிறகு முடிந்தாலும் தமிழகம் முழுவதும் அநேகமாக எல்லாக் கல்லூரி மாணவர்களும் வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எமது மாணவர் அமைப்பான பு.மா.இ.மு எல்லாக் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கான அறைக்கூட்டங்களை நடத்தி இந்தப் போராட்டங்களை தொடருவதற்கு முயற்சி செய்கிறது. குறிப்பாக சென்னை, கடலூர், விருத்தாசலம், தஞ்சாவூர் முதலிய இடங்களில் பு.மா.இ.மு சார்பில் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. தஞ்சையில் மட்டும் எல்லாக்க கல்லூரிகளையும் சேர்த்து 3000 மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.மேலும் பல அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புக்களும் தமது தலைமை வழிகாட்டுதல் இல்லாமல் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். அரசியல் கட்சிகளின் பின்புலம் இல்லாத மாணவர்களும் அதிக அளவில் போராடி வருகின்றனர். இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோபிசெட்டிபாளையத்தில் வணிகர்கள் ஈழத்திற்காக இன்று கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர்.

இந்தப் போராட்டங்களின் உச்சமாக ஒரு தமிழன் தீக்குளித்து உயிரிழந்த போராட்டம் இன்று நடந்திருக்கிறது. தூத்துக்குடியைச்

சேர்ந்த 26 வயது முத்துக்குமார் ஒரு மாதப்பத்திரிக்கையின் தட்டச்சு வேலை செய்பவர். இன்று காலை மத்திய அரசு நிறுவனங்கள் பலவற்றின் தென்மண்டலத் தலைமையகங்கள் இருக்கும் சாஸ்திரி பவனுக்கு வந்த முத்துக்குமார் கையில் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். அவர் கையிலிருந்த ஈழத்தமிழரின் போராட்டத்திற்கன பிரசுரங்கள் காற்றில் பறந்தன. இதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர்.ஆயினும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துக்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புக்கான போரில் சுடுவதற்கென்றே இந்திய பீரங்கிகள் தமிழகம் வழியே அனுப்பப்பட்ட மண்ணில் எந்த ஆயுதமின்றி தனது உயிரை அழித்து ஒரு மாபெரும் ஆயுதத்தை தமிழக மக்களுக்கு வழங்கியிருக்கிறான் ஒரு வீரன். தமிழக அட்டைக்கத்தி அரசியல் தலைவர்கள் வெறுமனே அறிக்கைகள் விட்டு ஈழத்திற்காக நாடகமாடிக் கொண்டிருக்கும் சூழலில் தனது உயிரை அழித்து தமிழக மக்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பியிருக்கிறான் ஒரு போராளி. இறுதி வேண்டுகோள், இறுதி எச்சரிக்கை, பதவியைத் துறப்போம் என தமிழக ஆளும்கட்சி நடித்துக் கொண்டிருக்கும் காலத்தில் தனது உடலை தீக்கிரைக்காக்கி இந்தியாவின் துரோகத்தை எதிர்த்திருக்கிறான் ஒரு தமிழன். ஈழத்தில் புலிகளுக்கெதிரான போரில் ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்படுவதை பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமென அகமகிழும் பார்ப்பனப் பத்திரிகையுலகின் கொழப்பைத் தனது இன்னுயிரைத் தந்து அம்பலமாக்கியிருக்கிறான் ஒரு பத்திரிகையின் தொழிலாளி.

