Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான கட்சிக்கு வாக்கு: ரஜினி ரசிகர் மன்றம் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான கட்சிக்கு வாக்கு: ரஜினி ரசிகர் மன்றம் அறிவிப்பு [ திங்கட்கிழமை, 23 மார்ச் 2009, 11:00.49 AM GMT +05:30 ]

வரும் தேர்தலில் இலங்கை தமிழர்களை பாதுகாக்க உறுதிமொழி அளிக்கும் கட்சிக்கு வாக்களிக்க ரஜினி ரசிகர் மன்றம் முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்ட ரசிகர்களுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2004 சட்டசபை தேர்தலில் பா.ம.க.வுக்கு எதிராக ரசிகர்கள் வாக்களித்தனர். சினிமாவில் ரஜினி புகை பிடிப்பதை பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் விமர்சித்ததால் அக்கட்சிக்கு எதிராக வேலை செய்தனர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிடித்த வேட்பாளர்களுக்கு ரசிகர்கள் வாக்கு போட்டனர்.

இலங்கை தமிழர் பிரச்சினையை அடிப்படையாக வைத்து அந்தந்த தொகுதிகளில் பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்கு அளிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ள வாலாஜா, காவேரிப்பாக்கம், ராணிப் பேட்டை பகுதி ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இக்கூட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்கவும் அங்கு அமைதி ஏற்படவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கும் தேசிய கட்சிக்கும் அதோடு கூட்டணி அமைக்கும் மாநில கட்சிக்கும் ஆதரவு அளிப்பது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

அரக்கோணத்தில் வருகிற 5-ந்தேதி ரஜினி ரசிகர் மன்ற பொதுக்கூட்டம் நடக்கிறது. அதிலும் இதே மாதிரியாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட பொருளாளர் என்.ரவி தெரிவித்தார்.

வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் வாக்குகளாக ரஜினி ரசிகர்களின் வாக்குகள் அமையும் என்றும் அவர் கூறினார்.

நன்றி - தமிழ்வின்

இத ரஜனி சொன்னாரா?...வேற எந்த இணையதளத்திலயும் இந்த செய்தி வரவில்லையே?

புலம்பெயந்த தமிழர் இயந்திரனை புறக்கணிக்க போகினம் எண்டு பயந்திட்டினம் போல... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சில வாரங்களுக்கு முன்பாக ரஜனிகாந்த் இரசிகர் மன்றம் பெங்களூரில் ஈழத்தமிழர்களுக்காக கவனயீர்ப்பு நிகழ்வினை நடாத்தியிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் உறவுகளுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஆரம்பித்து வைத்துள்ளார்

பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்: எந்திரனுக்குப் பிறகு முடிவெடுப்பேன்: ரஜினி

சென்னை: ஆண்டவன் நினைத்தால் நாளையே அரசியல் கட்சி தொடங்கி விடுவேன். இது சரியான நேரமல்ல. எந்திரன் திரைப்படத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்துவருகிறேன். அது முடியட்டும். என் எதிர்காலத் திட்டம் குறித்து தெரிவிக்கிறேன் என்று தன் ரசிகர்களிடம் கூறினார் ரஜினி. .

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று ரஜினி-ரசிகர்கள் சந்திப்பு நடந்த்து. ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 1,500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமர்ந்திருந்தனர்.

காலை 10 மணிக்கு ரஜினிகாந்த் மேடைக்கு வந்தார். மேடையில் ‘கடமையைச் செய்; பலனை எதிர்பார்’ என்று எழுதப்பட்டிருந்தது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அது முடிந்தவுடன் மேடையில் வைக்கப்பட்டிருந்த பாபாஜி உருவப் படத்தை ரஜினிகாந்த் வணங்கினார்.

