Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'புலிகள்': பிரணாப் பேச்சு-தமிழக எம்.பிக்கள் கொந்தளிப்பு; லோக்சபா ஸ்தம்பிப்பு

Featured Replies

'புலிகள்': பிரணாப் பேச்சு-தமிழக எம்.பிக்கள் கொந்தளிப்பு; லோக்சபா ஸ்தம்பிப்பு!

புதன்கிழமை, பிப்ரவரி 18, 2009, 14:01 [iST]

டெல்லி: இலங்கைப் பிரச்சினைக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம். போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்தாது என்று லோக்சபாவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று அறிவித்தார். இதையடுத்து கோபமடைந்த பாமக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இருமுறை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

லோக்சபாவில் இன்று இலங்கை விவகாரம் தொடர்பாக பிரணாப் முகர்ஜி அறிக்கை ஒன்றை வாசித்தார்.

அவர் கூறுகையில், இலங்கைத் தமிழர்களின் நலன்களை விடுதலைப் புலிகள் சேதப்படுத்தி விட்டனர். இன்றைய நிலைக்கு அவர்கள்தான் காரணம். அவர்கள் உடனடியாக ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு, தாங்கள் பிடித்து வைத்துள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும்.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். இலங்கையில் சண்டை ஓய்ந்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகாரப்பகிர்வு அமல்படுத்தப்படவும், அங்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தியா உதவும்.

இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது சட்டத் திருத்தம் முழு அளவில் அமல்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் அனைத்து சமூகத்தினருக்கும் அதிகாரம் பரவலாக்கப்படும். அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு முழுமையான நிரந்தரமான தீர்வு ஏற்படும்.

வடக்கு மாகாணத்தில் அமைதி திரும்ப அரசியல் சந்தர்ப்பம் இருப்பதாகவே இந்தியா கருதுகிறது. 13வது அரசியல் சட்டத் திருத்தம் இதற்கு முக்கியமானது. வடக்கு மாகாணத்தின் மறு சீரமைப்புக்கும், மறு வாழ்வுக்கும் இந்தியா உதவத் தயாராகவே உள்ளது.

இலங்கையில் அமைதி நிலவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளில் தொடர்ந்து இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்.

இந்தியா மத்தியஸ்தம் செய்யாது

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே இந்தியா மத்தியஸ்தம் செய்யவே செய்யாது. அதற்கான வாய்ப்பே இல்லை என்றார் பிரணாப் முகர்ஜி.

இதைக் கேட்டதும் பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, திமுக உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் எழுந்து பிரணாப் பேச்சு திருப்தி தரவில்லை என்று கூறி அதிருப்தியை வெளியிட்டு, உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.

அவர்களை அமருமாறு கூறிய லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்றால் தனியாக நோட்டீஸ் தருமாறு கூறினார். ஆனால் அதை ஏற்காமல் தொடர்ந்து பாமக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் கோஷமிட்டபடி இருந்ததால் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் சிறிது நேரம் கழித்து சபை மீண்டும் கூடியது. கூட்டத்தை துணைத் தலைவர் நடத்தினார். அப்போது பாமக எம்.பிக்கள், சபாநாயகர் இருக்கை முன்பு திரண்டு கோஷமிட்டனர்.

பத்திரிக்கை செய்திகளை காட்டி இலங்கையில் இனப்படுகொலை நடந்து வருகிறது. அதை உடனடியாக இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.

இதனால் மீண்டும் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

http://thatstamil.oneindia.in/news/2009/02...n-loksabha.html

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அமைதி நிலவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளில் தொடர்ந்து இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்

இலங்கையில் அமைதி வருவதை இந்தியாஒரு போதும் விரும்பாது.இது தான் உன்மை.ஒரு கற்பனைக்கு இலங்கை அரசே விரும்பி அதிக பட்ச்ச அதிகாரத்தை புலிகளுடன் பகிர நினைத்தாலும் இந்தியா தடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் கொட்டத்தை அடக்க ஐ.நா.வில் சீனாவை களத்தில் இறக்குவோம்.