முத்துக்குமார் எனும் போராளியின் உடலைக் கருக்கிய தீயின் நாக்குகள் சுரணையற்றிருக்கும் மனங்களை சுட்டுப்பொசுக்கி திருத்தட்டும். முத்துக்குமார் எனும் வீரனின் உயிரைத் துறக்கத் துணிந்த தியாகம் கொழும்பில் இந்திய- இலங்கை கிரிக்கெட் ஆட்டத்தை ரசிக்கும் அற்பங்களின் இழிவை எள்ளி நகையாடட்டும். முத்துக்குமார் எனும் இளைஞனின் தியாகம் ஈழத்தில் கொத்துக் கொத்தாய் செத்து விழும் ஈழத்தமிழனின் பிணங்களைக் கண்டு உவகை கொள்ளும் சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா, இந்து ராம், தமிழக காங்கிரசு நரிகள் முதலான ஒநாய்களின் வெறியை தமிழக மக்கள் அறுப்பதற்கு உதவட்டும். முத்துக்குமார் எனும் அந்தத் தொழிலாளியின் மரணம் புலம்பெயர்ந்த நாடுகளில் வில்லு படத்தை ரசித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனின் மரத்துப் போன சுரணையை மீட்டுக் கொண்டு வரட்டும். முத்துக்குமாரின் தீக்குளிப்பு பதிவுலகில் அக்கப்போரையும், அரட்டையையும், வாடிக்கையாகக் கொண்டிருக்கும் சில பதிவர்களுக்கு சமூக அக்கறை என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொடுக்கட்டும். முத்துக்குமார் எனும் அந்த வார்த்தை இதுவரை ஈழத்திற்காக இது வரை ஒரு துரும்பையும் எடுத்துப் போடாதவர்களின் மனச்சாட்சியை கிளறி எழுப்பட்டும்.

ஆம் மரத்துப்போயிருக்கும் தமிழுலகில் ஒரு இளைஞன் ஈழத்திற்காக தன்னுயிரைப் பலிதானம் செய்திருக்கிறான். அவனுக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ?

தியாகி முத்துக் குமாரின் கடைசி நிமிட காணொளி மற்றும் படங்களை காண: ; http://vinavu.wordpress.com/2009/01/29/eelam13

இதன் மறுமொழிகள்: http://vinavu.wordpress.com/2009/01/29/eelam13/#respond

Edited by வினவு

தொப்புள் கொடி உறவு என்பதன் அர்த்தம் இதுதானா ?

உணர்வற்ற தமிழகமே, என்று ஒருமுறை தெரியாமல் திட்டிவிட்டேன்.

ஐயனே, என்னை மன்னித்துவிடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று காலை 2:29 மணிக்கு என் தமிழக நண்பர்/உறவு ஒருவர் அழைத்தார் எனக்கோ நல்ல நித்திரை மயக்கம்; இந்தச்செய்தியைச்சொல்லிவிட்

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சம் கனக்கிறது. ஆனால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முத்துக் குமாரின் கருகின உடல் தமிழக அரசியல் வாதிகளின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பும் அளவுக்கு அவர்களின் தூக்கம் அப்பாவித் தூக்கம் என நான் நம்பவில்லை. அது பதவி போதையினால் வந்த பாவனைத் தூக்கம். கல்லறையில் தான் அது முடியும். தமிழக உறவுகள் தங்கள் சந்ததியையும் காத்துக் கொண்டு எமக்காக குரல் கொடுக்க வேணுமெண்டு கேட்டுக் கொள்கிறேன். தமிழன் எங்கு செத்தாலும் களிப்படைய சிங்களவர்களும், வட இந்தியர்களும் அயல் மாநிலத்தாரும் இருக்க நாம் ஏன் அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சியக் கொடுக்க வேணும்? வீதியில் லட்சக் கணக்கில் இறங்கி போக்கு வரத்து, நிர்வாக நடவடிக்கை என்பவற்றைத் தடை செய்யுங்கள். எல்லோரையும் சிறையில் தள்ள முடியாது. நிர்வாகம் சீர்குலைந்தால், எங்கே ஆளுனர் ஆட்சி வந்து தனது வாரிசுகளுக்குச் சொத்துச் சேர்க்க முடியாது போய் விடுமோ என்று பயந்து ஏதாவது அதிசயம் நடத்த முயலக் கூடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜஸ்டின் அவர்களே,

நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை, அதனை அங்குள்ள உறவுகளுக்கு எடுத்தியம்ப வேண்டும் அப்பாவி உயிர்களை நாம் தாரைவார்க்கத்தயாரில்லை. என்பதனைத்தெளிவுறச்சொல்ல வேண்டும்.

