Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு மறுக்கப்பட்ட சுதந்திரம்.....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு மறுக்கப்பட்ட சுதந்திரம்.....

கவிதை - இளங்கவி......

பிறந்ததும் இருளில்

சிறிதாய் வளர்ந்ததும் இருளில்

கொஞ்சம் வாழ்ந்ததும் இருளில்

அது அடிமை வாழ்வெனும் சிறையில்.....

சின்னஞ்சிறு வயதினிலே

அண்ணாந்து பார்த்திடுவேன்

அழகான விமானமல்ல

எமை அழிக்கவரும் விமானத்தை.....

அனைவரும் பதுங்கு குளி

நான் மட்டும் அதன்வெளியில்

அது நான்மட்டும் அனுபவித்த

சிறிதாய் நடமாடும் சுகந்திரம்....

தென்னை ஓலைமட்டை வெட்டி

தெருக்களிலே பந்துகொண்டு

துடுப்பாட்டம் ஆடிடுவேன்

சந்தோசத்தில் மனமகிழ்வேன்

ஆமியின் கெலி வருவான்

கிட்டவந்து சுட்டுடுவான்

ஏனென்று தெரியாது; உயிர்காக்க

வீதியிலே படுத்திடுவேன்

விளையாட்டு ஒத்திவைப்பு

என் ரன்களெல்லாம் வீனடிப்பு; அது என்

மறுக்கப்பட்ட சுதந்திரம்

இன்றுவரை மறக்காத அனுபவம்

களுதைகூட அழகாய்

தெரியும் அந்த இளவயதில்

குதிரைச் சவாரிசெய்து

குமரிகளைத் துரத்திடுவோம்

சிலிர்த்து நிற்கும் உணர்வெல்லாம்

என் சிட்டுக்கு சொல்லவர

அவள் நெற்றிவேர்வை கண்டு

அழகாக ஒதுங்கிடுவோம்

இது இளவயதில் அனுபவித்த

இனிப்பான சுதந்திரம்

இன்றுவரை மறக்காத

என் நினைவுகளில் ஓர் வலம்....

மறு நாளும் ஓர் முயற்சி

என் சின்னச்சிட்டு அவளை

மடக்கிவிட ஓர் உத்தி

சயிக்கிலை மறித்துவிட்டு

அவள் கையைபற்றிவிட ஓர் முயற்சி

அவள் சயிக்கிலும் நின்றுவிடும்

என் கையொன்றும் அவள் ஸ்பரிசம்

தொடுவதற்கும் சென்றுவிடும்

தொலைவிலே ஆமி கண்டு

என் உணர்வெல்லாம் சுருங்கிவிடும்

விலகிடுவேன் மெதுவாக

மனதோ உருகிவிடும் மெழுகாக

இது அன்று நான் தொலைத்துவிட்ட

இன் இளமைச் சுதந்திரம்

என்றைக்கும் மறக்காமல்

மனதினிலே ஓர் கனம்....

ஆம் இப்படியாய்...!

கடலிலே

குழிப்பதற்கும் ஆமிப் பயம்...

கண்டபடி

சுற்றுதற்கும் ஆமிப் பயம்...

எந்தன் மனதிலே

காதல்விதை போட்ட

என் மனம்கவர்ந்த மயிலிறகை

பார்ப்பதற்கும் ஆமிப் பயம்...

அம்மா பேசிவிட்டால்

இரவில் சத்தமாய்

அழுவதற்கும் ஆமிப் பயம்......

ஆம் அனைத்துக்கும்

ஆமிப் பயம்...

நம் உணர்வெல்லாம்

அடக்கியதும் ஆமிப் பயம்.....

அடைபட்ட இருளறையில்

அங்கங்கே சிறுவெளிச்சம்...

இதுவே என் சுதந்திரம் ; என்று

அன்றே நான் உணர்ந்தேன்

அதை வெறுத்துவிட

நான் துணிந்தேன்.....

அடிமைவாழ்வு புரிந்துவிட

மனம் விடுதலையை வேண்டி நிற்க

புரிதலும் வாழ்வும்

பிரித்தென்னை எறிந்துவிட

புலம்பெயர் தேசத்திலே

குப்பையாய் விழுந்து நின்றேன்...

