Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்து நாட்டின் இறைமைக்கு விழுந்த அடி என்கிறது அரசாங்கம்

Featured Replies

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்து நாட்டின் இறைமைக்கு விழுந்த அடி என்கிறது அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளையின் கருத்து, நாட்டின் இறைமைக்கு விழுந்த அடியாகும். இதனை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. அவருடைய கருத்தினால் சர்வதேச அமைப்புக்களின் கீர்த்திக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். விடுதலைப் புலிகள் இயக்கமானது, சர்வதேச ரீதியில் பிரசாரங்களை முன்னெடு ப்பதற்காக பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் மற்றும் சர்வதேச முகவர் நிறுவன ங்களுக்குள் ஊடுருவி அவற்றின் மூலமாக அனுதாபத்தினைப் பெற்றுக்கொள் கின்றது. இவ்வாறானதொரு பிரசாரமாகவே நவநீதம்பிள்ளையின் கருத்தும் அமைந்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது: சர்வதேச ரீதியில் வியாபித்துள்ள பயங்கரவாதத்தினை முற்றாக ஒழிக்க உலக நாடுகள் அனைத்தும் தீர்மானித்துள்ளன. இந்த தீர்மானத்தின் பெரும் பங்கினை இலங்கை அரசாங்கம் ஏற்றுள்ளது. நமது நாட்டைப் பொறுத்தவரையில் பயங்கரவாதமென்பது தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றாக அழிக்கும் நடவடிக்கை தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் பலமிழந்தள்ள புலிகள் இயக்கம், சர்வதேச ரீதியில் இயங்கும் பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் மற்றும் சர்வதேச முகவர் நிறுவனங்களைப் பயன்படுத்தி மீண்டும் உயிர்பெற நடவடிக்கை எடுக்கின்றது. அதற்காக புலிகளுக்கு எதிராக படையினரால் நடத்தப்படும் தாக்குதல்கள் வன்னியில் இடம்பெயர்ந்துள்ள அப்பாவிப் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்படுபவை என உலக நாடுகளுக்கு கேட்கும் வகையில் புலிகள் வெளிப்படையாகவு ம் மறைமுகமாகவும் பிரசாரங்களை நடத்தி வருகின்றனர்.

அவ்வியக்கத்தினருடைய பிரசாரங்களை அனைத்துலகமும் அறிந்தகொள்ளும் வகையில் சர்வதேச அமைப்புக்களின் அதிகாரிகளைக் கொண்டே வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையிலேயே ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கருத்தும் அமைந்துள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்த மனிதாபிமானப் போர் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் வடக்கில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வாழ்வதாக கூறிய ஐக்கிய நாடுகள் சபை இன்று ஒரு இலட்சத்துக்கும் குறைவான மக்களே வன்னியில் இடம்பெயர்ந்திருப்பதாக தெரிவிக்கின்றது. இதன் மூலம் அவ்வமைப்பு உண்மையான தகவல்களை ஒருபோதும் வெளியிடவில்லை என்பது தெளிவாகிறது.

இந்நிலையில் வடக்கில் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல்கள் காரணமாக 2018 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 700 பேர் சிறுவர்கள் எனவும் நவநீதம்பிள்ளை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் புலிகளுக்குச் சார்பான தமிழ்நெற் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டவையாகு ம். ஐ.நா.வின் அலுவலகமொன்று கொழும்பில் இருக்கும் பட்சத்தில் மேற்படி இணையத்தளத்தின் வாயிலாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளமை சர்வதேச அமைப்புக்களுக்குள்ளும் விடுதலைப் புலிகள் மிகவும் சூட்சுமமான முறையில் ஊடுருவியுள்ளனர் என்பதை வெளிக்காட்டுகிறது.

இது எவ்வாறாயினும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தெரிந்தோ தெரியாமலோ வெளியிட்டுள்ள கருத்தினை அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு அதனை நிராகரிக்கிறது. அவருடைய கருத்து தொடர்பில் இன்று தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவருடைய கருத்து தொடர்பில் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து விசாரணை நடத்தி வருவதுடன் அதற்கு எதிரான நடவடிக்கையினையும் எடுத்து வருகின்றார்

http://www.virakesari.lk/

அயல்நாகளின் ஆதரவுடன் உள்நாட்டுப்போரென்ற போர்வையில் அப்பாவிகளை கொன்று போர்வெற்றியெண்டு மார்தட்டும் உங்களுக்கு இறையாண்மை ஒரு கேடா?

Edited by Sooravali

மணி ஓசை கேற்கிறது, இனித்தான் யானை வரப் போகுது :D:rolleyes:<_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணி ஓசை கேற்கிறது, இனித்தான் யானை வரப் போகுது :D:rolleyes:<_<

சும்மா வெருட்ட வேண்டாம். அவங்கள் 60 வருசமாக எங்கட எட்ட்ப்பன் உடன் சேர்ந்து நடக்குது. இதுவரை இவை எல்லாம் இருந்தவதானே.

நம் கையே நமக்கு துணை

  • கருத்துக்கள உறவுகள்

அது தொடங்கி 60 வருடமாகிறது

அதுதான் இறைமையில கைவைத்து

கைவைத்தது தமிழரல்ல

நீங்களேதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.