Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குட்டிக்கதை

Featured Replies

சற்று வடிவாக மீண்டும் ஒரு முறை பார்த்தாள்..ம்ம் அவரே தான் .. ஏன் இவரும் மாறு வேடத்தில் வந்திருக்கார் என்று யோதித்து விட்டு..அவரிடம் போய் ..

  • Replies 313
  • Views 33k
  • Created
  • Last Reply

தாங்கள் வன்னி இளவரசனை போல் தென்படுகிறீர்கள் ஏன் இந்த மாறு வேடம்? என்று கேட்டாள் ம்ம் எம் நாட்டுக்குள் உளவாளிகளின் நடமாட்டம் அதிகரித்து விட்டது அது தான் என்று சொல்லி கொண்டே எங்கிருந்தோ அவளை நோக்கி வீசப்பட்ட குறுவாளை தன் உடைவாளால் தட்டிவீழ்த்தினான்

  • தொடங்கியவர்

சிறுகுறிப்பு இந்த கதை நீளக்கதையா போகுது யாராவது முடிச்சு வையுங்கப்பா

மழை முகத்தில் படுவது போல் இருக்க திடுகுற்று விழித்தாள் ம்ம் அத்தனையும் கனவு அம்மா செம்புடன் கையில் தண்ணியுடன் பக்கத்தில் என்னடி விடிந்தும் கனவோ எழும்படி படி என்று காளிபோல் எதிரே நின்றாள் சே கனவுகூட காணமுடியாத வாழ்க்கை..

எப்படி இருக்கு யாராலும் முடிக்கமுடியவில்லை நான் முடித்து விட்டேன் :P :evil: :twisted: :shock: :roll:

  • தொடங்கியவர்

இது நிழல் நிஜமல்ல

முன்னொருகாலத்திலே பத்மினி என்னும் பெயர் கொண்ட நங்கை தனது வெள்ளை குதிரையிலே தெற்கு நோக்கி சென்று ..... கொண்டிருந்தாள்.. இருட்டுவதற்குள் தென்னாட்டை அடைந்துவிடும் வேகத்துடன் குதிரையை முடுக்கிவிட்டாள்.. சந்தனவாசம் லேசாக காற்றில் மிதந்து வந்தது.. ''மடத்தை நெருங்கிவிட்டோம் சேனா'' சேனா என அவளால் அழைக்கப்பட்ட குதிரை புரிந்து கொண்டதற்கு அடையாளமாய் ஒரு முறை கனைத்துவிட்டு இன்னும் வேகத்தை கூட்டியது

அவள் ஆனந்தமுற்றாள் பல கற்பனைகளில் வேறு உலகுக்கு சென்றாள். இதனால் குதிரை வேகமெடுத்ததை அவளால் அறிய முடியவில்லை. அவ்ளோ கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். சேனாவோ மடத்தை விரைவில் அடைய வேண்டும் என்னும் சந்தோசத்தில் தலை கால் புரியாமல் ஓடியது.. மடத்தில் இரவு நேரத்தில் கொடுக்கப்படும் சோற்றை தவரவிட்டுவிடக்கூடாதே என்பது அவளது எண்ணம் என்பதை சரியாக புரிந்து கொண்ட அவளது குதிரை.. மடத்தை நெருங்க நெருங்க இன்னும் வேகமாக சென்றது... மடத்தை நெருங்கிய போது அவளது ஆசை வீண்போகவில்லை...

மடத்தில அப்போது தான் இராப் போசனத்தை வழங்க ஆயத்தம் செய்து கொன்டிருந்தனர்.வரும் வழிப்போக்கர்களுக்கென்று சங்கிலிய மன்னனால் கட்டப்பட்டது அந்த மடம். அன்று நிலா வெளிச்சமாகையால் பலர் தமது பயணத்தை மேற்கொண்டிரிந்தனர்.ஆனையிறவை

  • தொடங்கியவர்

எப்படி இருக்கு யாராலும் முடிக்கமுடியவில்லை நான் முடித்து விட்டேன் :P :evil: :twisted: :shock: :roll:

நன்றி கதையை கனவாக முடித்து வைத்தமைக்கு. அப்புறம் ஏன் இவ்வளவு கோவம்.

