Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தர் போல் ஜெயலலிதாவும் திடீர் ஞானம் பெற்றாரா..? - கனிமொழி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார மேடைகளில், தமது கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு ஆற்றவிருக்கும் செயற்திட்டங்கள் பற்றிப் பிரச்சாரம் செய்வதற்காக நடைபெறும் பிரச்சார மேடைகள், ஒரு கட்டத்தின் பின், எதிர் போட்டியாளரைத் தாக்கிப் பேசுவதே பிரச்சாரம் என்றாகிவிட்டது. இதற்கு விதிவிலக்காக ஒருசில பேச்சாளர்கள் இருந்தார்கள். அவர்களில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கலைஞரின் மகளுமாகிய கனிமொழியும் ஒருவர். ஆனால் தற்போது அவரும் எதிர்த் தாக்குதல் பிரச்சாரத்தில் குதித்துவிட்டது போல் தெரிகிறது.

திருவொற்றியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், போதிமரத்து புத்தர்போல் ஈழத்தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு திடீர் ஞானோதயம் வந்துள்ளமை ஆச்சரியமானது. ஆனால் அது வெறும் தேர்தற்கால அக்கறைதான். தேர்தல் முடிந்ததும் ஈழத்தமிழர் பிரச்சினையை அவர் மறந்து விடுவார் எனக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசுகையில், ஈழத்தமிழர் பிரச்சினைக்காக குரல் கொடுத்து வரும் வைகோ சொல்லிக்கூட ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை. தற்போது, குரு ரவிசங்கர் வந்து சொன்னதும், புத்தருக்கு போதிமரத்தடியில் ஞானம் கிடைத்தது போல், அவருக்கும் திடீர் ஞானோதயம் வந்துள்ளது. ஆனால் இது உண்மையான ஒரு மாற்றமோ தெளிவோ அல்ல. வெறும் தேர்தல்கால அக்கறைதான். தேர்தல் முடிந்ததும் ஈழத் தமிழர் பிரச்சினையை அவர் மறந்து விடுவார். மக்களிடமிருந்து வெகு தூரத்தில் இருக்கும் தலைவர் வேண்டுமா, உழைக்கும் மக்களைப் பற்றியே இருபத்தி நான்கு மணி நேரமும் சிந்திக்கும் தலைவர் வேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமையவும், தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்கள் தொடரவும், தி.மு.க., கூட்டணியை ஆதரியுங்கள் எனக் குறிப்பிட்டார் எனத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://ww1.4tamilmedia.com/index.php/2009-...-05-05-20-19-29

உங்களுக்கு கிடைத்த ஞானம் ராஜ்சபா பதவியோடு போய்விட்டதா?

அரசியலுக்கு வர தேவைப்பட்ட ஈழத்தமிழர் விவகாரம் பதவி கிடைச்சதும் தேவைப்படவில்லையோ??.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உழைக்கும்???? "மக்களைப்" பற்றியே இருபத்தி நான்கு மணி நேரமும் சிந்திக்கும் தலைவர்::: மக்கள் - அழகிரி, ஸ்டாலின், கனிமொழி மற்றூம் பலர் (எத்தனை பிள்ளைகளப்பா??).

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த 500 சிட்டையுடன்(சுவிசு வங்கியில்) நாம் படும் பாடு நாராயணா நாராசமாக எங்களை தவிக்க விடுகிறாய--பழமொழி--பழம்--கனி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார மேடைகளில், தமது கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு ஆற்றவிருக்கும் செயற்திட்டங்கள் பற்றிப் பிரச்சாரம் செய்வதற்காக நடைபெறும் பிரச்சார மேடைகள், ஒரு கட்டத்தின் பின், எதிர் போட்டியாளரைத் தாக்கிப் பேசுவதே பிரச்சாரம் என்றாகிவிட்டது. இதற்கு விதிவிலக்காக ஒருசில பேச்சாளர்கள் இருந்தார்கள். அவர்களில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கலைஞரின் மகளுமாகிய கனிமொழியும் ஒருவர். ஆனால் தற்போது அவரும் எதிர்த் தாக்குதல் பிரச்சாரத்தில் குதித்துவிட்டது போல் தெரிகிறது.

திருவொற்றியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், போதிமரத்து புத்தர்போல் ஈழத்தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு திடீர் ஞானோதயம் வந்துள்ளமை ஆச்சரியமானது. ஆனால் அது வெறும் தேர்தற்கால அக்கறைதான். தேர்தல் முடிந்ததும் ஈழத்தமிழர் பிரச்சினையை அவர் மறந்து விடுவார் எனக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசுகையில், ஈழத்தமிழர் பிரச்சினைக்காக குரல் கொடுத்து வரும் வைகோ சொல்லிக்கூட ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை. தற்போது, குரு ரவிசங்கர் வந்து சொன்னதும், புத்தருக்கு போதிமரத்தடியில் ஞானம் கிடைத்தது போல், அவருக்கும் திடீர் ஞானோதயம் வந்துள்ளது. ஆனால் இது உண்மையான ஒரு மாற்றமோ தெளிவோ அல்ல. வெறும் தேர்தல்கால அக்கறைதான். தேர்தல் முடிந்ததும் ஈழத் தமிழர் பிரச்சினையை அவர் மறந்து விடுவார். மக்களிடமிருந்து வெகு தூரத்தில் இருக்கும் தலைவர் வேண்டுமா, உழைக்கும் மக்களைப் பற்றியே இருபத்தி நான்கு மணி நேரமும் சிந்திக்கும் தலைவர் வேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமையவும், தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்கள் தொடரவும், தி.மு.க., கூட்டணியை ஆதரியுங்கள் எனக் குறிப்பிட்டார் எனத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://ww1.4tamilmedia.com/index.php/2009-...-05-05-20-19-29

