Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச நாடுகளின் தலைமைகளும் பெரும்பாண்மையான மக்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர்கள் நலமாக வாழுவதாக நம்புகின்றார்களா...??

சர்வதேச நாடுகளின் தலைமைகளும் பெரும்பாண்மையான மக்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்க 21 members have voted

  1. 1. இலங்கை அரச கட்டுப்பாட்டுக்குள் வன்னியில் அவலப்படும் மக்களை எல்லாம் கொண்டு செல்ல வேண்டும் எண்ற சிறிலங்கா அரசின் ஆசைக்கு வெளி நாடுகள் செவி மடுப்பது போல தோண்றுகின்றன... அப்படியானால் அந்த சர்வதேச நாடுகளுக்கு இலங்கை அரசகட்டுப்பாட்டில் உள்ள மக்கள் சுதந்திரமாக இல்லை என்பது தெரியுமா தெரியாதா... இதுதான் எனது கேள்வி... உங்களின் சிந்தனை என்ன...??

    • ஆம் அனைத்தையும் அறிந்து கொண்டு உள்ளார்கள்..
      8
    • இல்லை, உண்மை எதையுமே அறிந்து கொண்டு இல்லை
      7
    • அரசின் உயர் மட்டத்தில் உள்ள சிலர் மட்டுக்கும் தெரியும்.
      6

Please sign in or register to vote in this poll.

Featured Replies

http://www.yarl.com/forum3/index.php?showtopic=55657

இந்த தலைப்பில் ஒரு கேள்வியை கேட்டு இருந்தேன்... பதில் அழித்த எல்லாரும் இலங்கையின் கட்டுக்குள் தமிழ் மக்கள் படைக்குழுக்களின் கொலை அசுறுத்தலுக்குள் தமிழ் மக்கள் வாழ்வதாக சொன்னார்கள்...

அங்கு அரச கட்டுக்குள் உள்ள மக்கள் சுதந்திரமாக வாழ முடியாது தங்களின் கருத்துரிமைகள் மறுக்க பட்டு திறந்த வெளியில் நடமாடும் கைதிகளை போலவே வாழ்வது இங்கே எல்லாரும் தெரிந்து கொண்டும் , தெரிந்தும் தெரியாமலும் வாழ்கின்றோம்..

இண்று அதே சிறைச்சாலையில் இன்னும் ஒரு முகாம் எனும் சிறையை உருவாக்கி அந்த மக்களை அடைக்க என கங்கணம் கட்டி நிக்கிறது இலங்கை அரசு... அதை நேரடியாக இந்தியாவும் அங்கு கலைஞரும் (48 மணிநேரம் இலங்கை போர் நிறுத்தம் செய்ததை வரவேற்று புலிகளுக்கு வேண்டுகை விடுத்தார்) மற்றும் பல அரசுகளும் இலங்கைக்கு சார்பாக நடந்து வருகின்றன...

இங்கு எனது கேள்வி என்ன எனில் இலங்கை அரச கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களில் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்க பட்டு கருத்து சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் மறுக்க பட்டு சாப்பிட மட்டுமே வாயை திறக்கும் வண்ணம் வாழும் அவலத்தில் உள்ளார்கள் எனும் உண்மை சர்வதேச நாட்டு அரசுகளுக்கும், அங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் தெரியுமா தெரியாதா....??

அப்படி தெரியாமல் போனது எண்றால் அது யாருடைய தவறு....??

இவைகளுக்கு உங்களின் தாழ்மை யான பதிலை வேண்டுகின்றேன்....

Edited by தயா

உலக நாடுகள் இலங்கையரசின் நிலைப்பாட்டை நன்கு அறிந்துள்ளன. புலிகளிடமிருந்து தமிழ்மக்களைத் தனிமைப்படுத்துதல் என்ற இந்தியக் கொள்கைக்காக, இவர்கள் வாய்பேசாதுள்ளனர் என்பதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது விடியவிடிய ராமர்கதை விடிஞ்சாப்பிறகு ராமர் சீதைக்கு என்னமுறை எண்டு கேக்கிறபோலை கிடக்கு

எல்லாருக்கும் எல்லாவிசயமும் தெரியும்.

ஆனால் இந்தியா குறுக்காலை நிக்குது

allhail.gif

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளில் உள்நோக்கம் புலிகளை இல்லாமல் செய்தல் என்பது தான். அது எப்படி நடந்தாலும் உலக நாடுகள் சந்தோசப்படுவார்கள். மக்களை பற்றி உலக நாடுகளுக்கு எந்த கவலையும் இல்லை. ஏனெனில் அம்மக்கள் தங்களுடைய மக்களலல்லவே.

உலக நாடுகளில் உள்நோக்கம் புலிகளை இல்லாமல் செய்தல் என்பது தான்

தேசிய இனங்கள் ஆயுதபோராட்டம் மூலம் விடுதலை அடைவதை சர்வதேம் விரும்பவில்லை.

