Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர் வன்னியில்!

Featured Replies

சரணடைந்த தற்கொலைப் படை புலிகள் தகவல்

வீரகேசரி இணையம் - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூத்த மகனான சார்ள்ஸ் அன்டனி தலைமையில் தற்போது வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகள் சண்டையிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும். பிரபாகரன் வன்னிப் பகுதியில்தான் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்திடம் சரணடைந்ததாகக் கூறப்படும் இரு தற்கொலைப் படை விடுதலைப் புலிகள் இவ்வாறு தெரிவித்தாக 'சண்டே ஒப்சர்வர்' இதழ் கூறுகிறது.

இவர்கள் இருவரும் இரணமடுக்குள அணைக்கட்டைத் தகர்க்க முயன்றபோது(ஜனவரி 28ஆம் திகதி) திருமுறிகண்டி என்ற இடத்தில் இராணுவத்திடம் பிடிபட்டு சரணடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

இருவரும் 'சண்டே ஒப்சர்வரு'க்கு அளித்துள்ள பேட்டியில்இ விடுதலைப் புலிகள் தற்போது சார்ள்ஸ் அன்டனி தலைமையில் போரிட்டு வருவதாகவும் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களான பானு, லட்சுமணன் ஆகியோருடன் இணைந்து சார்ள்ஸ் செயல்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளதாகச் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது.

2006ஆம் ஆண்டு அயர்லாந்திலிருந்து இலங்கை திரும்பினார் சார்ள்ஸ் அன்டனி. விமானத்துறை பொறியியல் படித்துள்ள இவர்இ புலிகள் அமைப்பின் விமானப் பிரிவுக்கும், கணினி பிரிவுக்கும் தலைவராக உள்ளார். சார்ள்ஸ் அன்டனிதான் புலிகள் அமைப்பின் விமானப்படையை உருவாக்கியவர்??? என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே விமானப்படையைக் கொண்டிருக்கும் ஒரே போராளி இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தைப் புலிகள் தங்களது விமானம் மூலம் தாக்கி உலக நாடுகளை அதிர வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்திடம் சரணடைந்ததாகக் கூறப்படும் இரு தற்கொலைப் படை விடுதலைப் புலிகள் இவ்வாறு தெரிவித்தாக 'சண்டே ஒப்சர்வர்' இதழ் கூறுகிறது.

சிங்களம் எல்லாத்தையும் படம் பிடிச்சு காட்டுறவ..ஏன் சரண் அடைஞ்ச அந்த கரும்புலிகளின் படங்கள் அல்லது விடியோவ காட்ட வில்ல... சும்மா கதை கட்டுறாங்கள் :rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகள் சரண். ஆச்சரியமாக இருக்கே? பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இரண்டு விடயங்களையும் கவனிக்கவும்.

1- தலைவரின் மகன் எங்கே என்று தளத்தில் இருக்கும் முக்கிய தளபதிகளுக்கே தெரிய வாய்ப்பில்லை.

2. விடுதலைப்புலிகள் உயிருடன் சரணடைவது அரிதிலும் அரிது.

அதாவது பாருங்கோ எமது மக்களை தொகை வகையின்றி கொண்டு குவிப்பது மட்டுமன்றி பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபடும் வெறிபிடித்த ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதி நாய்கள் தங்களது செயலை திசை திருப்புவதிற்காக புனையும் கதைகளில் இதுவும் ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்திய சிங்கள அரசாங்கம் இரண்டு கிழமைக்கு முதல் வெளி விட்டவ..அப்பவே நினைச்ச நான் இது ஒரு பொய் செய்தி தான் என்று..இரண்டு கிழமை கழிச்சு வேர மாரி செய்தி எழுதுறாங்கள் .. இவங்கள் சிங்கள சனத்தை முட்டால் ஆக்கலாம் . இவங்க சொல்லுர பொய்ய சிங்கள சனம் நம்பலாம் .. தமிழன் என்டைக்கும் நம்ப மாட்டான்

இப்படியே பொய் செய்திகள் சொல்லி மேலும் சிங்கள வாலிபர்களை தமது இராணுவத்தில் இணைத்தல், வெளினாடுகளின் ஆதரவைப்பெறுதல் தமிழ்மக்களுக்கு உள ரீதியான தாக்கத்தை உண்டாக்கல்.. இது தொடர்கதை..

போர்க்களத்திலோ நிலைமை தலைகீழ்..

300,400 என இராணுவ உடல்கள் வந்து சேர்கின்றன... தனது தோல்வி இயலாமையை பொதுமக்களை தனது இரையாக்கி தனது தீர்த்துக்கொள்கிறது இலங்கையரசு.. இருட்டடிக்கப்பட்ட போர்பிரதேசம்., வாய்மூடப்பட்ட பத்திரிகை.. கொழும்பின் பொய் பத்திரிக்கையாளர் மகா நாடு என தொடரும்..

புலம் பெயர் தமிழ்மக்களின் பங்களிப்பு தான் இதனை உடைத்து அப்பாவி தமிழ்மக்களைக்காப்பாற்றும்..

உலகத்தில் இலங்கையின் கொடுங்கரங்களை அறிந்த , விமர்சித்த, விமர்சிப்பவர்களை ஒன்று இணையுங்கள்..

செய்திகளை உருவாக்குவர்களாக மாறுங்கள் ஒவ்வொருவரும்..

இது எப்படி இருக்கு?

அவர்கள் ஒரு கற்பனையை உருவாக்கி விட்டால் அதுக்கு நாங்கள் உருவம் கொடுத்து அழிவை ஏற்படுத்துவோம்.

முக்கியமாக தலைருக்கு ஏதும் என்றால் எரிக் சொல்கையும் கூட கண்டனம் தெரிவிக்க மாட்டார்( கவலை கூட ) இந்த நிலையில் தலைவர் மக்களுடு மக்களாக இருக்கார் என்பது மக்களுக்கு எவளவு ஆபத்தை கொண்டு வரும் செய்தி?

மக்கள் புலிகளிகலோடு புலிகளாக இருக்கிரார் என்றால் பறவாய் இல்லை ஆனால் மக்கள் புலிகளோடு புலிகளாக இருக்கிறார்கள் என்றால் யாருக்குய்யா ஆபத்து?

மக்கள் புலிகளிகலோடு புலிகளாக இருக்கிரார் என்றால் பறவாய் இல்லை ஆனால் மக்கள் புலிகளோடு புலிகளாக இருக்கிறார்கள் என்றால் யாருக்குய்யா ஆபத்து?

இரண்டுக்கும் என்ன வித்தியாசம் அண்ணா ? ஒருவேளை சின்ன தவறு விட்டுள்ளீங்களா எழுதும் போது ? :rolleyes:

இரண்டுக்கும் என்ன வித்தியாசம் அண்ணா ? ஒருவேளை சின்ன தவறு விட்டுள்ளீங்களா எழுதும் போது ? :rolleyes:

ம்ம் மன்னிக்கவும் .......................

புலிகள் மக்களோடு மக்களாக இருக்கிறார்கள் என்ற செய்தி மக்களுக்கு இன்னும் ஆபத்து

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காப்படைகளினால் கைது செய்யப்படும் அப்பாவித்தமிழர்களை பல்வேறு விதத்தில் சித்திரவதை செய்து புலிகளுடன் தொடர்பு அல்லது புலி உறுப்பினர் என்று கட்டாயப்படுத்தி பொய்யான வாக்குமூலங்கள் சிறிலங்கா அதிகாரிகளினால் பெறப்பட்டு வருகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.