Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எரிகிற வீட்டில் பிடிங்கிய மிச்சம்: குழம்பிய குட்டையில் மீன் பிடிப்போர்!

Featured Replies

வணக்கம்,

மிகப்பெரிய மனிதப்பேரவலம் சிறீ லங்கா பயங்கரவாத அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த அகால நேரத்தில் தமிழ் ஜனநாயகம் பேசுகின்ற விளக்குமாறுகள் யாழ் குடாநாட்டில் தமது தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக தேவனந்தா அடிகளார் தமிழ் மக்கள்பால் தான் பேரன்பு கொண்டுள்ளதை நீரூபிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவாமிகள் பொதுமக்களுடன் சாதாரண பேரூந்தில் ஒன்றாக பயணம் செய்ததாகவும் இதைக்கண்ணுற்ற பொதுமக்கள் (?) ஆனந்தக்கண்ணீர் வடித்ததாகவும் கூறப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பேரூந்தை ஓட்டிய சாரதி இரு கண்களிலும் கண்ணீர் ஆறாக ஓட தேவாந்தா சுவாமிகளை கட்டியணைத்து தனது அன்பை தெரிவித்ததாகவும் சொல்லப்படுகின்றது.

வாழ்க ஜனநாயகம்! சுவாமிகளிற்கு ஜே! அரோகரா

  • கருத்துக்கள உறவுகள்

இதுவா அவர் படம் .........

http://www.funpic.hu/swf/monitor_cleaner.swf

Edited by தமிழ் சிறி

கலைஞன் அது யாழில் மட்டுமா? இங்கு புலம்பெயர் நாட்டிலும்தான் இடம் பெறுகின்றது. புலம்பெயர் நாட்டில் இளைஞர்களின் போராட்டத்தை அந்த நாட்டு பொறுப்பாளர்களே தட்டிக் கழிக்க பார்க்கின்றனர். தங்களுடைய இடம் போகப் போகின்றது என்று இவர்களுக்கு பயம். இந்த செயற்பாட்டால் இளைஙர்கள் நொந்து போயுள்ளனர். இளைஞர்கள் போராடியபோது அதை இருட்டடிப்பு செய்தவர்கள் இன்று தங்களுடைய போராட்டுத்துக்கு விளம்பரம் தேடுகின்றனர்.

புலிபடுத்தால் நரிகள் துள்ளி விளையாடும். :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவா அவர் படம் .........

http://www.funpic.hu/swf/monitor_cleaner.swf

இல்லை சிறித்தம்பி!

55048262.jpg

இதுதான் அதுன்ரை உண்மையான தோற்றம்.

இதின்ரை குணாதிசயங்களிலை முக்கியமானது என்னவெண்டால் மற்ற பிராணிகள் கஸ்ரப்பட்டு தேடிசேகரிச்சதுகளை இந்த அழுக்குணி நாதாரிமிருகம் சண்டித்தனம் விட்டே பறிச்சு எல்லாத்தையும் அனுபவிச்சுப்போடும். ஏனெண்டால் அதின்ரை சுயகுணம் அப்புடித்தான்.

சிறித்தம்பி ஏதாவது விளங்குதோ???????????? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்வது எங்களுக்குள்ளே பல நரிகளும் உள்ளதே :lol:

ஜஙரழவந யெஅநஸ்ரீ'உhழணாயn' னயவநஸ்ரீ'யுpச 14 2009இ 02:34 Pஆ' pழளவஸ்ரீ'506173'ஸ

கலைஞன் அது யாழில் மட்டுமா? இங்கு புலம்பெயர் நாட்டிலும்தான் இடம் பெறுகின்றது. புலம்பெயர் நாட்டில் இளைஞர்களின் போராட்டத்தை அந்த நாட்டு பொறுப்பாளர்களே தட்டிக் கழிக்க பார்க்கின்றனர். தங்களுடைய இடம் போகப் போகின்றது என்று இவர்களுக்கு பயம். இந்த செயற்பாட்டால் இளைஙர்கள் நொந்து போயுள்ளனர். இளைஞர்கள் போராடியபோது அதை இருட்டடிப்பு செய்தவர்கள் இன்று தங்களுடைய போராட்டுத்துக்கு விளம்பரம் தேடுகின்றனர்.

