Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3,000 இந்திய இராணுவத்தினர் முல்லைத் தீவை நோக்கி இன்று பயணம்-அதிர வைக்கக் கூடிய தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனது மானிலத்தில் ஒட்டுமொத்த மக்களின் ஏகோபித்த உணர்வை கால்மிதிப்பது என்பது மானில அமைப்பு ஆட்சிமுறையை தன் குருட்டுதன அதிகாரத்தால் கேவலப்படுதுகின்றது என்பதே பொருள். இப்படிப்பட்ட அகம்பாவ நடத்தையால் ஒவ்வொரு இந்தியனயும் மன உளைச்சல் அடையவைக்கின்ற செயல், தன் சொந்தமக்களால் வெறுக்கப்படும் அரசு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

  • Replies 56
  • Views 5.7k
  • Created
  • Last Reply

தனது மானிலத்தில் ஒட்டுமொத்த மக்களின் ஏகோபித்த உணர்வை கால்மிதிப்பது என்பது மானில அமைப்பு ஆட்சிமுறையை தன் குருட்டுதன அதிகாரத்தால் கேவலப்படுதுகின்றது என்பதே பொருள். இப்படிப்பட்ட அகம்பாவ நடத்தையால் ஒவ்வொரு இந்தியனயும் மன உளைச்சல் அடையவைக்கின்ற செயல், தன் சொந்தமக்களால் வெறுக்கப்படும் அரசு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

எந்த சரித்திரத்தை படித்தீர்கள்.......?

இயக்கம் சந்தித்த மாபெரும் சாவால்களோடு ஒப்பிடுகிறபொழுது, இது வெறும் துாசி என்றுதான் நான் சொல்லுவேன்..

10000 மாபெரும் சவால்களில் இது 10001.. !!

சரியாச்சொன்னிங்கள், இயக்கம் இதைவிட மோசமானதுகளை எல்லாம் பாத்திட்டுது, இன்று நாங்கள் செய்யவேண்டியதெல்லாம் அவர்களின் கையைப்பலப்படுத்துவதும், மக்களின் அவலத்தை தடுப்பதற்க்கு சர்வதேசத்தை தூண்டுவது, சிங்களவங்கள் தமிழர்களுக்கு ஒருநாளும் ஒரு தீர்வுதரமாட்டன் என்பதை புரியவைப்பதுமே.

நாளை ஒரு நல்ல வேளைவரும் அப்போது இதுகளின் பல எமக்குத்தெரியும்.....

ஆனாலும் எந்த நிலையிலும் மக்களின் இழப்பை எற்க்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத்தானே எல்லாம் புரியுது.திருவானந்த புரத்துக்கு ரயிலில கொண்டுவரப்பட்ட யுத்த தாங்கிகளும் பல்குழல் எறிகணை காவு வண்டிகளும் இந்த 3000 கோயில் மாடுகளுக்ககத்தான் வந்திருக்கு. வாறது சீக்கியனோ கூர்க்காவோ என்று தெரியவில்லை. எதுக்கும் பெண்டு பிள்ளைகளக் கவனமா இருக்கச் சொல்லவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம்....ஆயிரம் படை வந்தாலும் ஆட்கள் தொகையா வெல்லும்?

அறிவும் வீரமும் வெல்லும்!

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு.. நீங்கள் சிந்திக்கிற விதமும் ஒருவித மனநோய்தான்.. இந்த மனநோயை புலம்பெயர் தமிழர்களுக்கு ஊட்டவேண்டும் என்ற இந்திய மத்தியஅரசின் செயல் வெற்றி என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம்!!!

நம்பிக்கைதான் வாழ்க்கை!! அதை இழந்து சோர்வடைவோமெயானால், உப்பிடியே மூட்டைகட்டி வைத்துவிட்டு பரலோகம் போகவேண்டியதுதான்!!!

இயக்கம் சந்தித்த மாபெரும் சாவால்களோடு ஒப்பிடுகிறபொழுது, இது வெறும் துாசி என்றுதான் நான் சொல்லுவேன்..

10000 மாபெரும் சவால்களில் இது 10001.. !!

நான் எழுதியதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்

இந்தியா வரட்டும் அடிப்பம்

சீனா வரட்டும் அடிப்பம்

ஏன் அமெரிக்காவும் வரட்டும் அடிப்பம் என்று சொல்கின்றவர்களைத்தான் நான் குறிப்பிட்டேன்

அதை விட சிங்களவனை தற்போதும் மோட்டுச்சிங்களவன் என்போர் எம்முடன் பலர் உள்ளனர்

இதிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை

உங்களுக்கு வரலாறு தெரிந்திருந்தால்

ஈழ-இந்திய யுத்தத்தை தலைவர் கடைசிவரை விரும்பாது தவிர்த்து வந்தார்

கடைசியில் அது எம்மீது திணிக்கப்பட்ட போதுதான்

அதை எதர்கொள்ளமுடிவெடுத்தார்...........

....

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவுக்கு 3000 இந்திய வீரர்கள் பயணம்?

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 1, 2009, 14:39 [iST]

சென்னை: இந்திய ராணுவத்தின் 3000 வீரர்கள் சனிக்கிழமை கொழும்புவுக்கு அனுப்பபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் அனைவரும் நேற்று மாலை கொழும்பு சென்றடைந்ததாகவும், மாலையில் வன்னிப் பகுதிக்கு புலிகளுடன் போரிட விரைந்ததாகவும் கொழும்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தியை ராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ராஜபக்சே மூலம் 48 மணிநேர தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதே, இந்திய ராணுவம் முல்லைத் தீவைச் சென்று அடையத்தான் என்றும் கூறப்பட்டுள்ளது.

முல்லைத்தீவின் வீதிகளில் இப்போது இலங்கை ராணுவத்துடன் கூட்டாக இறங்கி போர் நடவடிக்கைகள் நடத்திக் கொண்டிருப்பது இந்திய ராணுவமே என புலிகள் தரப்பிலும் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.

ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் டெல்லி வருவதற்கு முன்பே இலங்கைக்கு இந்தியத் துருப்புகளை அனுப்பப்பட்டு விட்டதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அண்மையில் புலிகளால் தகர்க்கப்பட்ட கல்மடு அணையின் போது ஏற்பட்ட இழப்பில் இந்திய - இலங்கைப் படைகள் மிக மோசமான இறப்புகளை சந்தித்ததாகவும், அதை ஈடுகட்டவே, இன்றைக்கு 3,000 இந்தியப் படைகள் இலங்கை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே ஏராளமான டாங்குகள், ஆயுத தளவாடங்களை இந்தியா அனுப்பியுள்ளதையும் புலிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

புலிகளுக்கெதிரான போராக அறிவித்த இலங்கை அரசு, ஒவ்வொரு நாளும், அங்குள்ள தமிழர்களை கொன்று வருவதும், பொது மக்களுக்கு உண்ண உணவோ, காயமடைந்தவர்களுக்கு மருந்துகளோ இல்லாத நிலையில், 3,000 இந்திய இராணுவத்தினர் அங்கு செல்வது, அங்கு அவதிப்படும் தமிழ் மக்களின் நிலையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

thatstamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.