தொடர்ந்து ரசிகர்களை நோக்கி, ”உங்களுடைய கேள்விகளை பேப்பரில் எழுதி, மன்ற நிர்வாகி சுதாகரிடம் கொடுங்கள். அவர் மேடையில் உங்களுடைய கேள்விகளை மைக்கில் வாசிப்பார். அதற்கு நான் பதில் கூறுகிறேன்” என்றார்.

இதைத் தொடர்ந்து ரசிகர்கள் தங்களுடைய கேள்விகளை எழுதி மேடைக்கு அனுப்ப ரஜினி பதில் கூறினார்.

கேள்வி: இந்த சந்திப்பின் நோக்கம் என்ன?

ரஜினி: நீங்கள் என்னை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள். அதேப்போன்று நானும் உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதுதான் நோக்கம்.

என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று 300, 400 பேர் என கும்பலாக வருவதால், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒருமுறை சச்சிதானந்த சுவாமிகள் தன்னுடைய சிஷ்யர்களிடம் பேசும்போது, ‘உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேளுங்கள் அதற்கு பதில் அளிக்கிறேன்’ என்றார். அதுதான் இப்போது நடக்கிறது.

கே: எதிர்காலத் திட்டம் என்ன?

ரஜினி: முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள். என்னுடைய எதிர்காலத் திட்டம் தற்போதைக்கு எந்திரன் படம்தான்.

கே: மன்ற நிர்வாகிகள் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்யப்படுமா?

ரஜினி: பணம், ஜனம் இரண்டையும் ஒன்று சேர்க்கக் கூடாது. சேர்ந்தால் அங்கு அரசியல் வந்துவிடும். என்னிடம் பணத்தை எதிர்பார்க்காதீர்கள். உங்களால் இயன்றதை நீங்களே செய்யுங்கள். நான் தனியாக உதவிகள் செய்துகொண்டே தான் இருக்கிறேன்.

கே: ரஜினி ரசிகர்களுக்கு என ஒரு அங்கீகாரம் கிடைக்குமா?

ரஜினி: சமூகத்தில் உங்களுக்கு என்று ஒரு அங்கீகாரம் கிடைக்கும்படி செய்வேன்.

கே: முதலில் ராகவேந்திரரை வழிபட்டீர்கள். பிறகு அருணாச்சலேஸ்வரர் என்றீர்கள். பாபாஜி என்றீர்கள். அடிப்படையில் உங்களுக்கே தெளிவான பார்வையில்லையா?

ரஜினி: இந்துவிலிருந்து முஸ்லீம், முஸ்லீமிலிருந்து இருந்து கிறிஸ்துவம் என்று மாறினால்தான் தவறு. அது கூட தவறு என்று சொல்ல முடியாது. நமது பாடத் திட்டத்திலேயே கூட வரலாறு, புவியியல், கணிதம் என்று பல படிப்புகள் உள்ளன.

அவை நமது ஞானத்தை விருத்தி செய்கிறது. அதுபோன்று தான் தேடல் நிறைந்த உள்ளம் நமது ஆன்ம ஞானத்தை விருத்தி செய்கிறது. இதில் தவறும் ஒன்றும் கிடையாது. விருப்பம் உள்ளவர்கள் பின்பற்றுகிறார்கள்.

கே: நீண்ட காலம் மன்றப் பணிகள் செய்து வரும் ரசிகர்களை பற்றி உங்கள் கருத்து?

ரஜினி: ரஜினி ரசிகர்களை பற்றி நான் பேச வேண்டிய அவசியம் கிடையாது. நாட்டு மக்களுக்கே தெரியும். இதை மற்றவர்களிடம் கேளுங்கள்.

கே: உங்களை குழப்பவாதி என்று சில பத்திரிகைகளில் எழுதும்போது அதை கேட்கவும், படிக்கவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்கு ஏன் நீங்கள் இடம் கொடுக்கிறீர்கள்?.