தன்னை எரியூட்டிக்கொண்டாலும் தமிழின விடுதலைக்கு தூபம் போட்டுவிட்டுப்போயிருக்கின்

  • கருத்துக்கள உறவுகள்

"தாயின் மடியில் தமிழ்ப் பாலுண்ட

கோடி நெருப்பொன்றாய் தகிக்கக் கண்டோம்.

வீசும் தமிழ் காற்றும், உணர்வின் அலையும்

தீய்ந்து கருகும் எங்கள் வாழ்வை ஆற்றும்.

உக்கித் தனிமரமாய் துயர் சுமந்த எங்களுக்கு

உயிர்ப்பின் கொடி பிடித்து அரவணைக்கும் உறவுகளே!

தெக்கும் உணர்விடையே உயிர்ப்பூ கசிகிறது."

தீய்ந்து கருகும் எங்கள் வாழ்வெண்ணி நின்னைத் தீய்த்தனையோ தம்பி முத்துக்குமாரா?

எங்கள் மாவீரர் ஆலயத்துள் குடிபுகுந்த உடன்பிறப்பே! விழி கசிய உணர்வுக்கி நிற்கிறோம்.

  • தொடங்கியவர்

வினவு தளத்தில் தியாகி முத்துக்குமாரின் கடைசி நிமிடங்கள்: யூடியூப் காணொளி இணைக்கப்பட்டுள்ளது

Edited by வினவு

அன்று ஒரு சகோதரன் "அப்துள் ரகுமான்" ..... இன்று "முத்துக்குமார்" .......... எம்மைப் போன்று நீங்களுமா கோழைகள்?

  • தொடங்கியவர்

உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமரன், தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக, பெட்ரோல் கேனில் பெரிய அளிவில் ஓட்டை போட்டு, மண்ணென்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.

இப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் ஏன் தீக்குளித்தாய் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு, என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திதான் நான் தீக்குளித்தேன் என முத்துக்குமரன் தெரிவித்தார்.

மேலும் பேசிய முத்துக்குமரன், எங்கள் ஊரில் போருக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் அதிகம். உலக அமைதிக்காக போராடுபவர்கள் அதிகப் பேர் இருக்கிறார்கள். ‘கொள்கை நல்லூர்’ என்றே எங்கள் ஊரை சொல்லுவார்கள் என்றார். அந்த ஊரில் பிறந்த நான் ஈழத்தமிழர்களுக்காக உயிர் விடுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றார்.

இன்று காலை முத்துக்குமரன் தூத்துக்குடியில் இருக்கும், தனது தந்தை குமரேசனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது குடும்பத்தாரின் நலம் பற்றி விசாரித்த முத்துக்குமரன், தீக்குளிக்கும் சம்பவம் பற்றி தனது தந்தையிடம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.

26 வயதான முத்துக்குமரன், இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் எங்கு கூட்டம் நடந்தாலும், தவறாமல் கலந்து கொள்வார். பத்திரிக்கையில் தட்டச்சு பணியில் இருந்தாலும், தமிழ் உணர்வுள்ளவர் என்றும், ஈழத்தமிழர்களைப் பற்றி அன்றாடம் வேதனையுடன் பேசி வந்தவர் என்றும் முத்துக்குமரனுடைய நண்பர்கள் தெரிவித்தனர்.

செய்தி: நக்கீரன்

http://vinavu.wordpress.com/2009/01/29/eelam13/

Edited by வினவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னதான் சொல்லுங்கள்? எப்படித்தான் சொல்லுங்கள் சமாதானம் ஆகவில்லை எங்கள் மனது. எமக்கான குரல்கள் எல்லாம் இப்படி ஒடுங்கிக்கொண்டால் என்னாகும் என்கின்ற ஒரு பதைபதைப்புத்தான் ஏற்படுகின்றது.

எமக்கான எதிரிகளை துரோகிகளைத் தீயிட்டுக்கொளுத்த வேண்டுமே தவிர ; தன்மானத்தமிழினம் தன்னையே தீக்குத்தாரை வார்க்கக்கூடாது.

