Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுடரொளி ஆசிரியர் வித்தியாதரன் கடத்தப்படவில்லை, கைது செய்யப்பட்டுள்ளார்.(பிந்திய தகவல்)

Featured Replies

உதயன் மற்றும் சுடரொளி செய்திதாள்களின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் இன்று முற்பகல் 9.45 அளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். பிந்திய தகவலின்படி அவர் கடத்தப்படவில்லை என்றும், விசாரணைக்காகவே குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் புறநகர் கல்கிஸ்ஸையில் வைத்து வெள்ளை வேனில் வந்த சீருடை அணிந்தவர்களால் பலாத்காரமாக வித்தியாதரன் கடத்திச்செல்லப்பட்டதாக நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்

கல்கிஸ்ஸையில் உள்ள மஹிந்த மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது

அருகில் இருந்தோர் தடுத்தபோதும் அவர்களை தடுத்து விட்டு விசாரணைக்கு அழைத்துசெல்லவேண்டும் எனக்கூறியே வித்தியாதரன் கடத்தப்பட்டுள்ளார்.

பிந்திக் கிடைத்த செய்தி

சுடர் ஒளி மற்றும் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன் கடத்தப்படவில்லை விசாரணைகளிற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சுடர் ஒளி பத்திரிகையின் ஆசிரியர் என்.வித்தியாதரன் பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார் என ஊடக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

புலிகளின் விமானம் கொழும்பில் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் வித்தியாதரனிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும், இது தொடர்பில் மேலதிக தகவல் தனக்கு தெரியாது எனவும் கூறினார்.

இன்று காலை கல்கிஸையில் உள்ள மஹிந்த மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த உறவினரொருவரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற போதே வெள்ளை வேனில் வந்த சீருடை அணிந்த நபர்களினால் இவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நன்றி தமிழ்வின் இணையம்

Edited by thamizhanpan

அப்ப வெள்ளைவான் கடத்தல்களை செய்வது பொலீஸார்தான் என்று ஒப்புதல் வாக்குமுலம் கொடுக்கீனம்... :o

வித்யாதரன் விடுவிக்கப்பட்டதாக tamilwin செய்தியில் இல்லையே???

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாதரன் வைத்யசாலையில் என்று சி டி வீ யில் (வானொலியில் )சொன்னார்கள்.

  • தொடங்கியவர்

வித்யாதரன் விடுவிக்கப்பட்டதாக tamilwin செய்தியில் இல்லையே???

நன்றி நக்கீரன் முதலில் தமிழ்வின்னில் அப்படித்தான் இருந்தது அச்செய்தியின் பிரகாரப்படியே இணைத்திருந்தேன்.இப்பொழுது அதை நான் திருத்திவிடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

4ம் இணைப்பு:‐ உதயன் சுடரொலி பத்திரிகைகள் புலிகளுக்கு சார்பானவை ‐ மஹிந்த ராஜபக்ஸ ‐ சுடரொலி உதயன் பத்திரிகை நிறுவனங்களின் தலைவர் சரவணபவன் GTNற்கு வழங்கிய செவ்வி ஒலிவடிவில்:

http://globaltamilnews.net/tamil_news.php?nid=6470&cat=1

உதயன் சுடரொலி பத்திரிககைகள் புலிகளுக்கு சார்பானவை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம்சாட்டியுள்ளார். குறித்த பத்திரிகை நிறுவனத்தின் தலைவர் சரவணபவனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர் அரசாங்கம் வித்தியாதரனைக் கடத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

3ம் இணைப்பு ‐ வித்தி விடுதலை செய்யப்படவில்லை – 4 ஆம் மாடியில் தடுத்துவைப்பு ‐ வான்தாக்குதல் செய்தி குறித்து கேள்விகளால் துளைக்கப்படுகிறார்: வித்தியாதரனின் கடத்தல் பாணியிலான கைதிற்கு RSF கண்டனம் ஆங்கில அறிக்கை இணைப்பு

இன்று வியாழன் காலை நடேசபிள்ளை வித்தியாதரன் (58) கடத்திச் செல்லப்பட்டுள்ளார். மூன்று வெள்ளை வான்களில் வந்த ஆயுததாரிகளும் காவற்துறை சீருடையில் வந்தவர்களும் இவரை கல்கிசையில் வைத்துக் கடத்தியதாக GTNற்கு தெரியவந்துள்ளது.

வித்தியாதரன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் கொழும்பிலிருந்து வெளிவரும் சுடரொளி பத்திரிகைகளின் ஆசிரியராவார்.

இவர் கடத்தப்படுவதற்கு ஆறு தினங்களுக்கு முன்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அழைக்கப்பட்டு கடும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

ஆறு மணித்தியாலங்களாக நடைபெற்ற அவ்விசாரணையில் வன்னியில் பொதுமக்கள் படையினரால் தாக்குதலுக்குள்ளாவது குறித்து அவருடைய பத்திரிகையில் வெளியான செய்திகள் குறித்தும் விடுதலைப்புலிகளுடன் அவருக்குக் கடந்த காலங்களில் இருந்த தொடர்பு குறித்துமே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் துளைத்தெடுக்கப்பட்டிருந்தா

all are uubeliveable news .....

!

Edited by puthijavan

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாதரனுக்கு உண்மையிலே நல்ல காலம் போல.

அப்பிடியோ? கடத்தப்படுறதுக்கும், கைது செய்யப்படுறதுக்கும் இடையில உள்ள வித்தியாசம் என்னவுங்கோ? சிறீ லங்கா நாட்டில ரெண்டுமே ஒண்டுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.