ரஜினி: பத்திரிகைக்காரர்களை வைத்துக் கொண்டே இந்த கேள்வியை கேட்டால் எப்படி? சில நேரங்களில் நான் செய்வதுகூட அப்படித்தான் இருக்கிறது. எல்லாம் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்வதுதான். இது செய்தால், இது நடக்கும் என யூகித்து செய்வதில்லை.

நான் நினைப்பது சரி எனும்போது பேசி விடுகிறேன். வேறு கோணத்தில் பார்க்கிறவனுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். அது தவிர்க்க முடியாது. குழப்பவாதி என்று சொல்லலாம். சுயநலத்தோடு எதையும் செய்ய மாட்டேன். எது சரி என்று படுகிறதோ அதைத்தான் செய்வேன்.

சில செய்திகளை படிக்கும்போது சிரிப்பாக இருக்கும். சில சிந்திக்க வைக்க செய்யும். சமீபத்தில் நான் வெளியிட்ட அறிக்கையை பற்றிக்கூட குழப்பவாதி என்று கூறினார்கள். அன்று நான் அந்த முடிவு எடுக்காவிட்டால் நாட்டில் எத்தகைய குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்து சில நேரத்தில் கெட்ட பெயர் எடுத்துள்ளேன். இப்போது அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். நானும் அமைதியாக இருக்கிறேன்.

கே: ஒகேனக்கல் விவகாரத்தில் மன்னிப்பு கேட்டதாகவும், வருத்தம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானது. உண்மையில் நடந்தது என்ன? உங்கள் வாயால் சொல்லுங்கள்.

ரஜினி: முன்னாலே முன்னாலே போகனும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் பின்னாலே பின்னாலே போகனும் என்கிறீர்கள். விஷயம் நடந்தது முடிந்தது. விட்ருங்க. அதிலேயே இருந்தால் எப்படி?

முதலில் ஒகேனக்கல் பிரச்னை சினிமா சம்பந்தப்பட்டது அல்ல. ஆனால் கர்நாடகாவில் எந்த பிரச்னையானாலும் தியேட்டரைத்தான் முதலில் அடிப்பார்கள். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகத்தான் அந்தக் கூட்டத்தில் நான் அமர்ந்தேன்.

அங்கு பேசியவர்கள் எப்படி பேசினார்கள் என்று உங்களுக்கு தெரியும். எனக்குச் சிறிது கோபம் ஏற்பட்டது. அப்போது உணர்ச்சி வசப்பட்டு உதைக்கனும் என்று கூறிவிட்டேன். தண்ணீர் கொடுக்க மறுப்பவர்களை உதைக்க வேண்டும் என்று கூறி இருந்தால் பிரச்னை முடிந்திருக்கும். அப்போது குசேலன் ரிலீசாகும் சமயம். கர்நாடகா விநியோகஸ்தர்கள் என்னைச் சந்தித்தார்கள். எடியூரப்பா தியேட்டருக்கு பாதுகாப்பு தருவதாகக் கூறினார். ரசிகர்கள் கத்தி, கபடாவோடு நாங்களும் தயார் என்றார்கள்.

ஒரு பிரச்னை ஆரம்பித்தால் உடனே முடிய வேண்டும். இழுத்தடிக்கக் கூடாது. அதனால் பொது நலத்திற்காக, மற்றவர்கள் நலனுக்காக நான் மன்னிப்பு கேட்டேன்” என்றார்.

தொடர்ந்து ரசிகர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளித்த ரஜினி பின்பு பேசியதாவது:

”மீண்டும் மீண்டும் நான் சொல்வது எல்லாம் குடும்பத்தை கவனியுங்கள். நான் என் மனைவிக்கு நல்ல கணவனாக, என் குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாக, தயாரிப்பாளர்களுக்கு நல்ல நடிகனாக என்று என் கடமைகளை செய்து வருகிறேன்.

நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். கடமையைச் செய். பலனை எதிர்பார் என்பதுதான் நமது தத்துவம்.

