Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர் முடிகிறது, அதற்குப் பின்....?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிகிறது, அதற்குப் பின்....?

[08 ஏப்ரல் 2009, புதன்கிழமை 5:00 மு.ப இலங்கை

வடக்கில் வன்னியில் நடத்தப்பட்ட போர் முடிவுற்றுவிட்டதாக, விடுதலைப் புலிகள் தோற் கடிகக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறுகின்றனர். அதனையொட்டி சிங்களப் பிரதேசங்கள் குதூகலிக் கின்றன. அது இயற்கையானது; எதிர்பார்க்கவேண்டியது.

ஆனால் அடுத்தது என்ன? என்ற கேள்வி நாட்டு நலனில் அக்கறையுள்ள, நிதானமாகச் சிந்திக்கும் பிரசைகளின் மனதில் எழுவது இயல்பு.

அரசியல்வாதி என்பதால், நாட்டு நலனிலும் தமிழ்மக்களின் நலன்களிலும் அக்கறை உள்ளவர் என்ற வகையில், மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் மேற்குறிப்பிட்ட கேள்விக்குப் பதில் காண விழைந்திருக்கின்றார்.

தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பொருத்தமான அரசியல் தீர்வு ஒன்று உடனடியாக முன்வைக்கப்படவேண்டும். அவ்வாறு உகந்த தீர்வு ஒன்று முன்வைக்கப்படாவிட்டால், எதிர் காலத்தில் போர் வேறு வடிவத்தில் வெடிக்கும் என்று எடுத்துக்காட்டியுள்ளார் மனோகணேசன்.

அவர் மட்டும் இதனைக் கூறவில்லை. அரசி யல் விமர்சகர்கள், அரசியல் விவகாரங்களில் ஈடு பாடுடையவர்கள், சர்வதேச அரசியல் நோக்கர்கள் என்று பல தரப்பினரும் இந்தக் கேள்வியைத் தொடுத்துப் பதிலையும் கூறுகின்றனர்.

அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு, அரசமைப்புச் சட்டத்தின் 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தமிழ் மக்களின் உரிமைகளை வழங்கு வதாக அமையவேண்டும் என்றும் வலியுறுத் தியிருக்கிறார் மனோகணேசன்.

போர் இப்போது முடிவுக்கு வரலாம். ஆனால் தமிழர் பிரச்சினைக்குப் பொருத்தமான அரசியல் தீர்வு முன்வைக்கப்படாவிட்டால், போர் வேறு வடி வத்தில் மீண்டும் வரும். இன்னுமொரு பிரபா கரன் தோன்றுவார் என்ற யதார்த்தத்தை விளம்பி யுள்ளார் மனோகணேசன். இது அவருக்கு மட்டு மல்ல, நியாயமாகச் சிந்தித்தால் அரசாங்கத் தரப்பில் உள்ளவர்களும் நிச்சயம் இந்தக் கருத்தை யதார்த் தத்தை உணர்வர்.

அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலை மையில் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாகக் கூடிக் கலைந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு, மிக மிகக் கஷ்டப்பட்டு, இந்தியாவைச் சமா ளிக்கும் உள்நோக்குடன் மட்டும் தயாரித்த தீர்வு யோசனையும் "அம்போ" ஆகிவிட்ட சங்கதியும் வெளிப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் 13 ஆவது திருத்தம் சட்டத்திற்கு அப்பாலான தீர்வு யோசனையை அனைத்துக் கட்சிக் குழு தயாரித்ததாகவும் அதனை ஜனாதிபதி சரிபார்த்துவிட்டார் என்ற தகவலையும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

யோசனையைச் சரிபார்த்த பின்னர், புதிய யோச னையைக் கிழித்து எறிந்துவிட்டார் என்ற தகவல் புதியது. இதுவரை வெளிவராத விடயம். இப்போது அது அம்பலமாகியிருக்கிறது.