காலையில் இந்தச்செய்தி கேட்டதில் இருந்தே மனம் மிகக் கலங்கிப்போய் இருக்கின்றது. நாம் பற்றிக்கொள்ள இருக்கும் கைகள் எல்லாம் இப்படி பாதியிலே விட்டுப்போனால்?!

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வீரனுக்குத் தலை வணங்கும் அதே நேர, தற்கொலை செய்வதால் எமக்கு எதுவுமே ஆகிவிடப்போவதில்லை. சிங்களப் பேரினவாதம் முதல், இந்திய மத்திய அரசு, தமிழ்நாட்டுக் காங்கிரஸ், ஜெயா, சோ, சாமி, ராம், மாலினி , கேரளத்தார் எல்லோரும் விரும்புவதே தமிழர் எந்த வழியிலும் அழிய வேண்டும் என்பதுதான்.அது போர் என்ற பெயரில் கொல்லப்பட்டாலும் ஒன்றுதான், தீக்குளித்தாலும் ஒன்றுதான். விளைவு தமிழர் சிறிது சிறிதாக அழிவதுதான்.

இங்கு பலர் குறிப்பிட்டது போல எமக்கு இன்று தேவை ஆதரவளிக்கும் கரங்களும் குரல்களும் தான். அவை தாமாகவே தம்மை அழித்துகொள்வது வேதனை. ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்று தீக்குளிப்பதைக் காட்டிலும் உயிருடனிருந்து எமக்காகக் குரல் கொடுக்கும் உள்ளங்களுக்கு ஆதரவாக இருப்பதே நல்லது.

நாற்காலி ஆசைக்கு ஆட்பட்ட எவருமே இதனால் மாறிவிடப்போவதில்லை. அதேபோல அவர்களை நம்பியும் போராட்டம் இல்லை. முழுத் தமிழ்நாட்டுத் தமிழர்களும் தீக்குளித்தாலும் கூட அந்த நாற்காலிக் கனவுகள் கலையாது. ஆட்களே இல்லாத தமிழ்நாட்டில் அந்தக் கனவு மீண்டும் காங்கிரஸுடன் சேர்ந்து ஆட்சி செய்யும். பிணங்களாவது இருக்குமல்லவா?!

ஆகவே தோழர்களே, நாங்கள் அழிவது போதும். நீங்களாவது உயிருடன் இருங்கள் ! உங்களின் நம்பிக்கைதரும் வார்த்தைகளும், செயல்களும்தான் எம்மை இன்றுவரை தள்ளிக்கொண்டு வந்திருக்கின்றன. ஆகவே தயவுசெய்து உங்களை நீங்களே அழித்துக்கொள்ள வேண்டாம் !

மரணித்த வீரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் !

  • தொடங்கியவர்

தியாகி. முத்துக்குமார் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்கவில்லை, அவர் எழுதிய கடைசி கடிதத்தை படிக்கும் பொழுது அதை புரிந்து கொள்ள முடியும். வெற்று உணர்ச்சி மயக்கத்தில் மக்களை ஆழ்த்தும் சுயநல அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தவும், மயக்கத்திலிருக்கும் மக்களை தட்டி எழுப்பவும் திட்டமிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இது மாபெரும் வீரம்!

ஈழத்ற்காகத் தீக்குளித்து தியாகியானான் ஒரு தமிழன் !