புலிபடுத்தால் நரிகள் துள்ளி விளையாடும். :டழட: :டழட: :டழட:

ஜஃஙரழவநஸ

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி, சோழன். அதுமட்டுமா? சிலதுகள் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு தேசியம் எண்டு அலட்டுதுகள். அதுக்குள்ள ஆய்வுக்கட்டுரை வேறை. றோட்டிலை நிண்டு போராடாவிட்டாலும் பரவாயில்லை. பேசாமல் பொத்திக் கொண்டு இருக்கவேண்டியதுதானே. தாங்கள் தேசியத்திற்கு ஆதரவாம் எண்டு பீத்தல் வேறை. எப்பதான் இதுகள் திருந்தப்போகுதுகளோ? என்னைப் பொறுத்தவரையில், இப்பிடியானவர்களைவிட தேவானந்தா எவ்வளவோ மேல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(...)சுவாமிகள் பொதுமக்களுடன் சாதாரண பேரூந்தில் ஒன்றாக பயணம் செய்ததாகவும் இதைக்கண்ணுற்ற பொதுமக்கள் (?) ஆனந்தக்கண்ணீர் வடித்ததாகவும் கூறப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பேரூந்தை ஓட்டிய சாரதி இரு கண்களிலும் கண்ணீர் ஆறாக ஓட தேவாந்தா சுவாமிகளை கட்டியணைத்து தனது அன்பை தெரிவித்ததாகவும் சொல்லப்படுகின்றது.

அடடா... வாசிக்க வாசிக்க என்ன பரவசமாய்க் கிடக்கு.... இங்க இருக்கிற எனக்கே ஆனந்தக்கண்ணீர் வந்திடும்போல கிடக்கு.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது யாழ்ப்பாணத்தில் மட்டுமில்ல, அண்மையில் வவுனியாவிலயும் நடந்த ஒரு நாடகம். வவுனியா நகரசபைக் கட்டிடத்தில ஒரு வாரம் முகாமிட்டிருந்த தேவானந்த சுவாமிகளைச் சந்திக்க நீண்ட வரிசையில் மக்கள் (வேற யார், தமிழ் மக்கள் தான்!) காத்திருந்தார்களாம். மக்களைச் சந்திக்க முதல் அவர் சந்தித்தது கல்விக் கல்லூரி, யாழ் பல்கலை வவுனியா வளாகம், வங்கிகள், மாகாண சபையின் கீழ் வரும் அரச நிறுவனங்கள் போன்றவற்றின் நிர்வாகிகளைத் தான். அவர்களிடம் என்னென்ன வேலை வெற்றிடங்கள் காலியாக இருக்கின்றன என்ற விபரம் சேகரிக்கப் பட்டிருக்கிறது.மக்கள் போனது அந்த வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தரும்படி கேட்கவாம். போனவர்கள் அனேகமாக சுவாமிகளை ஒரு பத்தடி தூரத்திலிருந்து பார்த்துப் பரவசமடைய அனுமதிக்கப் பட்டார்களாம்.இந்த ஒரு வாரகால மெகா சீரியலில் ஒரு நாள் அங்கத்தில் அந்த மக்களிடையே வந்து நின்று கொண்டு "உங்களை ராணுவம் சோதிப்பதை நான் கண்டேன், இதெல்லாம் எனக்குப் பிடிக்காது ஆனால் அவர்கள் என் பாதுகாப்புக்காக செய்கிறார்கள், என்ன செய்வது" என்று டயலாக் எல்லாம் விட்டிருக்குது டக்கி மங்கி.