75 சதவீதமான சிங்களப் பிரதிநிதிகளையும் 25 சதவீதமான தமிழ்ப் பிரதிநிதிகளையும் கொண்ட அனைத்துக் கட்சிக் குழு தயாரித்த தீர்வு யோச னையையே ஜனாதிபதி கிழித்து எறிந்தார் என்றால், இனிப் புதிதாக எந்தவித யோசனையை உட்புகுத்தி தீர்வு நகல் தயாரிக்கப்படும் என்று அர்த்தமுள்ள கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

இவ்வேளை இன்னொரு கேள்வியும் இயல்பாகவே எழுகின்றது.

இந்தியத் தலைவர்கள், வெறுமனே 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று நம்பகமான அதி காரப் பகிர்வு வழங்கப்படவேண்டும் என்று அடிக்கடி வாய் கிழியக் கத்துகிறார்கள். அவர்களால் போருக்கு உதவ முடியுமே அன்றி அரசியல் தீர்வு ஒன்றுக்கு உதவமுடியாது; உதவ விரும்பவில்லை என்ற நிலைமை இப்போது கலங்கித் தெளிகின்றது. அவ்வாறெனின் போர் முடிந்த பின்னரான காலப்பகுதியில் அரசு முன்வைக்கவுள்ள தீர்வு தமி ழர்களின் உரிமைகளை வழங்குவதாக, அவர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதாக அமையும் என்று எவ்வாறு எதிர்பார்ப்பது?

போர் முடிந்த பின்னர் அரசியல் தீர்வு பற்றி முயற்சிக்கலாம் என்று ஐ.நா.அதிகாரிகளும் மேற் குலக அரசியல்வாதிகள் சிலரும் அண்மைக் கால மாகக் கூறிவந்தனர். ஆனால்

தமிழ் மக்கள் வன்னியில் மனிதப் பேரவலத் தில் சிக்கியிருந்தபோது அவர்களுக்கு உதவ முடி யாத சர்வதேசம் வக்கற்று நின்கும் சர்வதேசம் தமிழர்களின் உரிமைகள் கிடைக்க உழைக்கும் என்று நம்புவது, காத்திருப்பது, எதிர்பார்ப்பது அர்த் தமற்றதே!

http://www.uthayan.com/pages/editorial_pages.php

அதற்குப்பின் கோமணம்

யாருக்கு வேண்டுமோ அவர்களுக்கு வேண்டுமென்றால் போர் முடிந்திருக்கலாம், ஆனாலும் ஆரார் அதை வேண்டினார்களோ அவர்களுக்கு அவர்கள் வேண்டாதபோது போரின் தாக்கம் அவர்களை விடுமா?.

சிறிலங்காவும் இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகளவு பயங்கரவாதத்தை பாவித்திருக்கிறார்கள்..... அதற்கான கூலியை அவர்கள் கொடுக்கவேண்டிவரும்

ஆதாரமா? "பாலிஸ்தான்"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போ.................ர் முடிஞ்சு போச்சுதோ?

இனித்தானே

ஆரம்பம்?

  • கருத்துக்கள உறவுகள்

போ.................ர் முடிஞ்சு போச்சுதோ?

இனித்தானே

ஆரம்பம்?

தமிழ் தங்கை அக்காவே சொல்லிட்டா.. இனித்தானே ஆரம்பம்

ஒரு போராளி இருக்கும் மட்டும் எங்களின் விடுதலை போராட்டம் தொடரும்> தேசிய தலைவர்

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிகிறது, அதற்குப் பின்....?

ஈழத்தில் தமிழன் என்று ஒர் உயிரினம் வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தில் தமிழன் என்று ஒர் உயிரினம் வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லை .

அப்படிச்சொல்லாதீர்கள் தமிழ் ஸ்ரீ.

ஈனத்தமிழனாய் வாழ்வதை விட மானத்தமிழனாய்ச்செத்தான் என்றுதான் வரலாறு எழுதும் எழுதவும் வேண்டும்.

நம்பிக்கை எனும் ஆயுதம் மட்டுமே அதிகமாய் குவிந்துகிடக்கிறது எங்கள் தலைவரிடம் அதை நாம் இன்னும் பலப்படுத்தவேண்டுமே அன்றி பலவீனமடையக் கூடாது.