அனைத்து கட்சிகளுக்குமே, தேர்தல் ஆதாயங்களுக்கு சாதக நிலைமைகளே அவைகளின் கொள்கைகளாகும் போது, அந்த வகையாகவே சமகாலத்தில் ஜெயாவுக்கும் ஈழத்திற்கு சார்பான போக்கு கொள்கையாகும் போது, ஈழத்திற்கு எந்தத்தீங்கும் வந்துவிடாது. ஆனால் ஈழத்தின் இரத்தப் பலியில் பதவிச்சுகத்தை அநுபவித்துக் கொண்டிருக்கும் திமுக வின் அரசியல் முதலுக்கே ஆபத்து வந்துவிட்டது என்பது மட்டும் உண்மை.

அடேங்கப்பா...நம்ம கனிமொழியக்கா.. கருவிலேயே..அப்பாவிடம் இருந்து ஞானம் பெற்றவவோ!!!

:o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பனை காப்பாற்ற மகள் இடும் கூக்குரலா?

தேர்தலிற்காகவேனும் ஜெயா அம்மையாருக்கு ஈழத்தை அமைப்பேன் என்ற வார்த்தைகள் வாயில் வந்தனவே

உன்னப்பன் இன்னும் வாயே திறக்கவில்லை

எல்லாம் ,

கடிதம்,தந்தி ,கவிதை

இந்த லட்சணத்தில் இவ ஒருத்தி.......

முழுக் குடும்பமே ஈழத்தமிழரின் பிணக்குவியலின் மீது அரசியல் வெற்றி பெறத்துடிக்கின்றது. அப்பனுக்கு மகள் தப்பாமல் தான் பிறந்திருக்கிறாள். நீலிக் கண்ணீரும் பொய்யும் புரட்டும் இன்னும் எத்தனை நாளைக்கு. வைக்கற் பட்டரை நாயைப் போல செய்யவும் மாட்டார்கள் செய்பவர்களை செய்ய விடவும் மாட்டார்கள். இத் தேர்தலுடன் திமுக என்ற ஒரு கட்சியே தமிழகத்தில் இருக்கக் கூடாது.

ஜானா

தழிழரை கொண்டு குவிக்கும் தி.மு.க விலும் பார்க்க ஜெயலலிதா பரவாயில்லை. எங்கலுக்கு கருநாயும் சோனியாலும் தோற்க வேண்டும்.

அவ பெற்றாவோ என்னவோ ஆனால் உங்கப்பன் இன்னும் பெறவில்லை என்பது நிச்சயம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முந்தநாள் வந்த மூ மூ மூ .......சேங்கு அதுவும் பெயரில கனி என்ற சொல்லைவைத்துக்கொண்டு கனி இல்லாமல் வெம்பி பழுத்தது போல கதைக்குது,

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உங்களுக்கு கடசிவரை ஞானம் வராதோ :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப உங்களுக்கு கடசிவரை ஞானம் வராதோ :D

இல்லை சகி அவவுக்கு கடைசியா தான் (சா)ஞானம் வருமாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தர் போல் ஜெயலலிதாவும் திடீர் ஞானம் பெற்றாரா..? - கனிமொழி

பிள்ளை கனிமொழி உந்த கேள்வியை உன்ரை கொப்பருட்டை கேட்டுப்பாரன்?

அப்போ யாருக்குமே மனித குணம் இன உணர்வும் எப்பவுமே இருக்காதா?.. இந்த உண்மையை சொன்ன உங்களுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் என்றால் அசிங்கமா?

மற்றவர்கள் தவறு செய்தது, தவறு செய்வது ஒருபுறம் இருக்கட்டும். என்றாலும்... நாங்கள் தவறு செய்வதை நிறுத்திக்கொள்வோம். என்ன இருந்தாலும்.. கனிமொழி அவர்கள் எங்களுக்காக குரல் கொடுத்து இருக்கின்றார். விமர்சனம் செய்வதைவிடுத்து அமைதியாக இருப்பது நல்லது என்று நினைக்கின்றேன். நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றவர்கள் தவறு செய்தது, தவறு செய்வது ஒருபுறம் இருக்கட்டும். என்றாலும்... நாங்கள் தவறு செய்வதை நிறுத்திக்கொள்வோம். என்ன இருந்தாலும்.. கனிமொழி அவர்கள் எங்களுக்காக குரல் கொடுத்து இருக்கின்றார். விமர்சனம் செய்வதைவிடுத்து அமைதியாக இருப்பது நல்லது என்று நினைக்கின்றேன். நன்றி!

ஆம் உண்மைதான்!

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களால்த்தான் எம்மவர் இவ்வளவு

அவலத்துக்குள்ளாகி விட்டார்கள்.

ஈழத்தின் தற்போதைய மனித அழிவைப்பற்றி என்னசொன்னார்? அல்லது அவருக்கு ஏதாவது தெரியுமா?

எதை எப்போது செய்யவேண்டுமோ அதை அப்போது செய்யவேண்டும்.அதனால்த்தான் பலன் உண்டு.

அஞ்சலிகளும் , கவிதைகளும்,கதைகளும்

அல்லது அவைகளை வைத்து திரும்பத்திரும்ப அரசியல் இலாபம் தேடுவது அவரவர் இயலாமையே.

anton-kanimoli.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.