கதை நல்லாவே இல்லை..... :evil: :evil:

_________________________________________

  • தொடங்கியவர்

கதை நல்லாவே இல்லை..... :evil: :evil:

_________________________________________

அப்படியா?? :cry: சரி பறவாயில்லை அடுத்ததை நீர் எழுதும்

அதிகாலை நேரம் பறவைகள் தமது கூட்டில் இருந்து வரவேற்பு கீதம் இசைக்க காலை கதிரவன் கிழக்கு திசையில் இருந்து புமியை நோக்கி மெல்ல மெல்ல தவளத்தொடங்கினான்......

  • தொடங்கியவர்

விவசாயிகள் கலப்பையை தோளில் சுமந்த வண்ணம் வயலை நோக்கிச் சென்றனர்.

கீதா படுக்கையில் புரண்டு படுத்தாள்.

ஏய் கீதா எழும்பு எழும்பு மணி என்னாகிறது??

இன்னும் என்ன தூக்கம் பாடசாலைக்கு கிளம்ப வேண்டும் என அம்மாவின் கூப்பாடோ வீதிவரை கேட்டது....

:arrow:

இன்னும் ஒரு ஐந்து நிமிடம் அம்மா என்று மறுபக்கம் திரும்பி படுக்க ஆயத்தமாகும்போது "ம்ம் படு படு கொஞ்ச நேரத்தில் செம்பும் தண்ணியும் தான் வரும் முகத்திற்கு" என்ற வார்த்தையை கேட்டு தூள்ளி எழுந்தாள்...

எழுந்து நேரத்தை பாத்தாள், நேரம் ஏழு மணி, எட்டுமணிக்கு பாடசாலையில் இருக்க வேண்டும், இல்lலாவிடில் மொட்டைவாத்தி தலையில் டொக்கு டொக்கு என்று குட்டுவார். அதை நினைத்தபோதே தலை வலித்தது , அவசரம் அவசரமாக குளித்துவிட்டு கண்ணாடியில் வந்து தை சீவத்தொடங்கினாள், அப்போதுதான் நினைவில் வந்தது எங்கே அவனை கானவில்லை, ஒவ்வரு நாளும் உடற்பயிற்ச்சிக்கு போயிற்று சரியாக, தான் தலை சீவும் நேரத்தில் அவன் அங்கு இருப்பான் தன் நன்பனுடன். அவள் மனது தவித்தது. எங்கே அவன். பொங்கும் பூங்குனலில் பாடல் போய் கொண்டிருந்தது "எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா".............

அந்த பாடல் தனக்கென ஒலிப்பதாக உண்ர்ந்தாள். மீண்டும் அம்மாவின் அலறல் "என்ன கண்ணாடிக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறாய்.. பள்ளிக்கூடம் போகும் முன் எதாவது உதவி செய்வோம் என்று நினைப்பு இல்லை எந்த நேரம் பார் கண்ணாடிக்கு முன்னால் தான்" என்று அம்மா புலம்பத்தொடங்கினாள். அம்மா எனக்கு நேரமாகிவிட்டது பின்னேரம் வந்து என் செல்ல அம்மாவிற்கு உதவி செய்கின்றேன் என்றவாறே முத்தம் ஒன்றை கொடுத்து விட்டு சாப்பாட்டு வோக்சையும் எடுத்துக்கொண்டு சைக்கிளை எடுத்தாள். அப்போ தான் தங்கை நேற்று சைக்கிளை எடுத்து காத்து போக வைத்திருந்தது தெரிந்து. இப்போ இதற்கு சண்டை போட்டால் நேரம் போய் விடும் பின்னார் வந்து அவாவை கவனிப்போம் என்று நினைத்து விட்டு சைக்கிளை உருட்டத் தொடங்கினாள் பக்கத்தில் உள்ள சைக்கிள் கடைக்கு. அந்த வெண்ணிலா எங்கையாவது கண்ணில் படக்கூடாதா என்று நினைத்துக்கொண்டே......

