Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு உதவி தொடர்பில் சீனாவுக்கும் இந்தியாவிற்கும் இடையில் முறுகல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு உதவி தொடர்பில் சீனாவுக்கும் இந்தியாவிற்கும் இடையில் முறுகல்

[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2009, 01:49.00 AM GMT +05:30 ]

இலங்கைக்கு உதவி புரிவது தொடர்பில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தை திருப்திப்படுத்தி, நன்மதிப்பை பெறும் நோக்கிலேயே சீனா, இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருவதாக சீன அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை இந்து சமுத்திரத்தின் வர்த்தக கேந்திர நிலையமாக காணப்படுவதால், சீனாவின் வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கில் இலங்கையை இதன் மூலம் பயன்படுத்திக் கொள்ள சீனா முயல்வதாக இந்தியா கருதுகிறது.

எறிகணைகள் உள்ளிட்ட பாரிய அளவிலான ஆயுதங்களை, சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளமை வெளிப்படையான உண்மை.

கடந்த வருடத்திலும், இடைக்கிடையிலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதியினை சீனா வழங்கி, இலங்கைக்கு நிதி வழங்கும் மிக முக்கிய நாடாக பரிணமிக்கிறது.

ஜியன் 7 தாக்குதல் ஏவுகணைகள், விமான எதிர்ப்பு ஆயுதங்கள், ஜே வை 11 முப்பரிமான விமான கண்காணிப்பு ரேடார் என பல்வேறு போரியல் உபகரணங்களை சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளது.

அமெரிக்கா இலங்கைக்கான தமது நேரடி உதவிகளை இடைநிறுத்திக் கொண்டதன் பின்னர், அந்த பணியை சீனா மேற்கொண்டு வருவதாக புள்ளி விபர நுட்பவியலாளர் பரஹ்மா செல்லானி தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி சீனா, பாகிஸ்தான் அரசாங்கத்தையும் இலங்கைக்கு ஆயுத உதவிகளை வழங்க வகை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானின் பொருளாதாரம் ஸ்திரமற்று இருப்பினும், இலங்கைக்கு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் இராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.

அத்துடன் இலங்கையின் விமானப் படையினருக்கு பாகிஸ்தான் பயிற்சிகளை வழங்கியிருந்தமையும், இலங்கையின் வடக்குப் பகுதியின் பல்வேறு வான் தாக்குதல்களை வழிநடத்தியிருந்தமையும் உலகம் அறிந்த உண்மை என செல்லானி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை, இந்து சமுத்திரத்தின் முக்கிய கேந்திர நிலையமாக இருப்பதால், இலங்கை ஊடாக பொருள் மற்றும் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட சீனா திட்டமிட்டுள்ளது.

இதன் காரமாணவே மஹிந்தவின் சொந்த ஊரான ஹம்பாந்தொட்டையில் பாரிய நவீனத்துவத்துடன் கூடிய துறைமுகம் ஒன்றினையும் நிர்மாணிக்க சீனா ஒத்துழைத்துள்ளது.

இதன் மூலம் சீனா இந்தியாவின் பசுபிக் நாடுகளுடனான் தொடர்பாடல் தகவல்களை கண்காணிக்க கூடும் என இந்தியா அஞ்சுகிறது.

இலங்கையில் மாத்திரம் இன்றி, பாகிஸ்தான், மியன்மார் உள்ளிட்ட நாடுகளிலும் துறைமுகங்களை நிர்மாணிக்க சீனா உத்வேகத்துடன் செயற்படுகிறது.

எனவே இது இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் வல்லமையை தகர்க்கும் சீனாவின் சதியாக இந்தியா கருதி வருவதாக இந்திய செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

தமிழ்வின்

இலங்கைக்கு உதவி தொடர்பில் சீனாவுக்கும் இந்தியாவிற்கும் இடையில் முறுகல்

இது உடான்ஸு... இதை நான் நம்ப மாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு உதவி தொடர்பில் சீனாவுக்கும் இந்தியாவிற்கும் இடையில் முறுகல்

முறுகல் , கருகல் , விரிசல் என்ன ஏற்பட்டாலும் இலங்கை எப்போதும் சீனாவின் பக்கம் தான் நிற்கும் .

இது உண்மையாக இருந்தால் ....... இனி , சீனா , இலங்கை , பாகிஸ்தானிடமிருந்து நல்ல அரசியல் அனுபவங்களை ரோவும் , மத்திய அரசும் பெற்றுக்கொள்ளட்டும் .

கனவு காணுகின்றீர்களா? அந்த அளவு புத்தியிருந்தால் இந்தியா ஏன் மகிந்தாவின்ரை கு** கழுவுகினம். தலைக்கு மேலே தண்ணி போனதன்பின்தான் றோவுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நடந்தது தெரியும். :lol::(:)

இந்தியா விரைவில் சிறிலங்காவினால் கைகழுவப்படும் ஒரு நாடு. அதாவது "ரொயிலற் ரிசு"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் முறுகலோ உரசலோ எதுதான் ஏற்பட்டாலும் ஈழத்தமிழர் விடயத்தில் எல்லா சைத்தான்களும் ஒரே அணிதான். நெடுமாறன் ஐயா ஒருமுறை கூறியது நினைவிற்கு வருகிறது " எதிரும் புதிருமாகவுள்ள எல்லா உலகநாடுகளையும் ஒன்றுசேரவைத்துள்ள பெருமை தம்பி பிரபாகரனையே சாரும்" என்று.

" அடியைப்போல் அண்ணன் தம்பிகூட உதவமாட்டார்கள்"

எங்களை அழித்து விட்டு இந்தியா,சீனா செய்யும் அனைத்து முதலீடுகளும் தவிடுபொடியாக்கப்படும்--உங்களுக்கு வர்த்தகம் செய்வதற்காக எங்களை கொல்கிறீர்களா,

மலையாள நாய்களே உங்களுகு இருக்குடா.......

  • கருத்துக்கள உறவுகள்

சினாவிடம் முறுகினால் கம்பியை காய்ச்சி கு.............ல தடவிவிடுவானுகள் சீனாக்காரன் அப்புறம் சுடுகிறது என்று புலம்ப வேண்டியதுதான்[வெட்டு விழாது என நினைக்கிறேன்] :lol::(:)

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா முறுகுப்பட்டுக்கொண்டிருக்

சொந்தக்கோடி அருனாச்சலப்பிரதேசத்தை போய்பார்க்க வழியில்லை இந்த லச்சனத்தில சிறிலங்கா கேட்டு என்ன முருகல் வேண்டி இருக்கு? முடக்கிக்கொண்டு படுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.