Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிஜேபி ஆட்சிக்கு வந்தால் 100நாளில் இலங்கைத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்:அத்வானி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி பாராளுமன்ற தேர்தலுக்கான பாரதிய ஜனதாவின் பிரச்சாரத்தை இன்று இரவு நாகர்கோயில் நாகராஜ திடலில் ஆரம்பித்தார்.

இரவு 8மணிக்கு பேச்சை ஆரம்பித்தவர் 8.45க்கு பேச்சை முடித்தார்.

அவர் பேசும்போது, ’பிஜேபி ஆட்சி அமைத்தால் தமிழர் வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 100 நாட்களில் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டும்’ என்று தெரிவித்தார்.

ஒருவேளை உண்மையாச் செய்வாரோ? அத்துவானி செஞ்சாலும் செய்வார்... ஆனா முந்தி இருக்கேக்க செய்யேல்லையே ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை உண்மையாச் செய்வாரோ? அத்துவானி செஞ்சாலும் செய்வார்... ஆனா முந்தி இருக்கேக்க செய்யேல்லையே ஏன்?

முன்னையநிலையில் தமிழ்நாடு இன்றில்லையே?

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி பாராளுமன்ற தேர்தலுக்கான பாரதிய ஜனதாவின் பிரச்சாரத்தை இன்று இரவு நாகர்கோயில் நாகராஜ திடலில் ஆரம்பித்தார்.

இரவு 8மணிக்கு பேச்சை ஆரம்பித்தவர் 8.45க்கு பேச்சை முடித்தார்.

அவர் பேசும்போது, ’பிஜேபி ஆட்சி அமைத்தால் தமிழர் வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 100 நாட்களில் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டும்’ என்று தெரிவித்தார்.

அத்வானி ஐயா நீங்கள் பிரச்சினையை தீர்க்காவிட்டாலும் பரவாயில்லை

பிரச்சினை தராமல் இருந்தால் சரி.

கோடி புண்ணியம் கிடைக்கும் ஐயா ராஜிவ் ஐயாவிண்ட வழியில சோனியா அம்மா செய்த தவறை நீங்களும் உந்த கேடு கேட்ட ரோ காரனோட சேர்ந்து உவன் ஈன பிறவி நாராயணனுடைய கதைய கேட்டு செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறோம்

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருங்கள் ஐயா

ஒருவேளை உண்மையாச் செய்வாரோ? அத்துவானி செஞ்சாலும் செய்வார்... ஆனா முந்தி இருக்கேக்க செய்யேல்லையே ஏன்?

நிலவன் தாத்தா

அவர் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தவர்

அதால தான் வெற்றிகரமாக ஒன்று இரண்டு மூன்று என்று அலையடிச்சுது

சோனியா அம்மா செய்யுற மாதிரி அவர் எனகலி கிண்டி கிளங்கெடுக்கிற வேலை

செய்யமாட்டார் என்று நம்புவோமாக

நிலவன் தாத்தா

அவர் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தவர்

அதால தான் வெற்றிகரமாக ஒன்று இரண்டு மூன்று என்று அலையடிச்சுது

சோனியா அம்மா செய்யுற மாதிரி அவர் எனகலி கிண்டி கிளங்கெடுக்கிற வேலை

செய்யமாட்டார் என்று நம்புவோமாக

ஆம்.. யுத்த நிறுத்த காலத்தில் முதலில் அழிக்கப் பட்ட ஆயுத கப்பல் பி.ஜே.பி ஆட்சி காலத்தில் தான் அழிக்கப் பட்டது என்ற உண்மை இந்த நேரத்தில் வந்து ஞாபகத்தில் வந்து தொலைக்குது

இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு தோற்றுவிட்டது--எல்.கே.அத்வானி

இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு தோற்றுவிட்டது என்று நாகர்கோவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் அத்வானி பேசினார்.

பா.ஜனதா கட்சி தனது தேர்தல் பிரசாரத்தை இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நேற்று தொடங்கியது.

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானி, தேர்தல்

பிரசாரத்தை தொடங்கி வைத்தும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ள அக்கட்சியின் மாநில துணைத்தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்தும் பேசினார். அவர் பேசியதாவது:-

1969-ம் ஆண்டும், 1979-ம் ஆண்டும் நாகர்கோவில் தொகுதியில் காமராஜ் நாடார் வெற்றி பெற்றுள்ளார். இந்த பகுதி இவ்வளவு வளர்ச்சி பெறுவதற்கு நாடார் சமுதாயம் எவ்வளவு அரும்பணி ஆற்றியுள்ளது என்பதை நான் நன்கு அறிவேன். அதுபோல் தாணுலிங்க நாடார் இந்து முன்னணியின் தலைவராகவும், சமுதாய தலைவராகவும் இருந்து சமுதாய பாதுகாப்புக்காக செயலாற்றி உள்ளார்.

அதனால்தான் இந்த தொகுதியின் வேட்பாளராக, முதல் வேட்பாளராக நான் பொன்.ராதாகிருஷ்ணனை அறிவித்திருக்கிறேன்.

கல்வி கற்பவர்களுக்கு சாதி, மதம் எதுவும் கிடையாது. ஆனால் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு மதத்தின் அடிப்படையில் மாணவ- மாணவிகளுக்கு சலுகைகளை வழங்கி வருகிறது.