என்ன ஆச்சரியம் அவளின் வெண்ணிலா அதுதாங்க கறுப்புநிலாவாகிய காந்தன் சைக்கில் கடையில் பஞ்சர் ஒட்டிக் கொண்டிருந்தான் தனது சைக்கிளுக்கு அவனைக்கண்டதும் ஏனோ தெரியவில்லை புதுசெருப்புப் போட்டு நடப்பதுபோல அவளின் கால்கள் தடுமாறிப் பின்னியது கிட்ட வந்து விட்டாள் கடைக்காரன் பஞ்சர் போட நேரமாகும் பின்னேரம் வந்து எடுக்கும் படி கூறினான் இப்ப என்ன செய்வது பள்ளிக்கூடத்துக்கு நடந்து போக நேரமாகி விடுமே யோசித்தபடி நடக்கத் தொடங்கினாள் பின்னால் ஏதோ சத்தம் காந்தன்தான் சைக்கிலில் வந்து கொண்டிருந்தான் அவனின் சைக்கிளுக்கு பெல்லைத்தவிர மற்றதெல்லாம் சத்தம் போட்டன கிட்ட வந்தவன் சைக்கிலை நிப்பாட்டி கேட்டான் "பள்ளிக்கு நேரமாகிவிட்டால் ஏறுங்கோ கொண்டு போய் விடுகிறேன்" எண்டு ஆயிரம் பட்டாம்பு|ச்சிகள் பறப்பது போல ஒரு பிரமை ஆனாலும் வெட்கம் புடுங்கித்தின்டது அவளை யோசித்தாள் போகலாமா?..வேண்டாமா..,,? என............ (தொடருங்கள்)

சைக்கிளில் ஏறுவதா விடுவதா என்று அவளுக்குள் சில நிமிடங்கள் பெரும் போராட்டம் நடந்தது. முன்பின் தெரியாதஅவனுடைய சைக்கிளில் ஏறுவது தன் பெண்மைக்கு அழகில்லை என்ற முடிவுக்கு வந்தாள்.அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் தவித்தாள் பின் ஒருவாறு சமாளித்துக்கொண்டு மன்னித்துக்கொள்ளுங்கள் நான் உங்களுடைய வண்டியில் ஏறமுடியாது. நான் நடந்து செல்கின்றேன். என்னை வற்புறுத்தாதீர்கள் என்றபோது அவனுக்குள்ளும் அவளைப்பற்றி ஒரு உயர்வான எண்ணம் தோன்றியது.

சைக்களில் இருந்து இறங்கிக்கொண்டே நான் உங்களுடைய முடிவை மதிக்கின்றேன். உங்கள் முடிவு சரியான முடிவுதான் என்று சொன்னான். அவன் சைக்கிளை உருட்டிக்கொண்டு அவளுடன் நடந்துகொண்டிருந்தான். அவளும் அவனுடன் பேசிக்கொண்டு நடந்து கொண்டிருந்தாள். தலையை குனிந்துகொண்டு அவனுடன் பேசிக்கொண்டு நடந்தவள் சற்றுத்தலையை துாக்கியபோது

சற்றுத்திகைத்துவிட்டாள் யார் அங்கே வந்துகொண்டிருப்பது அப்பாவா?

தொடருங்கள்.

"ம்ம் அப்பா தான்" என்றவாறு நடையில் வேகத்தை கூட்டி அப்பா வந்த தீசையை நோக்கி நடந்தாள். பிள்ளைகளின் மேல் ஆசையாத நம்பிக்கை வைத்திருக்கும் அப்பா அதை பெரிதாக எண்ணவில்லை மாறாக "என்ன பிள்ளை சைக்கிளுக்கு என்ன நடந்தது ஏன் நடந்து போகின்றாய்?"என்று கேட்டார்... கீதாவும் சைக்கிள் கடையில் என்று கூறிவிட்டு "அப்பா எனக்கு நேரம் போய் கொண்டு இருக்கின்றது. என்னை இறக்கி விடுங்கோ ஓருக்கா என்று சொல்லி முன்னால் அமர்ந்தாள். அமர்ந்து கொண்டு தான் கடைக்கண்ணால் பின்னால் திருப்பி பார்த்தாள். என்ன ஆச்சரியம் அவளின் கருப்பு நிலா காந்தனை காணவில்லை..... இனியும் எப்போது காண கிடைக்கும் என்று நினைக்கையில் தான் அப்பா மெல்ல வாய் திறந்தார். "பிள்ளை...................................