ஈழத்திற்காக தமிழக ஓட்டுக்கட்சிகள் குறிப்பாக தி.மு.கவின் நாடக உணர்ச்சியைத் திருப்தி படுத்துவதற்காக பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று ஈழத்தமிழர்களைக் கொல்லும் ராஜபக்க்ஷேவுக்கு ஆதரவை அளித்து விட்டு உடன் திரும்பி விட்டார். காங்கிரசுக் கூட்டணி அரசின் தமிழகப் பங்காளிகள் ஏதோ பெரிய கோரிக்கையைச் சாதித்து விட்டதாக பீற்றி வருகின்றனர். இந்த பசப்பலுக்கு மத்தியில்தான் முல்லைத் தீவில் நூற்றுக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

தமிழக ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளின் இந்த வேடதாரி அரசியலுக்கு மத்தியில் தமிழக மக்களின் தன்னெழுச்சியான

போராட்டங்கள் தமிழகமெங்கும் காட்டுத்தீயைப் போல பரவி வருகின்றன. மக்களின் இந்தப் போராட்டம் உணர்ச்சிப்பூர்வமானது. கொல்லப்படும் ஈழத்தமிழனைக் காப்பாற்றுவதற்காக எதாவது செய்யவேண்டும் என்ற ஆதங்கத்திலிருந்து இது கம்பீரமாக எழுந்து வந்திருக்கிறது. முக்கியமாக எல்லாப் போராட்டங்களும் தற்போது இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்து முதுகில் குத்தும் இந்திய அரசின் துரோகத்தை தோலுரிக்கும் வண்ணம் நடந்து வருகிறது. இதற்கு முன் நடந்த போராட்டங்கள் வெறும் மனிதாபிமான கோரிக்கைக்காக நடந்திருக்கும் வேளையில் தற்போது இந்திய அரசின் துரோகத்தனத்தை எதிர்த்து முறியடிப்போம் என்று ஒரு சரியான அரசியல் முழக்கத்துடன் நடந்து வருவது முக்கியமானது.

இன்று காலை அகில இந்திய பெண்கள் முன்னணி எனும் பெண்கள் அமைப்பு இந்தியாவின் துரோகத்தை எதிர்த்து சென்னையில் இருக்கும் தலைமைச் செயலகத்தை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர்.பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றதற்காக கையொலி எழுப்பிய தமிழக சட்டசபை வீடணர்களில் காதுகளுக்கு கேட்குமாறு இந்தப் போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான

பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் துவங்கியிருக்கின்றனர்.

செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களின் சாகும் வரை உண்ணாவிரதம் ஏழு நாட்களுக்குப் பிறகு முடிந்தாலும் தமிழகம் முழுவதும் அநேகமாக எல்லாக் கல்லூரி மாணவர்களும் வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எமது மாணவர் அமைப்பான பு.மா.இ.மு எல்லாக் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கான அறைக்கூட்டங்களை நடத்தி இந்தப் போராட்டங்களை தொடருவதற்கு முயற்சி செய்கிறது. குறிப்பாக சென்னை, கடலூர், விருத்தாசலம், தஞ்சாவூர் முதலிய இடங்களில் பு.மா.இ.மு சார்பில் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. தஞ்சையில் மட்டும் எல்லாக்க கல்லூரிகளையும் சேர்த்து 3000 மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.மேலும் பல அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புக்களும் தமது தலைமை வழிகாட்டுதல் இல்லாமல் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். அரசியல் கட்சிகளின் பின்புலம் இல்லாத மாணவர்களும் அதிக அளவில் போராடி வருகின்றனர். இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோபிசெட்டிபாளையத்தில் வணிகர்கள் ஈழத்திற்காக இன்று கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர்.

இந்தப் போராட்டங்களின் உச்சமாக ஒரு தமிழன் தீக்குளித்து உயிரிழந்த போராட்டம் இன்று நடந்திருக்கிறது. தூத்துக்குடியைச்

