Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் ரோசாப்பூ சேலைக்காரி....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் ரோசாப்பூ சேலைக்காரி....

கவிதை - இளங்கவி........

குட்டைப் பாவாடையுடன்

மனதை கொள்ளை கொள்ளும்

சிரிப்பு கொண்டு

நல்லூர் வீதியெல்லாம் சுற்றிடுவாய்

நானும் உன்னை சுற்றிடுவேன்......

கரம்சுண்டல் வாங்கி வந்து

என் கைகளிலே வைத்திடுவாய்

வாங்க மறுத்துவிட்டால்

என் காலை மிரித்திடுவாய்.....

கடைக்கண் பார்வைகொண்டும்

அடித்திடுவாய்....

நல்லூர் முருகனை மறந்துவிட்டு

உனை உன்முடிபோல தொடர்ந்திடுவேன்

முழு கண்கள் பார்க்கமுதல்

இருளாக மறைந்திடுவேன்....

சில திருவிழாக்கள் ஓடி

உன் சிறு அழகெல்லாம் வளர்ந்துவிட

ரோசாப்பூ சேலைகட்டி

என்மனதை ஜோராக இழுத்தவளே...!

சிறுவயதில் நீ தந்த

பொரிகடலை சுவையும் போய்....

நீ சிறிதாக வாங்கித்தரும்

கரம்சுண்டல் கசந்தும் போய்....

உன் காந்த இதழ் மட்டும்

கொக்கின் கண்களிலே மீனாக.....

கோவில் வீதியெங்கும்

அலைந்திடுவேன் உன்

இதழ் சுவைக்க தேனாக.....

இருளான பக்கத்தில்

கொப்பருக்குத் தெரியாமல்

கிஸ் அடிக்கத் துடித்திடுவேன்.....

கொப்பர் நான் தொடர பார்த்துவிட்டால்

கொட்டக்கொட்ட முழித்திடுவேன்....

என் முயற்சியின் பலனை

எனக்கு முழுவதுமாய் தந்தவளே...!

என் மூச்செல்லாம் நீயாகி

என்னை முழுதாகத் தின்றவளே.....

நம் மனதெல்லாம் சேர்ந்து

மகிழ்வாக வாழ முதல்

உன் கூட்டை சிதைத்துவிட்டான்

எம்மை கொன்றொளிக்கும் சிங்களவன்.....

அன்றுமுதல் கோவில் வீதியிலே

என் குளிர் நிலவை காணவில்லை

நான் பெற்றிருந்த முத்தத்தின்

நினைவுகளும் நீங்கவில்லை.....

கூடு இழந்த குருவியாய்

நீ எங்கோ சென்றுவிட....

சிங்களவன் கொடுமையினால்

நானும் புலம்பெயர்ந்தேன்

இங்கே வந்து விட....

சிலகாலம் சென்றறிந்தேன்

என் செல்லம் நீ வன்னியிலே.....

தொடர்பின்றி இருந்தாலும்

உன் நினைவெல்லாம் என் மனதினிலே.....

என் பாசமென்னும் பட்டினிக்கு

உணவழித்த ராசாத்தி.....

எத்தனை நாள் அம்மா

நீ உணவருந்தி நாளாச்சு.......

கொஞ்சம் பொறுத்துக்கொள்

வந்திடுமே நம்

வணங்கா மண் அங்கே....

உங்களை வாழவைக்கும் உணவினிலே

என் அன்பும் கலந்திருக்கும்

பார் அங்கே....

கடலிலே எதிரியதை அழித்தாலும்

என் அன்புணவு உனைச்சேரும்

கடல்மீன்கள் வழயாக

என் கரைந்த உயிர்

உன் உடல் சேரும்.....

என் உணவுத் துளிகளிலே

பழைய முத்தத்திற்கு பதில்

முத்தமொன்று வைத்திருக்கேன்

முழுவதுமாய் ஏற்றுவிடு.....

திருமணம் முடிந்திருந்தால்

என் முத்தத்தை கடலிலே கரைத்துவிடு.......

கலங்காதே என் கண்மணியே

உன் கண் நீங்கா காதலன் நான்; நீ

என் கனவெல்லாம் ஆட்சிசெய்யும்

என் அன்புத் தேவதை தான்.....

இளங்கவி

Edited by ilankavi

அகா இளங்கவி என்ன கவி வரிகள்.. . அர்புதம் உங்கள் கவி வரிகள்... யார் உங்கள் மனதில் இருக்கும் தேவதை... இது ஜோக் ஒகே கோபம் வேணாம்.. உண்மையில் படு ஜோர் உங்கள் கவிதை.. காலத்துக்கு ஏற்ற கவிதையும் உண்மையாகவும் இப்படி சிலர் இருக்கலாம்..

Edited by சுஜி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜிக்கு

காதலிலும் எத்தனை சோகங்கள் அதுபோல் சோகத்திலும் எத்தனை காதல்கள் எனும் உணர்வுகளை என் வரிகளில் சொல்ல வந்தேன்....