பிள்ளை வரேக்கை யாரோ பெடியன் பக்கத்திலை வந்தான் ஆரது? என்று கேட்டார் கீதாவோ தடுமாறியபடி எனக்குத் தெரியாதப்பா" என்றாள்

அப்பா : இல்லை பிள்ளை ஊர் கெட்டுப் போய் கிடக்கு வீண் கதைகள் வராமல் இருக்கவேணும் ஏற்கனவே உன்ரை கொக்கா செய்த வேலை தெரியும் தானே

கீதா : என்னப்பா நீங்கள் என்னை ஏதோ சந்தேகப்படுகிற மாதிரி கிடக்குது

அப்பா: ஏதோ சொல்லவேணும் போல கிடந்திச்சு சொன்னன் இனி நீங்கள் படிக்கிற பிள்ளையள் நல்லது கெட்டது தெரியும் தானே

பாடசாலை கிட்டியது இறங்கினாள் கீதா அன்று பாடசாலையில் படிப்பித்தது எதிலும் கவனம் செல்லவில்லை ஏன்தான் இண்டைக்கு இப்படி நடக்கிறதோ என் தன்னையே திட்டுக் கொண்டாள் பாடசாலை விட்டு தோழிகளுடன் கதைக்கவும் மனமில்லாமல் நடந்து வர வெளிக்கிட்டாள் சைக்கிள் கடையில் சைக்கிலை எடுக்கவேண்டும் எண்டதால் கொஞ்சம் வேகமாகவே நடந்தாள் சைக்கிள் கடையில் இவளின் சைக்கிலில் கையை வைத்தபடியே இருந்தான் காந்தன் இவளுக்கு மனம் படபடத்தது என்ன செய்வது ...மெல்ல மெல்ல கடையை நெருங்கிவிட்டாள்...........................

கீதாவைக் கண்டவுடன் கடைக்காரன் சைக்கிளை எடுத்து வெளியில் விட்டு பிள்ளை அப்பா காசு தந்திட்டார் நீர் சைக்கிளை எடும் என்றார். நன்றி சொல்லிவிட்டு காந்தனை நேரிடையாக பார்க்க தைரியம் அற்று ஸ்கூல் பைக்கை பின் கரியரில் வைத்து பார்க்கும்போது தான் கவனித்தாள் கரியாரில் ஒரு கொப்பி இருப்பதைக் கவனித்தாள். காந்தனை மெதுவாக பார்க்க அவன் புன்னகைத்தான். வீட்டிற்குள் சென்று அந்த கொப்பியை எப்போ திறந்து பார்ப்போம் என்று இருந்தது. இடையில் இறங்கி பார்ப்போம் என்றாலும் ஊரில் எல்லோரும் தெரிந்தவர்கள் ஏன் வீண் வம்பு என்று வீட்டு ஒழுங்கைக்குள் வந்தாள். சைக்கிளை பலமாக மித்தித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். நேராக தனது அறைக்குள் சென்றாள். கொப்பியை திறந்து பார்த்தாள்.. என்ன அழகான படங்கள். அதற்கு கீழ் அழகான காதல் வரிகள். "சகியே கண்களால் பேசிய வார்த்தைகள் போதும் இனி எழுத்துகளினால் காதல் கவி பாடுவோமா" என்னும் வரிகளில் அவள் தன் நிலையே மறந்தாள். மெல்லிய துள்ளல் ஒன்றை மனதில் உணர்ந்தாள். இது தான் பட்டம்புச்சி பறக்கிறது என்பார்களா என்று எண்ணினாள். அப்போ யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டு மெல்ல இவ்வுலகிற்கு வந்தாள். அக்கா கதவை திற என்றபடி அவளின் சுட்டி தங்கை வந்தாள்....................................................

  • தொடங்கியவர்

கதை இதுவரை

அதிகாலை நேரம் பறவைகள் தமது கூட்டில் இருந்து வரவேற்பு கீதம் இசைக்க காலை கதிரவன் கிழக்கு திசையில் இருந்து புமியை நோக்கி மெல்ல மெல்ல தவளத்தொடங்கினான் விவசாயிகள் கலப்பையை தோளில் சுமந்த வண்ணம் வயலை நோக்கிச் சென்றனர்.

கீதா படுக்கையில் புரண்டு படுத்தாள்.

ஏய் கீதா எழும்பு எழும்பு மணி என்னாகிறது??