மேலதிக விபரங்களுக்கு அழுத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

'புலிகள்': பிரணாப் பேச்சு-தமிழக எம்.பிக்கள் கொந்தளிப்பு; லோக்சபா ஸ்தம்பிப்பு!

புதன்கிழமை, பிப்ரவரி 18, 2009, 14:01 [iST]

டெல்லி: இலங்கைப் பிரச்சினைக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம். போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்தாது என்று லோக்சபாவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று அறிவித்தார்.

அந்தப் புலிகளுக்கும் மற்ற ஆயுதக் குழுக்களுக்கும் ஆயுதங்களும் பயிற்சிகளும் வழங்கியது முன்னாள் காங்கிரஸ் அரசுதான். அப்படியானால் இலங்கைப் பிரச்சினைக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று விவாதத்தைக் கொண்டுசென்றிருக்க வேண்டாமா? :)

Edited by Danguvaar

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுள்ள பிரச்சினை என்னவென்றால் யாரினது தப்பென்பதல்ல, எல்லோருடைய ஆசையும், ஆர்வமும் விடுதலைப்புலிகள் அழியவேண்டும்.

அதற்கமைய ஸ்ரீலங்கா பயங்கரவாத அமைப்பின் தலைவர், கொலை வெறியன் ராஜபக்ச ஒரு கால அவகாசத்தையும் கையளித்துள்ளார், ஆனால் அந்த கால எல்லை முடிவடைந்துவிட்டது.

ஆனால் இன்று தாயகத்தில் எமது மக்களின் பேரழிவு, இந்த பேரழிவின் தோற்றப்பாடு அதாவது வெளிப்பாடு எப்படி, எதற்காக என்று சற்று அலசிப்பார்த்தோமானால் இது சிங்களவனின் தோல்வியின் வெளிப்பாடு என்று புலனாகின்றது.

விடுதலைப்புலிகளுடன் சத்தம், சந்தடியின்றி அழிவுகளை சந்தித்துக்கொண்டிருக்கும் சிங்களவன் தனது இயலாமையை அப்பாவி மக்கள்மீது காட்டுகின்றான் இதுதான் உண்மை.

சிங்களவனால் பல நிலப்பரப்புகளை மட்டும் பிடிக்க முடியுதே ஒழிய விடுதலைப் புலிகளையோ அல்லது அவர்களின் போர் தளபாடங்களையோ கைப்பற்ற முடியுதில்லை. இதன் வெளிப்பாடே இன்றைய இந்திய அரசாங்கத்தின் ஆதங்கமும் கூட.

எது எப்படியிருப்பினும் இன்றைய கால கட்டத்தில், ஈழத்தமிழர்களின் நண்பர்கள் யார், பகைவர்கள் யார் என்பதை இனங் காணக்கூடியதாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கத்துவதற்கு உனக்கு மூன்று மாதங்கள் உள்ளது..... கத்திவிட்டு சோனியாவையும் நக்கிவிட்டு போ.

ஈழ தமிழர்களுக்கு துரோகமிழைத்தவர்கள் வரிசையில் இந்தியா முதலாவதாகவே இருக்கும் இதை நீ அழுது புரண்டாலும் வரலாற்றில் இருந்து அழிக்க முடியாது. காரணம் வரலாறு உன்னை போன்ற கொடுகாலிகளால் எழுதபடுவதில்லை. அது உண்மைகளால் புரழுவது. தென்னாபிரிக்கா அடக்குமுறை காலத்தில் உன்னைபோல முளைத்த காளான்கள் கணக்கில் அடங்கார்...... ஆப்கானிஸ்தான் மக்கள் பேச்சுரிமை பெற்றால் கதை வேறு. ஈராக்கில் சண்ணி முஸ்லிம் என்றாலும் சியாத் முஸ்லிம் என்றாலும் தெருவில் இற்ங்கி கத்துவது அமெரிக்க நாயே வெளியேறு என்றுதான். அமெரிக்கா காட்டாத படமா மந்தியும் நீயும் சோனியா என்ற சொறிபிடித்த நாயும் கட்டபோகிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.