அமரரான அற்புதன் என்கிற நடராஜா ஒரு தடவை இப்படி எழுதினார் "புலிகள் எப்படியானாலும் தமிழர்களின் ஏக பிரதினிதிகள் தான். என்றாலும் அவர்கள் இராணுவ வெற்றிகளையும் குவிக்க வேண்டும்.இல்லையென்றால் எங்கள் தமிழ் மக்கள் வென்றவனுக்குப் பின்னால் வெற்றி முழக்கமிட்ட படி ஓடிக் கொண்டே இருப்பார்கள்" -அது தான் நடக்குது போல இப்ப.

மேற்குறிப்பிட்ட பேரூந்தை ஓட்டிய சாரதி இரு கண்களிலும் கண்ணீர் ஆறாக ஓட தேவாந்தா சுவாமிகளை கட்டியணைத்து தனது அன்பை தெரிவித்ததாகவும் சொல்லப்படுகின்றது.

இது மாதிரி கட்டிப்புடி வைத்தியத்த டக்கி மங்கிக்குப் பழக்கினால் தான் பிறகு உண்மையாக் "கட்டிப் பிடிக்க" இலகுவா இருக்கும். விளங்குதோ உங்களுக்கு? :lol:

யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.. ஒரு நாளைக்கு எத்தனை பேர் சிறீதர் படமாளிகைக்கு முன் கியூ வில் நிற்பார்கள் என்று...!! அப்படியே தேவானத்தா சுவாமிகள் நம்மட கோயில்கள், தேவாலயங்கள் குருமார்களுடனும் அந்த மாதிரி அன்னியோனியம்...அது மட்டுமா அண்மை காலமாக 'கலப்பு' கல்யாணங்கள் சிலவும் நடக்க தொடங்கியிருக்கு என்று கேள்வி

  • கருத்துக்கள உறவுகள்

-----

இதின்ரை குணாதிசயங்களிலை முக்கியமானது என்னவெண்டால் மற்ற பிராணிகள் கஸ்ரப்பட்டு தேடிசேகரிச்சதுகளை இந்த அழுக்குணி நாதாரிமிருகம் சண்டித்தனம் விட்டே பறிச்சு எல்லாத்தையும் அனுபவிச்சுப்போடும். ஏனெண்டால் அதின்ரை சுயகுணம் அப்புடித்தான்.

சிறித்தம்பி ஏதாவது விளங்குதோ???????????? :lol:

ஓம் , குமாரசாமி அண்ணை இப்ப விளங்குது .

இதை Hyena என்று சொல்வார்கள் .

Edited by தமிழ் சிறி

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

மிகப்பெரிய மனிதப்பேரவலம் சிறீ லங்கா பயங்கரவாத அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த அகால நேரத்தில் தமிழ் ஜனநாயகம் பேசுகின்ற விளக்குமாறுகள் யாழ் குடாநாட்டில் தமது தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக தேவனந்தா அடிகளார் தமிழ் மக்கள்பால் தான் பேரன்பு கொண்டுள்ளதை நீரூபிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவாமிகள் பொதுமக்களுடன் சாதாரண பேரூந்தில் ஒன்றாக பயணம் செய்ததாகவும் இதைக்கண்ணுற்ற பொதுமக்கள் (?) ஆனந்தக்கண்ணீர் வடித்ததாகவும் கூறப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பேரூந்தை ஓட்டிய சாரதி இரு கண்களிலும் கண்ணீர் ஆறாக ஓட தேவாந்தா சுவாமிகளை கட்டியணைத்து தனது அன்பை தெரிவித்ததாகவும் சொல்லப்படுகின்றது.

வாழ்க ஜனநாயகம்! சுவாமிகளிற்கு ஜே! அரோகரா

இப்போ புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்கள கட்டிப்பிடிக்க வாராரு.. மக்களே கவனம்! :)

--------

  • தொடங்கியவர்

ஏற்கனவே கட்டிப்பிடிச்சுட்டாரு. இனி ஒன்றும் செய்யமுடியாது. ஏன் என்றால் தாயகத்தில இருக்கிற மக்களின் நிலமை அப்படி. மக்களின் அவலங்கள் தீர்க்கப்படும்வரை இனி எங்களுக்கு தெருவில போறவன் எல்லாம் எல்லாரும் போராண்டி பார் உன் புருசன் நிலைதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.