Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளை ஒழிக்க ஆயுத உதவி, பயிற்சி அளித்த இந்தியா, பாக். - கூறுகிறார் நாணயக்காரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை ஒழிக்க ஆயுத உதவி, பயிற்சி அளித்த இந்தியா, பாக். - கூறுகிறார் நாணயக்காரா

புதன்கிழமை, ஏப்ரல் 29, 2009, 12:36 [iST]

கொழும்பு: இந்தியாவும், பாகிஸ்தானும் எதிரிகளாக இருக்கலாம். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை ராணுவத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், இந்தியாவும், பாகிஸ்தானும் வழங்கிய தாராள பயிற்சி, உதவிகள், ஆயுதங்கள்தான் காரணம் என்று கூறியுள்ளார் இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளரான பிரிகேடியர் உதய நாணயக்காரா.

இரு நாடுகளும் தனித் தனியாக தங்களுக்கு பெரும் உதவிகளைச் செய்ததாகவும், நீடித்த, நிலையான உதவிகளாக அவை இருப்பதாகவும் கூறியுள்ளார் நாணயக்காரா.

இலங்கைக்கு இந்தியாதான் பெருமளவில் உதவிகள் செய்து வருவதாக ஆரம்பத்திலிருந்தே தமிழக அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இதை இந்திய அரசு மறுத்து வந்தது. நேற்று கூட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இலங்கைக்கு இந்தியா ராணுவ ரீதியாக எந்த உதவிகளையும் செய்யவில்லை என்று ரொம்ப உறுதியாக கூறியிருந்தார்.

ஆனால் இந்தியாவும், பாகிஸ்தானும் தனித் தனியாக தங்களுக்கு பேருதவி புரிந்துள்ளதாகவும், இதனால்தான் போரில் தங்களுக்கு வெற்றி கிடைத்ததாகவும் இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் தெளிவாக்கியுள்ளார்.

இதுகுறித்து நாணயக்காரா கூறுகையில், எங்களுக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் நிறையப் பயிற்சிகளை அளித்தன. இரு நாடுகளும் பெருமளவில் எங்களுக்கு உதவி புரிந்தன. நான் கூட இரு நாடுகளிலும் பயிற்சி பெற்றேன்.

எங்களது அதிகாரிகளை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் அனுப்பி வைத்து பயிற்சிகளைப் பெற வைத்தோம். அதி நவீனப் பயிற்சிகளை இரு நாடுகளும் எங்களுக்கு அளித்தன.

நான் இந்தியாவில் நான்கு பயிற்சி வகுப்புகளிலும், பாகிஸ்தானில் 3 பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொண்டேன்.

கடைசியாக நான் ஆந்திர மாநிலம் செகந்தராபாத்தில் பயிற்சி பெற்றேன்.

இரு நாடுகளின் நவீன ராணுவ தொழில்நுட்பங்களை எங்களது அதிகாரிகள் கற்றுக் கொண்டனர், பெற்றுக் கொண்டனர்.

இந்தியாவும், பாகிஸ்தானும் எங்களுக்கு அளித்த அதி நவீனப் பயிற்சிகள், வழங்கிய ஆயுதங்கள்தான் இன்றைய வெற்றிக்கு முக்கிய காரணம். அரசியல் தைரியமும், திறமையான ராணுவத் தலைமையும், கூடவே இந்தியா, பாகிஸ்தான் அளித்த பயிற்சி, கிடைத்த அதி நவீன ஆயுதங்கள் எங்களது வெற்றிக்கு முக்கிய காரணம்.

எங்களிடம் தற்போது அனைத்து வகை அதி நவீன ஆயுதங்களும் உள்ளன. சாதாரண ஹெல்மட், பூட்ஸ் முதல் எங்களுக்கு என்னவெல்லாம் தேவைப்பட்டதோ அத்தனையும் இந்தியா, பாகிஸ்தான் மூலம் கிடைத்துள்ளது.

இந்தியாவும், பாகிஸ்தானும் எதிரிகள் என்பது தெரியும். ஆனால் அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் எங்களது எதிரியை அழிக்க இரு நாடுகளும் தாராளமாக உதவியுள்ளன.

இரு நாடுகளும் எங்களுக்கு நண்பர்கள். எனவே யாருக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

அதேபோல முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி பலகல்லே கூறுகையில், எனது பதவிக்காலத்தில் 80 சதவீத பயிற்சியை நான் இந்தியாவில்தான் பெற்றேன். அதேபோல பாகிஸ்தானிலும் நான் பயிற்சி பெற்றேன்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் எங்களது அதிகாரிகள் அடிக்கடி சென்று பயிற்சி பெற்று வருகின்றனர். எங்களுக்கு பயிற்சி அளிக்க இரு நாடுகளும் எப்போதும் தயாராகவே உள்ளன.

நான் ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்தபோது, எங்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் இந்தியாவுக்குப் பிரச்சினை இருந்தது. அந்த சமயத்தி்ல பாகிஸ்தான் எங்களுக்கு ஆயுதங்களை அளித்து கை கொடுத்தது.

சில முக்கிய சாதனங்களைத் தருவதில் கொள்கை ரீதியாக இந்தியா தயங்கியது. ஆனால் பாகிஸ்தான் தயக்கம் காட்டவில்லை. தாராளமாக உதவியது.

அதேபோல சீனாவிடமிருந்தும் நாங்கள் ஆயுதங்ளைப் பெற்று வருகிறோம். எங்களுக்கு முதலில் ஆயுதங்கள் தேவை, பிறகு பணம் தருகிறோம் என்று கூறினோம். அதை சீனா ஏற்றுக் கொண்டு ஆயுதங்களை அளித்தது. இருப்பினும் வாங்கிக் கொண்ட ஆயுதங்களுக்கு நாங்கள் பணம் செலுத்தி விட்டோம்.