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுள்ள உலக சக்திகள் தமது பிரத்தியேக நலன்களுக்காகவும் இன்னோரென்ன நலன்களுக்காகவும் சிறிலங்காவில் போரற்ற மயான அமைதி நிலவுவதை விரும்புகின்றன. இது அமெரிக்கச் சரித்திரத்திலேயே மிகவும் கீழ்த்தரமான முட்டாள்த்தனமான அரசியவாதியும்,முன்னால் அமெரிக்கத் தலைவருமான ஜார்ஜ் புஷ் எனும் மடையானல் ஆரம்பிக்கப்பட்ட "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" எனும் அமெரிக்க மற்றும் அதன் வால்பிடிக்கும் கூட்டணிகளின் உலக எண்ணெய் வளம் மீதான அதிகாரத்தின் பாலமைந்த புதிய உலக மயமாக்கலின் விளைவுகளே இன்று நாம் அனுபவிப்பது. அவர்களின் வியாபாரச் சுரண்டல்கள் சிறிலங்காவிலும் தங்கு தடையின் நடைபெறவேன்டுமானால் அங்கு போரற்ற சூழல் இருப்பது மிகவும் அவசியம். இதற்காக ஒரு சமுதாயத்தின் சாம்பல் மேட்டின் மேல் நின்றுதான் இது நடைபெறவேன்டுமானால் அதையும் செய்ய இந்த நாடுகள் ஆயத்தம். அவர்களுக்குத் தமிழர்கள், திபேத்தியர்கள் என்ற வேறுபாடில்லை. சுதந்திரத்துக்காகப் போராடும் இனங்களையோ அல்லது அந்த இனங்கலின் தலமைகளையோ இல்லாமல் அழிப்பதன் மூலம் தமது சுரண்டல்களை நிலைநிறுத்தப் பார்க்கின்றன.

இதன் ஒரு அங்கம் தான் சிறிலங்காவில் தமிழரின் சுதந்திரத்துக்காப் போராடி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளை இதோ அழித்து விட்டோம் என்று கொக்கரிக்கும் சிங்கள இனவாதத்துக்கு இன்னும் கால அவகாசம் கொடுக்க விரும்புகின்றன.பல்லாயிரக்கண

  • தொடங்கியவர்

அப்ப அனேகர் என்ன சொல்ல வாறியள்...?? எல்லாமே ஏற்கனவே தீர்மானிக்க படப்பட்டு உள்ளது ஆகவே நாங்கள் ஒதுங்கி வேடிக்கை மட்டும் தான் பார்க்க வேண்டியதுதான் எண்றா...???

உலக மக்கள் எல்லாம் தமிழரை அழிக்கும் சிங்களவரின் பக்கம்தான் இருப்பார்களா..??

நாங்கள் கவன ஈர்ப்புகளை எல்லாம் நடத்தி இந்த உலக மக்கள் , மனிதாபிமானவாதிகளின் அனுசரனையை பெற வளியே இல்லையா...??

எமது மக்களுக்கு விடிவு கிட்டவே கிட்டாதா....???

  • கருத்துக்கள உறவுகள்

உண்டு எப்போ எனில் யூதருக்கு அமெரிக்கா மாதிரி நண்பர் கிடைக்கும் போது. யூதரை சும்மா அமெரிக்கா நண்பர் ஆக்கவில்லை. இவனை போல் கெட்டிக்காரன் தான் முழு முஸ்லிம் உலகையும் ஆட்டிப்படைக்க கூடிய ஆள் என்பது தான் . அதையே மறு பக்கமாக அதாவது அமெரிக்காவின் பொருளாதாரம் முதல் அரசியல் வரை (இன்றைய அமெரிக்க பதில் சனாதிபதி ஜூதன் என பல அமெரிக்கருக்கு இன்று வரை தெரியாது) மாற்றியவர்கள் யூதர்கள். அத்தோடு ஐன்ஸ்டைன் போன்ற விஞ்ஞானிகள் கூட அமெரிக்காவால் ஜேர்மனியில் இருந்து பிடித்து வரப்பட்டவர்.நாம் எம்மோடு ஜூதரை எப்படி ஒற்றுமை படுத்த முடியும்.?

புலத்தில் வாழும் தமிழர்கள் அரசியல் ரீதியாக தம்மை பலப்படுக்தும் போது தான் வெள்ளை உலகம் எம்மை செவி சாய்க்கும். இப்போ எம்மை எப்படி பாவிக்கலாம் என்று தான் சிந்திக்கிறார்கள்.

எனது தனிப்பட்ட கருத்து சி.என்.என், வொக்ஸ் மாதிரி தனி தமிழ் ஊடகமாக (நிச்சயமாக பல மொழிகளில்) வந்தால் எமது செய்திகள் பல்லின மக்களை சென்றடையும்.போட்டி எமக்குள் இல்லாமல் வெளி உலகுடன் இருக்க வேண்டும்.

ஒரு பிச்சை கார நாட்டுக்குள் இருந்து கொண்டு எம்மை பயங்கரவாதிகள் என உலகம் முழுக்க பரப்புரை செய்ய முடியுமெனில் எமக்கு ஒரு உலகளாவிய ஊடகம் இருக்குமேயானால் இலங்கை அரசு என்ன யாராலும் ஒன்றும் செய்யமுடியாது? உ+ம்: சி.என்.என் அரபு உலகில் வாலாட்டவே முடியாது அல்ஜசீரா எனும் அவர்களில் தொலைகாட்சியால்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.