இன்னும் என்ன தூக்கம் பாடசாலைக்கு கிளம்ப வேண்டும் என அம்மாவின் கூப்பாடோ வீதிவரை கேட்டது

இன்னும் ஒரு ஐந்து நிமிடம் அம்மா என்று மறுபக்கம் திரும்பி படுக்க ஆயத்தமாகும்போது "ம்ம் படு படு கொஞ்ச நேரத்தில் செம்பும் தண்ணியும் தான் வரும் முகத்திற்கு" என்ற வார்த்தையை கேட்டு தூள்ளி எழுந்தாள்

எழுந்து நேரத்தை பாத்தாள், நேரம் ஏழு மணி, எட்டுமணிக்கு பாடசாலையில் இருக்க வேண்டும், இல்ல்லாவிடில் மொட்டைவாத்தி தலையில் டொக்கு டொக்கு என்று குட்டுவார். அதை நினைத்தபோதே தலை வலித்தது , அவசரம் அவசரமாக குளித்துவிட்டு கண்ணாடியில் வந்து தை சீவத்தொடங்கினாள், அப்போதுதான் நினைவில் வந்தது எங்கே அவனை கானவில்லை, ஒவ்வரு நாளும் உடற்பயிற்ச்சிக்கு போயிற்று சரியாக, தான் தலை சீவும் நேரத்தில் அவன் அங்கு இருப்பான் தன் நன்பனுடன். அவள் மனது தவித்தது. எங்கே அவன். பொங்கும் பூங்குனலில் பாடல் போய் கொண்டிருந்தது "எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா"

அந்த பாடல் தனக்கென ஒலிப்பதாக உண்ர்ந்தாள். மீண்டும் அம்மாவின் அலறல் "என்ன கண்ணாடிக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறாய்.. பள்ளிக்கூடம் போகும் முன் எதாவது உதவி செய்வோம் என்று நினைப்பு இல்லை எந்த நேரம் பார் கண்ணாடிக்கு முன்னால் தான்" என்று அம்மா புலம்பத்தொடங்கினாள். அம்மா எனக்கு நேரமாகிவிட்டது பின்னேரம் வந்து என் செல்ல அம்மாவிற்கு உதவி செய்கின்றேன் என்றவாறே முத்தம் ஒன்றை கொடுத்து விட்டு சாப்பாட்டு வோக்சையும் எடுத்துக்கொண்டு சைக்கிளை எடுத்தாள். அப்போ தான் தங்கை நேற்று சைக்கிளை எடுத்து காத்து போக வைத்திருந்தது தெரிந்து. இப்போ இதற்கு சண்டை போட்டால் நேரம் போய் விடும் பின்னார் வந்து அவாவை கவனிப்போம் என்று நினைத்து விட்டு சைக்கிளை உருட்டத் தொடங்கினாள் பக்கத்தில் உள்ள சைக்கிள் கடைக்கு. அந்த வெண்ணிலா எங்கையாவது கண்ணில் படக்கூடாதா என்று நினைத்துக்கொண்டே......

என்ன ஆச்சரியம் அவளின் வெண்ணிலா அதுதாங்க கறுப்புநிலாவாகிய காந்தன் சைக்கில் கடையில் பஞ்சர் ஒட்டிக் கொண்டிருந்தான் தனது சைக்கிளுக்கு அவனைக்கண்டதும் ஏனோ தெரியவில்லை புதுசெருப்புப் போட்டு நடப்பதுபோல அவளின் கால்கள் தடுமாறிப் பின்னியது கிட்ட வந்து விட்டாள் கடைக்காரன் பஞ்சர் போட நேரமாகும் பின்னேரம் வந்து எடுக்கும் படி கூறினான் இப்ப என்ன செய்வது பள்ளிக்கூடத்துக்கு நடந்து போக நேரமாகி விடுமே யோசித்தபடி நடக்கத் தொடங்கினாள் பின்னால் ஏதோ சத்தம் காந்தன்தான் சைக்கிலில் வந்து கொண்டிருந்தான் அவனின் சைக்கிளுக்கு பெல்லைத்தவிர மற்றதெல்லாம் சத்தம் போட்டன கிட்ட வந்தவன் சைக்கிலை நிப்பாட்டி கேட்டான் "பள்ளிக்கு நேரமாகிவிட்டால் ஏறுங்கோ கொண்டு போய் விடுகிறேன்" எண்டு ஆயிரம் பட்டாம்பு|ச்சிகள் பறப்பது போல ஒரு பிரமை ஆனாலும் வெட்கம் புடுங்கித்தின்டது அவளை யோசித்தாள் போகலாமா?..வேண்டாமா..,,? என