"ஒரு போராளி இருக்கும் மட்டும் எங்களின் விடுதலை போராட்டம் தொடரும்> தேசிய தலைவர்"

ஒரு தமிழன் இருக்குமட்டும் ஒரு போராளி இருப்பான் - தமிழன் -

Edited by Soori

நிபந்தனையற்ற சரண் அல்லது முற்றாக அழித்தொழிப்பு என்பது தான் சிறீலங்கா எதிர்பார்க்கும் போர் முடிவு. அதன் பின்னர் வழமைபோல் வரலாற்றை வெல்லும் தரப்பு எழுதும் அதை உலகம் ஏற்றுக் கொள்ளும்.

அபிவிருத்தி தேசிய ஒருமைப்பாடு என்றதன் பெயரில் மேலதிக சிங்கள குடியேற்றங்கள் தமிழர் தாயகப்பகுதிகளில்.

எதிர்காலத்தில் பிரிவினைவாதத்தை தடுப்பதற்கான சீர் திருத்தம் மறுவாழ்வு சிறீலங்கா தேசியத்திற்குள் மீள் உள்வாங்கல் என்றதன் பெயரில் பாட விதானங்கள் நிர்வாக அலகுகள் சிங்களமயமாக்கப்படும்.

எதிர்ப்பவர்கள் புலிகளாக துடைத்தழிப்பு.

இலங்கைத்தீவில் சிங்களவர்களாக தம்மை மாறிக் கொள்வது தான் தனிமனிதர்களின் இருப்பை வாழ்வை உறுதி செய்வதாக நிலமை மாறும்.

தமிழர் என்று ஒரு தேசிய இனம் இலங்கைத் தீவில் இருந்ததற்கான தடையங்கள் படிப்படியாக அழிக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

"ஒரு போராளி இருக்கும் மட்டும் எங்களின் விடுதலை போராட்டம் தொடரும்> தேசிய தலைவர்"

ஒரு தமிழன் இருக்குமட்டும் ஒரு போராளி இருப்பான் - தமிழன் -

இப்படியே சொல்லிட்டு அசைலம் அடிச்சுக் கொண்டிருக்க வேண்டியதுதான். கண்ட மிச்சம் என்ன..

1. வடக்குக் கிழக்கை சிங்கள ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வந்தது.

2. ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியாவில் மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அசைலம் அடிச்சது.

3. 180,000 தமிழ் மக்கள் உயிரிழந்தது.

4. 24,000 போராளிகள் வீரமரணம் அடைந்தது.

5. கோடிக் கணக்கான சொத்திழப்பு.

6. இளம் சந்ததி கல்வி இழந்து எதிர்காலம் இழந்து தவிப்பது.

7. துரோகிகளுக்கு ஒட்டுண்ணி அரசியல் வாழ்க்கை அமைச்சுக் கொடுத்தது.

8. ஆண்களும் பெண்களும் விதவைகள் ஆக்கப்பட்டது.

9. ஊனமடைந்தோர் தொகை அதிகரிக்கப்பட்டது.

10. பயனுள்ள நிலங்கள் கண்ணிவெடிகளால் நிறைந்து போய் உள்ளமை.

11. மக்களுக்கு திறந்த வெளிச் சிறைகளை பரிசளித்தமை.

இதைவிட.. இப்படி கடைசித் தமிழன் இருக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிக்கை விட்டுக் கொள்வது.

இவற்றைத் தவிர செல்வநாயம் ஐயா காலத்தில் இருந்ததை விட மோசமாகி இருக்குது.. தமிழர்களின் நிலை இலங்கைத் தீவில்....

புதுக்குடியிருப்புக்குள் ஒரு ஒடுங்கிய நிலப்பரப்புக்குள் இராணுவத்தை சுற்றி வளைக்க வரும் வரை அனுமதித்துவிட்டு கொத்துக் கொத்தாக கொடுத்ததை வைச்சு கிளிநொச்சியையும் ஆனையிறவையும் காக்கப் போராடி இருந்தாலாவது... எனக்குப் புரியல்ல.. புலிகளின் தற்போதைய போர் வியூகத்தில் மதிநுட்பம் வேலை செய்ததா..??! ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்கள் என்பது வியப்பாக இருக்கிறது..! :rolleyes::lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.