அமெரிக்காவும் பயிற்சி அளித்தது..

அதேபோல அமெரிக்காவும் கூட எங்களுக்கு பயிற்சி அளிப்பதில் உதவியது. இருப்பினும் அவர்களின் பங்கு குறைவுதான். சில அதிகாரிகளுக்கு மட்டுமே அவர்கள் பயிற்சி அளித்தனர்.

வனப்பகுதிகளில் போர் புரிவது உள்ளிட்ட முக்கியப் பயிற்சிகளை நாங்கள் இந்தியாவில்தான் பெற்றோம். அங்கு எங்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்தனர்.

அதேபோல, தற்போது நடந்து வரும் ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக முக்கிய உளவுத் தகவல்களையும் எங்களுக்கு அவ்வப்போது அளித்து வந்தது இந்தியா.

இந்திய கடல் பகுதிகளில் இந்திய கடற்படையும் எங்களுக்கு உதவியது (இந்திய கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் ஒருவர் கூட உருப்படியாக மீன் பிடிக்க இயலாத நிலை இருப்பது ஏன் என்பது இப்போதுதான் விளங்குகிறது).

எங்களுக்கு விடுதலைப் புலிகள் பெரும் மிரட்டலாக விளங்கினர். அவர்களது போர் உத்திகள் ஒரே மாதிரியாக இருக்காது. எனவேதான் நாங்கள் தடுமாறினோம். ஆனால் இந்தியா, பாகிஸ்தான் கொடுத்த பயிற்சியின் மூலம் அதை சமாளிக்கும் திறமை எங்களுக்குக் கிடைத்தது என்றார்.

இலங்கைக்கு உதவுவதில் யார் பெரியண்ணன் என்ற போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மாறி மாறி இலங்கை ராணுவத்தை பலப்படுத்தி விட்டு விட்டன. ஆனால் இது அப்பாவித் தமிழர்களை பதம் பார்க்கத்தான் உதவியுள்ளது என்பதை இந்தியா உணரவில்லை அல்லது உணர விரும்பவில்லை என்பது வேதனையான உண்மை.

தற்ஸ்தமிழ்

நாணயக்கார அண்ணே, பயிற்சி யாரும் கொடுக்கலாம் அண்ணே --போர் அனுபவம் புலிகள் தான் உஙகளுக்கு தந்தவர்கள் ,உண்மையாக நன்றி சொல்ல வேணும் என்று நினத்தால் புலிகளுக்கும் நன்றி சொல்லுங்கோ

இவர்கள் இல்லமல் இவர்களால் மாவில் ஆற்றைக் கூட திறக்க முடியாது, அதானே பார்த்தேன் அது எப்படி 2000ம் ஆண்டு பார்த்து பார்த்து ஓடி வந்தவன் எல்லாம் இருந்தாப் போல் மாவீரன் ஆனவன் என்று ??? இதுக்குள்ள அமேரிக்கா தங்களிடம் பாடம் படிக்க வேண்டுமாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தி ஆங்கிலத்தில் கிடைக்குமா

  • கருத்துக்கள உறவுகள்

இதபார்டா இலங்கை இராணுவத்தின்ர வீரத்தை...

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பயிற்சி எடுத்தும் புலிகளுடன் சண்டை பிடிக்க முடியாமல் இரசாயன வாயு பாவித்து கொன்ற உங்கள் வீரத்தை என்னவென்று சொல்வது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த்திய ஊடகங்களும் இதை வெளியிட்டுள்ளது

http://www.indianexpress.com/news/india-pa...-tigers/452439/

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை ஆயுத உதவிகளும் ...........பயிற்சிகளும் பெற்ற உங்களுக்கு ..........விரைவில்பாடம் புகட்ட படும். இனவெறி ல ங்காவுடன் மட்டும் அல்ல

.......முழு உல்கையும் .தன பக்கம் ...........கவனிக்க வைத்து இருக்கிறார். நம்ம தலைவர். .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகள் "வீரர்கள் என்று ஒப்புக்கொண்டீர்களே!! ....அதுவே போதும்...

இந்தியா செய்துவரும் மறுப்புக்கு உங்கள் சொல்லடிகள் பெரும் ஆப்பு...இனித்தாங்க முடியாது என்றுதான் முகர்ஜியும் ஒத்துக்கொண்டிருக்கிறாரோ?!..

நாணயகாறா இந்தியனும் பாக்கிஸ்தானியும் உன்னை மட்டுமல்ல உன் இனத்தையே கூண்டோடு அழிக்கப்போகிறான் இதுதான் அவங்களின் திட்டம் காவியுடைதரித்த காட்டேறிக்கூட்டத்துக்கும் சொல்லிவை புத்தன் கச்சையோடு வந்துநின்றாலும் உங்களைக்காப்பாற்ற முடியாது.

அப்போது வருவீர்கள் எம்தலைவன் காலடிக்கு ஐயோ ஐயோ எங்களைக்காப்hபற்றுங்கள் உங்களை விட்டால் எங்களினத்துக்காக குரல் கொடுக்க இந்த உலகில் வேறுயாருமில்லையென்று. அப்போதுதான் இரத்தம்குடிக்குமுனக்கும் உன்கொலைவெறியினத்திற்கும் தெரியவரும் எம் தலைவனின் ஆழுமை. நாம் தமிழீழத்திலிருந்து நிச்சயம் இதைப்பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.