சைக்கிளில் ஏறுவதா விடுவதா என்று அவளுக்குள் சில நிமிடங்கள் பெரும் போராட்டம் நடந்தது. முன்பின் தெரியாதஅவனுடைய சைக்கிளில் ஏறுவது தன் பெண்மைக்கு அழகில்லை என்ற முடிவுக்கு வந்தாள்.அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் தவித்தாள் பின் ஒருவாறு சமாளித்துக்கொண்டு மன்னித்துக்கொள்ளுங்கள் நான் உங்களுடைய வண்டியில் ஏறமுடியாது. நான் நடந்து செல்கின்றேன். என்னை வற்புறுத்தாதீர்கள் என்றபோது அவனுக்குள்ளும் அவளைப்பற்றி ஒரு உயர்வான எண்ணம் தோன்றியது.

சைக்களில் இருந்து இறங்கிக்கொண்டே நான் உங்களுடைய முடிவை மதிக்கின்றேன். உங்கள் முடிவு சரியான முடிவுதான் என்று சொன்னான். அவன் சைக்கிளை உருட்டிக்கொண்டு அவளுடன் நடந்துகொண்டிருந்தான். அவளும் அவனுடன் பேசிக்கொண்டு நடந்து கொண்டிருந்தாள். தலையை குனிந்துகொண்டு அவனுடன் பேசிக்கொண்டு நடந்தவள் சற்றுத்தலையை துாக்கியபோது

சற்றுத்திகைத்துவிட்டாள் யார் அங்கே வந்துகொண்டிருப்பது அப்பாவா?

"ம்ம் அப்பா தான்" என்றவாறு நடையில் வேகத்தை கூட்டி அப்பா வந்த தீசையை நோக்கி நடந்தாள். பிள்ளைகளின் மேல் ஆசையாத நம்பிக்கை வைத்திருக்கும் அப்பா அதை பெரிதாக எண்ணவில்லை மாறாக "என்ன பிள்ளை சைக்கிளுக்கு என்ன நடந்தது ஏன் நடந்து போகின்றாய்?"என்று கேட்டார்... கீதாவும் சைக்கிள் கடையில் என்று கூறிவிட்டு "அப்பா எனக்கு நேரம் போய் கொண்டு இருக்கின்றது. என்னை இறக்கி விடுங்கோ ஓருக்கா என்று சொல்லி முன்னால் அமர்ந்தாள். அமர்ந்து கொண்டு தான் கடைக்கண்ணால் பின்னால் திருப்பி பார்த்தாள். என்ன ஆச்சரியம் அவளின் கருப்பு நிலா காந்தனை காணவில்லை..... இனியும் எப்போது காண கிடைக்கும் என்று நினைக்கையில் தான் அப்பா மெல்ல வாய் திறந்தார். "பிள்ளை

பிள்ளை வரேக்கை யாரோ பெடியன் பக்கத்திலை வந்தான் ஆரது? என்று கேட்டார் கீதாவோ தடுமாறியபடி எனக்குத் தெரியாதப்பா" என்றாள்

அப்பா : இல்லை பிள்ளை ஊர் கெட்டுப் போய் கிடக்கு வீண் கதைகள் வராமல் இருக்கவேணும் ஏற்கனவே உன்ரை கொக்கா செய்த வேலை தெரியும் தானே

கீதா : என்னப்பா நீங்கள் என்னை ஏதோ சந்தேகப்படுகிற மாதிரி கிடக்குது

அப்பா: ஏதோ சொல்லவேணும் போல கிடந்திச்சு சொன்னன் இனி நீங்கள் படிக்கிற பிள்ளையள் நல்லது கெட்டது தெரியும் தானே

பாடசாலை கிட்டியது இறங்கினாள் கீதா அன்று பாடசாலையில் படிப்பித்தது எதிலும் கவனம் செல்லவில்லை ஏன்தான் இண்டைக்கு இப்படி நடக்கிறதோ என் தன்னையே திட்டுக் கொண்டாள் பாடசாலை விட்டு தோழிகளுடன் கதைக்கவும் மனமில்லாமல் நடந்து வர வெளிக்கிட்டாள் சைக்கிள் கடையில் சைக்கிலை எடுக்கவேண்டும் எண்டதால் கொஞ்சம் வேகமாகவே நடந்தாள் சைக்கிள் கடையில் இவளின் சைக்கிலில் கையை வைத்தபடியே இருந்தான் காந்தன் இவளுக்கு மனம் படபடத்தது என்ன செய்வது ...மெல்ல மெல்ல கடையை நெருங்கிவிட்டாள்