அத்துடன் உங்களைப்போன்றோரின் பாராட்டுக்கள் தான் என்னை மேலும் பட்டைதீட்டிக்கொண்டிருக்கின

  • கருத்துக்கள உறவுகள்

ஆழமான காதலின் உண்மையான வரிகள். நன்றி இளங்கவி .......தொடரவேண்டும் உங்கள் கவிப்பயணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி பல நாட்களுக்கு பின்பு உங்களின் கவிதையை ரசித்தேன் சுவைத்தேன் மகிழ்ந்தேன் (சிரித்தேன்) நன்று,வாழ்த்துக்கள் இளங்கவி தொடர்ந்து எழுதுங்கள் .

குட்டைப் பாவாடையுடன்

மனதை கொள்ளை கொள்ளும்

சிரிப்பு கொண்டு

நல்லூர் வீதியெல்லாம் சுற்றிடுவாய்

நானும் உன்னை சுற்றிடுவேன்......

நல்லூரிலையே பார்ட் டைம் வேலை செய்தனிங்கள் :icon_mrgreen: ? நான் உங்களை கண்டிருப்பனே ................

சில திருவிழாக்கள் ஓடி

உன் சிறு அழகெல்லாம் வளர்ந்துவிட

வாலியின் வகையில் இது புதுவிதம் :D

கோவில் வீதியெங்கும்

அலைந்திடுவேன் உன்

இதழ் சுவைக்க தேனாக.....

நல்ல காலம் எங்களிட்ட நீங்கள் மாட்டல :D

தொடர்பின்றி இருந்தாலும்

உன் நினைவெல்லாம் என் மனதினிலே.....

என் பாசமென்னும் பட்டினிக்கு

உணவழித்த ராசாத்தி.....

எத்தனை நாள் அம்மா

நீ உணவருந்தி நாளாச்சு.......

நன்றாக உள்ளது

முழுவதுமே ரசித்தேன் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு......

எம்மண்ணில் சிங்களவன் ஆக்கிரமிப்பால் எவ்வளவைத் தொலைத்துவிட்டோம் எவ்வளவை சிதைத்துவிட்டோம்... மொத்தத்தில் சிறுவயதில் அனுபவித்த கடுகளவு சுதந்திரமும் பறிபோய் உறவுகளை தொலைத்தும் இழந்தும் இப்பொழுது போராடிக்கொண்டிருக்கிறோம். எங்கள் போராட்டங்கள் தொடர்ந்து எம்மக்களுக்கெல்லாம் விடுதலை கிடைக்க வேண்டும்.

இளம் கவியே நாம் தொலைத்து நிற்கும் எம் மண்ணின் அற்புத

காதலை ஒரு தரம் அல்ல ஒன்பது தரம் நினைத்து நினைத்து பார்க்க வைத்தது மட்டுமல்ல

அழிந்து போய்க்கொண்டிருக்கும் உண்மைக் காதலுக்கும் உயிர் கொடுத்துள்ளீர்கள்

தொடர்க உங்கள் பணி வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணைக்கு

என்ன சுப்பண்ணை என்னைப்பற்றி இப்படி தப்பா சொல்லீட்டீங்க பார்ட் டைம் வேலை பார்த்தெண்டு.... நான் நல்லூர் வீதியிலே புல் டைம் அல்லவோ பார்த்தனான்..... குரூப் பிரச்சனைகள் வரக்கூடாது எண்டதில நான் கொஞ்சம் கவனம் காரணம் அதில மினக்கட அங்காலை குருவி பறந்திடுமல்லோ....... :D எனவே உங்களைச் சந்தித்திருக்க சந்தர்ப்பமில்ல..... :)

என்னைப் போய் வாலியோட கொம்பயர் பண்ணிட்டீங்களே... ஏற்கனவே நாட்டுப்பிரச்சனையால நித்திரையில்லை நீங்களும் உங்கட பங்கிற்கு என் இரண்டு கிழமை நித்திரையைப் பறிச்சுப்போட்டீங்களே சாமி.... ^_^ இதெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கேக்கை வளர்ந்த அழகைச் சொன்னால் என்னையும் வாலியாக்கிறதா...... :( இதென்ன சின்னப்பிள்ளைத்தனமாயிருக்க

  • கருத்துக்கள உறவுகள்

காதாலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஆரப்பு அது இளங்கவியா பலே பலே கொட்டட்டும் உங்கள் கவிதை :icon_mrgreen::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்மாறனுக்கு

மிக்க நன்றிகள்... எங்கள் ஒவ்வொருவரினதும் மனதில் நிற்கும் எமது ஈழக்காதலின் வெளிப்பாடே இந்த வரிகள். என்னால் முடிந்த போதெல்லாம் எமது தாய் மண்ணின் நினைவுகளைச் சுமந்த / சுமந்துகொண்டிருக்கிற / சுமக்கப்போகும் கவிதைகளை நிச்சயம் தருவேன்.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை.சில வரிகள் மிகவும் சுவையாக உள்ளது :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனிவர் ஜீ

உங்கள் ஆசிர்வாதம் இருக்கிறபடியால் தானே என்ர கவிதையையும் யாழில ஆக்கள் வாசிக்கினம் தலைவா...! உங்கள் ஆசி இருக்கும் வரைக்கும் நான் எழுதிக்கொண்டேயிருப்பேன் சாமி...

வாழ்த்துக்கு நன்றி முனிவர் ஜீ...

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sagevan

மிக்க நன்றி என் கவிதையை ரசித்ததற்கு....

இளங்கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.