அரசியலை பொறுத்தவரை ஒருவர் வெற்றி பெறுகிறார்கள் என்றால், அது திறமையாலோ, புத்திசாலித்தனத்தாலோ, உழைப்பாலோ என்று கூறினால் அது முட்டாள்தனம்.

சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம் ஆகியவை தான் ஒருவரின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களிப்பாக இருக்கிறது.

சரியில்லாத நேரத்தில் நீங்கள் குட்டிகரணம் அடித்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது. 1996ஆம் ஆண்டு இருந்த நிலைமை வேறு. அன்று பதவியில் போய் அமர வேண்டியது தான். அப்படி ஒரு சூழ்நிலை இருந்தது. ஆனால் யாரோ ஜெயித்து நாம் அனுபவிப்பதா?

நமக்கு ஒரு விஷயத்தில் திறமை இருக்க வேண்டும். அனுபவம் இருக்க வேண்டும். அதை நாம் செய்ய வேண்டும். தெரியாமல் ஒரு விஷயத்தை செய்யக் கூடாது.

என் சிறு வயதில் பணக் கஷ்டத்தில் இருந்த போதுகூட சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முறைப்படி 2 வருடம் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த பிறகு தான் நடிக்க வந்தேன். தெரியாத ஒரு விஷயத்தை செய்ய மாட்டேன்.

பலவந்தமாக திருமணம் செய்தால் அந்த வாழ்க்கை நடக்குமா? ஈடுபாடு இருந்தால் தான் இனிமையாக இருக்கம். ஒருவேளை ஆண்டவன் சொன்னால் நாளைக்கே நடக்கலாம். தொடர்ந்து நாட்டில் நடப்பதை கண்காணித்துக் கொண்டே வாருங்கள்.

தற்போது நாடு சரியில்லை. தமிழ்நாடு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த இந்தியா முழுக்கவே அப்படித்தான் இருக்கிறது. பார்க்கலாம் ஆண்டவன் இருக்கிறான்” என்றார்.

http://www.tamilvanan.com/content/tag/politics/

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான கட்சிக்கு வாக்கு: ரஜினி ரசிகர் மன்றம் அறிவிப்பு

http://www.tamilvanan.com/content/tag/politics/

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான கட்சி எது ???? எனக்கு சத்தியமா விளங்கவில்லை .........

தயவு செய்து யாராவது சொல்லுறீங்களா ???

  • கருத்துக்கள உறவுகள்

இத ரஜனி சொன்னாரா?...வேற எந்த இணையதளத்திலயும் இந்த செய்தி வரவில்லையே?

ஈழத் தமிழர்களை காப்போருக்கே ஓட்டு-ரஜினி ரசிகர்கள்

அரக்கோணம்: இலங்கை தமிழர்களை பாதுகாக்க உறுதிமொழி அளிக்கும் கட்சிக்கே வாக்களிக்கப் போவதாக ரஜினி ரசிகர் மன்றம் முடிவு செய்துள்ளது.

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ள வாலாஜா, காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை பகுதி ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

அப்போது, இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்கவும் அங்கு அமைதி ஏற்படவும் நடவடிக்கை எடுக்க உறுதியளிக்கும் தேசிய கட்சிக்கும் அதோடு கூட்டணி அமைக்கும் மாநில கட்சிக்கும் ஆதரவு அளிப்பது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ரஜினி மன்றத்தினரின் முடிவைத் தொடர்ந்து திமுகவினரும், காங்கிரஸாரும் அவர்களை சமாதானப்படுத்தி ஓட்டுக்களைப் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளனராம்.

இந்தத் தேர்தலில் ரஜினி எந்தப் பக்கமும் சாயாமல நடுநிலை வகிக்கும் நிலையில் ரசிகர்கள் கோதாவில் குதித்துவிட்டனர்

- http://thatstamil.oneindia.in/movies/speci...ajini-fans.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.