இதுதொடர்பாக நான் பாராளுமன்ற அவையில் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஏழை, எளியவர்கள் என்ற முறையில்தான் சலுகைகள் இருக்க வேண்டும். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்ற முறையில் சலுகைகள் இருக்கக்கூடாது என்று வாதிட்டுள்ளேன்.

இலங்கையில் வாழும் தமிழர்கள், மலேசியாவில் வாழும் தமிழர்களைப் பற்றி கவலைப்படும் தமிழக மக்களை நான் பாராட்டுகிறேன். இலங்கையில் உள்ள தமிழர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரஸ் அரசுதான் காரணம். அவர்களை பாதுகாக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே தமிழகத்தில் உள்ள மக்கள் இலங்கையில் கொல்லப்படும் தங்கள் சகோதரர்களுக்காக படும் வேதனைகளை, கவலைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

கடந்த 5 ஆண்டு காலம் செயல்பட்டு வந்த காங்கிரஸ் அரசையும், அதற்கு முன்பிருந்த பா.ஜனதா அரசையும் ஒப்பிட்டு பாருங்கள். காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன்சிங்கிடம் பிரதமர் பதவி இருக்கிறது. ஆனால் அதிகாரம் கிடையாது. சோனியாவிடம் அதிகாரம் உள்ளது. ஆனால் அவரிடம் பொறுப்பு இல்லை. எனவே இந்த தேர்தலில் தற்போதுள்ள காங்கிரஸ் ஆட்சியையும், அதற்கு முன்பிருந்த பா.ஜனதா ஆட்சியையும் ஒப்பிட்டு பார்த்து வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பாகிஸ்தானில் இருந்து வருகிற பயங்கரவாதமானாலும் சரி, வங்காளதேசத்தில் இருந்து வரும் தீவிரவாதமாக இருந்தாலும் சரி, அவற்றை கட்டுப்படுத்துவதிலும், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படும் பிரச்சினையாக இருந்தாலும் சரி இவை அனைத்திலும் காங்கிரஸ் அரசு நிர்வாகம் தோற்றுப்போய்விட்டது.

எனவே முடிவு எடுக்கும் அதிகாரம் பிரதமர் கையில் இருக்க வேண்டும் என்று நீங்கள் வருகிற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 3 செயல்திட்டங்களை மக்கள் முன் வைக்க உள்ளது. ஒன்று நல்லாட்சி. 2-வது மேம்பாடு. 3-வது பாதுகாப்பு. நல்லாட்சி என்றால் ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மே மாதம் தேர்தல் முடிந்தபிறகு அரசியல் வானில் மிகப்பெரும் புரட்சியும், மாற்றமும் ஏற்பட்டிருக்கும் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அத்வானி பேசினார்.

http://www.tamilskynews.com/

இனவாததுக்கும், மதவாதத்துக்கும், பிராந்திய வாதத்துக்கும், கும்ப அரசியலுக்கும் இடையில் தமிழினம் பந்தாடப்படுகிறது.

ஒற்றுமை என்றொரு கன்றாவி இல்லாமல் மெள்ளச்சாகுது என்னினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோனியாக்கிழவியை விரட்டினால் கானும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்ஜ் பெர்னாண்டஸ் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர். ஆனால் அவர் பாதுகாப்பமைச்சரானதும் வாலைச் சுருட்டிக் கொண்டு இருந்தது மட்டுமல்லாமல் அவரது காலப்பகுதியில் கடலில் வைத்து புலிகளின் ஆயுதக் கப்பல் இந்தியக் கடற்படையினரின் துணையுடன் அழிக்கப்பட்டது.

இந்தியாவை ஆள்வது நாராயணன்களும் மேனன்களுமே தவிர ஆட்சிக்கு வரும் அரசுகளும் அமைச்சர்களும் அல்ல

  • கருத்துக்கள உறவுகள்

பா ஜ க ஆட்சியில் இருந்த போதுதான் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்ட 40 ஆயிரம் இராணுவத்தினரை மனிதாபிமான ரீதியில் மீட்கப்போவதாகச் சொன்னது.என்றாலும் காங்கிரசை விட 100 மடங்கு மேல். முதலில்நாராயணனையும் சிவசங்கர மேனனனையும் வெளியேற்றினால் தான் சரி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

நொந்துபோயிருக்கும் எமது மக்களின் அவலங்களை தங்களின் அரசியல் ஆயுதங்களாக பாவிக்க ஆரம்பித்தாட்டங்க!

இந்தியா நினைத்தால் 1 நாளில் முடிக்க முடியும்..

100+ நாட்களுக்கு பொறுமையாக பாத்துக்கொண்டிருப்பத்ற்கான நிலமையில் வன்னி மக்கள் இல்லை..

இது கூடவா இவருக்கு தெரியல?

ஆனாலும் -1 விட 0 பெரிதுதானே......அதற்காகவாவது அவரை அனுமதிக்கலாம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீர்வு காணப்படுவது என்பது சரி ஆனால் எப்படியான தீர்வு அது தனி நாடா (ஈழம்) அல்லது மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சியா :unsure: ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.