ஆனால் இன்று உணர்கின்றேன்

நான் குப்பையல்ல ; எதிரியின்

கண்ணைக் குத்தவந்த குண்டூசி

புலம்பெயர் தேசத்திலே

புடம்போட்டு கொண்ட நெருப்பூசி

எங்கள் நரபலி தடுத்திடவே

என் நாளும் குரல்கொடுப்போம்

பிணந்தின்னிக் கழுகுகளை

பிடித்து சிறையில் வைப்போம்

விடா முயற்சிகொண்டு; நம்

விடுதலையை வென்றெடுப்போம்

எம் இனத்தை

சுட்டெரித்த எதிரியினை

நம் மண்ணில்; விறகு

கட்டையாய் போட்டெரிப்போம்....

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

நான் குப்பையல்ல ; எதிரியின்

கண்ணைக் குத்தவந்த குண்டூசி

புலம்பெயர் தேசத்திலே

புடம்போட்டு கொண்ட நெருப்பூசி....................

வாழ்கை உங்களை நன்றாக புடம் போட்டு இருக்கிறது ...........என்றும் நெருப்பாய் வெற்றி வரை போராடுவோம். நல்ல கவி நடை

என் பாராடுக்கள் ..............ரசித்தேன்.....

வணக்கம் இளங்கவி

ஒவ்வொரு மனிதனின் உண்மையான ஏக்கங்களை அப்படியே சொன்ன வரிகள்

அழகு அழகு அழகு .............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு

பொதுவாக புலம்பெயர் தேசங்களிலே இருக்கும் எல்லோருக்கும் ஒரு குற்ற உணர்வு இருக்கிறது தாயகத்தில் எங்கள் உறவுகள் போராட நாங்கள் இங்கே வந்துவிட்டோமே என்று, அது அப்படியல்ல... தனி நபர் ஒவ்வொருவரினதும் நிலமையும் பலதரப்பட்ட காரணங்களால் எங்களை இங்கே சேர்த்துவிட்டது. ஆனால் இங்கே வந்த அதே மக்களாலும் அவர்களின் பிள்ளைகளினாலும் தான் எங்கள் போராட்டம் இன்று உலகுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது, அன்று ஆறாகப் பெருகி இங்கே வந்தவர்களின் உணர்வுகள் அதே ஆறுபோல் பெருக்கெடுத்து எதிரியை திணறடித்துக்கொண்டிருக்கிறத

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nige

புலம்பெயர் தேசங்களிலே இருக்கும் தமிழின உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும் எதிரியை சுட்டெரிக்கும் நெருப்புகள் தான், அத்துடன் எங்கள் அப்பு, ஆச்சி, அப்பா, அம்மா அதன் பின் நாங்கள் என்று அடிமை வாழ்விலே முழுவதுமாக இருந்தபடியால் எங்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கவில்லை, அதன் நினைவில் தோன்றிய வரிகள் தான் இவை.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவிதை.....

பாராட்டுக்கள் இளங்கவி!!!

ரசனையுடன், அதே நேரம் புரிந்து உணர கூடிய விடயங்கள் பல....

எனினும், அம்மாட்ட பேச்சு (அடி?!) வாங்கினால் சத்தம் போட்டு அழ தோணும் வயதிலா - நீர் இளஞ்சிட்டுகளின் கையை பிடிக்க சாலை மறியல், சைக்கிள் மறியல், போராட்டங்கள் நடத்தினீர்??!!

ஹிஹி...நீர் பெரிய ஆள் தான் போம்!!!!!!

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ilaiyapillai

சிறுவயதில் சிட்டு கலைத்த அனுபவமும், வளர்ந்த பின்னர் அம்மாவிடம் பேச்சு வாங்கி அழுத அனுபவமும் உண்டு நண்பரே. சிறு பிள்ளைகள் இரண்டு கை பிடித்தும் கை பறித்தும் விளையாடுவது இல்லையா அது போலத்தான் இதுவும்......

கருத்துக்கு மிக்க நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.