சேர்ந்த 26 வயது முத்துக்குமார் ஒரு மாதப்பத்திரிக்கையின் தட்டச்சு வேலை செய்பவர். இன்று காலை மத்திய அரசு நிறுவனங்கள் பலவற்றின் தென்மண்டலத் தலைமையகங்கள் இருக்கும் சாஸ்திரி பவனுக்கு வந்த முத்துக்குமார் கையில் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். அவர் கையிலிருந்த ஈழத்தமிழரின் போராட்டத்திற்கன பிரசுரங்கள் காற்றில் பறந்தன. இதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர்.ஆயினும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துக்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புக்கான போரில் சுடுவதற்கென்றே இந்திய பீரங்கிகள் தமிழகம் வழியே அனுப்பப்பட்ட மண்ணில் எந்த ஆயுதமின்றி தனது உயிரை அழித்து ஒரு மாபெரும் ஆயுதத்தை தமிழக மக்களுக்கு வழங்கியிருக்கிறான் ஒரு வீரன். தமிழக அட்டைக்கத்தி அரசியல் தலைவர்கள் வெறுமனே அறிக்கைகள் விட்டு ஈழத்திற்காக நாடகமாடிக் கொண்டிருக்கும் சூழலில் தனது உயிரை அழித்து தமிழக மக்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பியிருக்கிறான் ஒரு போராளி. இறுதி வேண்டுகோள், இறுதி எச்சரிக்கை, பதவியைத் துறப்போம் என தமிழக ஆளும்கட்சி நடித்துக் கொண்டிருக்கும் காலத்தில் தனது உடலை தீக்கிரைக்காக்கி இந்தியாவின் துரோகத்தை எதிர்த்திருக்கிறான் ஒரு தமிழன். ஈழத்தில் புலிகளுக்கெதிரான போரில் ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்படுவதை பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமென அகமகிழும் பார்ப்பனப் பத்திரிகையுலகின் கொழப்பைத் தனது இன்னுயிரைத் தந்து அம்பலமாக்கியிருக்கிறான் ஒரு பத்திரிகையின் தொழிலாளி.

முத்துக்குமார் எனும் போராளியின் உடலைக் கருக்கிய தீயின் நாக்குகள் சுரணையற்றிருக்கும் மனங்களை சுட்டுப்பொசுக்கி திருத்தட்டும். முத்துக்குமார் எனும் வீரனின் உயிரைத் துறக்கத் துணிந்த தியாகம் கொழும்பில் இந்திய- இலங்கை கிரிக்கெட் ஆட்டத்தை ரசிக்கும் அற்பங்களின் இழிவை எள்ளி நகையாடட்டும். முத்துக்குமார் எனும் இளைஞனின் தியாகம் ஈழத்தில் கொத்துக் கொத்தாய் செத்து விழும் ஈழத்தமிழனின் பிணங்களைக் கண்டு உவகை கொள்ளும் சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா, இந்து ராம், தமிழக காங்கிரசு நரிகள் முதலான ஒநாய்களின் வெறியை தமிழக மக்கள் அறுப்பதற்கு உதவட்டும். முத்துக்குமார் எனும் அந்தத் தொழிலாளியின் மரணம் புலம்பெயர்ந்த நாடுகளில் வில்லு படத்தை ரசித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனின் மரத்துப் போன சுரணையை மீட்டுக் கொண்டு வரட்டும். முத்துக்குமாரின் தீக்குளிப்பு பதிவுலகில் அக்கப்போரையும், அரட்டையையும், வாடிக்கையாகக் கொண்டிருக்கும் சில பதிவர்களுக்கு சமூக அக்கறை என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொடுக்கட்டும். முத்துக்குமார் எனும் அந்த வார்த்தை இதுவரை ஈழத்திற்காக இது வரை ஒரு துரும்பையும் எடுத்துப் போடாதவர்களின் மனச்சாட்சியை கிளறி எழுப்பட்டும்.

ஆம் மரத்துப்போயிருக்கும் தமிழுலகில் ஒரு இளைஞன் ஈழத்திற்காக தன்னுயிரைப் பலிதானம் செய்திருக்கிறான். அவனுக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ?

தியாகி முத்துக் குமாரின் கடைசி நிமிட காணொளி மற்றும் படங்களை காண: ; http://vinavu.wordpress.com/2009/01/29/eelam13

இதன் மறுமொழிகள்: http://vinavu.wordpress.com/2009/01/29/eelam13/#respond

இவை எல்லாவற்றிற்கும் பதில் அல்லது முடிவு என்ன ??? வெறுமையா அல்லது நிரந்த விடிவு என்று கண்துடைப்புடுன் அழிவா ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.