கீதாவைக் கண்டவுடன் கடைக்காரன் சைக்கிளை எடுத்து வெளியில் விட்டு பிள்ளை அப்பா காசு தந்திட்டார் நீர் சைக்கிளை எடும் என்றார். நன்றி சொல்லிவிட்டு காந்தனை நேரிடையாக பார்க்க தைரியம் அற்று ஸ்கூல் பைக்கை பின் கரியரில் வைத்து பார்க்கும்போது தான் கவனித்தாள் கரியாரில் ஒரு கொப்பி இருப்பதைக் கவனித்தாள். காந்தனை மெதுவாக பார்க்க அவன் புன்னகைத்தான். வீட்டிற்குள் சென்று அந்த கொப்பியை எப்போ திறந்து பார்ப்போம் என்று இருந்தது. இடையில் இறங்கி பார்ப்போம் என்றாலும் ஊரில் எல்லோரும் தெரிந்தவர்கள் ஏன் வீண் வம்பு என்று வீட்டு ஒழுங்கைக்குள் வந்தாள். சைக்கிளை பலமாக மித்தித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். நேராக தனது அறைக்குள் சென்றாள். கொப்பியை திறந்து பார்த்தாள்.. என்ன அழகான படங்கள். அதற்கு கீழ் அழகான காதல் வரிகள். "சகியே கண்களால் பேசிய வார்த்தைகள் போதும் இனி எழுத்துகளினால் காதல் கவி பாடுவோமா" என்னும் வரிகளில் அவள் தன் நிலையே மறந்தாள். மெல்லிய துள்ளல் ஒன்றை மனதில் உணர்ந்தாள். இது தான் பட்டம்புச்சி பறக்கிறது என்பார்களா என்று எண்ணினாள். அப்போ யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டு மெல்ல இவ்வுலகிற்கு வந்தாள். அக்கா கதவை திற என்றபடி அவளின் சுட்டி தங்கை வந்தாள்.

தொடருங்கள் :arrow:

கதை சூப்பர்..தொடர்ந்து எழுதுங்கள்.. :)

(ஐயோ..என்னது..ஒரு வரிக்கு கூட என்ன எழுத யாழ் ஐயா அவர்களே?) :shock:

தன்னுடைய எண்ணப்பறவையை மனச்சிறையில் அடைத்துவிட்டு கதவைத்திறந்தவள் அம்மா உன்னைக் கூப்பிடுகிறா என்றுவிட்டு ஓடினாள். அவளும் அம்மாவிடம் சென்று என்னம்மா என்று கேட்டாள்.

பிள்ளை இதிலை இரு என்று அம்மா தனக்கு பக்கத்திலிருந்த கதிரையை காட்டினாள். பக்கத்திலிருந்தவளின் தலையை அம்மா தடவிக்கொடுத்து தலையை தன் மீது சாய்த்தாள்.

தலையை தடவியபடியே பிள்ளை உனக்கு இப்போ புரியாத வயசு நீ எதற்கும் ஆசைப்பட்டால் நாங்கள் குறுக்கே நிற்கமாட்டோம். ஆனால் நீ எதையும் சரியாக சிந்தித்துப்பார். திடீர் முடிவு விபரீதத்தில்தான் முடியும். நீ யாரையாவது விரும்பினால் கூட நாங்கள் திருமணம் செய்து வைப்போம். தடையாக நிற்கமாட்டோம்.உனக்கே தெரியும் நீ ஒரு டாக்டர் ஆக வேண்டும் எம்முடைய பிரதேசத்தில் உள்ள மக்கள் சிகிச்சை பெறுவதற்காக எவ்வளவு சிரமப்படுகின்றார்கள். நீ எடுத்த இலட்சியத்தை முடி அதன்பிறகு உன் தன்ப்பட்ட வாழ்க்கையை தெரிவுசெய். என்று அன்பாக கூறினாள்.

கீதா தன்குள் யோசித்தபடி தலையை ஆட்டினாள்.

இரு நான் உனக்கு கோப்பி கொண்டு வாறன் என்று அம்மா குசினிக்குள் சென்றாள்.

