Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூன்று மாணவர்கள் விஷம் குடித்தனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று மாணவர்கள் விஷம் குடித்தனர்

இலங்கையில் போரை நிறுத்த கோரி அமைதி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்காததால் பெரிய குளத்தில் மூன்று மாணவர்கள் விஷம் குடித்தனர் . அவர்களுக்கு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது . இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது .

http://www.dailythanthi.com/FlashNews/FlashNews.html

தமிழக அரசு பாடசாலைகள் கல்லூரிகளை விடுதிகளைப் பூட்டியும்..போராட்டங்களைத்தட

ுத்தும் தனது காங்கிரஸ் விசுவாசத்தை காட்டிக்கொண்டிருந்தால் தமிழக மண் கொந்தளிக்கும் என்பதற்கு இதுசான்று

என்ன இது?

தமிழனின் வீரம் என்ன மரணமா? மரணம இருந்தாலும் அதுக்கும் வீரம் வேண்டாமா?..... எம்மை மாய்ப்பதால் எதிரியே பலமடைகிறான், அதனால் நாம் எதிரியை மாய்க்கவேண்டும். எம்மை அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:huh::wub:

ஈழப்பிரச்சனை: பெரியகுளத்தில் விஷம் குடித்த 3 மாணவர்கள்

இலங்கையில் போரை நிறுத்தக் கோரியும், அப்பாவித் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உண்ணாவிரம் உள்ளிட்ட பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் போரை நிறுத்தக்கோரி அமைதி ஊர்வலம் நடத்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பெரிய குளத்தில் 3 மாணவர்கள் விஷம் குடித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் 3 மாணவர்களையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் விஷம் அருந்தி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=2921

  • கருத்துக்கள உறவுகள்

மாணர்வர்களே... நீங்கள் விசத்தை குடிக்காதீர்கள், விசத்தை குடிக்க மறுக்கும் தமிழக கறுப்புக்கண்ணாடி, கறை வேட்டி தலைவர்களை குடிக்க வையுங்கள்... :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் போரை நிறுத்தக் கோரியும், அப்பாவித் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உண்ணாவிரம் உள்ளிட்ட பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் போரை நிறுத்தக்கோரி அமைதி ஊர்வலம் நடத்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பெரிய குளத்தில் 3 மாணவர்கள் விஷம் குடித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் 3 மாணவர்களையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் விஷம் அருந்தி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Nakkheeran

தமிழகத்தில் எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன ...... எங்கள் கைகளை கட்டி விட்டு கண் முன்னே எம் சகோதரர்களை கொன்றும் ... சகோதரிகளை சீரழித்தால் மனம் எப்படி வேதனைப்படும் .... எனவே தான் இத்தகைய செயல்கள்.

எனக்கே இந்தியக்குடியுரிமையை மன்மோகன் ,சோனியா முகத்தில் வீசி எறிந்து விட்டு..... எங்காவது சோமாலியாவுக்க்காவது ஓடிவிடலாம் என்று தோன்றுகிறது!

விதியே என் செய்து விட்டாய் என் தமிழ் சாதியை!

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையான விடயம்.

தேர்த்தல் வருகிறது. தமிழின விரோத சக்திகளை தமிழ் நாட்டு மக்களே இனம் காணுங்கள். உங்கள் வாக்கில் வெற்றி பெற்று விட்டு உங்கள் கழுத்திலே கத்தி வைக்க இவர்களை விடலாமா? நேரம் வந்து விட்டது. சரியான தலைமையை தெரியுங்கள் சகோதரர்களே.

மாணவர்கள் விஷம் குடிப்பது கவலைக்குரிய விடயம் ......படித்த மாணவர்களுக்கு தமிழ்நாட்டு அரசிலைப்பற்றி இன்னும் கூட விளங்கவில்லையே இதை வைத்து தங்களின் அரசியல் லாபத்தைதான் தேட முயற்சிப்பார்கள் இருந்தாலும் ஈழ மக்களுக்காக இப்படியெல்லாம் செய்பவர்கள் உண்மையிலேயே தமிழ் பற்றுள்ளவர்கள்தான்..............சும்

மா ஒரு கேள்வி தமிழ்நாட்டில் தழிழருக்கு ஒரு பிரச்சனை எண்ட எங்களில் எத்தனைபேர் இப்பிடியான போராட்டங்களில் ஈடுபடுவம்????????????

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதில் கருத்துக்களுக்கு பதிலாக ஏனய்யா திரும்பத் திரும்ப அதே செய்தியை பதிவு செய்கிறீங்க?

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியெல்லாம் செய்தால் எதுவுமே எடுபடாது போகலாம்

பெரியகுளம்: இலங்கையில் போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், பெரியகுளத்தில் விஷம் குடித்த பள்ளி மாணவர்கள் மூன்று பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தேனி மாவட்டம், பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலர், இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரி நேற்று ஊர்வலம் செல்ல முயன்றனர். இதை தடுத்து நிறுத்திய பள்ளி ஆசிரியர்கள், போலீஸ் அனுமதியில்லாமல் ஊர்வலம் செல்லக்கூடாது என மாணவர்களை கண்டித்தனர்.இதனால் அதிருப்தியடைந்த சில மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறினர்.

இதில், டி.கள்ளிப்பட்டி முத்தையாகோவில் தெருவைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர் அன்பு (18), பிளஸ் 1 மாணவர் அழகன் (18), எண்டப்புளி ஆரோக்கியமாதா நகரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஷாம் ஆகியோர், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கடிதம் எழுதி வைத்து விட்டு அரளி விதையை அரைத்து சாப்பிட்டனர். பின் ரோட்டில் நடந்து சென்ற மூன்று பேரும் மயங்கி விழுந்தனர். மாணவர்கள் மூன்று பேரும் மயங்கி விழுந்ததைக் கண்ட பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.மருத்துவமனை மருத்துவ இணை இயக்குனர் (பொறுப்பு) சுப்புராஜ், கண்காணிப்பாளர் பாபுராகவன் மேற்பார்வையில் டாக்டர்கள் குழு வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், மாணவர்கள் ஆபத்தான கட்டத்தை கடந்து விட்டனர்.

உயிரை ஈழ மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம்: மாணவர்கள் எழுதிய கடிதத்தில்:"மத்திய அரசே, ஈழத்தில் போரை நிறுத்து. அமைதியான முறையில், எங்கள் ஈழமக்களுக்காக கொடுமைகளை எதிர்த்து நாங்கள் ஊர்வலம் நடத்தினோம். இருந்தாலும் எங்களுக்கு அனுமதி தரவில்லை. எனவே, ஊர்வலத்திற்கு தான் தடை போடமுடியும். எங்கள் உயிருக்கு தடைபோட முடியாது. இப்படிக்கு, ஈழ மக்களுக்காக உயிரைக் கூட மதிக்காத மாணவர்கள். எங்கள் உயிரை ஈழ மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.- இப்படிக்கு ஈழத்தில் அமைதிக்காக போராடும் மாணவர்கள்' என எழுதி வைத்திருந்தனர்.

எஸ்.பி., சுதாகர் மற்றும் பல கட்சியினர், மாணவர்களுக்கு ஆறுதல் கூறினர். பள்ளி மாணவர்கள் சிலர் மருத்துவமனைக்கு வெளியே உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். போலீசார் சமாதானப்படுத்தி உண்ணாவிரதத்தை கைவிடச் செய்தனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.