கீதா தனக்குள் யோசித்தாள் அப்பா வந்தபோது காந்தன் ஒடிப்பொனாரே என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல். காந்தன் நல்லவரா கெட்டவரா? பிரச்சனை வரும்போது உதறிவிட்டு ஓடுவரா அல்லது.... தொடருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனது கருப்புநிலா எழுதிய கவி வரிகள் அவளின் மனதில் அடிக்கடி வந்து வந்து அலைமோதின. "சகியே கண்களால் பேசிய வார்த்தைகள் போதும் இனி எழுத்துக்களினால் காதல் கவி பாடுவோமா" என்ற வார்த்தைகள் மனதில் மீண்டும் வந்தபோது மீண்டும் மனதினுள் பட்டாம்புூச்சி பறந்தது. எதற்கும் சில வரிகள் எழுதிப் பார்ப்போம் அதிலிருந்தாவது அவனுடைய உண்மையான குணத்தை அறிய முடியுமா என்று எத்தனிப்போம் என்று எண்ணியபடி தனது பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தாள்.

பள்ளிக்கூடம் போகையில்

பக்கத்தில் வந்த கறுப்பு நிலாவே

மன்னிக்கவும்.... காந்தனே! கவியே!

எட்டு வயதாகுமுன்னமே என் சுட்டித்தங்கை

எட்டி எட்டிப் பார்க்கிறாள்

கடிதத்தில் என்ன எழுதுகிறேன் என்று!

பட்டப்படிப்பு படிக்கவேண்டும் என்கிறார் அன்னை

டாக்டராகவே வரவேண்டும் என்கிறார் என்னை

எப்போதும் என்னருகில் இருந்து தட்டிக் கொடுப்பீர்களா?

அவ்வப்போது இன்றுபோல் தவிக்க விட்டுவிட்டு ஓடுவீர்களா?

ஒரு வார்த்தையாவது எழுதி மீண்டும் என் சைக்கிளின்

"கரியரில்" வைத்துவிடுங்கள்

இரவினில் சந்திப்பு வேண்டாம்

அதை என்னிடம் கேட்கவும் வேண்டாம்

வர முடியாது வெளியில் என்னால்

வந்தாலும் உங்களை தெளிவாகக் தெரியாது முன்னால்.

என்று தான் முதல்முதலாக வடித்த காதல் கவிவரிகளை எழுதிவிட்டு புத்தகத்தை மூடினாள். அந்த நேரம் பார்த்து அருகே காலடி கேட்டது.... தொடருங்கள்

கேட்டது காலடி ஒசை மட்டும் அல்ல அவளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் விதியின் ஒசையாக இருந்தது. அவசர அலுவலாக வந்த அம்மா அவள் எதோ குழப்பத்தில் இருப்பதாக அறிந்தாள். "கீதா நானும் அப்பாவும் எவ்வளவோ கஸ்டப்பட்டுத்தான் உங்களை படிக்க வைத்துக்கொண்டிருக்கின்றோ

என்ன ரமா இது கடைசியா எல்லா பெண்களும் பெற்றோருக்காண்டி எங்கடை காதலை தியாகம் செய்யிறம் எண்டு சொல்லி எங்களுக்கு அல்வா குடுக்கிற மாதிரியே முடிச்சிட்டியள் இன்னோரு காதலுக்கு மரியாதையா? ஆனா அதிலை காதல் ஜெயிக்குதே......... ஓ.....இதுவும் ஜெயிக்கும் எண்டு சொல்லுறியள் நன்றி ...

அங்கிள் என்ன கதையை ஒழுங்கா படிக்கலையா? இந்த பெற்றோர்கள் கீதாவை காதலை மறக்கச் சொல்ல வில்லை தானே. அதாவது அம்மா அப்பா எம்மீது இப்படி பாசமாய் இருக்கும் போது நாம் அவர்களுக்கு மாரியாதை செய்யணும் அதை வேளை காதலுக்கும் மாரியாதை செய்யணும்... இது குட்டிக்கதை தானே அங்கிள் .. மெக தொடர் என்றால் கீதாவின் படிப்பை முடித்து கலியாணத்தையும் கட்டி வைத்திருக்காலாம்.. இன்னொரு கதையில் கலியாணததை முடித்து வைத்திட்டால் போச்சு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.